March 07, 2020

பரம்பொருள்-பதிவு-151


           பரம்பொருள்-பதிவு-151

அரவான் :
“ஆமாம் ! நான்
பாண்டவர்கள்
சார்பாகத் தான்
களப்பலியாகப்
போகிறேன் “

“பாண்டவர்கள்
சார்பாக
களப்பலியாவதற்கு
ஒப்புதல்
கொடுக்கிறாயா என்று
நீங்கள்
என்னிடம் கேட்டு
என்னுடைய
ஒப்புதலைப்
பெற்ற போது
நான் கொஞ்சம்
தெரிந்து கொண்டேன் “

“உன்னுடைய
ஒப்புதல்
மட்டும் போதாது
உன்னுடைய தாய்
தந்தை மற்றும்
உன்னுடன் இரத்த
சம்பந்தம்
கொண்டவர்கள்
அனைவரிடமும்
ஒப்புதல் கேட்கப்
போகிறேன் என்று
நீங்கள்
சொன்ன போது
இன்னும்
கொஞ்சம்
தெரிந்து கொண்டேன் “

“அனைவரிடமும்
ஒப்புதல் பெற்று
விட்டேன் என்று
நீங்கள்
சொன்ன போது
இன்னும்
கொஞ்சம்
தெரிந்து கொண்டேன் “

“ஆனால் நீங்கள்
நாளை
அமாவாசை என்று
சொன்னபோது
தான் நான்
முழுவதுமாக
தெரிந்து கொண்டேன் “

“நான்
பாண்டவர்களுக்காகத்
தான் களப்பலியாகப்
போகிறேன் என்று “

“ஏனென்றால் நாளை
அமாவாசை
கிடையாது ;
நாளை மறுநாள்
தான் அமாவாசை ;
நாளை நடைபெற
இருக்கும்
சதுர்த்தசி திதியை
அமாவாசை
என்று நீங்கள்
சொன்ன போதும் ;
நாளை
களப்பலியாவதற்கு
தயாராக இரு
என்று நீங்கள்
சொன்ன போதும் ;
நான் ஒன்றைத்
தெளிவாகத்
தெரிந்து கொண்டேன் “

“இந்த உலகம்
நிம்மதியாக
இருக்க வேண்டும்
என்பதற்காக  ;
எந்தவிதமான
பிரச்சினையும்
இல்லாமல்
இருக்க வேண்டும்
என்பதற்காக ;
பாண்டவர்கள்
சார்பாக
என்னை
களப்பலியாக
கொடுக்க வேண்டும்
என்பதற்காக ;
சதுர்த்தசி திதியை
அமாவாசையாக
மாற்றுவதற்குத்
தேவையான
செயல்களைச்
செய்து
கொண்டிருக்கிறீர்கள்
என்பதைத்
தெரிந்து கொண்டேன் “

“அதனால் தான்
நான் சொன்னேன்
பாண்டவர்கள்
சார்பாக நான்
களப்பலியாகப்
போகிறேன் என்று “

கிருஷ்ணன் :
“அற்புதம் அரவான்
அற்புதம் “

“காலத்தை
கணிக்கக் கூடிய
உன்னுடைய
அற்புதமான
சக்தியையும் ;
தொலை நோக்குப்
பார்வையுடன்
சிந்திக்கும்
உன்னுடைய
சிந்திக்கும்
திறனையும் ;
கண்டு நான்
வியக்கிறேன் “

“இந்த உலகம்
கண்டிராத
அற்புதப் பிறவி நீ ! “

“யாராலும் கணிக்க
முடியாத அற்புத
ஞானி நீ ! “

“யாருடனும் ஒப்பிட
முடியாத
அற்புதமானவன் நீ ! “

“நீ செய்யப் போகும்
தியாக செயலுக்கு
நீ கேட்ட படி
நான் உனக்கு
இரண்டு வரங்களை
அளிக்கிறேன் “

“கேள் அரவான் கேள் “

“உன்னுடைய
இரண்டு
வரங்களைக் கேள் “

“உனக்கு
என்ன வரம்
வேண்டும் கேள் “

“கேள் அரவான் கேள்”

----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 07-03-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment