June 26, 2022

ஜபம்-பதிவு-792 (சாவேயில்லாத சிகண்டி-126)

 ஜபம்-பதிவு-792

(சாவேயில்லாத

சிகண்டி-126)

 

துருபதன் :

பெண்ணிலிருந்து

ஆணாக மாற்றுப்

பாலினமாக

மாறிய பிறகு

திருமணம் செய்து

கொள்கிறேன்

என்கிறாயா

 

சிகண்டினி :

நான் அப்படிச்

சொல்லவில்லை

நான்

பெண்ணிலிருந்து

ஆணாக மாற்றுப்

பாலினமாக மாறினாலும்

உடனே யாரையும்

திருமணம் செய்து

கொள்ள முடியாது

 

அப்படியே திருமணம்

செய்து கொண்டாலும்

அது தவறான

ஒன்றாகத் தான்

இருக்கும்

சரியான ஒன்றாக

இருக்காது

 

மாற்றுப்

பாலினத்தவர்களை

புரிந்து

கொண்டவர்கள்

மாற்றுப்

பாலினத்தவர்களை

திருமணம் செய்து

கொள்வதில் தவறில்லை

 

ஆனால்

மாற்றுப்

பாலினத்தவர்களை

புரிந்து கொள்ளாதவர்கள்

திருமணம் செய்தால்

பிரச்சினை தான்

ஏற்படும்

 

மாற்றுப்

பாலினத்தவர்களின்

உடல்

அமைப்பைப் பற்றியும்

 

மாற்றுப்

பாலினத்தவர்களின்

வாழ்க்கை

முறைகளைப் பற்றியும்

 

மாற்றுப்

பாலினத்தவர்களுக்கும்

உணர்வுகள் இருக்கிறது

அந்த உணர்வுகளுக்கும்

மதிப்பு கொடுக்க

வேண்டும் என்றும்

 

மாற்றுப்

பாலினத்தவர்களை

திருமணம்

செய்து கொண்டால்

இந்த உலகம்

ஏளனப் படுத்தும்

வாழ விடாது

என்பது தெரிந்தும்

இந்த உலகத்தில்

வாழும் மக்களின்

ஏளனங்களுக்கு

பயப்படாமல்

மாற்றுப்

பாலினத்தவர்களை

திருமணம்

செய்து கொண்டு

இந்த

சமுதாயத்தில்

வாழ வேண்டும்

வாழ முடியும்

என்றும்

 

மாற்றுப்

பாலினத்தவர்களின்

மேல் உண்மையான

அன்பு வைத்து

உண்மையாக

திருமணம்

செய்து கொண்டு

உண்மையாக

குடும்பம்

நடத்த வேண்டும்

என்றும்

 

யார்

நினைக்கிறாரோ

அவரை

கண்டிப்பாக

திருமணம்

செய்து கொள்வேன்

 

மாற்றுப்

பாலினத்தவர்களின்

மேல் உள்ள

இரக்கத்தின்

காரணமாகவோ

மாற்றுப்

பாலினத்தவர்களின்

மேல் உள்ள

ஆசையின்

காரணமாகவோ

யாரேனும்

திருமணம் செய்ய

முன் வந்தால்

அவர்களை

திருமணம் செய்து

கொள்ள மாட்டேன்

 

ஏனென்றால்

மாற்றுப்

பாலினத்தவர்களின்

மேல் இரக்கப்பட்டு

திருமணம் செய்து

கொள்பவர்களும்

மாற்றுப்

பாலினத்தவர்களின்

மேல் உள்ள

ஆசையின்

காரணமாக

திருமணம் செய்து

கொள்பவர்களும்

மாற்றுப்

பாலினத்தவர்களுடன்

நீண்ட நாட்கள்

வாழ மாட்டார்கள்

 

அவர்கள் ஒரு

தேவைக்காக

வருவார்கள்

அவர்களுடைய

தேவை முடிந்தவுடன்

சென்று விடுவார்கள்

 

இத்தகையவர்களை

திருமணம் செய்து

கொண்டால்

திருமண

வாழ்க்கையும்

நீண்ட நாட்கள்

நீடிக்காது

 

குடும்ப

வாழ்க்கையும்

இனிக்காது

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----26-06-2022

-----ஞாயிற்றுக் கிழமை

 

/////////////////////////////////////////////

 

No comments:

Post a Comment