June 26, 2022

ஜபம்-பதிவு-783 (சாவேயில்லாத சிகண்டி-117)

 ஜபம்-பதிவு-783

(சாவேயில்லாத

சிகண்டி-117)

 

துருபதன் :

சென்ற

பிறவியிலேயே

பெண்ணாகப்

பிறந்த அம்பை

பீஷ்மனைக்

கொல்லவில்லை

 

இந்தப் பிறவியிலும்

அம்பை எனக்கு

பெண்ணாகப் பிறந்து

எப்படி

பீஷ்மனைக்

கொல்வாள்

 

அதனால் தான்

நான் ஆண்

பிள்ளை வேண்டும்

என்று கேட்கிறேன்

 

எனக்கு ஆண்

பிள்ளை பிறந்தால்

அவன் கண்டிப்பாக

பீஷ்மனைக்

கொல்வான்

 

சிவன் :

இந்த உலகத்தில்

பிறக்கும்

ஒவ்வொரு மனிதனும்

ஒரு காரணத்துடன்

தான் பிறக்கிறான்

 

இதற்காகத் தான்

நான்

பிறந்திருக்கிறேன்

என்று உணர்ந்தவன்

எதற்காக இந்த

உலகத்திற்கு

வந்தானோ

அதற்கான

கடமையைச் செய்து

முடிக்கிறான்

 

இந்த உலகத்தில்

எதற்காகப்

பிறந்திருக்கிறோம்

என்று

தெரியாதவர்கள்

எதற்காகப்

பிறந்தோம்

என்பது

தெரியாமலேயே

மாண்டு போகிறார்கள்

 

சென்ற பிறவியில்

அம்பை பீஷ்மனைக்

கொல்ல வேண்டும்

என்ற

காரணத்திற்காகப்

பிறக்கவில்லை

என்பதைத் தெரிந்து

கொண்ட

காரணத்தினால் தான்

சென்ற பிறவியில்

தன்னுடைய

வாழ்க்கையை

முடித்துக்

கொண்டாள் அம்பை

 

எடுக்கப் போகும்

இந்தப் பிறவியே

அம்பை பீஷ்மனைக்

கொல்வதற்காக

எடுக்கப் போகும்

பிறவி

 

இந்தப் பிறவியில்

அம்பை பிறப்பதே

பீஷ்மனைக் கொல்ல

வேண்டும் என்ற

காரணத்திற்காகத்

தான்

 

துருபதன் :

இதனை அம்பை

எப்படி உணர்ந்து

கொள்வாள்

 

சிவன் :

உனக்கு

பெண்ணாகப்

பிறக்கப் போகும்

பெண் பிள்ளையான

சிகண்டினி

குறிப்பிட்ட

காலத்திற்குப் பிறகு

சிகண்டி என்ற

ஆணாக மாறுவான்

 

அப்படி சிகண்டி

என்ற ஆணாக

மாறும் போது

அவனுக்கு சென்ற

பிறவியில்

நடந்தவைகள்

அனைத்தும்

அவனுடைய

நினைவுக்கு வரும்

 

துருபதன் :

இறைவா

எனக்கு

பிறக்கப்போகும்

பெண் பிள்ளை

பெண்ணிலிருந்து

ஆணாக மாறினால்

மாற்றுப் பாலினம்

என்று சொல்லி

என் பிள்ளையை

மட்டுமல்ல

என்னையும்

இந்த உலகம்

இழிவு படுத்துமே

 

கேவலமாகப்

பார்க்குமே

அவமானப் படுத்துமே

 

எங்களுக்கு

இத்தகைய ஒரு

அவமானம்

நேராமல் இருக்க

வேண்டுமானால்

எனக்கு ஒரு ஆண்

பிள்ளையைக்

கொடுங்கள்

அது போதும்

 

சிவன் :

துருபதா

அம்பை தன்னுடைய

தவ வலிமையால்

பீஷ்மனைக்

கொல்ல வேண்டும்

என்ற வரத்தைப்

பெற்று நெருப்பில்

இறங்கி தன்னுடைய

ஆயுள் முடிவதற்கு

முன் இறந்து

விட்டாள்

 

சென்ற பிறவியில்

விட்டு விட்டு வந்த

பெண்ணுக்கான

ஆயுளை

இந்தப் பிறவியில்

அவள் அனுபவிக்க

வேண்டும்

அதனால்

அவள் முதலில்

சிகண்டினி என்ற

பெண்ணாகப் பிறப்பாள்

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----18-06-2022

-----சனிக்கிழமை

 

//////////////////////////////////////////////

 

No comments:

Post a Comment