March 09, 2012

இயேசு கிறிஸ்து-உலகநாதர்-கோயில்இல்லா-பதிவு-21



       இயேசு கிறிஸ்து -உலகநாதர் -கோயில் இல்லா-பதிவு - 21    

                         “”பதிவு இருபத்துஒன்றை விரித்துச் சொல்ல
                                                          ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :
கடவுள் இருக்கும் இடத்தைப் பற்றியும் ,
கடவுள் இருக்கும் இடத்தை எவ்வாறு
துhய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பதைப் பற்றியும் ,
இயேசு தன் வாழ்வில் செயல்படுத்தி காட்டிய விதத்தைப் பற்றி
கீழ்க்கண்ட வசனங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம் :

இயேசு எருசலேமுக்குப் போய் ,

தேவாலயத்திலே ஆடுகள் மாடுகள் புறாக்களாகிய இவைகளை விற்கிறவர்களையும் , காசுக்காரர்  உட்கார்ந்திருக்கிறதையும் கண்டு, ”
                                                                        ----------யோவான் - 2 : 14

கயிற்றினால் ஒரு சவுக்கையுண்டு பண்ணி , அவர்கள் யாவரையும் ஆடுமாடுகளையும் தேவாலயத்துக்குப் புறம்பே துரத்தி விட்டு , காசுக்காரருடைய காசுகளைக் கொட்டி பலகைகளைக் கவிழ்த்துப் போட்டு, ”
                                                                        -----------யோவான் - 2 : 15  

புற விற்கிறவர்களை நோக்கி : இவைகளை இவ்விடத்திலிருந்து எடுத்துக் கொண்டு போங்கள் ; என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள் என்றார் .”
                                                                          -----------யோவான் - 2 : 16

                         அறியாமையை அடித்தளமாக்கி ;
                         மடமையைச் சுவராக்கி ;
                        மத வெறியை மாளிகையாக்கி ;
                        கண்மூடிப் பழக்கங்களைக் கதவாக்கி ;
                        வேற்றுமையை வேலியாக்கி ;
                         கடவுளை வியாபாரப் பொருளாக்கி ;

பக்தி என்னும் போர்வையில்
தின்று கொழுக்கும் பருந்துகள் ;
இரத்தம் குடிக்கும் ஓநாய்கள் ;
இரத்தம் உறிஞ்சும் அட்டைகள் ;
சாக்கடையில் நெளியும் புழுக்கள் ;
அழுக்கை சாப்பிடும் காகங்கள் ;
பிணம் தின்னும் கழுகுகள் ;


நல்லவர்கள் என்ற போர்வையில் ,

நல்லவர்கள் போல் நடித்து ,
உண்மை உணர்ந்தவர்   ஊருக்கு உழைப்பவர்  - என்று

பகல் வேஷம் போட்டுக் கொண்டு
தன்னையும் தன் குடும்பத்தையும்
உயர்த்திக் கொள்ளும் சுயநல விரும்பிகள் ;


மதத்தின் பெயரால் ; கடவுளின் பெயரால் ; பக்தியின் பெயரால் ;
உண்மையை வெளிப்படுத்தாமல் ,
அறியாமையை விதைத்து ,
பணத்தை அறுவடை செய்து ,
வயிறு வளர்க்கும் தவறானவர்கள் - ஓரு சிலர்

வியாபாரம் செய்து கொண்டிருக்கும்
எல்லாம் வல்ல இறைவனுடைய புனித வீட்டில் ;
அனைத்தையும் அளிக்கும் இறைவனுடைய புனித வீட்டில் ;
அன்பு குடி கொண்டிருக்கும் இறைவனுடைய புனித வீட்டில் ;
கருணை நிரம்பி வழியும் இறைவனுடைய புனித வீட்டில் ;

துன்பம் என்று வந்தவர்க்கு துன்பம் நீக்கி
இன்பம் தரும் இறைவனுடைய வீட்டில் ;

கண்ணீருடன் வந்தவர்க்கு கண்ணீரைத் துடைத்து
புன்னகை அளிக்கும் இறைவனுடைய வீட்டில் ;

சோகத்தின் சுமையை தோளில் சுமந்து வந்தவர்க்கு
சோகத்தின் சுமையை முற்றிலும் நீக்கி
மகிழ்ச்சி கொடுக்கும் இறைவனுடைய வீட்டில் ;

