June 30, 2020

அறிய வேண்டியவை-பதிவு-64


               ஜபம்-பதிவு-556
        (அறிய வேண்டியவை-64)

“அதை ஒரு
வீரனால் மட்டுமே
செய்ய முடியும்
அந்த வீரத்திற்கு
உதாரணமாக இந்த
உலகத்தில் இப்போது
வாழ்ந்து கொண்டிருப்பது
கர்ணன் மட்டுமே
வீரனாக வாழ்ந்து
கொண்டிருக்கும்
கர்ணனை பிறந்த
குலத்தை வைத்து
இழிவு படுத்துவதை
முதலில் அனைவரும்
நிறுத்துங்கள்”

“வீரத்தை உணர்ந்து
கொள்ளுங்கள்
கர்ணனை புரிந்து
கொள்ள முயற்சி
செய்யுங்கள்
உண்மையை அறிந்து
கொள்ள முயற்சி
செய்யுங்கள்”

(அப்போது குந்தி
தேவி அங்கு வருகிறாள் )

அர்ஜுனன் :
“வணங்குகிறேன் தாயே!”

பீமன் :
“என்னுடைய
வணக்கத்தையும்
ஏற்றுக்
கொள்ளுங்கள் தாயே!”

குந்தி :
“நலமாக வாழ்க மகனே!”

“என்ன பிரச்சினை
இங்கு நடந்து
கொண்டிருக்கிறது
எதற்காக அனைவரும்
விவாதம் செய்து
கொண்டிருக்கிறீர்கள்”

கிருஷ்ணன் :
“தாழ்ந்த குலத்தில்
பிறந்த கர்ணனுக்கு
திறமை இல்லை
என்று சொன்னதால்
நான் பீமனுக்கு
மட்டுமல்ல
அனைவருக்கும்
அறிவுரை வழங்கிக்
கொண்டு இருந்தேன்”

“அத்தை கர்ணனைப்
பற்றி அறிந்தவர் நீங்கள்
நீங்களே கர்ணனைப்
பற்றி சொல்லுங்கள்”

குந்தி :
“கிருஷ்ணா! உனக்கு
தெரியாததையா நான்
சொல்லப்போகிறேன்”

கிருஷ்ணன் :
“யாருக்கும் தெரியாது
என்று இந்த உலகத்தில்
வாழ்பவர்கள் சில
விஷயங்களைச்
செய்கின்றனர்
யாராலும் கண்டு
பிடிக்க முடியாது என்று
நினைத்துக் கொண்டு
சில விஷயங்களைச்
செய்து விட்டு
அதை மறைத்து
விட்டு மறந்து
விடுகின்றனர் “

“செய்த விஷயம்
பல காலம் கழித்து
நம் முன்னே
விஸ்வரூபம் எடுத்து
நிற்கும் போது
அந்த விஷயம்
நமக்கு எதிராக
நிற்கும் போது தான்
தன் முன்னே
விஸ்வரூபம் எடுத்து
நிற்கும் விஷயம்
சாதாரண விஷயம்
இல்லை என்பதையும் ;
அந்த விஷயத்தில்
தான் தனக்கு நிம்மதி
போகப் போகிறது
என்பதையும் ;
அந்த விஷயம் தான்
தனக்கு துன்பத்தை
உண்டாக்கப் போகிறது
என்பதையும் ;
அந்த விஷயமே
தனக்கு சோதனையாக
இருக்கிறது
என்பதையும் ;
தன்னை
சுற்றியுள்ளவர்களுக்கும்
தன்னைச்
சார்ந்தவர்களுக்கும்
பெரிய இடையூறாக
இருக்கிறது
என்பதையும் ;
உணர்ந்து கொள்ளும்
போது தான்
மறைவாக செய்த
விஷயம் மனதிற்கு
மன சங்கடத்தை
ஏற்படுத்துகிறது
என்பதையும்;
உணர்ந்து
கொள்ள முடியும்”

“இத்தகைய ஒரு
நிலை ஏற்படும்
போது தான்
யாருக்கும் தெரியாமல்
மறைவாக
விஷயங்களைச்
செய்யக்கூடாது
என்பதை
மனிதர்களால் உணர்ந்து
கொள்ள முடியும்”

“மறைவாக
விஷயங்களைச்
செய்து விட்டு
அந்த விஷயத்தால்
அவதிப்படும் போது
தான் மறைவாக
விஷயங்களைச்
செய்யக் கூடாது
என்ற உணர்வு வரும்”

“இது அனைவருடைய
வாழ்விலும் நடைபெறும்
அப்படித்தானே அத்தை”

குந்தி :
“நீ சொல்வது முற்றிலும்
உண்மை தான் கிருஷ்ணா
மறைவாக செய்யும்
விஷயங்கள் மறைவாகவே
இருந்து விட்டால்
யாருக்கும்
பிரச்சினையில்லை
உயிர்ப்பெற்று நம்
முன்னால் வ்ந்தால்
தான் பிரச்சினை”

கிருஷ்ணன் :
“அப்படி என்றால்
கர்ணனைப் பற்றி
நீங்கள் மனதில்
மறைவாக வைத்திருக்கும்
விஷயங்களைச்
சொல்லலாமே அத்தை!”

குந்தி :
“எத்தகைய விஷயங்களைச்
சொல்லச் சொல்கிறாய்
கிருஷ்ணா!”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 30-06-2020
/////////////////////////////////

No comments:

Post a Comment