June 26, 2022

ஜபம்-பதிவு-795 (சாவேயில்லாத சிகண்டி-129)

 ஜபம்-பதிவு-795

(சாவேயில்லாத

சிகண்டி-129)

 

நல்ல தந்தையும்

தாயும் இல்லை

என்றால்

பிள்ளைகள்

கஷ்டப்பட வேண்டும்

என்பதற்கு

இந்த சிகண்டினி

தான் உதாரணம்

 

அதைப்போல

நல்ல அரசனும்

அரசியும் இல்லை

என்றால்

ஒரு குடிமகள்

கஷ்டப்பட வேண்டும்

என்பதற்கும்

இந்த சிகண்டி

தான் உதாரணம்

 

அரசன் அரசியாக

இருந்து நீங்கள்

இட்ட கட்டளையை

நான் ஏற்றுக் கொண்டு

நிறைவேற்றுகின்றேன்

 

நான் திருமணம்

செய்து கொள்கிறேன்

 

நீங்கள் யாரைச்

சொல்கிறீர்களோ

அவரைத் திருமணம்

செய்து கொள்கிறேன்

 

என்னுடைய

வாழ்க்கையில் நான்

அசிங்கப்பட

வேண்டும்

அவமானப்பட

வேண்டும்

என்று இருந்தால்

நான்

அசிங்கப்படத்

தான் வேண்டும்

அவமானப்படத்

தான் வேண்டும்

 

அதை யாராலும்

மாற்ற முடியாது

 

கர்மா தன்னுடைய

ஆட்டத்தை

ஆடத்

தொடங்கி விட்டது

 

கர்மா கொடுக்கப்

போகும்

விளைவுக்குப்

பயந்து

ஓடிப் போய்

ஒளிந்து கொள்ள

மாட்டாள் இந்த

சிகண்டினி

 

கர்மா கொடுக்கப்

போகும் விளைவை

சந்திக்கத் தயாராகி

விட்டேன்

 

நான் தயார்

 

திருமணம் செய்து

கொள்ள இந்த

சிகண்டினி தயார்

 

திருமணத்திற்கான

ஏற்பாடுகளைச்

செய்யுங்கள்

 

துருபதன் :

உன்னுடைய

சொல்லை நம்பலாமா

 

சிகண்டினி :

சொன்ன

சொல்லிலிருந்து

அந்த கடவுள்

கூட தவறலாம்

இந்த சிகண்டினி

தவற மாட்டாள்

 

என்று சொல்லி

விட்டு

அந்த அறையை

விட்டு

வெளியேறினாள்

சிகண்டினி

 

சிகண்டினியின்

பெற்றோர்கள்

சிகண்டினிக்கு

திருமணம் செய்து

வைப்பதற்கான

அனைத்து

வேலைகளையும்

செய்ய

ஆரம்பித்தனர்

 

பெண்ணான

சிகண்டினி

பெண்ணைத்

திருமணம்

செய்து கொள்வாரா

என்பதைத்

தெரிந்து கொள்ள

விரும்புபவர்கள்

சிகண்டினியைப்

பின் தொடருங்கள்

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----26-06-2022

-----ஞாயிற்றுக் கிழமை

 

/////////////////////////////////////////////

No comments:

Post a Comment