June 26, 2022

ஜபம்-பதிவு-791 (சாவேயில்லாத சிகண்டி-125)

 ஜபம்-பதிவு-791

(சாவேயில்லாத

சிகண்டி-125)

 

விரதத்தின் போது

பெண்ணைத்

தொடக் கூடாது

 

அதனால் விரதம்

முடியும் வரை

இருவரும் விலகி

இருப்போம்

என்னுடைய விரதம்

முடிந்த பிறகு

இருவரும்

இணைந்து

ஒன்றாக குடும்ப

வாழ்க்கையைத்

தொடங்கலாம்

என்று

உன்னுடைய

மனைவிக்கு

புரியும்படி சொல்லி

உன்னுடைய

மனைவியிடம்

இருந்து

விலகி இரு

 

சிவபெருமான்

சொல்லியபடி

பெண்ணிலிருந்து

ஆணாக மாறிய

பிறகு உன்

மனைவியுடன்

குடும்பம் நடத்து

 

ரகசியத்தைக்

காப்பாற்று

 

சிகண்டினி :

எந்த ஒரு

ரகசியத்தையும்

நீண்ட நாட்கள்

மறைத்து வைத்து

காப்பாற்ற முடியாது

 

பெண்ணாக

இருக்கும்

நான் ஒரு

பெண்ணை

திருமணம்

செய்து கொண்டு

நான் ஒரு ஆண்

கிடையாது என்பதை

எவ்வளவு நாட்கள்

என்னால் மறைக்க

முடியும்

 

நான்

பெண்ணிலிருந்து

ஆணாக மாறுவதற்கு

பல ஆண்டுகள்

ஆகி விட்டால்

என்ன செய்வது

 

நான் ஒரு

பெண்ணை திருமணம்

செய்து கொண்டு

நான் பெண்ணிலிருந்து

ஆணாக மாறுவதற்கு

முன் நான் ஒரு

பெண் என்பதை

அந்தப் பெண்

கண்டுபிடித்து

விட்டாலும்

அந்தப் பெண்

என்னை ஏற்றுக்

கொள்ள மாட்டாள்

அவமானப்

படுத்துவாள்

 

அதைப்போல

நான் ஒரு

பெண்ணை

திருமணம்

செய்து கொண்டு

பெண்ணிலிருந்து

ஆணாக மாற்றுப்

பாலினமாக

மாறினாலும்

அந்தப் பெண்

என்னை ஏற்றுக்

கொள்ள மாட்டாள்

அவமானப்

படுத்துவாள்

 

நான் பெண்

என்று தெரிந்ததும்

ஏற்படப் போகும்

அவமானத்தை விட

நான் மாற்றுப்

பாலினம் என்று

தெரிந்த பிறகு

ஏற்படும்

அவமானம் மிகக்

கொடுமையானதாக

இருக்கும்

 

பெண்ணிலிருந்து

ஆணாக மாறிய

மாற்றுப்

பாலினத்தவர்கள்

திருமணம்

செய்து கொள்ள

முடியுமா

அவர்களால்

குடும்பம்

நடத்த முடியுமா

என்பது பற்றி

உங்களுக்கு

தெரியவில்லை

 

மாற்றுப்

பாலினத்தவரைப்

பற்றி

நீங்கள் புரிந்து

கொள்ளவேயில்லை

 

பெற்றோர்களான

உங்களாலேயே

மாற்றுப்

பாலினத்தைப் பற்றித்

தெளிவாகப்

புரிந்து கொள்ள

முடியாத போது

இந்த உலகத்தில்

உள்ள மக்களால்

மாற்றுப்

பாலினத்தவர்களைப்

பற்றி

எப்படி புரிந்து

கொள்ள முடியும்

 

எப்படி இருந்தாலும்

நான் இப்போது

திருமணம் செய்து

கொண்டால் எனக்கு

கிடைக்கப் போவது

அவமானம் மட்டுமே

 

அதனால் எனக்கு

இப்போது திருமணம்

வேண்டாம்

 

இப்போது

திருமணம் செய்து

கொள்ளவும் நான்

விரும்பவில்லை

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----26-06-2022

-----ஞாயிற்றுக் கிழமை

 

/////////////////////////////////////////////

No comments:

Post a Comment