July 06, 2022

ஜபம்-பதிவு-802 (சாவேயில்லாத சிகண்டி-136)

 ஜபம்-பதிவு-802

(சாவேயில்லாத

சிகண்டி-136)

 

தாய் தந்தையால்

புறக்கணிக்கப்பட்டு

அரசன் அரசியால்

கட்டளையிடப்பட்டு

மனைவியால்

அசிங்கப்படுத்தப்பட்டு

அவமானத்தால்

வெளியேற்றப்பட்ட

நான் ஆதரிக்க

ஒரு கரம்

இல்லாமல்

தன்னந் தனியாக

நிற்கிறேன்

 

ஒரு அனாதையால்

தான் இன்னொரு

அனாதையைப்

புரிந்து

கொள்ள முடியும்

ஆதரவு

அளிக்க முடியும்

அன்பு

செலுத்த முடியும்

 

எனவே தான்

அனாதையான

நான்

அனாதையாகக்

கிடக்கும்

உனக்கு ஆதரவு

அளிக்கப் போகிறேன்

என்னுடன் சேர்த்துக்

கொள்ளப் போகிறேன்

என்னுடன் எடுத்துச்

செல்லப் போகிறேன்

இனி நீ என்னுடன்

தான் இருக்கக்

போகிறாய்

 

என்னுடைய

வாழ்க்கையில்

நீயும் என்னுடன்

பயணிக்கப்

போகிறாய்

 

அனைத்தும்

என்னை விட்டு

விலகிய பின்

புதியதாக நீ

என்னுடன்

இணைவதால்

என்னுடைய

வாழ்க்கையில்

ஒரு புதிய

அத்தியாயம்

தொடங்குவதற்கு

நீயும் ஒரு

காரணமாகக்

கூட இருக்கலாம்

 

நம் இருவருக்கும்

யாரும் இல்லாததால்

இனி உனக்கு

நான் நண்பன்

எனக்கு நீ

நண்பன் என்று

சொல்லிக் கொண்டே

அந்த வாடாத

தாமரை

மாலையை எடுத்து

தன்னுடைய

கழுத்தில்

போட்டுக்

கொண்டாள்

சிகண்டினி

 

சிகண்டினி அந்த

மாலையை எடுத்து

தன்னுடைய

கழுத்தில் போட்ட

அந்தக் கணத்தில்

அவள் உடலில்

மாற்றங்கள்

நிகழத்

தொடங்கின

 

சிகண்டினியின்

உடல் அதிரத்

தொடங்கியது

தலை சுற்றத்

தொடங்கியது

கால்கள் தடுமாறத்

தொடங்கியது

 

சிகண்டினியால்

நடக்க முடியவில்லை

சிந்திக்க முடியவில்லை

நடக்க முடியவில்லை

நகர முடியவில்லை

 

மயக்கம் வருவது

போல் இருந்தது

சிகண்டினிக்கு

 

சிகண்டினியின்

கண்கள்

சொருகி விட்டது

சிகண்டினியால்

கண்களைத் திறக்க

முடியவில்லை

 

எதுவும் செய்யாமல்

அப்படியே தரையில்

அமர்ந்து விட்டாள்

சிகண்டினி

 

அவளுக்குள்

ஒன்றன் பின்

ஒன்றாக

காட்சிகள்

தோன்ற

ஆரம்பித்தன

 

தொடர்ந்து வரும்

காட்சிகளை

மயக்க நிலையில்

கண்களை

மூடிய நிலையில்

அமர்ந்தபடி

பார்த்துக் கொண்டே

இருந்தாள் சிகண்டினி

 

மூன்று பெண்கள்

மலர் மாலைகளை

கையில் ஏந்தியபடி

பலர் கூடி இருக்கும்

அவையில்

நடந்து வந்து

கொண்டிருந்தனர்

 

ஒரு பெண்

அரசவையில்

உள்ள

அனைவரிடமும்

ஆவேசமாக

கோபத்துடன் பேசி

சண்டையிட்டுக்

கொண்டு இருந்தாள்

 

இரண்டு நபர்கள்

பயங்கரமாக

சண்டையிட்டுக்

கொண்டு இருந்தனர்

 

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----06-07-2022

-----புதன் கிழமை

 

/////////////////////////////////////////////

 

 

 

 

No comments:

Post a Comment