March 07, 2020

பரம்பொருள்-பதிவு-150


            பரம்பொருள்-பதிவு-150

(அரவானுடைய
மாளிகைக்குள்
கிருஷ்ணன் நுழைகிறார் ;
கிருஷ்ணனைக்
கண்டவுடன் அரவான்
ஓடோடி வந்து
கிருஷ்ணனுடைய காலில்
விழுந்து வணங்குகிறான்)

அரவான் :
"என்னை
ஆசிர்வதியுங்கள்
பரந்தாமா ! "

கிருஷ்ணன் :
"நீ செய்யப் போகும்
தியாகத்திற்கு
என்னுடைய ஆசிகள்
உனக்கு என்றுமே
உண்டு அரவான்"

அரவான் :
"அமருங்கள் பரந்தாமா"! "

(இருக்கையில் அமர்ந்த
கிருஷ்ணன் அரவானைப்
பார்த்து பேசத்
தொடங்குகிறார் )

கிருஷ்ணன்  :
"ஒரு முக்கியமான
விஷயத்தை உன்னிடம்
சொல்வதற்காகவே
வந்தேன் அரவான் "

அரவான் :
"சொல்லுங்கள் பரந்தாமா "

கிருஷ்ணன் :
"பாண்டவர்கள் சார்பாக
உன்னை களப்பலியாகக்
கொடுப்பதற்கு
உன்னுடைய தாய்
தந்தை மற்றும் உன்னுடன்
இரத்த சம்பந்தம்
கொண்டவர்கள்
அனைவரிடமும்
ஒப்புதல் பெற்று விட்டேன் ;
அது மட்டுமல்ல
நாளை அமாவாசை
என்பதை உனக்கு
ஞாபகப் படுத்தி விட்டு
செல்லலாம் என்று வந்தேன் ; "

"அது மட்டுமல்ல
துரியோதனன்
வரவில்லை என்றால்
பாண்டவர்கள் சார்பாக
களப்பலியாவதற்கு
நீ தயாராக இருக்கிறாயா
என்பதைக் கேட்டு விட்டு
செல்லலாம் என்று வந்தேன் "

"அது மட்டுமல்ல
நீ என்னிடம் ஏதேனும்
கேட்க விரும்புகிறாயா
என்பதைக் கேட்டு
விட்டு செல்லலாம்
என்று வந்தேன் "

"சொல் அரவான் சொல்
என்னிடம் ஏதேனும்
கேட்க விரும்புகிறாயா?"

அரவான்  :
"ஆமாம் "

"எனக்கென்று சில
ஆசைகள் இருக்கிறது "

"அது என்னுடைய
மனதிற்குள் இருக்கிறது "

"அந்த ஆசைகளை
நிறைவேற்ற வேண்டும்
என்ற எண்ணம்
எனக்கு இருக்கிறது "

"தாங்கள் எனக்கு இரண்டு
வரங்களை அளித்தால்
என்னுடைய மனதிற்குள்
நான் வைத்திருக்கும்
என்னுடைய ஆசைகள்
நிறைவேறும் "

"தாங்கள் எனக்கு இரண்டு
வரங்களை அளிப்பீர்களா ? '

கிருஷ்ணன்  :
"உன்னை களப்பலியாக
கேட்டு வந்த
துரியோதனனிடம் இரண்டு
வரங்களைக் கேட்டாயா ? "

அரவான்  :
"கேட்கவில்லை "

கிருஷ்ணன்  :
"துரியோதனனிடம்
கேட்காத போது
என்னிடம் மட்டும் ஏன்
இரண்டு வரங்கள்
கேட்கிறாய்?"

"நான் ஏன் உனக்கு
இரண்டு வரங்களை
அளிக்க வேண்டும் ? "

"எதற்காக
அளிக்க வேண்டும்  "

"எந்தவிதமான போட்டியும்
இல்லாமல் பாண்டவர்கள்
சார்பாக மட்டும் - நீ
களப்பலியானால் - நீ
கேட்கப் போகும்
இரண்டு வரங்களை
உனக்கு அளிக்கலாம் "

"அமாவாசை தினத்தன்று
துரியோதனன் வரவில்லை
என்றால் தானே
பாண்டவர்கள் சார்பாக
நீ களப்பலியாவாய் ;
துரியோதனன் வந்து
விட்டால் நீ
துரியோதனனுக்காகத்
தானே களப்பலியாக
முடியும் ; "

"அப்படி இருக்கும் போது
நான் ஏன் உனக்கு
இரண்டு வரங்களை
அளிக்க வேண்டும் ? "

"நான் உனக்கு இரண்டு
வரங்களைத் தந்த பிறகு
நீ துரியோதனனுக்காக
களப்பலியானால் நான்
உனக்கு தந்த இரண்டு
வரங்கள் வீணாகிப் போகாதா ? "

"எதையுமே நிச்சயித்து
சொல்ல முடியாத
நிலையில் இருக்கும் போது
நான் ஏன் உனக்கு
இரண்டு வரங்களை
அளிக்க வேண்டும்

அரவான்  :
"தாங்கள் தான் எனக்கு
இரண்டு வரங்களை
அளிக்க வேண்டும் ? "

"ஏனென்றால் நான்
தங்களுடைய
வேண்டுகோளுக்கிணங்கத்
தானே களப்பலியாகப்
போகிறேன் "

"ஏனென்றால் நான்
பாண்டவர்கள் சார்பாகத்
தானே களப்பலியாகப்
போகிறேன் "

கிருஷ்ணன்  :
"என்னது நீ பாண்டவர்கள்
சார்பாக களப்பலியாகப்
போகிறாயா  ? "

----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 07-03-2020
//////////////////////////////////////////



No comments:

Post a Comment