August 05, 2020

அறிய வேண்டியவை-பதிவு-140

ஜபம்-பதிவு-632

(அறிய வேண்டியவை-140)

 

(தன்னுடைய

தந்தையிடம்

பேசிவிட்டு

துரியோதனன்

கர்ணனைத்

தேடிச் சென்று

கர்ணன் இருக்கும்  

அறைக்குள்

நுழைந்தான்)

 

கர்ணன் ;

"தந்தையை

சந்தித்து விட்டு

வந்தாயா

என்ன சொன்னார்"

 

துரியோதனன் :

"நாம் எதை

செய்ய

வேண்டாம் என்று

சொல்கிறோமோ

அதை செய்வேன்

என்கிறார்"

 

கர்ணன் :

"எதற்காக

அவர்

அவ்வாறு

சொன்னார்"

 

துரியோதனன் :

“இந்த நாடு

நம்மை

குற்றவாளி என்று

கண்டுபிடிக்காமல்

இருக்க வேண்டும்

என்பதற்காக

என்னுடைய தந்தை

விதுரரை

ரகசியமாக

அனுப்பி வைத்து

பாண்டவர்களை

அஸ்தினாபுரம்

அழைத்து

வருவதற்கான

ஏற்பாடுகளை

செய்திருப்பதாக

சொல்கிறார்”

 

 “இப்போது

என்ன செய்வது

நாம் எப்படி

தப்பிப்பது”

 

கர்ணன் :

“இதற்கான

விடையை

உன்னுடைய

மாமா

தான் சொல்ல

வேண்டும்

சதித்திட்டத்தை

தீட்டியது

அவர் தானே”

 

“உன்னுடைய

மாமாவால்

தீட்டப்பட்டு

செயல்படுத்தப்பட்ட

சதித்திட்டம்

தோல்வியடைந்து

விட்டது”

 

“சதித்திட்டத்தை

தீட்டி

செயல்படுத்தியது

நாம் தான்

என்பதை

இந்த நாடு

அறியாமல்

இருக்க

வேண்டுமானால்

நாம் என்ன

செய்ய வேண்டும்

என்பதை

உன்னுடைய

மாமாவிடம்

தான் கேட்க

வேண்டும்”

 

“இந்தப்

பிரச்சினையிலிருந்து

நாம் தப்பிப்பது

எப்படி என்பதை

உன்னுடைய

மாமா தான்

சொல்ல வேண்டும்”

 

“உன்னுடைய

மாமாவைப்

போய் பார்ப்போம்

அவர் என்ன

சொல்கிறார்

என்று கேட்போம்”

 

(துரியோதனனும்

கர்ணனும்

சகுனியை

சந்திப்பதற்காகச்

சென்றனர்)

 

துரியோதனன் :

“வணங்குகிறேன்

மாமா

அவர்களே”

 

சகுனி :

“உன்னுடைய

தந்தையை

பார்த்து விட்டு

வந்து விட்டாயா”

 

துரியோதனன் :

“பார்த்தேன்”

 

சகுனி :

“என்ன சொன்னார்”

 

துரியோதனன் :

“பாண்டவர்களை

அஸ்தினாபுரத்திற்கு

அழைத்து வரும்

திட்டத்தில் எந்த

மாற்றமும் இல்லை

என்று சொல்லி

விட்டார்”

 

சகுனி :

“இதைத் தான்

சொல்வார் என்று

எனக்குத் தெரியும்”

 

துரியோதனன் :

“தெரியும்

என்றால்

என்னை ஏன்

அனுப்பினீர்கள்”

 

சகுனி :

“இந்த

விஷயத்தில்

உன்னுடைய

தந்தை

என்ன சொல்வார்

என்பதை நீயும்

உன்னுடைய

நண்பன்

கர்ணனும்

தெரிந்து கொள்ள

வேண்டும்

அல்லவா

அதற்காகத் தான்

நான் உன்னை

உன்னுடைய

தந்தையிடம்

அனுப்பினேன்”

 

துரியோதனன் :

“இப்போது என்ன

செய்வது

மாமா

அவர்களே”

 

சகுனி :

“நீயும்

உன்னுடைய

நண்பனும் ஒன்றும்

செய்ய வேண்டாம்”

 

“நீயும் உன்னுடைய

நண்பன் கர்ணனும்

இங்கே

நடக்கப்போகும்

விஷயத்தில்

தலையிடாமல்

சற்று நேரம்

அமைதியாக

பேசாமல்

இங்கு நடப்பதை

கவனித்துக்

கொண்டு இருங்கள்

அது போதும்”

 

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

 

----------- 05-08-2020

/////////////////////////////////


No comments:

Post a Comment