வாழ்க்கையை வெறுத்து வாழ முடியாமல் போனவர்க்கு
வாழ்வின் இனிமையை அளிக்கும் இறைவனுடைய வீட்டில் ;

பாவத்தால் பாதிக்கப்பட்டவருக்கு
பாவத்தைக் கழித்து நல்வழி காட்டும் இறைவனுடைய வீட்டில் ;

வருந்தி உழைப்பவர்க்கு
உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லை - என்று
வருத்தப்படுவர்க்கு செல்வம் அடைவதற்கான
திறவு கோலைத் தரும் இறைவனுடைய வீட்டில் ;

தீர்க்க முடியாத நோயினால் பாதிக்கப் பட்டிருப்பவரையும்
நோயைத் தீர்த்து சுகமளிக்கும் இறைவனுடைய வீட்டில் ;

வறுமையில் வாடிக் கொண்டிருப்பவர்க்கும்
வறுமையை நீக்கி ஏற்றத்தைக் கொடுக்கும் இறைவனுடைய வீட்டில் ;

இறைவனின் வீட்டை அசுத்தப்படுத்தியவர்களை ,
இறைவனின் வீட்டை அவமானம் செய்தவர்களை ,
இறைவனின் வீட்டை இழிவு படுத்தியவர்களை ,
இறைவனின் வீட்டை வியாபாரம்  செய்ய பயன்படுத்தியவர்களை

ஏன் என் பிதாவின் வீட்டை கள்ளர்  குகை ஆக்கினீர்கள்
என்று அடித்து துரத்தினார் .

என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள் என்றார் .
கடவுள் இருக்கும் இடத்தை வியாபார ஸ்தலமாக்காதீர்கள் என்றார்.
இயேசு .

கடவுள் இருக்கும் இடம் துhய்மையாக இருக்க வேண்டும் என்றும்
அதை அசுத்தப் படுத்தக் கூடாது என்றும் விளக்குகிறார் .

துhய்மையாக இருக்கும் இடத்தில் தான் கடவுள் வந்து தங்குவார்
அசுத்தமான இடத்தில் கடவுள் வந்து தங்க மாட்டார்
என்ற காரணத்திற்காகவே இயேசு இச்செயலைச் செய்தார்.


இதில் இன்னொரு ரகசியமும்  மறைந்து இருக்கிறது
அகத்தில் துhய்மை இருந்தால் தான் ,
இறைவன் வந்து தங்குவார்  என்று பொருள் .

புற வழிபாட்டிற்காக அமைக்கப்பட்ட கோயில்கள்
துhய்மையாக இருந்தால் எப்படி இறைவன் எவ்வாறு வந்து தங்குவாரோ?
அதைப் போல ,
உடலாகிய ஆலயத்தில் உள்ளமாகிய கோயில்
துhய்மையாக இருந்தால் தான் இறைவன் வந்து தங்குவார்
என்கிறார்  இயேசு .



உலகநாதர்:

       “””கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம்”””
                                                    -----உலகநாதர்-----உலக நீதி------

மிகவும் புகழ் பெற்ற இந்தப் பாடல் பெரும்பாலான நுhல்களில்
ஔவையார்  என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது .
பலரும் அவ்வாறே தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த புகழ்மிக்க சிறப்புமிக்க பாடலைப் பாடியவர்  
உலகநாதர்  என்பதையும்,
அதை அவர்  தன்னுடைய உலகநீதி என்ற நுhலில்
எழுதியிருக்கிறார் என்பதையும் ,
அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் .

இந்த பாடலில் உலகநாதர்  என்ன கருத்தை
சொல்ல வருகிறார்  என்பதை இப்பொழுது பார்ப்போம்:


கடவுளிடம் இருந்து சக்திகளைப் பெற வேண்டும் ;
கடவுளிடம் இருந்து வரங்கள் பலவற்றைப் பெற வேண்டும் ;
கடவுள் விளக்கம் பெற வேண்டும் ;
கடவுள் நிலை புரிய வேண்டும் ;
கடவுள் தன்மை உணர வேண்டும் ;
கடவுள் உண்மை நிலை விளங்க வேண்டும் ;
கடவுளை அறிய வேண்டும் ;
கடவுளை அடைய வேண்டும் ;
கடவுளாய் மாற வேண்டும் - என்று
கடவுள் பற்றி நிதம் சிந்தித்துக் கொண்டிருப்பவர் ;
கடவுளை அறிய முற்படுபவர் ;


