March 25, 2012

இயேசுகிறிஸ்து-குதம்பைசித்தர்-தாவாரமில்லை-பதிவு27

  


  இயேசு கிறிஸ்து-குதம்பைச் சித்தர்-தாவாரமில்லை-பதிவு-27

              “”பதிவு இருபத்துஏழை விரித்துச் சொல்ல
                              ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :

வெளியாக்கப்படாத மறை பொருளும் இல்லை ; அறியப்படாத ரகசியமும் இல்லை.
                                                 ---------மத்தேயு  - 10 : 26

நான் உங்களுக்கு இருளிலே சொல்லுகிறதை நீங்கள் வெளிச்சத்திலே சொல்லுங்கள்.“
                                                  --------மத்தேயு - 10 : 27

செயலாற்றும் வரை செயல்படு
எழும் விளைவை எழும் போதே கண்டிருப்பாயாகில்
ஆட்டத்தின் நிலையை ஆரம்பத்திலேயே கண்டிருப்பாய்
முடியாமல் போனதால் தான் முனகிக் கொண்டிருக்கிறாய் !

அறியா நிலையில் , அரற்றிக் கொண்டிருந்தால்
அறியும் நாள் அகண்டாகாரத்தில் இருப்பதை எப்போது உணர்வது !

உணர்வறியா நிலையில் உன்னை நீ உணர்ந்தால்
ஆற்றொணாத் துயரம் அண்டாமல் ஓடும் !

மாற்றும் நிலைதனை மனம் தான் பெற்றுவிட்டால்
மோட்சம் வரைக்கும் முயன்று செல்லலாம் !

அழுது கொண்டிருக்கும் மடமை உலகத்தை
மாற்றும் வகைதனை தெரிந்து கொண்டால்
உயர்வின் எழுச்சியை உலகுக்கு உணர்த்த முடியும் !

மாற்றா நிலையை மாற்றும் வகை செய்திட்டால்
செய்யா செயல் கூட செய்யும் வகை பெற்றிடலாம் !

மறையின் தன்மை இறையின் மேன்மை உணர்ந்திட்டால்
உண்மையின் உரு உரையில்லாமல் விளங்கும் !

சாவா மருந்தை நோவாமல் நீ பெற்று விட்டால்
வாழும் நிலை உனக்கு இனிக்கும்!

இனிமையின் ஏகாந்தம் - உன்னுடன்
உறவாடி விட்டால் மற்றது உனக்கெதற்கு?
மறவாதே அதை மனதுடன் முயற்சி செய் - உனக்கு
முடிவுரை தீட்ட உன்னால் மட்டுமே முடியும்
என்பதில் தெளிவு பெற்றால்
மறைபொருள் ரகசியங்கள் வெட்டவெளிச்சமாகும்!
என்ற கருத்தை உணர்ந்த இயேசு,
என்பதில் விளக்கம் பெற்ற இயேசு ,
என்பதில் தெளிவு பெற்ற இயேசு,

மறைபொருளை உணராமல்
மறைபொருளை உணர்ந்தது போல் நடிப்பவர்கள் ;
மறைபொருள் என்றால் என்ன என்பதை
உணர்ந்து கொண்டதாக பாசாங்கு செய்பவர்கள்;
மறைபொருளாக சொல்லப்பட்டவைகளை சொல்லித் தருகிறேன்
என்று சொல்லி பொய்யை விலைக்கு விற்பவர்கள் ;
மறைபொருளை உணர வேண்டும் என்று வருபவர்க்கு
தவறான வழி காட்டுபவர்கள் ;
மறைபொருளை உணர்ந்தும் உணர்ந்ததை சொல்லித் தர
மனது இல்லாமல் நல்லவர்கள் போல் நடிப்பவர்கள் ;

ஏமாற்றுபவர்களும் , புகழுக்கு ஆசைபடுபவர்களும்,
செல்வத்தை சேர்க்க நினைப்பவர்களும்,
வாழ்க்கையை சுக போகமாக நடத்த முயற்சி எடுப்பவர்களும் ,
நிறைந்த இந்த உலகத்தார்  மத்தியில்

     உண்மையை அனைவரும் அறிய வேண்டும் ;
     மனம் தெளிவு பெற வேண்டும்;
     சிந்தனை உயர்வு நிலை அடைய வேண்டும் ;
     வாழ்க்கை வளமாக வேண்டும் ;
     அறிவு விளக்கம் பெற வேண்டும் ;
     ஆன்மீகத்தில் உயர வேண்டும் ;
     உண்மையை அறிய வேண்டும் ;
     இறைவனை உணர வேண்டும் ;
      சுகங்கள் நிலைக்க வேண்டும் ;
     இன்பங்கள் உயிர்ப்பெற வேண்டும் ;
     துக்கங்கள் தொலைய வேண்டும் ;
     கவலைகள் களைய வேண்டும் ;
     முயற்சிகள் ஏற்றம் பெற வேண்டும் ;
     வெற்றிகள் முடிசூட்டப் படவேண்டும் ;
     பாவங்கள் கழிய வேண்டும் ;
     உறவுகள் மலைக்க வேண்டும் ;
     சுற்றத்தார்  வாழ்த்த வேண்டும் ;
     குடும்பம் தழைக்க வேண்டும் ;
     இல்லாமை போக வேண்டும் ;
     இனியவை நிரம்ப வேண்டும் ;
     வறுமை ஒழிய வேண்டும் ;
     ஏழ்மை அகல வேண்டும் ;
     அன்பு செழிக்க வேண்டும்;
     கருணை தழைக்க வேண்டும் ;
     இரக்கம் உதிக்க வேண்டும் ;
     உறவுகள் மேம்பட வேண்டும் ;
     சிந்தனை சிறக்க வேண்டும் ;
     நல்லெண்ணம் துளிர்க்க வேண்டும் ;
     நற்செயல் நடக்க வேண்டும் ;
     ஆணவம் அழிய வேண்டும் ;
     அகம்பாவம் தொலைய வேண்டும் ;
     தன்முனைப்பு அறுந்துவிட வேண்டும் ;
     குற்றங்கள் களையப்பட வேண்டும் ;
     இதயங்கள் துhய்மைப்பட வேண்டும் ;
     நல்லாட்சி நடைபெற வேண்டும் ;
     நல்லோர் மனம் குளிர வேண்டும் ;
     தீமைகள் அகல வேண்டும் ;
     புறம் பேசுதல் மறைய வேண்டும் ;
     துரோகம் செய்பவர்  புதைக்கப் பட வேண்டும் ;
     பொய் பேசுபவர்  திருந்த வேண்டும் ;
     எண்ணம் ஆராயப்பட வேண்டும் ;
     ஆசை சீரமைக்கப் பட வேண்டும் ;
     கவலை ஒழிக்கப் பட வேண்டும் ;
     சினம் தவிர்க்கப் பட வெண்டும் ;
     நான் யார்  என்பதை உணர வேண்டும் ;
     உண்மை உணர வேண்டும் ;
     கடவுளை அறிய வேண்டும் ;
     மனது தெளிய வேண்டும் ;
     மனிதனாக மாற வேண்டும் ;
     செல்வம் தழைக்க வேண்டும் ;
     தவறுகள் திருத்தப் பட வேண்டும் ;
     குற்றங்கள் திருந்தப் பட வேண்டும் ;
     சட்டங்கள் சமமாக வேண்டும் ;
     நீதிகள் உண்மையாக வேண்டும் ;
     நியாயங்கள் பொதுவாக வேண்டும் ;
     அழுகைகள் நிறுத்தப் பட வேண்டும் ;
     உண்மைகள் உயிர்ப்பெற வேண்டும் ;
     பொய்மைகள் புதைக்கப் பட வேண்டும்;
    நல்லவைகள் வளர வேண்டும்;
    தீயவைகள் மறைய வேண்டும்;

                   அறியாமை அகல வேண்டும்;
                  ஆணவம் ஒழிய வேண்டும்;
                  இயலாமை ஒதுங்க வேண்டும் ;
                    ஈவது வளர வேண்டும்;
                   உயர்வு உயிர்க்க வேண்டும் ;
                   ஊரே உயர வேண்டும் ;
                   எளிமை நடமாட வேண்டும் ;
                   ஏற்றம் துளிர்க்க வேண்டும் ;
                   ஐந்நிலம் செழிக்க வேண்டும் ;
                    ஓப்பில்லா நறுமணம் வீச வேண்டும் ;
                    ஓருயிர் கூடவாழ வேண்டும் ;
                    ஓளவியம் சிறக்க வேண்டும் ;
                    இஃது நடக்க வேண்டும் ;

என்ற உயர்ந்த நோக்கத்தை மனதில் கொண்டு ,

இயேசு தன்னுடைய சீடர்களை அழைத்து உண்மையை விளக்கினார்.
உரைக்கப்படாத ,வெளியாக்கப்படாத மறைபொருளும் இல்லை
அறியப்படாத ரகசியம் இல்லை என்று அவர்களுக்கு
உண்மையின் அடிப்படையை ,உண்மையின் இருப்பிடத்தை,
உண்மையின் மூலத்தை ,உண்மையின் சாராம்சத்தை உபதேசித்தார்.

உங்களுக்கு இருளில் சொன்னதை,
அதாவது ரகசியமாக சொன்னதை,
உண்மைப் பொருளை விளக்கிச் சொன்னதை,

நீங்கள் அனைவரும் அறிய வேண்டும் என்ற வகையில் ,
அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் ,
அனைவரும் உணர்ந்து கொள்ளும் வகையில் ,
அனைவரும்  ஏற்றுக் கொள்ளும் வகையில் ,
அனைவரும் தெளிவு பெறும் வகையில் ,
அனைவரும் அறிவு விளக்கம் பெறும் வகையில் ,
தெளிவாகவும் , முறைப்படுத்தியும்,
எளிமையாகவும் ,கருணையாகவும்,  அன்பாகவும்
மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் சொல்ல வேண்டும்

என்கிறார் இயேசு.

வெளிச்சத்தில் சொல்ல வேண்டும் என்றால்,
மறைப்பில்லாமல் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்று பொருள்.
மறைபொருளை வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்று பொருள் .
சொல்வதை எளிதில் புரிந்து கொள்ளும் சக்தி படைத்தவர்கள்,
சொல்வதை எளிதில் புரிந்து கொள்ளும் சக்தி இல்லாதவர்கள்,
அனைவரும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில்
வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்கிறார் இயேசு.



குதம்பைச் சித்தர்:
        “””தாவார மில்லை தனக்கொரு வீடில்லை
            தேவார மேதுக்கடி - குதம்பாய்
             தேவார மேதுக்கடி””””
                                 ----குதம்பைச் சித்தர்----பெரிய ஞானக்கோவை----

சில புத்தகங்களில் தாவரமில்லை என்று கொடுக்கப் பட்டிருக்கிறது
தாவரம் என்பது ஓருயிர் , தாவாரமில்லை என்றே கொள்ளப்பட வேண்டும்

மயில் ஆடாவிட்டால் தோகைக்கு ஏது பெருமை !
மழை பொழியா விட்டால் மேகத்திற்கு ஏது பெருமை !
தமிழ் இல்லா விட்டால் மொழிக்கு ஏது பெருமை !
கவிதை புனையா விட்டால் கற்பனைக்கு ஏது பெருமை !
சண்டை போடா விட்டால் வீரத்திற்கு ஏது பெருமை !
பாடல் பாடா விட்டால் இசைக்கு ஏது பெருமை !
நடிப்பு நடக்கா விட்டால் வசனத்திற்கு ஏது பெருமை !
ஆடல் ஆடா விட்டால் நாட்டியத்திற்கு ஏது பெருமை !
அன்பு இல்லா விட்டால் பாசத்திற்கு ஏது பெருமை !
அமைதி இல்லா விட்டால் அடக்கத்திற்கு ஏது பெருமை !
தொண்டன் இல்லா விட்டால் தலைவனுக்கு ஏது பெருமை !
கடவுள் இல்லா விட்டால் பக்திக்கு ஏது பெருமை !
குரு இல்லா விட்டால் வித்தைக்கு ஏது பெருமை !
குரு என்பவர்  தான் கற்ற
            
              அனைத்து கலைகளையும் நம்முடைய ,
 ஆணவத்தை முற்றிலும் நீக்கி ,
 இல்லை என்று சொல்லாமல் ,
 ஈயும் மனம் கொண்டவராக இருக்க வேண்டும் .
 உள்ளத்தில் உள்ளதை ,
 ஊசி முனை அளவு கூட மறைக்காமல் ,
 எடுத்துக் காட்டி சீடனை கலையில் ,
 ஏற்றம் பெறச் செய்ய வேண்டும் .
 ஐயத்தை தெளிவு பெற நீக்கி ,
 ஓன்றே தெய்வம் என்பதை உணரச் செய்து - மனதை
 ஓர் நிலையில் நிறுத்தும் கலை போதித்து,
 ஓங்காரத்தின் பொருளை உணரச் செய்து,
 ஓளஷதத்தின் மகிமையை எடுத்துரைத்து ,
 அஃதே கல்வி

அத்தகைய கல்வியை அளிப்பவரே குரு
அத்தகைய விளக்கத்தை கொடுப்பவரே குரு
என்பதை உறுதி படுத்த வேண்டும்.

உண்மையைத் தேடி அலைந்து ,
உண்மையில் விளக்கம் பெற்று ,
உண்மையை உணர்ந்து ,
உண்மையாகவே மாறி ,
உண்மையாக விளங்குபவரும் ,
உண்மையை வார்த்தைகளால் சொல்லக் கூடியவரும் ,
உண்மையாக நடப்பவரும்,
உண்மையை சொல்லிக் கொடுக்கக் கூடியவரும் ,
உண்மையை விளங்கியவரும் ,
உண்மையை விளக்குபவரும் ,
உண்மையாக வாழ்பவரும் ,
உண்மையை பின்பற்றுபவரும் ,
உண்மையை காட்டுபவரும் ,
உண்மையை தெளிவுபடுத்துபவரும் ,
குரு என்று அழைக்கப் படுவதற்கு தகுதி உடையவர்.

உண்மையை உணராமல் ,
உண்மையை உணர்ந்தது போல் நடிப்பவரும் ,
உண்மையை ,உண்மையை சொல்லித் தர
மனம் இல்லாமல் இருப்பவரும் ,
மறை பொருள் என்று சொல்லி
உண்மையை மறைத்து  வைத்திருப்பவரும் ,
ரகசியம் என்று சொல்லி மறைத்து வைத்துக் கொண்டு இருப்பவரும்,
நான் கஷ்டப்பட்டேன் , அலைந்தேன் , திரிந்தேன் ;
அடிமை வேலை செய்தேன் ;
நாயாக உழைத்தேன் ; பேயாக திரிந்தேன் ;
காலத்தை வீணாக்கினேன் ; செல்வத்தை கரைத்தேன் ;
இளமையை துறந்தேன் ; மகிழ்ச்சியை இழந்தேன் ;
நாட்கணக்கில் பின்னால் சென்றேன் ;
கெஞ்சினேன் காலைப் பிடித்தேன் ;
மனம் வேதனைப்பட்டு ஊர்  ஊராக அலைந்தேன் ;
தெருத் தெருவாக சுற்றினேன் ;
நாடு நாடாக நாய் மாதிரி  திரிந்தேன் ;
சொல்ல முடியாத வேதனையை அனுபவித்தேன் ;

சமுதாயத்தால் அவமானப்பபடுத்தப் பட்டேன் ;
குடும்பத்தாரால் ஒதுக்கப் பட்டேன் ;
உறவினரால் வெறுக்கப் பட்டேன் ;
சமுதாயத்தால் ஏளனப்படுத்தப் பட்டேன் ;
இவ்வளவையும் தாங்கி நான்,
கற்றுக் கொண்ட கலையை ,
நான் கற்றுக் கொண்ட மந்திரத்தை ,
நான் கற்றுக் கொண்ட வித்தையை ,
நான் உணர்ந்த உண்மையை ,
நான் பெற்ற ஞானத்தை ,
நீ வந்து எப்படி கேட்கலாம்?
சொல்லித் தாருங்கள் என்று எப்படிக் கேட்கலாம் ?
அவ்வளவு எளிதில் சொல்லித் தர முடியுமா?
எவ்வாறு எளிதாக கேட்கிறாய் ?
என்று எள்ளி நகையாடி ஏளனமாகப் பேசி சொல்லித் தராமல் ,

சீடனின் ஆன்ம நிலை உணர்ந்து ;
ஆன்மீகத்தில் அடைந்த இலக்கை உணர்ந்து ;
ஆன்மீகத்தில் பெற்ற வெற்றியை உணர்ந்து ;
கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை உணர்ந்து ;
உண்மையை அறிய அவன் செய்த முயற்சியின் தன்மையை உணர்ந்து ;
உண்மையை அறிய அவன் மேற்கொண்ட செயல்களை உணர்ந்து ;
அவனுள் கனன்று எரிந்து கொண்டிருக்கும்
உண்மையின் வேட்கையை உணர்ந்து;

