June 26, 2022

ஜபம்-பதிவு-787 (சாவேயில்லாத சிகண்டி-121)

 ஜபம்-பதிவு-787

(சாவேயில்லாத

சிகண்டி-121)

 

சிவன்

மறைந்து விட்ட

பிறகு துருபதன்

காட்டிலிருந்து

நேராக தன்னுடைய

நாட்டில் உள்ள

அரண்மனைக்குச்

சென்று

தன்னுடைய

மனைவியிடம்

நடந்த

விஷயங்களைச்

சொன்னான்

 

சிவன்

சொன்னால்

சரியாகத் தான்

இருக்கும்

என்பதை

ஏற்றுக்

கொண்டாள்

துருபதனின்

மனைவி

 

சிவன் சொன்னபடி

பிறக்கப் போகும்

பெண்குழந்தை

குறிப்பிட்ட

காலத்திற்குப் பிறகு

ஆணாக மாறும்

அதனால்

பிறக்கப் போகும்

பெண்

குழந்தையை

பெண் குழந்தை

பிறந்திருக்கிறது

என்று

இந்த உலகத்திற்கு

தெரிவிக்காமல்

ஆண் குழந்தை

பிறந்திருக்கிறது

என்றே இந்த

உலகத்திற்குத்

தெரிவிப்போம்

 

பெண்

குழந்தையை

ஆண்

குழந்தையாக

வளர்ப்போம்

என்று இருவரும்

முடிவு செய்தனர்

 

அம்பை

துருபதன்

பீஷ்மன்

ஆகிய

மூன்று

பேர்களுடைய

கர்மாக்கள்

இயங்கத்

தொடங்கிய பிறகு

துருபதனுக்கு

ஒரு அழகான

பெண் குழந்தை

பிறந்தது

 

சிவன்

சொன்னபடி

அந்த

பெண் குழந்தைக்கு

சிகண்டினி

என்று

பெயரிட்டனர்

 

ஆண் குழந்தை

சிகண்டி

பிறந்திருக்கிறது என்று

இந்த உலகத்திற்கு

அறிவித்தனர்

 

பிறந்தது

பெண் குழந்தையான

சிகண்டினி என்று

துருபதனுக்கும்

அவனுடைய

மனைவி

மற்றும் ஒரு

சிலருக்கு மட்டுமே

தெரியும்

 

சிகண்டினி

எப்பொது

ஆணாக மாறுவார்

எப்படி

ஆணாக மாறுவார்

என்பதைத்

தெரிந்து கொள்ள

சிகண்டினியைப்

பின் தொடருங்கள்

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----18-06-2022

-----சனிக்கிழமை

 

//////////////////////////////////////////////

 

 

 

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment