June 26, 2022

ஜபம்-பதிவு-794 (சாவேயில்லாத சிகண்டி-128)

 ஜபம்-பதிவு-794

(சாவேயில்லாத

சிகண்டி-128)

 

உன்னைப் போன்ற

ஒரு ஆணால்

மட்டுமே அஸ்திர

சாஸ்திரங்களை

இவ்வளவு

நுணுக்கமாகவும்,

திறமையாகவும்

கற்க முடியும்

ஒரு பெண்ணால்

கற்க முடியாது

என்று துரோணர்

என்னிடம்

சொன்ன போது கூட

ஏன் ஒரு

பெண்ணால்

கற்க முடியாதா

உங்களிடம் கல்வி

கற்ற நான்

ஒரு பெண்

என்று என்னால்

சொல்லக் கூட

முடியவில்லை

 

என்னை

கூண்டுக் கிளியாக

வளர்த்தீர்கள்

 

தந்தையாகவும்

தாயாகவும் இருந்து

ஒரு பிள்ளையை

எப்படி வளர்க்க

வேண்டுமோ அப்படி

வளர்க்காமல் ஒரு

அடிமையாக

வளர்த்தீர்கள்

 

பெண்ணாக

இருக்கும் நான்

பெண்ணை திருமணம்

செய்தாலும்

பெண்ணிலிருந்து

ஆணாக மாற்றுப்

பாலினமாக மாறி

திருமணம்

செய்தாலும்

எனக்கு

பிரச்சினை ஏற்படும்

என்று நான்

எவ்வளவு எடுத்துச்

சொல்லியும்

என்னுடைய

உணர்வுகளைப்

புரிந்து கொள்ளாமல்

என்னுடைய

வார்த்தைகளுக்கு

மதிப்பு கொடுக்காமல்

எனக்கு திருமணம்

செய்து வைக்க

வேண்டும்

என்று முயற்சி

செய்கிறீர்கள்

 

நான் திருமணம்

செய்ய வேண்டும்

என்று அரசனாகவும்

அரசியாகவும்

இருந்து

கட்டளை இடுகிறீர்கள்

 

தந்தையாகவும்

தயாகவும் இருந்து

ஒரு பிள்ளைக்கு

செய்ய

வேண்டியவைகளை

நீங்கள் செய்யா

விட்டாலும்

ஒரு பிள்ளையாக

இருந்து செய்ய

வேண்டியவைகளை

நான் செய்து

கொண்டு தான்

இருக்கிறேன்

 

நான் ஒரு

ஆண் என்று

இந்த உலகத்திற்கு

நீங்கள் சொல்லிய

பொய்யை

இன்று வரை நான்

காப்பாற்றிக் கொண்டு

தான் இருக்கிறேன்

 

தந்தையாகவும்

தாயாகவும் இருந்து

என்னை அடிமையாக

வைத்து

கஷ்டப்படுத்தினீர்கள்

இப்போது

அரசனாகவும்

அரசியாகவும் இருந்து

குடிமகள் எனற

முறையில்

என்னை கஷ்டப்பட

வைக்கப் போகிறீர்கள்

 

தந்தையாகவும்

தாயாகவும் இருந்து

ஒரு பிள்ளைக்கு

செய்ய

வேண்டியவைகளை

நீங்கள் எனக்கு

செய்யவில்லை

அரசனாகவும்

அரசியாகவும் இருந்து

ஒரு குடிமகளுக்கு

செய்ய

வேண்டியவைகளையும்

நீங்கள் எனக்கு

செய்யவில்லை

 

ஒரு பிள்ளைக்கு

நல்ல தந்தையாகவும்

தாயாகவும் நீங்கள்

நடந்து கொள்ளவில்லை

ஒரு குடிமகளுக்கு

நல்ல அரசனாகவும்

அரசியாகவும்

நீங்கள் நடந்து

கொள்ளவில்லை

 

நீங்கள் எனக்கு

நல்ல தந்தையாகவும்

தாயாகவும் நடந்து

கொள்ளாமல்

இருக்கலாம்

ஆனால்

நான் இன்று வரை

உங்களுக்கு ஒரு

நல்ல பிள்ளையாக

நான் நடந்து

கொண்டிருக்கிறேன்

 

நீங்கள் எனக்கு

நல்ல அரசனாகவும்

அரசியாகவும் நடந்து

கொள்ளாமல்

இருக்கலாம்

ஆனால் நான்

இன்று வரை

உங்களுக்கு ஒரு

நல்ல குடிமகளாக

நான் நடந்து

கொண்டிருக்கிறேன்

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----26-06-2022

-----ஞாயிற்றுக் கிழமை

 

/////////////////////////////////////////////

 

No comments:

Post a Comment