அறிய வேண்டிய முக்கியமான விஷயங்கள் இரண்டு :
ஒன்று -------- கர்ம வினை,
இரண்டு ------ மறுபடியும் பிறத்தல்
இவைகள் இரண்டும் மறைக்கப்பட்டதால் ;
விளக்கம் தெரியப்படுத்தப் படாததால் ;
சூட்சுமம் விளக்கப் படாததால் ;
ரகசியங்கள் அவிழ்க்கப் படாததால் ;

கடவுளை அடையும் வழி மறைக்கப் பட்டது ;
கடவுளை உணரும் வழி சிக்கலாக்கப் பட்டது ;
கடவுளை அறியும் வழி புதைக்கப் பட்டது ;
இதனால் தான் இந்த உலகம்
மூவரின் ஆளுகைக்குள் வந்து விட்டது ;

மக்கள் கடவுளின் மேல் வைத்த பக்தியை
தனக்கு சாதகமாகப் பயன் படுத்திக் கொண்டு
மதத் தலைவர்கள் பெருகி விட்டனர்;

மதத்தின் மூலம் கிடைக்கும் பணம் அளவற்றது என்பதால்
பொருளாதாரத் தலைவர்கள் வளர்ந்து விட்டனர்;

இரு நிலையில் உள்ளவர்களும்
தான் பெற்றதைக் காப்பாற்றிக் கொள்வதற்கும்
இனி பெறப் போவதை வளர்த்துக் கொள்வதற்கும் ;
அரசியல் தலைவர்களுடன்  இணைந்து விட்டனர் ;
இணக்கமாக சென்று விட்டனர் ;

அரசியல் தலைவர்கள்,  மதத் தலைவர்கள் , பொருளாதாரத் தலைவர்கள்,
இந்த மூவரின் ஆளுகைக்குள்  - தான்
இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது .
இந்த உலகம் வந்து விட்டது .

தாங்கள் வாழ்வதற்காக கடவுளின் உண்மை நிலை
மக்களை உணர விடாமல் தடுத்து விட்டனர் .

இதனால் தான் ,
புற வழிபாட்டில் உள்ள ஆளுமைத் தன்மையையும் ,
அக வழிபாட்டில் உள்ள உண்மைத் தன்மையையும் ,
அறியும் அறிவு இல்லாமல் போய் விட்டது .

இந்தத் தன்மையைத் தான் புறத்தை சொல்வது போல் இருக்கும்
இந்த அடிகளில் தான் உலகநாதர்
அகத்தை அக வழிபாட்டில் உள்ள,  
சூட்சும ரகசியங்களை கட்டவிழ்க்கிறார்.



கோயில் :
கோ என்றால் அரசன் என்று பொருள் .
இல் என்றால் இறைவன் , அரசன் , தலைவன் , உறைவிடம்
இருக்குமிடம் என்று பொருள் .
கோயில் என்றால் இறைவன் இருக்குமிடம் என்று பொருள் .

இந்த உடலாகிய ஆலயத்தில்
உள்ளம் என்ற கோயிலில் இறைவன் இருக்கிறான் .

                                                          மயக்கு மொழி பேசி
                                                         மங்கையர்  வாழ்வை
                                                         நிர்மூல மாக்குபவன் !
          காவி வேடம் தரித்துக் கொண்டு
          கயமைத் தனம் புரியும்
          கபட வேடதாரிகள் !
                                                         அறியாத நெஞ்சை
                                                         அடிமையாக்கி
                                                         அழவைத்து ரசிப்பவர்கள் !
         ஏழ்மையில் உழல்பவர்களை
         ஏளனம் செய்து
         எள்ளி நகையாடுபவர்கள்!
                                                      நாவின் நுனியில்
                                                      நயவஞ்சக வார்த்தை வைத்துக் கொண்டு
                                                      நல்லவர்களை அழிப்பவர்கள் !
         தலைக் கணம் மிகுதி கொண்டு
         தலை கால் புரியாமல்
         தறி கெட்டு நடப்பவர்கள் !
                                                      பொய் பேசி
                                                      பித்தலாட்டம் செய்து
                                                      கூட இருந்தே குழிபறிப்பவர்கள் !
        அஞ்சாது தவறுகளைச் செய்து
        சுக போகங்களில்
        திளைப்பவர்கள் !
                                                   நஞ்சை நெஞ்சிலும்
                                                   போலித் தனத்தை முகத்திலும்
                                                   வைத்துக் கொண்டு குடி கெடுப்பவர்கள் !    
                  