மரணத்தின் வாசலை தொட்டாலும் பரவாயில்லை ;
மரணத்தை முத்தமிட்டாலும் பரவாயில்லை ;
எதனை இழந்தாலும் பரவாயில்லை ;
யார்  எதிர்த்தாலும் பரவாயில்லை ;
யார்  துhற்றினாலும் பரவாயில்லை ;
சோதனைகள் பல ஏற்பட்டாலும் பரவாயில்லை ;
கவலைகள் பல உண்டானாலும் பரவாயில்லை ;
துன்பங்கள் பல துரத்தினாலும் பரவாயில்லை ;
ஏளனங்கள் பல எதிர்த்தாலும் பரவாயில்லை ;
துரோகங்கள் பல இதயத்தை துளைத்தாலும் பரவாயில்லை ;
வறுமைகள் பல வாழ்க்கையை வாட்டினாலும் பரவாயில்லை ;
ஏமாற்றங்கள் பல எட்டி உதைத்தாலும் பரவாயில்லை ;
தோல்விகள் பல தோள் மேல் உட்கார்ந்தாலும் பரவாயில்லை ;

என்று துணிந்து வந்தவர்க்கு ,
உண்மையைக் காண விருப்பம் கொண்டவர்க்கு ,
கலைகளைக் கற்றுக் கொள்ள ஆசைப்பட்டவர்க்கு ,
கலைகளை இல்லை என்று சொல்லாமல்
சொல்லிக் கொடுக்க முடியாது என்று சொல்லாமல்
சொல்லிக் கொடுக்க வேண்டும் .

அத்தகைய சொல்லிக் கொடுக்கக் கூடிய
சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று மனம் கொண்ட
உண்மையை , கலைகளை சொல்லிக் கொடுக்கக் கூடிய குரு இல்லை.
அத்தகைய குரு எனக்குக் கிடைக்கவில்லை .

தாவாரமில்லை என்றால் -
தாவி அனைத்து காட்டக் கூடிய  ஓரு கை இல்லை என்று பொருள் .
அதாவது நம்மை சரியான முறையில் அறிவுரை சொல்லி திருத்தி
நல்ல வழி காட்டி , கலைகளை கற்பித்து , உண்மையை உணர்த்தி
வழி நடத்தக் கூடிய குரு இல்லை என்று பொருள் .

தனக்கொரு வீடில்லை என்றால் -
உண்மையை உணர்ந்த குரு எனக்கு கிடைக்கவில்லை என்று பொருள்.
அதாவது உண்மையை உணர்த்த குரு எனக்கு கிடைக்கவில்லை
என்று பொருள்.
அப்படியே கிடைத்தாலும் அவருக்கு சொல்லித் தர மனமில்லை,
பெருந்தன்மை இல்லை , பரந்த மனப்பான்மை இல்லை என்று பொருள் .

உண்மையை அறிந்த குரு இல்லை
அப்படியே உண்மையை அறிந்த குரு இருந்தாலும்
எனக்கு சொல்லித் தர மனதில்லாததால்
எனக்கு உண்மையை சொல்லித் தரும் குரு கிடைக்கவில்லை.

உண்மை என்ன என்று தெரியாமல்
உண்மையை அடையும் வழி எது என்று புரியாமல்
பல்வேறு புத்தகங்களில் மறை பொருளாக ,சூட்சும குறியீடுகளாக,
குறியீடுகளாக குறிக்கப் பட்டவைகளை ,
வார்த்தை ஜாலங்களால் நிரப்பி வைக்கப் பட்டவைகளை,
புரியாமல் இருக்க குழப்பும் வகையில் எழுதி வைக்கப் பட்டவைகளை ,
முன்னுக்குப் பின் முரண்படும் வகையில் சொல்லப்பட்டவைகளை ,
ரகசியம் , ரகசியம் என்று மறைத்து வைத்து இருப்பவைகளை ,

போன்ற கணக்கற்ற புத்தகங்களுக்கு நடுவில்
தேவாரம் போன்ற உயர்ந்த புத்தகத்தை ,
உயர்ந்த கருத்துகளை தன்னுள் கொண்ட புத்தகத்தை ,
உண்மையை தன்னுள் கொண்ட புத்தகத்தை  ,
எவ்வாறு நாம் படித்து அறிய முடியும் உணர முடியும்
உண்மையைப் பெற முடியும் .

உண்மையை உணர்ந்த குரு
உண்மையை அனுபவ ரீதியாக விளக்கம் பெற்ற குரு இல்லாமல்
தேவாரம் போன்ற நுhல்களைப் படிப்பதால்
ஒரு பயனும் இல்லை என்கிறார்  குதம்பைச் சித்தர்.



இயேசு கிறிஸ்து  - குதம்பைச் சித்தர் :
இயேசு ,உண்மையை  தானாக குரு இல்லாமல்
உணர்ந்து கொள்ள முடியாது.
எனவே ,குருவாக இருந்து மறை பொருளை விளக்கமாக,
அனைவருக்கும் சொல்லிக் கொடுத்து வழிகாட்டியாக இருந்து ,
உண்மையை உணரும் படி உண்மையை உணர்த்துங்கள் என்கிறார்.

அவ்வாறே,
குதம்பைச் சித்தரும், புத்தகத்தைப் படித்து உண்மையை உணர முடியாது.
உண்மையை குரு இல்லாமல் உணர்ந்து கொள்ள முடியாது.
எனவே உண்மையை உணர்ந்த குருவை நாடி உண்மையை
உணர வேண்டும் என்கிறார்.


இயேசு ,உண்மையை குரு இல்லாமல் உணர்ந்து கொள்ள
முடியாது என்கிறார்.
அவ்வாறே.
குதம்பைச் சித்தரும் ,உண்மையை குரு இல்லாமல் உணர்ந்து
கொள்ள முடியாது என்கிறார்.

              “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                     போற்றினேன் பதிவுஇருபத்துஏழு  ந்தான்முற்றே “”

March 22, 2012

இயேசு கிறிஸ்து-சிவவாக்கியர்-முத்திசேறச்-பதிவு-26



               இயேசு கிறிஸ்து-சிவவாக்கியர்-முத்திசேறச்-பதிவு-26

               “”பதிவு இருபத்துஆறை விரித்துச் சொல்ல
                                  ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :
உபவாசித்தல் எப்படி செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும்,
எத்தகைய உபவாசித்தலை பிதா ஏற்றுக் கொள்வார்  
என்பதைப் பற்றியும் ,
எத்தகைய உபவாசித்தலை பிதா ஏற்றுக் கொள்ள மாட்டார் என்பதைப்
பற்றியும் ,
இயேசு கீழ்க்கண்ட வசனங்கள் மூலம் விளக்குகிறார் :

நீங்கள் உபவாசிக்கும் போது , மாயக்காரரைப் போல முகவாடலாய் இராதேயுங்கள் ; அவர்கள் உபவாசிக்கிறதை மனுஷர் காணும் பொருட்டாக, தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள் ;அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று , மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்                                                                 
                                                                     --------மத்தேயு - 6 : 16

நீயோ உபவாசிக்கும் போது , அந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப்படாமல் , அந்தரங்கத்தில் இருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக ,உன் தலைக்கு எண்ணெய் பூசி ,உன் முகத்தைக் கழுவு.”
                                                                          -------மத்தேயு - 6 : 17  
                           
அப்பொழுது ,அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்.”
                                                                        ---------மத்தேயு - 6 : 18                                    

இறைவன் என்றால் யார்  என்றும் ;
இறைவனின் சக்திகள் எவை என்றும் ;
இறைவனின் தன்மைகள் எவை என்றும் ;
இறைவனின் மகிமைகள் எவை என்றும் ;
          அறிந்து கொள்வதற்கும் ;
          உணர்ந்து கொள்வதற்கும் ;
          புரிந்து கொள்வதற்கும் ;
          பல்வேறு மதங்களில்
          பல்வேறு பெயர்களில்
          வடிவமைக்கப்பட்டு ,
          பயன்படுத்தப்பட்டு ,
          பின்பற்றப்பட்டு ,
செயல்பட்டு வந்த உபவாசம் , விரதம் , நோன்பு - இன்று
கால மாற்றத்தாலும் ;
மனிதனின் சுய நலத்தாலும் ;
மனிதனின் தீர்க்க முடியாத ஆசையாலும் ;
அதனுடைய அடிப்படை குணம் மாற்றப்பட்டு

மனிதன் தன் தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்கும் ;
ஆசையை பூர்த்தி செய்து கொள்வதற்கும் ;
கனவுகளை நிஜமாக்குவதற்கும் ;
கற்பனைகளை கைக்கொள்வதற்கும் ;
தன் விருப்பங்களைத் தீர்த்துக் கொள்வதற்கும் ;
ஒரு வடிகாலாக விரதத்தை மாற்றி விட்டான் .

பேரின்ப நுழைவாயிலின் திறவுகோலாக இருந்த விரதம் - இன்று
சிற்றின்பத்தை அடைந்து வாழ்க்கை சுகத்தை
துய்க்கும் சாளரமாக மாறி விட்டது .
 
