June 30, 2020

அறிய வேண்டியவை-பதிவு-73


               ஜபம்-பதிவு-565
         (அறிய வேண்டியவை-73)

துரியோதனன் :
“இந்த குருஷேத்திரப்
போரில் தர்மங்கள்
எவ்வளவோ
மீறப்பட்டு இருக்கிறது
அதர்மச் செயல்
செயல்
படுத்தப்பட்டிருக்கிறது
நீயும் அதர்மத்தை
பின்பற்றி அர்ஜுனனைக்
கொன்றிருக்கலாமே
ஏன் கொல்லவில்லை
என்ன காரணம்”

கர்ணன் :
“ஏனென்றால் இப்போது
நான் கௌரவர்களின்
சேனாதிபதியாக
இருப்பதால் தான்”

துரியோதனன் :
“துரோணர்
கௌரவர்களின்
சேனாதிபதியாக
இருக்கும் போது தான்
போர் விதிமுறைகள்
மீறப்பட்டன
ஒருவருடன் ஒருவர்
தான் நேருக்கு
நேர் நின்று
போர் புரிய வேண்டும்
என்ற போர்
விதிமுறைகளை மீறி
பலபேர் ஒன்றாகச் சேர்ந்து
அபிமன்யுவைக்
கொல்லவில்லையா?”

“இவைகள் அனைத்தும்
துரோணர் கௌரவர்களின்
சேனாதிபதியாக
இருக்கும் போது
தானே நடந்தது
அங்கே தர்மம்
எங்கே
கடைபிடிக்கப்பட்டது
அதர்மத்தின் வழி
நின்று தானே
அபின்யு
கொல்லப்பட்டான்”

“இப்போது
கௌரவர்களின்
சேனாதிபதியாக
இருக்கும் நீ
அதே அதர்மத்தை
கடைபிடித்து
அர்ஜுனனைக் கொன்று
இருக்கலாமே ஏன்
செய்யவில்லை”

கர்ணன் :
“ஏனென்றால் நான்
துரோணர்
இல்லை என்ற
காரணத்தினால் தான்”

“துரோணர்
சேனாதிபதியாக
இருக்கும் போது போர்
விதிமுறைகள்
மீறப்பட்டு
பலபேர் ஒன்றாகச்
சேர்ந்து
அபிமன்யுவைக்
கொன்றார்கள்
பல பேரிடம்
தன்னந்தனியாக
போரிட்டு அபிமன்யு
வீரமரணம்
அடைந்தான் என்று
இந்த உலகம்
அபிமன்யுவின்
வீரத்தைப் புகழ்ந்தது”

“ஆனால் இந்த
உலகத்தில் உள்ள
யாரும் துரோணர்
சேனாதிபதியாக
இருக்கும் போது
போர் விதிமுறைகள்
மீறப்பட்டன
துரோணர் தர்மத்தை
கடைபிடிக்கவில்லை
துரோணர் அதர்மத்தை
பின்பற்றினார்
துரோணர் செய்த
செயல் தவறு என்று
யாரும் சொல்லவில்லை”

“இதுவே நான்
சேனாதிபதியாக
இருக்கும் போது
இத்தகைய ஒரு நிகழ்வு
நடைபெற்று இருந்தால்
கர்ணன் கௌரவர்களின்
சேனாதிபதியாக
இருந்ததால் தான்
இத்தகைய ஒரு
அதர்மச் செயல்
நடந்தது என்றும்
கர்ணன் கௌரவர்களின்
சேனாதிபதியாக
இல்லாமல்
இருந்திருந்தால்
இத்தகைய ஒரு
அதர்மச் செயலே
நடந்து இருக்காது
என்றும்
என்னைத் தான்
சொல்வார்களே தவிர
அபிமன்யுவின்
வீரத்தைப் பற்றி யாரும்
பேச மாட்டார்கள்”

“துரோணர் உயர்ந்த
குலத்தில் பிறந்தார்
என்ற காரணத்தினால்
துரோணர் செய்த
தவறுகள் அனைத்தும்
மறைக்கப்பட்டு
அபிமன்யுவின் வீரத்தை
எடுத்துக் கொண்டு
இந்த உலகம்
போற்றுகிறது “

“கர்ணனாகிய நான்
தாழ்ந்த குலத்தில்
பிறந்தவன் என்று
இந்த உலகம்
என்னை நினைத்துக்
கொண்டிருக்கின்ற
காரணத்தினால்
அபிமன்யுவின் வீரம்
அனைத்தும்
மறைக்கப்பட்டு
கர்ணனாகிய
என்னுடைய தவறை
எடுத்துக் கொண்டு
இந்த உலகம்
என்னை வசைபாடும்”

“உயர்ந்த குலத்தில்
பிறந்தவர்கள் பெரிய
தவறுகள் செய்தாலும்
அது சிறியதாக
எடுத்துக் கொள்ளப்படும்
அதுவே தாழ்ந்த குலத்தில்
பிறந்தவனாக இருந்தால்
அவன் சிறிய தவறு
செய்தாலும் மிகப்பெரிய
தவறாக எடுத்துக்
கொள்ளப்படும்”

“உயர்ந்த குலத்தில்
பிறந்ததால் துரோணர்
செய்த தவறுகள்
மறைக்கப்பட்டது
தாழ்ந்த குலத்தில்
பிறந்ததால் என்னுடைய
தவறுகள் பெரியதாக
இந்த உலகம்
எடுத்துக் கொள்ளும்
என்ற காரணத்தினால்
தான் நான்
பாணங்களை
அர்ஜுனன் மேல்
செலுத்தவில்லை”

“தர்மத்தின்
வழி நடந்தேன்”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 30-06-2020
/////////////////////////////////

No comments:

Post a Comment