        பேதையராய் பெண்டிரைக் கண்டு
        அவர்களை ஊமையராக்கி
        போகப் பொருளாக்கி துய்க்கும்
        இழி குணம் கொண்டவர்கள் !

                                               பஞ்சமா பாதகங்களை
                                               மனதிற்கு பயப்படாமல்
                                               மனம் அறிந்து செய்பவர்கள் !
        ஆகியோருடைய உள்ளத்தில் அதாவது
        கலங்கமுள்ள அசுத்தமுள்ள உள்ளத்தில்
        இறைவன் குடி இருக்க மாட்டான் .


                                              இத்தகைய தன்மை கொண்டவரிடம்
                                             அசுத்தம் நிறைந்த உள்ளம் கொண்டவரிடம்
                                             இறைவன் இருக்க மாட்டான் .


உடலாகிய ஆலயத்தில் , உள்ளம் என்ற கோயிலில் , இருக்கும் இறைவன்
அசுத்தமுள்ள , களங்கம் நிறைந்த அகத்தில், அதாவது
உள்ளமாகிய கோயிலில் இறைவன் வந்து இருக்க மாட்டான் .
உள்ளமாகிய கோயிலில் இறைவன் வந்து தங்க மாட்டான் .


உள்ளம் சுத்தமாக இருந்தால் தான் ,
உள்ளமாகிய கோயிலில் இறைவன் வந்து தங்குவான் .
உள்ளம் சுத்தமாக இல்லையெனில் ,
உள்ளமாகிய கோயிலில் இறைவன் வந்து தங்க மாட்டான் .
கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் , அதாவது
உடலாகிய ஆலயத்தில் , உள்ளமாகிய கோயிலில் ,
இறைவன் இல்லையெனில்
உயிரே நீ உடலில் இருக்க வேணடாம் .
உடலாகிய ஆலயத்தில், உள்ளமாகிய கோயிலில்,

இறைவன் இல்லையெனில்
அத்தகையவன் இழிவான குணத்தை உடையவன் .
அத்தகைய தன்மை உடையவன் இருப்பதை விட இறப்பதே மேல் .
உடலாகிய ஆலயத்தில்,உள்ளமாகிய கோயிலில்,

இறைவன் இல்லையெனில்
அதாவது இறைவன் இல்லாத உடம்பில் குடியிருக்க வேண்டாம் .
அதாவது உயிரே நீ உடலில் குடி இருக்க வேண்டாம் .
உயிர் உடலில் இருக்க வேண்டாம் .
உயிர் உடலில் தங்க வேண்டாம் .
உயிரே நீ வெளியே வந்து விடு என்கிறார்  உலகநாதர்
ஒருவனுடைய அகம் துhய்மையாக இல்லையெனில்
இறைவன் வந்து அகத்தில் தங்க மாட்டான் .
அத்தகைய நிலை உடைய மனிதன் ,
துhய்மையான அகம் இல்லாத மனிதன் ,
இருப்பதை விட இறப்பதே மேல் என்கிறார்  உலகநாதர் .



இயேசு கிறிஸ்து - உலகநாதர்:

இயேசு ,
அகத்தை துhய்மையாக வைத்திருந்தால் இறைவன் வந்து

குடியேறுவார், இருப்பார்,  தங்குவார், என்கிறார் .


அவ்வாறே,
உலகநாதரும் ,
அகம் துhய்மையாக இருந்தால் இறைவன் வந்து தங்குவார்.
அகம் துhய்மையாக இல்லையெனில் இறைவன் வந்து

தங்க மாட்டார் என்கிறார்.
மேலும் ,
ஒரு படி மேலே போய் அகத்தில் இறைவன் இல்லாதவன்

இருப்பதை விட இறப்பதே மேல் என்கிறார்.


                         “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                                      போற்றினேன் பதிவுஇருபத்துஒன்று  ந்தான்முற்றே “”

March 06, 2012

இயேசு கிறிஸ்து-திருவள்ளுவர்-ஒழுக்கத்தின்-பதிவு-20




               இயேசு கிறிஸ்து-திருவள்ளுவர்-ஒழுக்கத்தின்-பதிவு-20  
   
                        “”பதிவு இருபதை விரித்துச் சொல்ல
                                                            ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :

ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ் செய்தாயிற்று.
                                                                   ------மத்தேயு - 5 : 28

ஆண் இனம் பெண்களை ,
அடிமை நிலையில் வைத்திருக்கிறது ;
அறியாமைச் சேற்றில் சிக்கி வைத்திருக்கிறது ;
முன்னேற்றத்தை தடுத்து வைத்திருக்கிறது ;
மூடநம்பிக்கையில் முக்கி வைத்திருக்கிறது ;
அறிவை சிதைத்து வைத்திருக்கிறது ;
அன்பு என்ற ஆயுதத்தால் அடக்கி வைத்திருக்கிறது ;
கருணை என்ற வார்த்தையால் கட்டி வைத்திருக்கிறது ;
பாசக் கயிற்றால் பிணைத்து வைத்திருக்கிறது ;
உறவுகள் மூலம் பிணைத்து வைத்திருக்கிறது ;
கட்டுப்பாடுகள் மூலம் சிறை வைத்திருக்கிறது ;
சுதந்திர காற்றை சுவாசிக் விடாமல் சிறையில் பூட்டி வைத்திருக்கிறது ;

என்ற விமர்சனங்கள் காலம் காலமாக
தொடர்ந்து எழுந்து கொண்டு தான் இருக்கிறது .

ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும்
யாரும் , யாரையும் அடிமைப் படுத்தவும் முடியாது .
யாரும் , யாருக்கும் அடிமையாக இருக்கவும் முடியாது .

நாமாக அடிமையாக மாறினால் ஒழிய ,
யாரும் நம்மை அரசாள முடியாது .

நாம் அடிமையாக இருந்தால் ஒழிய ,
யாரும் நம்மேல் ஏறி மிதிக்க முடியாது .

அடிமை நெஞ்சம் நம் மனதில் இருந்தால் ஒழிய ,
ஆளும் நெஞ்சம் மற்றவர்  மனதில் உதிக்க முடியாது .

அடிமை வர்க்கம் இருந்தால் ஒழிய ,
ஆளும் வர்க்கம் உருவாக முடியாது .

நம்மை நாமே தாழ்த்திக் கொண்டால் ஒழிய ,
யாரும் நம்மை தாழ்த்த முடியாது .

நாமே சுதந்திரக் காற்றை சுவாசிக்க மறுத்தால் ஒழிய ,
யாரும் நம்முடைய சுதந்திரக் காற்றைத் தடுக்க முடியாது .

நம்முடைய அறியாமை தான் நம்மை அடிமைப் படுத்துமே ஒழிய ,
எந்த அறிவும் நம்மை அடிமைப் படுத்த முடியாது .

நம்முடைய இயலாமை தான் நம்மை அடிமைப்படுத்துமே ஒழிய ,
யாருடைய விழிப்புணர்வும் நம்மை அடிமைப் படுத்த முடியாது.

நம்முடைய கடமைகளாகிய கடன்கள் தான்
நம்மை அடிமைப்படுத்துமே ஒழிய ,
யாருடைய சிந்தனையும் நம்மை அடிமைப்படுத்த முடியாது .

நாமே அடிமையாக இருந்தால் ஒழிய ,
நம்மை நாமே தாழ்த்திக் கொண்டால் ஒழிய ,
நம்மை நாமே அடிமைப்படுத்திக் கொண்டால் ஒழிய ,
யாரும் நம்மை அடிமையாக்க முடியாது .
அடிமையாக வைத்திருக்கவும் முடியாது .

பெண் இனத்தை அடிமையாக்கியது இச்சமுதாயம் தான் .
பெண்களை அடிமை நிலையில் வைத்திருப்பதும் இச்சமுதாயம் தான் .


பெண் குழந்தை பிறந்த போது ,
தாயின் அன்புச் சிறையில் அடிமையாகிறாள் !

வளரும் போது ,
தந்தையின் கட்டுப்பாட்டுச் சிறையில் அடிமையாகிறாள் !

