June 30, 2020

அறிய வேண்டியவை-பதிவு-71


                ஜபம்-பதிவு-563
          (அறிய வேண்டியவை-71)

“என்னைக் கொல்வதற்கு
வாய்ப்பு கிடைத்தும்
கர்ணன் என்னைக்
கொல்லவில்லை
உனக்கு உயிர் பிச்சை
தருகிறேன் பிழைத்துக்
கொள் என்று எனக்கு
உயிர்பிச்சை
அளித்திருக்கிறான்
அவன் பிச்சை
போட்ட உயிருடன்
எப்படி நான் வாழ்வது”

“யாரை நான்
தாழ்ந்த குலத்தில்
பிறந்தவன் என்று
பிறந்த குலத்தை வைத்து
அவமானப் படுத்தினேனோ
அந்த கர்ணனுடைய
வேகத்திற்கும்
வீரத்திற்கும்
ஈடு கொடுக்க
முடியாமல்
தடுமாறிக்
கொண்டிருந்தேன்”

“யாரை நான்
தாழ்ந்த குலத்தில்
பிறந்தவன் என்று
பிறந்த குலத்தை வைத்து
அவமானப்
படுத்தினேனோ
அந்த கர்ணனுடைய
பாணங்களை
சமாளிக்க முடியாமல்
கலங்கிக்
கொண்டிருந்தேன்”

“யாரை நான்
தாழ்ந்த குலத்தில்
பிறந்தவன் என்று
பிறந்த குலத்தை வைத்து
அவமானப் படுத்தினேனோ
உலகத்திலேயே
சிறந்த வில்லாளி என்று
அனைவராலும்
போற்றப்படக்கூடிய
என்னை விட
தான் சிறந்த வில்லாளி
என்பதை இன்றைய
போரில் நிரூபித்துக்
கொண்டிருந்தான்”

“யாரை நான்
தாழ்ந்த குலத்தில்
பிறந்தவன் என்று
குலத்தை வைத்து
இழிவு படுத்தினேனோ
அந்த கர்ணன் தான்
எனக்கு உயிர்ப்பிச்சை
அளித்திருக்கிறான்
உயிர்ப்பிச்சை
அளிக்கிறேன்
பிழைத்துக் கொள்
என்று என்னை
அனுப்பி
வைத்திருக்கிறான் “

“யாரை நான்
தாழ்ந்த குலத்தில்
பிறந்தவன் என்று
பிறந்த குலத்தை வைத்து
தரக்குறைவாக
பேசினேனோ
அந்த கர்ணனால் தான்
நான் இன்று
உயிர் வாழ்ந்து
கொண்டிருக்கிறேன்”

“யாரை நான்
தாழ்ந்த குலத்தில்
பிறந்தவன் என்று
பிறந்த குலத்தை வைத்து
அவமானப் படுத்தினேனோ
அந்த கர்ணனால் தான்
என்னுடைய உயிர்
என்னுடைய உடலில்
தங்கி இருக்கிறது”

“எனக்கு வாழ்க்கையே
இருண்டு கிடப்பது
போல் தோன்றுகிறது;
என்னுடைய நெஞ்சு
வெடித்து நான் இறந்து
விடக்கூடாதா
என்று தோன்றுகிறது;
அவமானச் சின்னமாக
நான் வாழ
வேண்டுமா என்று
எனக்குத் தோன்றுகிறது ;
எனக்கு வாழவே
பிடிக்கவில்லை
ஏதோ ஒரு வித
பயம் என்னை
தொற்றிக் கொண்டது
போல் இருக்கிறது ;
சோகம் என்னுடைய
மனதை ஆக்ரமித்துக்
கொண்டிருக்கிறது ;
என்ன செய்வது என்றே
எனக்குத் தெரியவில்லை
எனக்கு வாழவே
பிடிக்கவில்லை “

“என்னை கொல்வதற்கு
வாய்ப்பு கிடைத்தும்
ஏன் கர்ணன் என்னை
கொல்லவில்லை
உயிர்ப்பிச்சை
அளிக்கிறேன்
பிழைத்துக் கொள்
என்று என்னை ஏன்
அனுப்பி வைத்தான்”

கிருஷ்ணன் :
“தர்மத்தைக்
கடைபிடிப்பவன்
கர்ணன் அதனால் தான்
அவ்வாறு செய்தான்”

அர்ஜுனன் :
“கர்ணன் சிறந்த
கொடையாளி என்று
கேள்வி பட்டிருக்கிறேன்
அவன் தர்மத்தை
கடைபிடிப்பவன் என்று
எப்படி நீங்கள்
சொல்கிறீர்கள் “

கிருஷ்ணன் :
“தர்மத்தை கடைபிடிப்பது
உன்னுடைய அண்ணன்
யுதிஷ்டிரன் மட்டும்
தான் என்று
நினைத்து விட்டாயா
தர்மத்தை கடைபிடிப்பவன்
கர்ணனும் தான்
என்பதை இன்று
அவனுடைய செயலின்
மூலம் உனக்கு
உணர்த்தி விட்டான்”

அர்ஜுனன் :
“எப்படி உணர்த்தினான்”

கிருஷ்ணன்
“உனக்கு உயிர்பிச்சை
அளித்தானே அப்போது
தான் உணர்த்தினான்”

அர்ஜுனன் :
“எனக்கு உயிர்ப்பிச்சை
அளித்ததன் மூலம்
எப்படி உணர்த்தினான்”

கிருஷ்ணன் :
“சூரியன்
அஸ்தமிக்கவில்லை
என்ற காரணத்திற்காக
கர்ணன் தன்னுடைய
பாணங்களை
உன் மேல்
விட்டிருந்தான் என்றால்
கர்ணன் விட்ட
பாணங்கள் உன்னை
வந்தடைந்து
உன்னுடைய நெஞ்சைத்
துளைக்கும் போது
சூரியன்
அஸ்தமித்து விடும்”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 30-06-2020
/////////////////////////////////

No comments:

Post a Comment