June 26, 2022

ஜபம்-பதிவு-786 (சாவேயில்லாத சிகண்டி-120)

 ஜபம்-பதிவு-786

(சாவேயில்லாத

சிகண்டி-120)

 

தங்கள்

உணர்வுகளை

மறைத்துக்

கொள்ளாமல்

தங்கள் பாலினத்தை

மாற்றிக் கொண்டு

இந்த உலகத்தில்

வாழும்

மாற்றுப்பால்

இனத்தவர்கள்

உயர்ந்தவர்களா

தங்கள் உணர்வுகளை

மறைத்துக் கொண்டு

வாழும்

ஆண்களும்

பெண்களும்

உயர்ந்தவர்களா

 

தங்கள் மீது

நடத்தப்படும்

விமர்சனங்களைப்

பற்றிக்

கவலைப்படாமல்

இந்த உலகத்தில்

தைரியமாக வாழும்

மாற்றுப்

பாலினத்தவர்களை

நாம் இழிவாகக்

கருதுகிறோம்

 

தங்கள் மீது

நடத்தப்படும்

விமர்சனங்களுக்குப்

பயந்து

தைரியமில்லாமல்

கோழையாக வாழ்ந்து

கொண்டிருக்கும்

ஆண்களையும்

பெண்களையும்

உயர்வானவர்களாகக்

கருதுகிறோம்

 

இதிலிருந்து

தெரியவில்லையா

 

இந்த உலகம்

எப்போதும்

உயர்வானவர்களை

இழிவானவர்களாகவும்

இழிவானவர்களை

உயர்வானவர்களாகயும்

தான் கருதும் என்று

 

இந்த உலகம்

எப்போதுமே

இப்படித் தான்

துருபதா

 

இன்று உ,ன்னை

புகழ்ந்து பேசும்

நாளையே உன்னை

இகழ்ந்து பேசும்

இந்த உலகம்

பேசுவதை கேட்டுக்

கொண்டு இருந்தால்

உன்னால் இந்த

உலகத்தில்

நிம்மதியாக வாழ

முடியாது

 

நீ இந்த உலகத்தில்

நிம்மதியாக

வாழ வேண்டும்

என்றால்

இந்த உலகம்

சொல்வதை காதில்

கேட்கக் கூடாது

 

யாராலும் கொல்ல

முடியாத பீஷ்மனைக்

கொல்லும்

பிள்ளையைப்

பெறப்போகிறவன் நீ

 

சரித்திரம்

படைக்கப்போகும்

பிள்ளைக்கு

தந்தையாகப்

போகிறவன் நீ

 

இந்த உலகத்தைப்

பற்றிக்

கவலைப்படாதே

 

உன்னைப் பார்

உனக்குப்

பிறக்கப் போகும்

பிள்ளையைப் பார்

உன்னுடைய பிள்ளை

பெண்ணாக

இருக்கும் போதும்

ஆணாக

மாறும் போதும்

நிகழ்த்தப் போகும்

சாதனையைப் பார்

 

துருபதன் :

இறைவா

உங்கள் சித்தப்படி

அனைத்தும்

நடக்கட்டும்

சிகண்டினியே

எனக்கு பெண்

பிள்ளையாகப்

பிறக்கட்டும்

 

சிவன் :

அப்படியே

ஆகட்டும்

 

(என்று சிகண்டினி

என்ற

பெண் பிள்ளை

துருபதனுக்கு

பிறக்கும் என்ற

வரத்தை

அளித்து விட்டு

சிவன் மறைந்து

விட்டார்)

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----18-06-2022

-----சனிக்கிழமை

 

//////////////////////////////////////////////

No comments:

Post a Comment