June 26, 2022

ஜபம்-பதிவு-793 (சாவேயில்லாத சிகண்டி-127)

 ஜபம்-பதிவு-793

(சாவேயில்லாத

சிகண்டி-127)

 

நான்

பெண்ணிலிருந்து

ஆணாக மாற்றுப்

பாலினமாக

மாறிய பிறகு

மாற்றுப்

பாலினமாக வாழ்ந்து

கொண்டு இருக்கும்

என் மேல்

உண்மையான

அன்பு வைத்து

என்னைப்

புரிந்து கொண்டு

என்னைத்

திருமணம்

செய்து கொண்டு

என்னுடன் குடும்பம்

நடத்த வேண்டும்

என்று யார்

விரும்புகிறாரோ

அவரை

அந்த நல்லவரை

இந்த உலகம்

காணாத உத்தமரை

கண்டதும்

சொல்கிறேன்

அவரை எனக்கு

திருமணம் செய்து

வையுங்கள்

 

துருபதன் :

அது வரை

என்னால் காத்துக்

கொண்டிருக்க

முடியாது

 

திருமணம் உடனே

நடக்க வேண்டும்

அதுவும் இப்போதே

நடக்க வேண்டும்

 

திருமணத்தைத்

தள்ளிப் போட

முடியாது

 

இப்போது நான்

சொல்லும்

பெண்ணை

திருமணம் செய்து

கொள்ள முடியுமா

முடியாதா

 

சிகண்டினி :

முடியாது

 

துருபதன் :

உன்னுடைய அப்பா

என்ற முறையில்

கேட்கிறேன்

திருமணம் செய்து

கொள்ள முடியுமா

முடியாதா

 

சிகண்டினி :

முடியாது

 

துருபதன் :

அப்பாவாக இருந்து

அன்பாக கேட்டால்

என்னுடைய

வார்த்தைக்கு

மரியாதை

கொடுக்க மாட்டேன்

என்கிறாய்

 

நீ என் நாட்டில்

வசிக்கும் ஒரு

குடிமகள்

என்ற முறையில்

அரசனாக இருந்து

கட்டளை இடுகிறேன்

நான் சொல்லும்

பெண்ணை நீ

திருமணம் செய்து

கொள்ள வேண்டும்

 

இது அரச கட்டளை

 

சிகண்டினி :

தந்தையே

 

துருபதன் :

கட்டளை இட்டது

உன்னுடைய

தந்தை இல்லை

இந்த நாட்டின்

அரசன்

 

சிகண்டினி :

தாயே

 

தந்தை

தன்னை

தந்தை இல்லை

அரசன் என்கிறார்

 

நீங்கள் என்ன

சொல்லப் போகிறீர்கள்

 

தாயாக இருக்கப்

போகிறீர்களா

அல்லது

அரசியாக இருக்கக்

போகிறீர்களா

 

கௌசவி :

அவர் உனக்குத்

தந்தை

என்றால் தான்

நான் உனக்குத்

தாயாக

இருக்க முடியும்

 

அவர் உனக்கு

அரசன் என்றால்

நான் உனக்கு

அரசியாகத் தானே

இருக்க முடியும்

 

அரசர் இட்ட

கட்டளையே

அரசியான

என்னுடைய

கட்டளையும்

 

சிகண்டினி :

பெண்ணாகப் பிறந்த

என்னை ஆண்

என்ற பொய்யைச்

சொல்லி

இந்த உலகத்திற்கு

அறிமுகப்

படுத்தினீர்கள்

நான் ஒரு பெண்

என்பது இந்த

உலகத்திற்கு

தெரியக் கூடாது

என்பதற்காக

யாருடனும்

பேச விடாமல்

யாருடனும்

பழக விடாமல்

யாருடனும்

விளையாட விடாமல்

தனியறையில்

வைத்து என்னை

வளர்த்தீர்கள்

 

நான் கல்வி கற்க

துரோணரிடம்

சென்ற போது கூட

ஆண் உடை

தரித்து தான்

சென்றேன்

 

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----26-06-2022

-----ஞாயிற்றுக் கிழமை

 

/////////////////////////////////////////////

 

 

 

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment