March 22, 2012

இயேசு கிறிஸ்து-சிவவாக்கியர்-முத்திசேறச்-பதிவு-26



               இயேசு கிறிஸ்து-சிவவாக்கியர்-முத்திசேறச்-பதிவு-26

               “”பதிவு இருபத்துஆறை விரித்துச் சொல்ல
                                  ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :
உபவாசித்தல் எப்படி செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும்,
எத்தகைய உபவாசித்தலை பிதா ஏற்றுக் கொள்வார்  
என்பதைப் பற்றியும் ,
எத்தகைய உபவாசித்தலை பிதா ஏற்றுக் கொள்ள மாட்டார் என்பதைப்
பற்றியும் ,
இயேசு கீழ்க்கண்ட வசனங்கள் மூலம் விளக்குகிறார் :

நீங்கள் உபவாசிக்கும் போது , மாயக்காரரைப் போல முகவாடலாய் இராதேயுங்கள் ; அவர்கள் உபவாசிக்கிறதை மனுஷர் காணும் பொருட்டாக, தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள் ;அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று , மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்                                                                 
                                                                     --------மத்தேயு - 6 : 16

நீயோ உபவாசிக்கும் போது , அந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப்படாமல் , அந்தரங்கத்தில் இருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக ,உன் தலைக்கு எண்ணெய் பூசி ,உன் முகத்தைக் கழுவு.”
                                                                          -------மத்தேயு - 6 : 17  
                           
அப்பொழுது ,அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்.”
                                                                        ---------மத்தேயு - 6 : 18                                    

இறைவன் என்றால் யார்  என்றும் ;
இறைவனின் சக்திகள் எவை என்றும் ;
இறைவனின் தன்மைகள் எவை என்றும் ;
இறைவனின் மகிமைகள் எவை என்றும் ;
          அறிந்து கொள்வதற்கும் ;
          உணர்ந்து கொள்வதற்கும் ;
          புரிந்து கொள்வதற்கும் ;
          பல்வேறு மதங்களில்
          பல்வேறு பெயர்களில்
          வடிவமைக்கப்பட்டு ,
          பயன்படுத்தப்பட்டு ,
          பின்பற்றப்பட்டு ,
செயல்பட்டு வந்த உபவாசம் , விரதம் , நோன்பு - இன்று
கால மாற்றத்தாலும் ;
மனிதனின் சுய நலத்தாலும் ;
மனிதனின் தீர்க்க முடியாத ஆசையாலும் ;
அதனுடைய அடிப்படை குணம் மாற்றப்பட்டு

மனிதன் தன் தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்கும் ;
ஆசையை பூர்த்தி செய்து கொள்வதற்கும் ;
கனவுகளை நிஜமாக்குவதற்கும் ;
கற்பனைகளை கைக்கொள்வதற்கும் ;
தன் விருப்பங்களைத் தீர்த்துக் கொள்வதற்கும் ;
ஒரு வடிகாலாக விரதத்தை மாற்றி விட்டான் .

பேரின்ப நுழைவாயிலின் திறவுகோலாக இருந்த விரதம் - இன்று
சிற்றின்பத்தை அடைந்து வாழ்க்கை சுகத்தை
துய்க்கும் சாளரமாக மாறி விட்டது .
 
காலங்கள் மாறினாலும் ;
விரதத்தின் அடிப்படைகள் மாறினாலும் ;
விரதத்தின் குணங்கள் மாறினாலும் ;
மனிதனின் தன்மைகள் மாறினாலும் ;
மனிதனின் சிந்தனைகள் மாறினாலும் ;
மனிதனின் தேவைகள் மாறினாலும் ;
மனிதனின் ஆசைகள் மாறினாலும் ;
விரதம் என்பது பல்வேறு முறைகளில் பயன் படுத்தப்பட்டு ,
பின்பற்றப்பட்டு வருகிறது .

விரதம் இரண்டு முறைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது :
    1. நேரத்தை அடிப்படையாகக் கொண்டது
    2. நாட்களை அடிப்படையாகக் கொண்டது

1.நேரத்தை அடிப்படையாகக் கொண்டது :
நேரத்தை அடிப்படையாகக் கொண்ட விரதத்தைக் கீழ்க்கண்ட இரண்டு முறைகளைப் பின்பற்றி செய்ய வேண்டும் :

முறை - 1 :
1.  காலை 06.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை செய்ய வேண்டும் .
2.  அன்று இடைப்பட்ட கால அளவில் துhங்கக் கூடாது .
3.  சிகரெட்,புகையிலை,போதைவஸ்துகளை உபயோகப் படுத்தக் கூடாது.
4.  மீன் ,இறைச்சி போன்ற அசைவ உணவுகளை உண்ணக் கூடாது .

முறை - 2 :
1.   காலை 06.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை செய்ய வேண்டும் .
2.   அன்றைய குறிப்பிட்ட கால இடை வெளியில் துhங்கக் கூடாது.
3.   எந்த உணவையும் சாப்பிடக் கூடாது .
4.   நீர் பருகக் கூடாது.
5.   யாருடனும் பேசக் கூடாது .
6.   சிகரெட்,புகையிலை,போதைவஸ்துகளை உபயோகப் படுத்தக் கூடாது.
7.  மீன்,இறைச்சி,போன்ற அசைவ உணவுகளை உண்ணக் கூடாது.
8.  இறைவனின் நாமத்தை உச்சரித்த வண்ணம் இருக்க வேண்டும்.
9.   இறை சிந்தனையுடனே இருக்க வேண்டும்.
10.  இறை சம்பந்தப்பட்ட புத்தகங்களை படிக்க வேண்டும்.
11.  வீட்டில் இருந்தபடியே செய்ய வேண்டும்.
12.   வெளியிலோ,பணி நிமித்தமாகவோ,வியாபாரம் சம்பந்தப்பட்டோ, வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது.
13.  அன்னியர்  யாரையும் பார்க்கக் கூடாது.
14.  போன்,தொலைபேசி கொண்டு யாருடனும் பேசக் கூடாது.
15.   பொய்,சூது,கொலை,கொள்ளை,கற்புநெறி பிறழ்தல் ஆகியவற்றை எண்ணம்,சொல்,செயலால் தீண்டக் கூடாது .
16.   பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வு - தாழ்வு மனப்பான்மை ,வஞ்சம் எனப்படும் காம, குரோத, லோப, மோக, மத, மாச்சரியங்களை எண்ணம், சொல், செயலால் தீண்டக் கூடாது .

இவைகள் நேரத்தை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படும் விரதம் ஆகும்.

 2 . நாட்களை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படும் விரதம்
நாட்களை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படும் விரதத்தை கீழ்க்கண்ட இரண்டு முறைகளைப் பின்பற்றி செய்ய வேண்டும் :

முறை - 1:
1.  41 நாட்கள் ( அல்லது ) 45 நாட்கள் ( அல்லது ) 48 நாட்கள் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் .
2.  புகையிலை ,சிகரெட், போதை வஸ்துகளை சாப்பிடக் கூடாது .
3.  மீன், இறைச்சி, அசைவ உணவுப் பொருள்களைச் சாப்பிடக் கூடாது.

முறை - 2 :
1.   41 நாட்கள் ( அல்லது ) 45 நாட்கள் ( அல்லது ) 48 நாட்கள் செய்ய வேண்டும் .
2.  புகையிலை, சிகரெட், போதை வஸ்துகளை சாப்பிடக் கூடாது.
3.  மீன் ,இறைச்சி, அசைவ உணவுப் பொருள்களைச் சாப்பிடக் கூடாது.
4.  ஒரே இடத்தில் அதாவது எந்த ஊரில்,எந்த வீட்டில் விரதத்தை செய்கிறோமோ அங்கே தான் 48 நாட்களும் செய்ய வேண்டும் .
5.  குடும்ப விவகாரங்கள், விழாக்கள், வியாபார வேலைகள், பணி நிமித்தம் வெளியூர்  செல்லக் கூடாது.
6.   எந்த வீட்டில் செய்கிறோமோ அந்த வீட்டில் தான் இரவு வந்து படுக்க வேண்டும் .
7.     காலையும், மாலையும் குளிக்க வேண்டும் .
8.    இறைவன் நாமத்தை உச்சாடணம் செய்ய வேண்டும் .
9.     இறைவனை நினைத்து ஜெபம் செய்ய வேண்டும்.
10.  பொய் ,சூது, கொலை, கொள்ளை, கற்புநெறி பிறழ்தல் ஆகிய பஞ்சமா பாதகங்களை எதன் பொருட்டும் செய்யக் கூடாது எண்ணம், சொல், செயலால் தீண்டக் கூடாது  .
11.  பேராசை ,சினம், கடும்பற்று, முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வு - தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் ஆகிய அறுகுணங்களை காம ,குரோத, லோப, மோக ,மத, மாச்சரியங்களை எண்ணம், சொல், செயலால் தீண்டக் கூடாது.
12.  இறப்பு நிகழ்ந்த வீட்டிற்கோ,பிணத்தின் அருகிலேயே செல்லக் கூடாது.

மேற்கண்ட முறைப்படி விரதங்களை மேற்கொண்டு செய்யும் போது
மற்றவர் தன்னை பாராட்ட வேண்டும்
புகழ்ந்து பேச வேண்டும்
கடவுள் மேல் எவ்வளவு பக்தி வைத்துள்ளார் ;
கடவுள் நெறி முறைகளை எப்படி பின் பற்றுகிறார் ;
கடவுளுக்காக எவ்வாறெல்லாம் தன்னை அர்ப்பணிக்கிறார் ;
கடவுளுக்காக தன் உடலை எப்படி வருத்துகிறார் ;
கடவுளின் தன் மனதை எவ்வாறு கஷ்டப்படத்தி செலுத்துகிறார் ;
கடவுள் மேல் எவ்வளவு பக்தி கொண்டிருக்கிறார் - என்று
மற்றவரெல்லாம் பாராட்ட வேண்டும்

என்ற நினைப்பை மனதில் கொண்டு
        முகத்தை வாட்டமாகவும் ,
        உடலை களைப்பாகவும் ,
        செயலை தளர்ச்சியாகவும் ,
        சொல்லை குறைவாகவும் ,
        வைத்துக் கொண்டு
        அலங்காரம் செய்யாமல் ,
        நல்ல ஆடை அணியாமல்,
        துhய்மையாக இல்லாமல் இருந்தால் ,

கடவுளிடம் பக்தி இருப்பது போல்
வெளி வேஷம் போட்டுக் கொண்டால் ,
மக்கள் வேண்டுமானால் உண்மையான பக்தி என்று
ஏமாறுவார்களே ஒழிய இறைவன் ஏமாறமாட்டார்.

ஏமாற்றுக் காரர்களுக்கு,
நயவஞ்சக மனம் கொண்டோருக்கு ,
வெளி வேஷம் போட்டு நடிப்பவருக்கு ,
எத்தகைய தண்டனையை கொடுக்க வேண்டுமோ?
அத்தகைய தண்டனையை கடவுள் கொடுப்பார்
எனவே கடவுள் மேல் உண்மையான பக்தி கொண்டு
வெளி உலகுக்கு நடிக்காமல்
நல்ல உடை உடுத்தி
துhய்மையாக இருந்து கொண்டு

விரதம் இருப்பதை அனைவருக்கும்
வெளிக் காட்டும் படி நடிக்காமல்
உண்மையான உள்ளம் கொண்டு,
துhய்மையான நெஞ்சம் கொண்டு,
கருணையான இதயம் கொண்டு,
கண்ணியமான செயல் கொண்டு,
செயல்படுத்தும் போது மட்டுமே
இறைவன் நம் விரதத்தை ஏற்றுக் கொண்டு
அதற்குரிய பலனை அளித்து நம்மை வாழ்வில் உயர்த்துவார்
என்கிறார்  இயேசு.     



சிவவாக்கியர்:
முத்திசேறச் சித்தியிங்கு முன்னளிப்பேன் பாரெனச்
சத்தியங்கள் சொல்லியங்குஞ் சாமிவேடம் பூண்டவர்
நித்தியம்வ யிறுவவளர்க்க நீதிஞானம் பேசியே
பத்தியாய்ப்ப ணம்பறித்துப் பாழ்நரகில் வீழ்வரே
                     ----சிவவாக்கியர்-----பெரியஞானக் கோவை----

களவாடும் போது கள்வனுக்கு பயம் !
காதலிக்கும் போது காதலர்க்கு பயம் !
ஈன்றெடுக்கும் போது தாய்க்கு பயம் !
தேர்தல் முடிவு வரும் போது அரசியல்வாதிக்கு பயம் !
பரிட்சை முடிவு தெரியும் போது மாணவனுக்கு பயம் !
திருமணத்தின் போது பெண்ணுக்கு பயம் !
திருமணம் முடிந்த போது ஆணுக்கு பயம் !
பசி வாட்டும் போது ஏழைக்கு பயம் !
படித்து முடித்த போது பட்டதாரிக்கு பயம் !
சிந்திக்கும் போது கற்பனைக்குப் பயம் !
உறவாடும் போது ஒழுக்கத்துக்குப் பயம் !
முன்னேறும் போது முயற்சிக்கு பயம் !
வாழும் போது நம்பிக்கைக்கு பயம் !
இறக்கும் போது இறப்பிற்கு பயம் !

என்று பல்வேறு வகைப்பட்ட பயத்தால்
வாழ்க்கையை ஓட்டும் மக்களுக்கு

  இன்பத்தின்  கதவுகளைத் திறந்து காட்டுகிறேன் ;
  இல்லாமையை நீக்கி காட்டுகிறேன் ;
  துன்பத்தைத் துரத்திக் காட்டுகிறேன் ;
  வறுமையை விரட்டிக் காட்டுகிறேன் ;
  ஏழ்மையை விலக்கிக் காட்டுகிறேன் ;
  சோகங்களை ஓட்டிக் காட்டுகிறேன் ;
  முக்திக்கான திறவுகோலைக் காட்டுகிறேன் ;
  ஞானத்திற்கான வழியைக் காட்டுகிறேன் ;
  ஆன்மீகத்தின் உயர்வுகளை காட்டுகிறேன் ;
  பிரபஞ்சத்தின் ரகசியத்தைக் காட்டுகிறேன் ;
  மறைபொருளின் சூட்சுமத்தைக் காட்டுகிறேன் ;
  ஆதிஅந்தத்தை முடிச்சவிழ்த்துக் காட்டுகிறேன் ;

என்று சாமிக்குரிய இலக்கணங்களாக
இந்த உலகம் வகுத்து வைத்திருக்கும்
காலம் காலமாக இந்த உலகத்தால்
பின்பற்றப்பட்டு வந்திருக்கும்
சாமியாருக்குடைய அங்க அடையாளங்கள் ,
பேச்சு வழக்கங்கள் ,
செயல்படும் விதங்கள் ,
நடைமுறை ஒழுக்கங்கள் ,
கடைப்பிடிக்கப்படும் சம்பிரதாயங்கள் ,
பின்பற்றப்படும் வாழ்வியல் நெறிமுறைகள் ,

ஆகியவற்றைக் கொண்டு
      சத்தியங்கள் சொல்லுகிறேன் ;
      உண்மையை உரைக்கிறேன் ;
      பொய்மையை விரட்டுகிறேன் ;
      நித்தியத்தை விதைக்கிறேன் ;
      அநித்தியத்தை புதைக்கிறேன் ;
      அறிவுக் கதவை திறக்கிறேன் ;
      ஞான ஒளி ஏற்றுகிறேன் ;
      முக்தியை அளிக்கிறேன் ;
      முழுமுதற் பொருள் ஆக்குகிறேன் ;
      பரம் பொருளுடன் இணைக்கிறேன் ;
      பிறப்பை அறுக்கிறேன் ;
      இறவாவரம் அளிக்கிறேன் ;

என்று தன்னைக் காத்துக் கொள்ள ;
தன் வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொள்ள ;
தன் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ள ;
தன் வம்சத்தை உயர்த்திக் கொள்ள ;
தனக்கு புகழை தேடிக் கொள்ள ;
தன் பெருமையை வளர்த்துக் கொள்ள ;

நீதியின் இலக்கணத்தைப் பற்றியும் ;
நீதி என்றால் என்ன என்பதைப் பற்றியும் ;
நீதியின் தன்மைகளைப் பற்றியும் ;
ஞானத்தின் வழிமுறைகளைப் பற்றியும் ;
ஞானத்தை அடைந்தவர்களைப் பற்றியும் ;
அன்றாடம் நாள் தவறாமல்,
நேரம் தவறாமல் , காலம் தவறாமல் ,

கதைகள் பல பேசிக்கொண்டு ;
கவிதைகள் பல இயற்றிக் கொண்டு ;
உதாரணங்கள் பல கொடுத்துக் கொண்டு ;
ஏமாந்தவர்களை எட்டி மிதித்துக் கொண்டு ;
ஆறியாமையை ஏழ்மையை தனக்கு
சாதகமாகப் பயன் படுத்திக் கொண்டு ;

பணம் சம்பாதித்து செல்வம் பல சேர்த்து
மாளிகைகள் பல கட்டி , வாகனங்கள் பல வாங்கி
நிலங்கள் பல பெற்று ,வீடுகள் பல கட்டி
வாழ்க்கையை நடத்துபவர்கள்
ஏமாந்தவர்களின் அறியாமையை
தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு,

சுக போக வாழ்க்கை நடத்தும்
உண்மையான சாமியாக இல்லாமல்
போலி சாமியார்  வேடம் போட்டு காலத்தை ஓட்டி
வாழ்க்கையை செல்வச் செழிப்பாக நடத்துபவர்கள்;

பாவத்திற்கான சம்பளத்தைப் பெற்று
விலக்க முடியாத தீர்க்க முடியாத
கொடுமையான துன்பங்களை
அதாவது நரக வாழ்க்கையை அனுபவிப்பார்கள்;

நரக வாழ்க்கை என்றால் ,
செய்த தீவினைக்கு ஏற்ற துன்பத்தின் பலன்
கொடுமையானதாக இருக்கும் ;
அது இப்பிறவியிலோ அல்லது அடுத்த ஜென்மத்திலோ
செய்த பாவத்திற்கான பலனை,

வார்த்தையில் சொல்ல முடியாத
அளவிற்கு மிகக் கொடிய பலனை அனுபவிப்பார்கள்
என்கிறார்  சிவவாக்கியர்.



இயேசு கிறிஸ்து - சிவவாக்கியர் :
இயேசு ,புறத்தில் போடப்படும் வேஷங்கள் இறை ஒளியை தராது .
அகத்தில் செய்யப்படும் இறை வழிபாடே இறை ஒளியை
ஏற்றி வைக்கும் .

புற தோற்றம் நரகத்தில் தள்ளி விடும் பாவத்தை
உண்டு பண்ணும் என்கிறார்.

அவ்வாறே,
சிவவாக்கியரும், புறத்தில் செய்யப்படும் வேஷங்கள்
இறைத் தன்மையைக் காட்டாது.
அவை மீள முடியாத துன்பத்தைக் கொடுக்கும் என்கிறார்.
  

        “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                           போற்றினேன் பதிவுஇருபத்துஆறு  ந்தான்முற்றே “”

March 19, 2012

இயேசுகிறிஸ்து-திருவள்ளுவர்-ஏதிலார்குற்றம்-பதிவு-25




         இயேசு கிறிஸ்து-திருவள்ளுவர் -ஏதிலார்குற்றம் -பதிவு-25

         “”பதிவு இருபத்துஐந்தை விரித்துச் சொல்ல
                         ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :

““நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்காதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்.“”
                                                       ------------மத்தேயு - 7 : 1

ஏனெனில் , நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள் ; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின் படியே உங்களுக்கும் அளக்கப்படும.
                                                          ----------மத்தேயு - 7 : 2

 நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல் ,உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?”
                                                           ----------மத்தேயு - 7 : 3

மாயக்காரரே ! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப் போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்.
                                                            --------மத்தேயு - 7 : 5

விடியலைத் தொலைத்துவிட்டு ,
வீதியோரத்தில் போட்டு விட்டு ,
வாழ்வின் முன்னேற்றத்தின் அடிச்சுவடுகளை ,
கன்னியரின் கடை விழியில் கட்டி வைத்து விட்டு
வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் இருக்கும் வரை,

சுகபோகத்தின் சாயலில் விழுந்து ,
பணத்தின் பவிசில் பல்லிளித்து ,
காலத்தின் கட்டுப்பாடுகளின்
கடமையை உணராமல் அலைந்து கொண்டிருக்கும்
நாகரிகம் என்ற பெயரில் நடுத்தெருவில் அரைகுறை
ஆடையுடன் சுற்றிக் கொண்டிருக்கும்
பாதையோர கன்னிகள் இருக்கும் வரை ,

மமதையும் , மயக்கு மொழி பேச்சுகளும் ,
உப்பரிகையில் உழன்றாடும் போதையும் ,
அலைந்து திரியும்
நாதியற்ற அரசியல்வாதிகள் இருக்கும் வரை ,

அரியணையின் அரவணைப்பில் துயின்று
சுகத்தின் சாயல் தனக்கு மட்டும் தான் - என்று
சொல்லிக் கொண்டு
நிஜத்தின் சாயலை மறைத்து வாழ்ந்து கொண்டிருக்கும்
பணமுதலைகள் இருக்கும் வரை ,

தோல்வியை மக்களுக்கு பரிசாக வழங்கி விட்டு
வெற்றி தங்களுக்கு மட்டும் தான் என்று
எழுதாத சட்டமாக வைத்திருக்கும்
பொருளாதார நிபுணர்கள் இருக்கும் வரை ,

ஆறறிவு மனிதரை ஐயறிவு மானிட புழுவாக மாற்றி விட்டு ,
துன்பச் சகதியில் சுழன்றாடி சுகம் காண,
தள்ளிவிடும் உயர்ந்தோர்  இருக்கும் வரை ,

