December 28, 2018

திருக்குறள்-பதிவு-76


                       திருக்குறள்-பதிவு-76

“அற்புதம் என்றால்
என்ன என்று
தெரியுமா?” என்றார்
ஜியார்டானோ புருனோ.

“மோசஸ்,
இயேசு கிறிஸ்து
ஆகியோர் செய்தது
தான் அற்புதத்தில்
மிகப் பெரிய அற்புதம்,
அது தான்
உண்மையான அற்புதம்”
என்றாள் அந்தப் பெண்

“அற்புதம் என்றால்
அற்புதம் மட்டுமே ;
அற்புதத்தில் மிகப்
பெரிய அற்புதம் ;
உண்மையான
அற்புதம் ; என்பது
எதுவும் கிடையாது
அற்புதத்தை உணராதவர்கள்
அற்புதம், அற்புதம் என்று
தேடி அலைவார்கள்
அற்புதத்தை உணர்ந்தவர்கள்
அற்புதம், அற்புதம்
என்று அற்புதம் பின்னால்
அலைய மாட்டார்கள்

இதுவரை இந்த
உலகத்தில் பிறரால்
நிகழ்த்தி காட்டப்பட்ட
அற்புதங்களும் ;
அற்புதம் என்ற பெயரில்
பிறரால் தற்போது
நிகழ்த்தி காட்டப்பட்டுக்
கொண்டிருக்கும்
அற்புதங்களும் ;
அற்புதம் அல்ல
அற்புதம் என்பது
எல்லாவற்றிற்கும்
மேலானது ;
அந்த அற்புதத்தை அறிந்து
அந்த அற்புதத்துடன்
இணைவது தான்
அற்புதத்தில் அற்புதம் ;

முதலில் அற்புதம்
என்றால் என்ன என்று
அறிந்து கொள் ;
அதற்கு பிறகு
அற்புதத்தை உணரலாம் ;
அற்புதம் என்றால் என்ன
என்று அறியாமல்
அற்புதத்தை உணர
முடியாது” என்றார்
ஜியார்டானோ புருனோ.

“அற்புதம் என்றால்
என்ன என்று எனக்கு
சொல்லித் தாருங்கள்
புருனோ” என்றாள்
அந்தப் பெண்.

“கல், மண்,
செடி, கொடி, மரம்
விலங்குகள்,
மனிதர்கள்- என
இந்த பிரபஞ்சத்தில் உள்ள
அனைத்தும் ஒன்றுடன்
ஒன்று இணைக்கப்பட்டுள்ளது
இந்தப் பிரபஞ்சத்தில்
உள்ள எந்த ஒன்றும்
தனித்து இல்லை எல்லாம்
ஒன்றுடன் ஒன்று
இணைக்கப்பட்டுள்ளது

இவைகள் அனைத்தும்
ஒரு குறிப்பிட்ட ஒன்றால்
அறிய முடியாத ஒன்றால்
கண்ணுக்குத்
தெரியாத ஒன்றால்
சூட்சும நிலையில்
இணைக்கப் பட்டுள்ளன

அது மட்டுமல்ல
அவைகள் ஒவ்வொன்றும்
அவைகளுக்கு என்று
நிர்ணயிக்கப்பட்ட
நியதிகளின்படி
அணு அளவும்
பிசகாமல் அனைத்தும்
இயக்க ஒழுங்கு
மாறாமல் இயங்கிக்
கொண்டு இருக்கிறது

இந்த பிரபஞ்சத்தில்
உள்ள அனைத்தும்
எப்படி ஒன்றுடன் ஒன்று
இணைக்கப்பட்டுள்ளது
என்பதையும் ;
அவைகள் எப்படி
இயக்க ஒழுங்கு மாறாமல்
இயங்கிக் கொண்டிருக்கிறது
என்பதையும் ;
இவைகள் அனைத்தையும்
தன்னுள் வைத்து
இயக்கிக் கொண்டிருப்பது
எது என்பதையும்
அறிந்து கொள்வது
தான் அற்புதம்
அதை உணர்வது
கொள்வது தான் அற்புதம்

இந்த அற்புதத்தை
உணர்ந்து கொண்டால்
வேறு அற்புதத்தை
தேடி ஓட வேண்டிய
அவசியமில்லை ;
அற்புதத்தை
நிகழ்த்துபவர்களைக்
கண்டு அதிசயப்பட
வேண்டிய அவசியமில்லை ;
அற்புதம் செய்பவர்களிடம்
அடிபணிய வேண்டிய
அவசியம் இல்லை ;

அற்புதம் என்றால்
என்ன என்று
தெரிந்து கொள்
அப்போது நீ அற்புதம்
அற்புதம் என்று
அலைய மாட்டாய் ;
அத்தகைய அற்புதத்தை
தெரிந்து கொள்” என்றார்
ஜியார்டானோ புருனோ

“அந்த அற்புதத்தை
எனக்கு காட்டுவீர்களா
அந்த அற்புதத்தை காணும்
வழி முறையை எனக்கு
சொல்லித் தருவீர்களா
புருனோ” என்றாள்
அந்தப் பெண்

“அற்புதம் என்றால் என்ன
என்று தெரிந்து கொள்ள
வேண்டுமானால்
அற்புதம் என்றால் என்ன
என்று உணர
வேண்டுமானால் - நீ
உன் சுவாசத்தை
மாற்ற வேண்டும்
சுவாசத்தை மாற்றுவதன்
மூலம் - நீ அற்புதம்
என்றால் என்ன என்பதை
உணர முடியும்

உட்சுவாசம்
வெளி சுவாசம் என்று
ஓடிக் கொண்டிருக்கும்
சுவாசத்தை உட்சுவாசமாக
(Inner Breath)
மட்டுமே மாற்ற
வேண்டும்” என்றார்
ஜியார்டானோ புருனோ.

“எனக்கு சுவாசத்தை
உட்சுவாசமாக மட்டுமே
எப்படி மாற்றுவது
என்பதை சொல்லித்
தாருங்கள்” புருனோ
என்றாள் அந்தப்பெண்

இங்கே வா இந்த
இடத்தில் வந்து உட்கார்
உனக்கு சுவாசத்தை
எப்படி மாற்ற வேண்டும்
வெளி சுவாசத்தை நிறுத்தி
உட்சுவாசமாக மட்டுமே
சுவாசத்தை எப்படி
ஓட வைப்பது
என்பதை செய்து
காட்டுகிறேன் என்றார்
ஜியார்டானோ புருனோ

---------  இன்னும் வரும்
---------  28-12-2018
///////////////////////////////////////////////////////////


No comments:

Post a Comment