June 26, 2022

ஜபம்-பதிவு-782 (சாவேயில்லாத சிகண்டி-116)

 ஜபம்-பதிவு-782

(சாவேயில்லாத

சிகண்டி-116)

 

இறந்து போன

அம்பை

மறு பிறவி

எடுக்க வேண்டும்

இந்த உலகத்தில்

பிறக்க வேண்டும்

முடிந்து போன

அம்பையின் கதை

இந்த உலகத்தில்

மீண்டும்

தொடங்கப்பட

வேண்டும்

 

அது தான்

 

“முடிந்தது

தொடங்க வேண்டும்”

 

என்பதற்குப் பொருள்

 

துருபதன் :

புதியது

தொடங்க வேண்டும்

என்றால்

 

சிவன் :

பீஷ்மனைக்

கொல்ல வேண்டும்

என்று

உன்னுடைய

நாட்டுக்கு வந்து

உன்னிடம்

கடைசியாக

உதவி கேட்டு

உன்னுடைய

நாட்டிலிருந்து

தான் சென்றாள்

அம்பை

 

எந்த

இடத்திலிருந்து

கடைசியாக

சென்றாளோ

அந்த இடத்திலேயே

பிறக்கப் போகிறாள்

அம்பை

 

எந்த இடம்

தன் வாழ்க்கை

முடிவதற்கு

காரணமான

இடமாக இருந்ததோ

அந்த இடத்தில்

தன் வாழ்க்கையை

ஆரம்பிக்கப்

போகிறாள் அம்பை

 

இறப்பதற்கு

காரணமாக

இருந்த இடமே

அம்பை பிறப்பதற்கும்

காரணமாக

இருக்கப் போகிறது

 

உன்னால்

புறக்கணிக்கப்பட்ட

அம்பை

மறுபிறவி எடுத்து

உனக்கே மகளாகப்

பிறக்கப் போகிறாள்

 

இந்த உலகத்தில்

புதியது ஒன்று

தொடங்கப்பட

இருக்கிறது

 

இது தான்

 

“புதியது

தொடங்க வேண்டும்“

 

என்பதற்குப் பொருள்

 

துருபதன் :

தொடங்கியது

முடிய வேண்டும்

எனறால்

 

சிவன் :

பீஷ்மன்

இறக்க வேண்டிய

காலம்

நெருங்கி விட்டது

விருப்பப்படும்

போது தான்

மரணம் என்ற

வரத்தைப் பெற்ற

பீஷ்மன்

கொல்லப்பட்டு

சாக வேண்டும்

என்பதற்கான

சூழ்நிலை

உருவாகி விட்டது

 

பீஷ்மனைக்

கொல்வதற்கு

ஒருவர் பிறந்தே

ஆக வேண்டும்

என்பதை காலம்

செயல்படுத்தத்

துவங்கி விட்டது

 

பீஷ்மனைக்

கொல்ல வேண்டும்

என்ற வரத்தைப்

பெற்ற அம்பை

பீஷ்மனைக்

கொல்ல ஒரு

பிள்ளை வேண்டும்

என்று பிள்ளை

வரம் கேட்ட

உனக்கு மகளாகப்

பிறந்து

பீஷ்மனைக்

கொல்ல வேண்டும்

என்ற

உன்னுடைய

எண்ணத்தை

நிறைவேற்றுவாள்

 

வாழ்க்கையைத்

தொடங்கி தொடர்ந்து

நடத்தி வாழ்ந்து

கொண்டிருக்கும்

பீஷ்மனுடைய

வாழ்க்கை

முடிய வேண்டும்

 

இது தான்

 

“தொடங்கியது

முடிய வேண்டும்”

 

என்பதற்குப்

பொருள்

 

மூன்று

பேர்களுடைய

கர்மாக்கள்

தன்னுடைய

விளைவைக்

கொடுக்க வேண்டும்

என்றால்

அம்பை உனக்கு

மகளாகப் பிறந்தால்

மட்டுமே சாத்தியம்

 

இந்த

காரணத்திற்காகத்

தான் அம்பை

உனக்கு மகளாகப்

பிறக்கப் போகிறாள்

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----18-06-2022

-----சனிக்கிழமை

 

//////////////////////////////////////////////

 

 

 

 

 

No comments:

Post a Comment