பட்டங்களும் , பதவிகளும் தனக்கு மட்டும் தான்
தன் வாரிசுகளுக்கு மட்டும் தான் - என்று
சுயநல கிருமிகளாக அரசியல்வாதிகள் இருக்கும் வரை  ,

புகழும் ,செல்வாக்கும்,
மக்களுக்கு கொடுக்கும் மரியாதையும் ,
பாராட்டும் , புகழும் , அடிவருடும் ரசிகனும் ,
தனக்கு வேண்டும் என்று விரும்பும் ,
சுயதம்பட்டம் சுயபுகழ் தேடுபவர்கள் இருக்கும் வரை ,

மதம் என்ற பெயரில் ரத்த
ஆறை ஓட விட்டு ,
சாதி என்ற பெயரில் - அந்த
ரத்த ஆற்றில் நீந்தி
மொழியின் பெயரால் பேதத்தை உண்டாக்கி
ரத்த ஆற்றை குடிக்கும் ஓநாய்கள் இருக்கும் வரை ,

சமுதாயம் உருப்படாது ;
சமுதாய நிலை உயராது ;
சமுதாய மக்கள் திருந்தமாட்டார்கள் - என்று
சமுதாயத்தையும் , சமுதாய மக்களையும் , மற்றவர்களையும்,
தன்னைச் சுற்றி உள்ளவர்களையும் ,
சகோதர , சகோதரிகளையும் , உறவினர்களையும் ,

தவறான செயல் செய்பவர்கள்
தவறான மனதை உடையவர்கள்
தவறான வழி நடப்பவர்கள் - என்று
எப்பொழுதும் , எந்நேரமும் , எக்காலத்தும் ,
மற்றவர்களையே , பிறரையே குற்றவாளிகள் என்று சொல்லாதீர்கள் .
நீங்களே நீதிமான்களாக மாறி பிறர்  குற்றவாளிகள் என்று
தீர்ப்பு அளிக்காதீர்கள் .

நாம் நல்ல மனம் கொண்டவராக ;
நாம் நல்ல வார்த்தை பேசுபவராக ;
நாம் நல்ல செயல் செய்பவராக ;
நாம் நல்ல வழியில் நடப்பவராக ;
நாம் நல்லவற்றையே நினைப்பவராக ;
இருந்தால் மட்டுமே ,
மற்றவர்களையும் ,மற்றவர்களுடைய செயல்களையும்
விமர்சிக்கும் உரிமை உண்டு .

நம் மனமே அழுக்கு அடைந்து இருக்கும் போது ,
நம் செயல்களே கறைப்படிந்து இருக்கும் போது ,
நம் வார்த்தைகளே பொய்களால் நிரப்பப் பட்டிருக்கும் போது ,
நம் எண்ணங்களே சாக்கடையாகி துர்நாற்றம்
வீசிக் கொண்டு இருக்கும் போது ,
நம் மனம் இரக்கமற்று சாத்தான் குடி கொண்டு இருக்கும் போது ,
எப்படி மற்றவரை குற்றவாளி - என்று
நாம் சொல்ல முடியும் அந்த தகுதி நமக்கு இல்லை .

எப்பொழுது நீங்கள் சமுதாயத்தையும்
மற்றவரையும் குற்றவாளிகள் - என்று
குறை கண்டு பிடித்து சொல்கிறீர்களோ
அப்பொழுது சமுதாயமும் , மக்களும் , பிறரும்
உங்களை குற்றவாளிகள் என்று உங்களை கை காட்டும்
உங்களைப் பார்த்து எள்ளி நகையாடும்
உங்களை நினைத்து மனதிற்குள் சிரித்து விளையாடும் - ஆகவே
பிறரை குற்றவாளிகள் என்று சொல்லாதீர்கள் .

அப்பொழுது தான் நீங்களும்
விமர்சனத்திற்கு ஆளாக மாட்டீர்கள் ;
விமர்சனத்திற்கு உட்பட மாட்டீர்கள் ;
விமர்சனத்தால் பாதிக்கப்பட மாட்டீர்கள் ;
விமர்சனத்தால் மனம் உடைய மாட்டீர்கள் ;
விமர்சனத்தால் வாழ்க்கையை வெறுக்க மாட்டீர்கள் ;

இல்லையென்றால் ,
நீங்களும் விமர்சனத்திற்கு உட்படக் கூடிய நிலை உண்டாகும் ;
விமர்சனத்தால் பாதிப்பு அடையக் கூடிய நிலை உண்டாகும் ;
விமர்சனத்தால் கவலைகள் பெருக வழி உண்டாகும் ;

நீங்கள் மற்றவர்களை குற்றவாளிகள் - என்று
விமர்சனம் செய்தால்
மற்றவர்களும் உங்களை குற்றவாளிகள்
என்று விமர்சனம் செய்வார்கள்
நீங்கள் மற்றவர்களுடைய குணநலன்களை
எந்த அளவுகோலால் அளக்கிறீர்களோ
அவ்வாறே உங்கள் குணநலன்களும்  அளக்கப்படும்
என்கிறார்  இயேசு .