பருவம் வந்த போது ,
சகோதரனின் கண்காணிப்புச் சிறையில் அடிமையாகிறாள் !

வேலை நிமித்தம் வெளியில் செல்லும்போது ,
அடக்கம் என்ற சிறையில் அடிமையாகிறாள் !

அலுவகத்தில் பணிபுரியும் போது ,
அமைதியானவள் என்ற சிறையில் அடிமையாகிறாள் !

நான்கு பேர்  பேசி செயல்படும் இடத்தில் ,
பொறுமையானவள் என்ற சிறையில் அடிமையாகிறாள் !


உறவினர்கள் மத்தியில் செயல்படும்போது ,
நிதானம் என்ற சிறையில் அடிமையாகிறாள் !

திருமணம் ஆன பிறகு ,
கணவனின் கவனிப்புச் சிறையில் அடிமையாகிறாள் !

மனைவியாக மாறும்போது ,
கற்பு என்ற சிறையில் அடிமையாகிறாள் !

மனைவியாக மாறும்போது சமுதாய கோட்பாட்டுக்குள் ,
பத்தினி என்ற சிறையில் அடிமையாகிறாள் !

குழந்தை பெற்று தாயாக மாறும்போது ,
தாய் என்ற கருணைச் சிறையில் அடிமையாகிறாள் !

மருமகள் ஆனதால் மாமனார்  , மாமியார் ,
கண்டிப்புச் சிறையில் அடிமையாகிறாள் !

மருமகள் ஆனதால் கணவனின் சகோதர, சகோதரிகளின் ,
உறவுச் சிறையில் அடிமையாகிறாள் !

மருமகள் ஆனதால் கணவர்  உறவுகளிடையே ,
ஒழுக்கச் சிறையில் அடிமையாகிறாள் !

மகனுக்கு திருமணம் செய்து வைப்பதால் ,
மாமியார் என்ற சிறையில் அடிமையாகிறாள் !

பேரக்குழந்தைகளைப்  பெறும் போது ,
பாட்டி என்ற சிறையில் அடிமையாகிறாள் !

பெண்ணைச் சுற்றியுள்ள
பந்தங்களும் , சொந்தங்களும் , உறவுகளும் - தான்
பெண்ணை அடிமைப்படுத்துகிறதே ஒழிய ,
தனிப்பட்ட ஆண்சமுதாயம்
பெண்ணை அடிமைப்படுத்துவது இல்லை
அடிமைப்படுத்தவும் முடியாது .


சமுதாயம் திருந்தினால் ஒழிய ,
சமுதாயம் சீர்பெற்றால் ஒழிய ,
சமுதாயம் தன்னை திருத்திக் கொண்டால் ஒழிய ,
சமுதாயக் கோட்பாடுகள் தகர்க்கப் பட்டால் ஒழிய ,
பெண் இனம் அடிமை நிலையிலிருந்து விடுபட முடியாது .
பெண்கள் அடிமை நிலையை விட்டு மீள முடியாது .


சமுதாயத்தில் பெண்களின் நிலையையும்
பெண்களுக்கு கொடுக்கப்படும் உரிமையையும் கருத்தில் கொண்டு
பெண்களின் மேல் மதிப்பு கொண்ட
பெண்களின் மேல் மரியாதை கொண்ட - இயேசு
பெண்ணின் மதிப்பை உயர்த்தும் வகையில்
மிகவும் மதிக்கத்தக்க உயர்வான கருத்தை
தன்னகத்தே கொண்ட வசனத்தை
உயர்வான பெண்ணை உவமையாக்கி சொல்லும் போது
ஆழமான கருத்தை இந்த அவனியில் உள்ள
மக்களின் மனதில் விதைக்கிறார்  இயேசு .


ஒரு பெண்ணை இச்சை கொண்ட பார்வையுடன் பார்க்கும் போதே ;
விழிகளால் காணும் போதே ;
புறக்கண்களால் அவளை நோக்கும் போதே ;
பார்வைகளால் அவளை துளைக்கும் போதே ;
ஆசைக் கண்களால் அவளை விழுங்கும் போதே ;
காமக் கண்களால் அவளை அரிக்கும் போதே ;
இருதயத்தால் அவளுடன் விபச்சாரம் செய்தவனாகிறான் .

உன் எண்ணம் தவறாக இருந்தால் ;
உன் எண்ணம் தவறான நோக்கத்துடன் இருந்தால் ;
உன் எண்ணம் தவறான பார்வையுடன் இருந்தால் ;
உன் எண்ணம் தவறான முறையைக் கொண்டதாக இருந்தால் ;
உன் எண்ணம் தவறான செயலை உடையதாக இருந்தால் ;
உன் எண்ணம் தவறான வழியை பின்பற்றுவதாக இருந்தால் ;

அது உன் அகத்தை களங்கப்படுத்தி விடும் .
ஒரு தவறான எண்ணத்தை எண்ணினாலே போதும்
அது பாதி பாவம் செய்ததற்கு சமமாகி விட்டது .
அதை செயல்படுத்தினால் முழு பாவமாகி
களங்கத்தை ஏற்படுத்துகிறது .

ஆகவே ஒருவரை கெடுக்க வேண்டும் என்றோ ?
தவறுகளை செய்ய வேண்டும் என்றோ ?
தீயவைகளை செயல்படுத்த வேண்டும் என்றோ ?
கெடுதல்களை உண்டாக்க வேண்டும் என்றோ ?
அழிவுகளை உருவாக்க வேண்டும் என்றோ ?
நினைக்கும் அளவிலோ அதை செயல்படுத்தியவனாகிறான் .

அதற்குரிய பாவத்தின் பாதி பலனை
உடனடியாக பெற்றவனாகி விடுகிறான்

ஒரு தவறான செயலை செயல்படுத்தினால்
தான் பாவம் உண்டாகும் என்பது கிடையாது
அந்த தவறான செயலை நினைத்தாலே பாதி பாவம் வந்து விடும்
ஆகவே நல்லதே நினைக்க வேண்டும் என்கிறார்  இயேசு.



திருவள்ளுவர் :

           “”“ஒழுக்கத்தின் எய்துவர்  மேன்மை இழுக்கத்தின்
                 எய்துவர்  எய்தாப் பழி””
                                         ------திருவள்ளுவர்------திருக்குறள்----

           மலர்  கண்டேன் ;
           மலரின் இதழ் கண்டேன் ;
           இதழின் அழகு கண்டேன் ;
           அழகில் ஆசை கண்டேன் ;
           ஆசையில் சொர்க்கம் கண்டேன் ;
           சொர்க்கத்தில் இன்பம் கண்டேன் ;
           இன்பத்தின் பொருள் கண்டேன் ;
           பொருளின் பலன் கண்டேன் ;
           பலனின் விளைவு கண்டேன் ;
           விளைவின் துன்பம் கண்டேன் ;
           துன்பத்தின் முடிவு கண்டேன் ;
           முடிவின் தொடக்கம் கண்டேன் ;
           தொடக்கத்தில் அன்பு கண்டேன் ;
            அன்பின் தடை கண்டேன் ;
          தடையின் எல்லை கண்டேன் ;
          எல்லையின் வேற்றுமை கண்டேன் ;
          வேற்றுமையின் அர்த்தம் கண்டேன் ;
          அர்த்தத்தின் ஆழம் கண்டேன் ;
          ஆழத்தில் ஒளி கண்டேன் ;
          ஓளியின் தெளிவு கண்டேன் ;
          தெளிவின் அடக்கம் கண்டேன் ;
          அடக்கத்தில் உயர்வு கண்டேன் ;
          உயர்வின் எழுச்சி கண்டேன் ;
          எழுச்சியின் இலக்கணம் கண்டேன் ;
          இலக்கணத்தின் இறுதி கண்டேன் ;
          இறுதியில் வாழ்க்கையைக் கண்டேன் ;

வாழ்க்கையில் தெளிவு பெற்று ,
வாழ்க்கையில் அறிவு விளக்கம் பெற்று ,
வாழ்க்கையில் சிந்தனை துhண்டப் பெற்று ,
வாழ்க்கையில் அனுபவத்தின் தன்மைகளை தன்னுள் பெற்று ,

எண்ணம் , சொல் , செயலால்
தனக்கோ ,பிறர்க்கோ  , குடும்பத்தார்க்கோ , உடன்பிறந்தவர்களுக்கோ ;
உறவினர்களுக்கோ , சுற்றத்தாருக்கோ , சமுதாயத்திற்கோ ;
தற்காலத்திலோ , பிற்காலத்திலோ  ; உடலுக்கோ , உயிருக்கோ ;
துன்பம் ஏற்படாத வண்ணம் சிந்தித்து ,
மனம் வாடா வண்ணம் சொற்களை உபயோகப்படுத்தி ,
மனவேறுபாட்டை உண்டாக்காத செயல்களை செயல்படுத்தி ,

ஒழுக்க நெறி தவறாது வாழும்போது
சமுதாயத்தில் உயர்வும்
அனைவரிடத்தில் மேன்மையும்
புண்ணியத்தின் பலனும்  நமக்குக் கிடைக்கும் .



