June 26, 2022

ஜபம்-பதிவு-784 (சாவேயில்லாத சிகண்டி-118)

 ஜபம்-பதிவு-784

(சாவேயில்லாத

சிகண்டி-118)

 

நீ பீஷ்மனைக்

கொல்வதற்கு

ஆண் பிள்ளை

வேண்டும் என்று

தவம் இருந்ததால்

பீஷ்மனைக்

கொல்வதற்காக

அவள் சிகண்டி

என்ற

ஆணாக மாறுவான்

 

விருப்பப்படும்

போது தான்

மரணம் என்ற

வரத்தைப் பெற்றவன்

பீஷ்மன்

சாகாவரத்திற்கு

இணையான

வரத்தைப் பெற்றவன்

அவன்

 

இது போன்ற

சக்தி வாய்ந்த

வரத்தைப்

பெற்றவர்கள்

நல்லவர்களாக

இருந்தாலும்

கெட்டவர்களாக

இருந்தாலும்

அவர்களை

மனிதர்களாகப்

பிறப்பெடுக்கும்

ஆணாலோ அல்லது

பெண்ணாலோ

கொல்லவே முடியாது

கடவுளால் மட்டுமே

கொல்ல முடியும்

 

இந்த உலகத்தில்

கடவுளாகப்

பிறப்பெடுப்பவர்கள்

மாற்றுப்

பாலினத்தவர்கள்

உனக்கு

பிள்ளையாகப்

பிறக்கப் போகும்

சிகண்டினி

என்ற பெண்

சிகண்டி என்ற

ஆணாக மாற்றுப்

பாலினமாக

மாறும் போது

பீஷ்மனைக்

கொல்வார்

 

இப்போது

புரிகிறதா துருபதா

உனக்கு நான்

வழங்கப் போகும்

குழந்தை வரத்தில்

எவ்வளவு ரகசியங்கள்

அடங்கி

இருக்கிறது என்று

 

துருபதன் :

மாற்றுப்பால்

இனத்தவர்கள்

அனைவரும்

இப்படித் தான்

பிறக்கிறார்களா

இறைவா

 

அவர்கள் பிறப்பிற்கான

காரணம் இது தானா

 

சிவன் :

இல்லை

 

மாற்றுப்பால்

இனத்தவர்கள்

அனைவரும் இவ்வாறு

பிறப்பதில்லை

 

பிறப்பதற்கான

காரணமும்

இது இல்லை

 

துருபதன் :

வேறு என்ன காரணம்

 

சிவன் :

பரம்பொருள்

ரகசியங்களை

மனிதனால் உணர்ந்து

கொள்ள முடியாது

 

உணர்ந்து கொள்ளும்

அறிவும்

மனிதனுக்கு இல்லை

 

துருபதன் :

இருந்தாலும் இறைவா

 

மாற்றுப்பால்

பிள்ளையை

இந்த உலகம்

கிண்டல் பண்ணாதா

இழிவாக நினைக்காதா

 

சிவன் :

இந்த உலகம்

எதை எல்லாம்

இழிவானதாகக்

கருதுகிறதோ

அவை எல்லாம்

இழிவானது

கிடையாது

 

இந்த உலகம்

எதை எல்லாம்

உயர்வானதாகக்

கருதுகிறதோ

அவை எல்லாம்

உயர்வானதும்

கிடையாது

 

இந்த உலகம்

தனக்கு சாதகமாக

இருப்பதை எல்லாம்

இழிவானதாக

இருந்தாலும்

உயர்வானதாகவும்

 

தனக்கு சாதகமாக

இல்லாதவைகளை

உயர்வானதாக

இருந்தாலும்

இழிவானதாகவும்

வைத்திருக்கிறது

 

அதில் ஒன்று தான்

உயர்வானதாகக்

கருதப்பட வேண்டிய

மாற்றுப்பால்

இனத்தவர்களை

இழிவானதாக

வைத்திருக்கிறது

 

இந்த உலகத்தில்

ஆண்களை

எடுத்துக்

கொண்டாலும்

பெண்களை

எடுத்துக்

கொண்டாலும்

தாங்கள்

எப்படி வாழ

வேண்டும் என்று

ஆசைப்படுகிறார்களோ

அப்படி வாழாமல்

தங்களுடைய

ஆசைகளையும்

கனவுகளையும்

மறைத்து

வைத்துக் கொண்டு

இந்த

உலகத்திற்காக

வாழ்கிறார்கள்

 

தங்களுடைய சொந்த

விருப்பத்தின்

பேரில் வாழாமல்

இந்த உலகத்திற்காக

வாழ்கிறார்கள்

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----18-06-2022

-----சனிக்கிழமை

 

//////////////////////////////////////////////

 

 

 

No comments:

Post a Comment