மேலும் ,
உன் கண்ணிலிருக்கிற அசுத்தத்தை உணராமல் ;
உன் கண்ணிலிருக்கிற அசுத்தத்தை பார்க்காமல் ;
உன் கண்ணிலிருக்கிற அசுத்தத்தை அறியாமல் ;

உன் சகோதரன் கண்ணிலிருக்கிற ,
அசுத்தத்தை பார்ப்பதால் என்ன பயன் ?
முதலில் உன் கண்ணிலிருக்கிற அசுத்தத்தை நீக்கு
பிறகு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற
அசுத்தத்தை எப்படி நீக்குவது
கண்ணை எப்படி சுத்தப்படுத்துவது
என்பதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து நீக்கலாம் .

அதாவது முதலில் உன்னிடமுள்ள குறைகள்
எவை என்று கண்டு பிடித்து நீக்கு - பிறகு
மற்றவரிடமுள்ள குறைகளைக் காணலாம்
மற்றவரிடமுள்ள குறைகளை நீக்கும் முறைகளை ஆராயலாம்
என்கிறார்  இயேசு .

தனி மனிதன் தன்னிடம் உள்ள குறைகளை உணர்ந்து திருந்தினால்
இந்த சமுதாயம் திருந்தும் என்கிறார்  இயேசு .



திருவள்ளுவர் :

   “”””ஏதிலார்  குற்றம்போல் தங்குற்றம் காண்கிற்பின்
         தீதுண்டோ மன்னும் உயிர்க்கு “””
                          ------திருவள்ளுவர்-----திருக்குறள்--

அரசியலில் ஆதாயம் தேடுவதற்காகவும் ;
மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் ;
ஓட்டு வங்கிகளைப் பெருக்கி கொள்வதற்காகவும் ;
மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவும் ;
மதக் கலவரங்களை ஏற்படுத்துவதும் ,
கோயிலை இடிக்க ஓடுவதும் ,

மக்களுக்கு நேரும் இடையூறைப் பற்றிக் கவலைப் படாமல்
உண்ணாவிரதம் - என்ற
பெயரில் நடுத்தெருவில் அமர்ந்து கொள்வதும்

தீர்ப்புகள் எத்தகைய தன்மை உடையதாக இருந்தாலும் சரி   
நீதிமன்ற தீர்ப்பே ஆனாலும் சரி
சட்டத்தை மதிக்க மாட்டோம்  - என்று
இரு மாறுபட்ட மனங்கள் மோதிக் கொள்வதும் ,

மத வெறியில் மனிதர்களை மாய வைத்து
இரத்த ஆற்றில் நீந்துவதும் ,

சாதியின் பெயரைச் சொல்லி சமதர்மக்
கோட்பாட்டைத் தகர்ப்பதும் ,

பிரிவிணையாலும் பிரித்தாளும் சூழ்ச்சியாலும் ;
நயவஞ்சக எண்ணம் கொண்டு அழிப்பதாலும் ;
இரக்கமதை நசுக்குவதாலும் ;
ஏழ்மையதை உதைப்பதாலும் ;
அறியாமையதை விதைப்பதாலும் ;
அடிமைத் தனத்தை வளர்ப்பதாலும் ;
அறிவதனை மாய்ப்பதாலும்  ;
சிந்தனையை சிதைப்பதாலும் ;
பிரித்தாளும் சூழ்ச்சிகள் வளர்ந்து கொண்டிருப்பதாலும் ;
முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டைகள் போடப்பட்டு இருப்பதாலும் ;
மதவெறி துhண்டப்படுவதாலும் ;
சாதி உணர்வு தழைப்பதாலும் ;
மடமைகள் அரியணை ஏறுவதாலும் ;
கொடுமைகள் செங்கோல் பிடித்து அரசாள்வதாலும் ;
வறுமை எங்கும் சுதந்திரமாக உலாவுவதாலும் ;
உண்மைகள் மாய்வதாலும் ;
பொய்மைகள் வளர்வதாலும் ;

சமுதாயம் சீரழிந்து கிடக்கிறது .
சமுதாய மக்கள் தீயவைகளில்
தீய எண்ணங்களில் தீய செயல்களில்
மூழ்கித் திளைக்கின்றனர் - என்று
மற்றவரிடம் உள்ள குறைகளைக் காண்பவர்
தன்னிடம் உள்ள குறைகளைக் காணவேண்டும் .