காலங்கள் மாறினாலும் ;
விரதத்தின் அடிப்படைகள் மாறினாலும் ;
விரதத்தின் குணங்கள் மாறினாலும் ;
மனிதனின் தன்மைகள் மாறினாலும் ;
மனிதனின் சிந்தனைகள் மாறினாலும் ;
மனிதனின் தேவைகள் மாறினாலும் ;
மனிதனின் ஆசைகள் மாறினாலும் ;
விரதம் என்பது பல்வேறு முறைகளில் பயன் படுத்தப்பட்டு ,
பின்பற்றப்பட்டு வருகிறது .

விரதம் இரண்டு முறைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது :
    1. நேரத்தை அடிப்படையாகக் கொண்டது
    2. நாட்களை அடிப்படையாகக் கொண்டது

1.நேரத்தை அடிப்படையாகக் கொண்டது :
நேரத்தை அடிப்படையாகக் கொண்ட விரதத்தைக் கீழ்க்கண்ட இரண்டு முறைகளைப் பின்பற்றி செய்ய வேண்டும் :

முறை - 1 :
1.  காலை 06.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை செய்ய வேண்டும் .
2.  அன்று இடைப்பட்ட கால அளவில் துhங்கக் கூடாது .
3.  சிகரெட்,புகையிலை,போதைவஸ்துகளை உபயோகப் படுத்தக் கூடாது.
4.  மீன் ,இறைச்சி போன்ற அசைவ உணவுகளை உண்ணக் கூடாது .

முறை - 2 :
1.   காலை 06.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை செய்ய வேண்டும் .
2.   அன்றைய குறிப்பிட்ட கால இடை வெளியில் துhங்கக் கூடாது.
3.   எந்த உணவையும் சாப்பிடக் கூடாது .
4.   நீர் பருகக் கூடாது.
5.   யாருடனும் பேசக் கூடாது .
6.   சிகரெட்,புகையிலை,போதைவஸ்துகளை உபயோகப் படுத்தக் கூடாது.
7.  மீன்,இறைச்சி,போன்ற அசைவ உணவுகளை உண்ணக் கூடாது.
8.  இறைவனின் நாமத்தை உச்சரித்த வண்ணம் இருக்க வேண்டும்.
9.   இறை சிந்தனையுடனே இருக்க வேண்டும்.
10.  இறை சம்பந்தப்பட்ட புத்தகங்களை படிக்க வேண்டும்.
11.  வீட்டில் இருந்தபடியே செய்ய வேண்டும்.
12.   வெளியிலோ,பணி நிமித்தமாகவோ,வியாபாரம் சம்பந்தப்பட்டோ, வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது.
13.  அன்னியர்  யாரையும் பார்க்கக் கூடாது.
14.  போன்,தொலைபேசி கொண்டு யாருடனும் பேசக் கூடாது.
15.   பொய்,சூது,கொலை,கொள்ளை,கற்புநெறி பிறழ்தல் ஆகியவற்றை எண்ணம்,சொல்,செயலால் தீண்டக் கூடாது .
16.   பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வு - தாழ்வு மனப்பான்மை ,வஞ்சம் எனப்படும் காம, குரோத, லோப, மோக, மத, மாச்சரியங்களை எண்ணம், சொல், செயலால் தீண்டக் கூடாது .

இவைகள் நேரத்தை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படும் விரதம் ஆகும்.

 2 . நாட்களை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படும் விரதம்
நாட்களை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படும் விரதத்தை கீழ்க்கண்ட இரண்டு முறைகளைப் பின்பற்றி செய்ய வேண்டும் :

முறை - 1:
1.  41 நாட்கள் ( அல்லது ) 45 நாட்கள் ( அல்லது ) 48 நாட்கள் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் .
2.  புகையிலை ,சிகரெட், போதை வஸ்துகளை சாப்பிடக் கூடாது .
3.  மீன், இறைச்சி, அசைவ உணவுப் பொருள்களைச் சாப்பிடக் கூடாது.

