December 27, 2018

திருக்குறள்-பதிவு-75


                     திருக்குறள்-பதிவு-75

ஜியார்டானோ
புருனோவினுடைய
வாழ்க்கையில் மக்களால்
நடந்ததாக சொல்லப்பட்ட
ஜியார்டானோ புருனோவிற்கு
எதிராக சொல்லப்பட்ட
பெரும்பாலான சம்பவங்களின்
வார்த்தைகள் அனைத்தும்
அவரைப் பிடிக்காதவர்கள்
காழ்ப்புணர்ச்சியின்
காரணமாக சொல்லப்பட்ட
வார்த்தைகளாக இருந்தும் ;
மதவெறியின் காரணமாக
அவர் மீது
சுமத்தப்பட்ட போலிக்
குற்றச்சாட்டுக்களாக
இருந்தும் ;  அவைகள்
உண்மையானவைகளா
என்று கூட ஆராய்ந்து
பார்க்காமல் ஜியார்டானோ
புருனோ கிறிஸ்தவ
மதத்திற்கு எதிராக
செயல்பட்டார் என்ற
காரணத்திற்காக அவைகள்
அனைத்தும் ஆதாரங்களாக
எடுத்துக் கொள்ளப்பட்டன.

ஆனால், ஜியார்டானோ
புருனோவினுடைய
வாழ்க்கையில் மக்களால்
நடந்ததாக சொல்லப்பட்ட
ஜியார்டானோ புருனோவிற்கு
ஆதரவாக சொல்லப்பட்ட
பெரும்பாலான சம்பவங்களின்
வார்த்தைகள் அனைத்தும்
அவரது ஆதரவாளர்களால்
சொல்லப்பட்ட வார்த்தைகள்
என முடிவு செய்யப்பட்டு
அந்த சம்பவங்களில்
சொல்லப்பட்ட வார்த்தைகள்
உண்மையானவைகளாக
இருந்தாலும் அவைகள்
அனைத்தும் ஏற்றுக்
கொள்ளப்படவில்லை
அவைகள் அனைத்தும்
புறக்கணிக்கப் பட்டன.

இவ்வாறு மக்களுடைய
மனநிலை எந்த
நிலையில் இருக்கிறது
என்பதை ரகசியமாக
ஆராய்ச்சி செய்து
கொண்டிருந்த சமயத்தில்
செனட் சபை கூட்டப்பட்டு
செனட் சபை
உறுப்பினர்கள் கலந்து
கொண்ட கூட்டத்தில்
ஜியார்டானோ புருனோவை
ரோம் நகருக்கு கைதியாக
தொடர் விசாரணைக்கு
அனுப்புவதற்கான
தீர்மானத்தின் மீது
விவாதம் நடைபெற்றுக்
கொண்டிருந்தது,

ஜியார்டானோ புருனோவின்
மீது பல்வேறு
குற்றச்சாட்டுக்களை சுமத்தி
ஜியார்டானோ புருனோவை
ஒரு குற்றவாளியாக
முத்திரை குத்தி
அவரை தாக்கியே
அனைவரும் விவாதத்தில்
பேசிக் கொண்டு இருந்தனர்
ஒரு தீர்மானத்தின் மீது
எதிர்த்துப் பேச
ஆளில்லாமல்
ஒருதலைப் பட்சமாக
ஜியார்டானோ புருனோவை
தாக்கிப் பேசிக்
கொண்டிருந்தது அங்கு
தான் நடந்து
கொண்டு இருந்தது

விவாதத்தின் முடிவில்
ஜியார்டானோ புருனோ
ரோம் நகருக்கு
கைதியாக தொடர்
விசாரணைக்கு
அனுப்பட வேண்டும்
என்ற தீர்மானத்தின்
மீது வாக்கெடுப்பு
நடத்தப்பட்டது

தீர்மானத்தின் மீது
நடத்தப்பட்ட வாக்கெடுப்பில்
மொத்தமுள்ள 172 செனட்
உறுப்பினர்களில்
தீர்மானத்திற்கு ஆதரவாக
142 உறுப்பினர்களும்
தீர்மானத்திற்கு எதிராக
10 உறுப்பினர்களும்
வாக்களித்து இருந்தனர்,
20 உறுப்பினர்கள்
வாக்களிக்கவில்லை.

////////////////////////////////////////////////////
வாக்கெடுப்பின் முடிவு
 மொத்த ஓட்டுகள் – 172
           ஆதரவு – 142
           எதிர்ப்பு -  10
 வாக்களிக்காதவர்கள் -20
////////////////////////////////////////////////////////

தீர்மானத்தின் மீது
நடைபெற்ற
வாக்கெடுப்பைத் தொடர்ந்து
ஜியார்டானோ புருனோவை
ரோம் நகருக்கு கைதியாக
தொடர் விசாரணைக்கு
அனுப்புவதற்குத் தேவையான
அனைத்து பணிகளும்
செய்யப்பட்டன.

ஜியார்டானோ
புருனோவை ரோம்
நகருக்கு கைதியாக
தொடர் விசாரணைக்காக
அழைத்துச் செல்வதற்காக
நிறுத்தி வைக்கப்பட்டு
இருந்த கப்பலை
நோக்கி காவலர்கள்
ஜியார்டானோ
புருனோவை அழைத்துச்
சென்று கொண்டிருந்தனர்.

ஜியார்டானோ
புருனோ ஏறுவதற்காக
நிறுத்தி வைக்கப்பட்ட
கப்பலில் இருந்து
சற்று தொலைவில்
ஒரு பெண் நின்று
கொண்டிருந்தாள்.

ஜியார்டானோ
புருனோ கப்பலில்
ஏறுவதற்கு முன் அந்தப்
பெண்ணைப் பார்த்தார்
ஆயிரம் அர்த்தங்கள்
கொண்ட சிறிய
புன்முறுவலை உதிர்த்தார் ;
அந்த புன்முறுவலின்
அர்த்தத்தை அந்த
பெண்ணால் மட்டும் தான்
உணர்ந்து கொள்ள
முடியும் ; ஆம் இந்த
உலகத்தில் ஜியார்டானோ
புருனோ உயிருடன்
வாழ்ந்த காலத்தில்
ஜியார்டானோ
புருனோவை முழுவதுமாக
அறிந்து வைத்திருந்த
ஒரே நபர் அந்த
பெண் மட்டுமே !!

Madonna of Venice
என்று அழைக்கப்பட்ட
அந்தப் பெண்
ஒரு முறை
ஜியார்டானோ புருனோவை
அணுகி மோசஸ்,
இயேசு கிறிஸ்து
போன்று தாங்கள்
அற்புதங்கள் செய்வீர்கள்
என்று கேள்விப்பட்டேன்
தாங்கள் எனக்கு
அந்த அற்புதங்களை
செய்து காட்ட முடியுமா
அந்த அற்புதங்களை
செய்வது எப்படி
என்ற முறையினை
எனக்கு சொல்லித்
தர முடியுமா என்று
கேட்டாள்.

அதற்கு ஜியார்டானோ
புருனோ அற்புதங்கள்
என்றால் என்ன
என்று தெரியுமா?
என்றார்..

---------  இன்னும் வரும்
---------  27-12-2018
/////////////////////////////////////////////////


No comments:

Post a Comment