August 05, 2020

அறிய வேண்டியவை-பதிவு-137


ஜபம்-பதிவு-629 

(அறிய வேண்டியவை-137)

"ஆனால்

கெட்டவன் என்று

பெயரை

எடுத்து விட்டால்

கெட்டவன் எந்த

ஒரு நல்ல

விஷயத்தைச்

செய்தாலும்

அதை இந்த உலகம்

பெரிய விஷயமாக

எடுத்துக் கொள்ளாது

கெட்டவன்

என்ற பெயரில்

அவர்கள் செய்த

நல்ல செயல்கள்

மறைந்து விடும்"

 

"பிறரிடம்

பணிவாக இருப்பது

பிறர் சொல்லும்

சொல்லைக்

கேட்டு நடப்பது

பிறருடைய

விஷயத்தில்

தலையிடாமல்

இருப்பது

என்ற மூன்று

செயல்களை

யார் செய்கிறார்களோ

அவர்களை

இந்த உலகம்

நல்லவன் என்று

சொல்லும்

சுருக்கமாக

சொன்னால்

நல்லவன் என்பவன்

அடிமையாக

இருக்க வேண்டும்"

 

"பிறர் சொல்லும்

பேச்சுகளைக்

கேட்டுக் கொண்டு

அமைதியாக

இருக்க வேண்டும்

பிறர் சொல்லும்

பேச்சுக்களில் உள்ள

தவறுகளை

அவர்களுக்கு

சுட்டிக்

காட்டக் கூடாது

பிறர் செய்யும்

தவறான

காரியங்களில்

தலையிட்டு

அதை தடுக்க

முயற்சிக்கக் கூடாது

இந்த விஷயங்களை

செய்பவரே இந்த

உலகத்தில்

நல்லவராக

கருதப் படுகிறார்கள்"

 

"நல்லது

செய்பவர்கள்

நல்லவர்கள் என்ற

நிலை மாறி

இப்போது

அடிமையாக

இருப்பவர்களே

நல்லவர்கள்

என்ற நிலை

இந்த சமுதாயத்தில்

உருவாகி விட்டது"

 

"இந்த விஷயத்தை

சரியாக

கடைபிடிப்பவர்கள்

பாண்டவர்கள்

அவர்கள்

பீஷ்மர் விதுரன்

ஆகியோர் பேசும்

பேச்சுக்களை

அமைதியாக

கேட்டுக்

கொண்டிருப்பார்கள்

அவர்கள் பேச்சில்

தவறு இருந்தாலும்

அதை தவறு என்று

சுட்டிக் காட்ட

மாட்டார்கள்

அவர்களுக்கு

பணிந்து நடப்பார்கள்

அவர்களுடைய

விஷயத்தில்

தலையிட்டு

அதை தடுக்க

மாட்டார்கள்

சுருக்கமாக

சொன்னால்

பாண்டவர்கள்

அனைவரும்

பீஷ்மருக்கும்

விதுரனுக்கும்

பணிந்து அடிமையாக

இருக்கிறார்கள்

அதனால் தான்

பீஷ்மரும் விதுரனும்

ஒன்றாகச் சேர்ந்து

யுதிஷ்டிரனை

இளவரசனாக்கி

விட்டார்கள்

அடுத்து யுதிஷ்டிரனை

அரசனாக்க முயற்சி

செய்வார்கள்"

 

"ஆனால் நீயோ

பீஷ்மர் விதுரன்

ஆகியோர்

பேசும் போது

இடை மறித்து

பேசுகிறாய்

அவர்கள்

பேச்சுக்களில்

தவறு இருக்கிறது

என்று

சுட்டிக் காட்டி

அவர்களை

கோபப்படுத்துகிறாய்

அவர்களை நீ

மரியாதையுடன்

நடத்துவதில்லை

அவர்கள் முன்னால்

கோபம் கொள்கிறாய்

அவர்களுடைய

விஷயத்தில்

தலையிட்டு

அதை தடுக்க

முயற்சி செய்கிறாய்

அதனால் தான்

உன்னையும்

உன்னைச்

சேர்ந்தவர்களையும்

கெட்டவன் என்று

அனைவரும் முடிவு

செய்து விட்டார்கள்

இந்த உலகமும்

உன்னையும்

உன்னைச்

சேர்ந்தவர்களையும்

கெட்டவன்

என்று சொல்லிக்

கொண்டு இருக்கிறது"

 

"பாண்டவர்களை

நல்லவர்கள்

என்றும்

நீயும் உன்னைச்

சேர்ந்தவர்களையும்

கெட்டவர்கள் என்றும்

இந்த உலகம்

சொல்லிக்

கொண்டு இருக்கிறது"

 

"பாண்டவர்கள்

நல்லவர்கள்

என்ற பெயரை

எடுத்து விட்ட

காரணத்தினால்

பாண்டவர்களை

அரியணையில்

அமர்த்துவதற்கு

பீஷ்மரும் விதுரனும்

இந்த உலகத்தில்

உள்ள சிலரும்

அவர்களுக்கு

ஆதரவாக

செயல்பட்டுக்

கொண்டிருக்கிறார்கள்"

 

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

 

----------- 05-08-2020

/////////////////////////////////


No comments:

Post a Comment