நட்பு தேடி உண்மையாக வந்தவனிடம்
துரோக வலை விரித்து குழி பறித்தவன் ;

காதல் மொழி பேசி வந்தவளிடம் ,காமவலை வீசி
கன்னியின் வாழ்வை சிதைப்பவன் ;

உயிர்  கொடுத்து உலவ விட்ட
தாயின் அன்பை மதிக்காமல் அவளை உதாசீனப் படுத்தியவன் ;

ரத்தத்தை உழைப்பாக்கி அல்லும் பகலும்
ஓய்வு ஒழிச்சலின்றி உழைத்த தந்தையை அவமானப் படுத்தியவன் ;

நயவஞ்சக வேலை செய்து
ஏமாற்றி வயிறு வளர்க்கும் தான்
வெளியில் நல்லவன் போல் நடிப்பவன் ;

பிணம் தின்னிக் கழுகுகளும் கரையான்களும்
தொடக்கூட கூச்சப்படும்
அவமானச் சின்னம் தான் - என்று
தன்னைப் பற்றி தன்னிடம் உள்ள குறைகளைப் பற்றி
அறிந்து கொள்ள வேண்டும் .

மற்றவரிடம் உள்ள குறைகளை அறிந்து கொள்பவர்
தன்னிடம் உள்ள குறைகளை அறிந்து கொள்ளும் மனது விட்டால் ,
அதனை களையும் வழிமுறை அறிந்து களைந்து விட்டால் ,
துhய்மை பெற்று விட்டால் ,
அறிவு விளக்கம் பெற்று விட்டால் ,

உயிருக்கும் , உடலுக்கும் எந்தவித
துன்பமும் இல்லை ; துயரமும் இல்லை ;


ஓவ்வொரு தனி மனிதனும் தன்னிடம் உள்ள குறைகளை
கண்டறிந்து களைந்து விட்டால்
சமுதாயத்தில் சண்டை ஏற்படாது .
உயர்வு - தாழ்வு மனப்பான்மை உண்டாகாது .

பொய் , சூது , கொலை , கொள்ளை , கற்புநெறி பிறழ்தல் - என்ற
பஞ்சமா பாதகங்கள் நடை பெறாது .

உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும்
உலகில் வாழும் உயிர்கள் அனைத்தும்
துன்பங்கள் நீங்கி இன்பமாக வாழும் .

இதனை செய்யாமல் , இதனை மேற்கொள்ளாமல்
மற்றவர்  குற்றங்களை மட்டும் விமர்சனம் செய்து விட்டு
தன் குற்றங்களை காணாமல் விட்டு விட்டால்
சமுதாயத்தால் நாமும் விமர்சனத்திற்கு உள்ளாவோம் ;
குற்றவாளிகளாக ஆக்கப்படுவோம் ;

இதனால் அமைதி குலைந்து சண்டைகள் பெருகி
நிம்மதி இழக்கும் நிலை உருவாகும் வாய்ப்பு உள்ளது
என்கிறார்  திருவள்ளுவர் .
     


இயேசு கிறிஸ்து - திருவள்ளுவர்:
இயேசு ,மற்றவர்களை குற்றவாளிகள் என்று விமர்சனம் செய்தால்
மற்றவர்களும் உங்களை குற்றவாளிகள்
என்று விமர்சனம் செய்வார்கள் .

ஆதலால் , முதலில் உங்களிடமுள்ள குறைகளை
கண்டறிந்து நீக்கி விட்டு மற்றவர்களுடைய
குறைகளைக் காண வேண்டும் என்கிறார்.


அவ்வாறே,
திருவள்ளுவரும் ,முதலில் தன்னிடமுள்ள குறைகளை
கண்டுபிடித்து நீக்கிவிட்டு பிறகு மற்றவர்களுடைய
குறைகளைக் காண வேண்டும் என்கிறார்.


              “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                      போற்றினேன் பதிவுஇருபத்துஐந்து  ந்தான்முற்றே “”