July 06, 2022

ஜபம்-பதிவு-803 (சாவேயில்லாத சிகண்டி-137)

 ஜபம்-பதிவு-803

(சாவேயில்லாத

சிகண்டி-137)

 

ஒருவரிடம்

ஆவேசமாக

பேசி விட்டு

வெளியே வந்த

அந்த பெண்

தன் கையில்

வைத்திருந்த

மாலையை

அரண்மனை

வாயிலில்

மாட்டி விட்டு

சென்றாள்

 

பல்லாயிரக்கணக்கான

மக்கள் கூடியிருந்த

இட.த்தில்

அந்த பெண்

நெருப்பில்

இறங்கிக்

கொண்டிருந்தாள்

 

இந்த காட்சிகள்

வரிசையாக

சிகண்டினிக்கு

தெரிய

ஆரம்பித்தது

காட்சிகள் அனைத்தும்

மறைந்தவுடன்

சிகண்டினிக்கு

நினைவுகள்

திரும்பியது

 

சிகண்டினி தன்

வாழ்க்கையில்

இது வரை

பார்க்காத

காட்சிகள்

இந்த காட்சிகள்

 

இந்த காட்சிகள்

தனக்கு

ஏன் வந்தது

அந்த காட்சிகள்

என்ன சொல்ல

வருகிறது

தனக்கும்

அந்த காட்சிக்கும்

ஏதேனும் தொடர்பு

இருக்கிறதா

இந்த காட்சிகள்

தனக்கு தெரியக்

காரணம் என்ன

இவ்வளவு நாள்

வராத காட்சிகள்

இப்போது

ஏன் வந்தது

அந்த காட்சியில்

தெரியும்

பெண் யார்

 

என்ற பலவித

கேள்விகளுடன்

பொறுமையாக

நிதானமாக எழுந்து

யோசித்துக்

கொண்டே

அந்த இடத்தை

விட்டு அகன்று

காட்டிற்குள்

சென்றாள்

சிகண்டினி

 

இந்த நிகழ்ச்சிகள்

வரிசையாக

அவள் உறங்கும்

போதும் தவத்தில்

இருக்கும் 

போதும்

அவளுக்குத்

தொடர்ந்து வந்து

கொண்டே

இருந்தது

 

தான்

பெண்ணிலிருந்து

முழுமையான

ஆணாக மாறிக்

கொண்டு

இருப்பதை

உணர்ந்து கொண்ட

சிகண்டினி

தான்

முழுமையான

ஆணாக

மாற்றமடைவதற்கும்

மறுபிறப்பு

எடுப்பதற்கும்

தன்னுடைய

உடல்

அமைப்பை

மாற்றிக்

கொள்வதற்கும்

அதற்குத்

தேவையான

உதவிகளைத்

தனக்கு

செய்வதற்கும்

தனக்கு

வழிகாட்டுவதற்கும்

தன்னை

பார்த்துக்

கொள்வதற்கும்

ஒரு தாய்

வேண்டும் என்று

முடிவு எடுத்து

தேடத்

தொடங்கினாள்

 

ஸ்தூணாகர்ணன்

என்பவர்

ஆணிலிருந்து

பெண்ணாக

மாறியவர்

அவரிடம்

சென்றால்

பெண்ணிலிருந்து

ஆணாக

மாறுவதற்குத்

தேவையான

அனைத்தையும்

சொல்லி

வழி நடத்துவார்

என்று

கேள்விப்பட்ட

சிகண்டினி

பெண்ணிலிருந்து

ஆணாக

மாறுவதற்காக

ஸ்தூணாகர்ணனைத்

தேடிச் சென்றாள்

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----06-07-2022

-----புதன் கிழமை

 

/////////////////////////////////////////////

 

No comments:

Post a Comment