நான் என்னும் ஆணவத்தின் உச்சியில் இருந்து கொண்டு ,
அதிகார மமதையில் உழன்று கொண்டு ,
சுயநலத்திற்காக சுரண்டல் வேலை செய்து கொண்டு ,
தான் வாழ பிறர்  வாழ்வை அழித்துக் கொண்டு ,
நம்பி வந்தவரை நட்டாற்றில் தவழ வைத்துக் கொண்டு ,
பணத்திற்காக தகாத செயல்கள் செய்து கொண்டு ,
கன்னியரின் கற்பை சூறையாடிக் கொண்டு ,
தாயை மதிக்காமல் தகாத செயல்கள் செய்து கொண்டு ,
தந்தை சொல் கேளாமல் நடந்து கொண்டு ,
ஆசானை மதிக்காமல் செயலாற்றிக் கொண்டு ,
நட்பிற்கு துரோகம் செய்து கொண்டு ,
உயிர்களுக்கு துன்பம் அளித்துக் கொண்டு ,
வார்த்தைகளால் இளகிய மனங்களை
வருத்தத்தால் அழ வைத்துக் கொண்டு ,
தான் உயர மற்றவரை வளர விடாமல தடுத்துக் கொண்டு ,
பஞ்சமா பாதகங்களை பயமில்லாமல் செய்து கொண்டு ,

தீய எண்ணத்தால் பாவத்தை விதைத்து  ;
தீய சொற்களால் பாவத்தை வளர்த்து ;
தீய செயல்களால் பாவத்தை அறுவடை செய்து  ;

ஒழுக்க நெறி தவறி வாழ்பவரின் வாழ்க்கையானது
இழிந்த நிலைக்கு தள்ளப்படுகிறது ;
விமர்சனத்திற்கு உள்ளாக்கப் படுகிறது ;
மானம் மதிப்பிழக்கப் படுகிறது ;
கௌரவம் எரிக்கப்படுகிறது ;
ஏச்சுக்கள் எழுப்பப் படுகிறது ;

வாழ்க்கை சமுதாயத்தில் தீர்க்க முடியாத
பழி நிலைக்கு உட்படுகிறது .

ஒழுக்க நெறி தவறி வாழ்பவரின் வாழ்க்கையானது
சமுதாயத்தின் பாவச் சின்னமாக கருதப்படுகிறது .


எண்ணம் , சொல் , செயலால் ஒழுக்கத்தை கடைபிடித்து
ஒழுக்க நெறியில் வாழும் போது
புண்ணிய பலன்களை சேர்த்து
உயர்வான நிலையை அடைவார்
உயர்ந்த நிலைக்கு உயர்த்தப் படுவார்

எண்ணம் , சொல் , செயலால்  ஒழுக்க நெறி தவறி
ஒழுக்க நெறியில் வாழாத போது
பாவத்தின் சம்பளத்தைப் பெற்று
தீர்க்க முடியாத பழிச்செயலுக்கு
உட்பட்டு தாழ்ந்த நிலையை அடைவார் .
தாழ்ந்த நிலைக்கு தள்ளப்படுவார் .
என்கிறார்  திருவள்ளுவர் .



இயேசு கிறிஸ்து - திருவள்ளுவர் :
இயேசு , ஒருவன் தவறான செயலை நினைக்கும் போதே
ஒழுக்கம் தவறியவன் ஆகிறான் என்கிறார் .


அவ்வாறே ,
திருவள்ளுவரும்  , எண்ணம் ,சொல் , செயலால் ஒருவன்
தவறானவைக்கு உட்படும் போது ஒழுக்கம் தவறியவன் ஆகிறான்
என்கிறார் .


                              ”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                                          போற்றினேன் பதிவுஇருபது  ந்தான்முற்றே “”