முறை - 2 :
1.   41 நாட்கள் ( அல்லது ) 45 நாட்கள் ( அல்லது ) 48 நாட்கள் செய்ய வேண்டும் .
2.  புகையிலை, சிகரெட், போதை வஸ்துகளை சாப்பிடக் கூடாது.
3.  மீன் ,இறைச்சி, அசைவ உணவுப் பொருள்களைச் சாப்பிடக் கூடாது.
4.  ஒரே இடத்தில் அதாவது எந்த ஊரில்,எந்த வீட்டில் விரதத்தை செய்கிறோமோ அங்கே தான் 48 நாட்களும் செய்ய வேண்டும் .
5.  குடும்ப விவகாரங்கள், விழாக்கள், வியாபார வேலைகள், பணி நிமித்தம் வெளியூர்  செல்லக் கூடாது.
6.   எந்த வீட்டில் செய்கிறோமோ அந்த வீட்டில் தான் இரவு வந்து படுக்க வேண்டும் .
7.     காலையும், மாலையும் குளிக்க வேண்டும் .
8.    இறைவன் நாமத்தை உச்சாடணம் செய்ய வேண்டும் .
9.     இறைவனை நினைத்து ஜெபம் செய்ய வேண்டும்.
10.  பொய் ,சூது, கொலை, கொள்ளை, கற்புநெறி பிறழ்தல் ஆகிய பஞ்சமா பாதகங்களை எதன் பொருட்டும் செய்யக் கூடாது எண்ணம், சொல், செயலால் தீண்டக் கூடாது  .
11.  பேராசை ,சினம், கடும்பற்று, முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வு - தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் ஆகிய அறுகுணங்களை காம ,குரோத, லோப, மோக ,மத, மாச்சரியங்களை எண்ணம், சொல், செயலால் தீண்டக் கூடாது.
12.  இறப்பு நிகழ்ந்த வீட்டிற்கோ,பிணத்தின் அருகிலேயே செல்லக் கூடாது.

மேற்கண்ட முறைப்படி விரதங்களை மேற்கொண்டு செய்யும் போது
மற்றவர் தன்னை பாராட்ட வேண்டும்
புகழ்ந்து பேச வேண்டும்
கடவுள் மேல் எவ்வளவு பக்தி வைத்துள்ளார் ;
கடவுள் நெறி முறைகளை எப்படி பின் பற்றுகிறார் ;
கடவுளுக்காக எவ்வாறெல்லாம் தன்னை அர்ப்பணிக்கிறார் ;
கடவுளுக்காக தன் உடலை எப்படி வருத்துகிறார் ;
கடவுளின் தன் மனதை எவ்வாறு கஷ்டப்படத்தி செலுத்துகிறார் ;
கடவுள் மேல் எவ்வளவு பக்தி கொண்டிருக்கிறார் - என்று
மற்றவரெல்லாம் பாராட்ட வேண்டும்

என்ற நினைப்பை மனதில் கொண்டு
        முகத்தை வாட்டமாகவும் ,
        உடலை களைப்பாகவும் ,
        செயலை தளர்ச்சியாகவும் ,
        சொல்லை குறைவாகவும் ,
        வைத்துக் கொண்டு
        அலங்காரம் செய்யாமல் ,
        நல்ல ஆடை அணியாமல்,
        துhய்மையாக இல்லாமல் இருந்தால் ,

கடவுளிடம் பக்தி இருப்பது போல்
வெளி வேஷம் போட்டுக் கொண்டால் ,
மக்கள் வேண்டுமானால் உண்மையான பக்தி என்று
ஏமாறுவார்களே ஒழிய இறைவன் ஏமாறமாட்டார்.

ஏமாற்றுக் காரர்களுக்கு,
நயவஞ்சக மனம் கொண்டோருக்கு ,
வெளி வேஷம் போட்டு நடிப்பவருக்கு ,
எத்தகைய தண்டனையை கொடுக்க வேண்டுமோ?
அத்தகைய தண்டனையை கடவுள் கொடுப்பார்
எனவே கடவுள் மேல் உண்மையான பக்தி கொண்டு
வெளி உலகுக்கு நடிக்காமல்
நல்ல உடை உடுத்தி
துhய்மையாக இருந்து கொண்டு

விரதம் இருப்பதை அனைவருக்கும்
வெளிக் காட்டும் படி நடிக்காமல்
உண்மையான உள்ளம் கொண்டு,
துhய்மையான நெஞ்சம் கொண்டு,
கருணையான இதயம் கொண்டு,
கண்ணியமான செயல் கொண்டு,
செயல்படுத்தும் போது மட்டுமே
இறைவன் நம் விரதத்தை ஏற்றுக் கொண்டு
அதற்குரிய பலனை அளித்து நம்மை வாழ்வில் உயர்த்துவார்
என்கிறார்  இயேசு.     



சிவவாக்கியர்:
முத்திசேறச் சித்தியிங்கு முன்னளிப்பேன் பாரெனச்
சத்தியங்கள் சொல்லியங்குஞ் சாமிவேடம் பூண்டவர்
நித்தியம்வ யிறுவவளர்க்க நீதிஞானம் பேசியே
பத்தியாய்ப்ப ணம்பறித்துப் பாழ்நரகில் வீழ்வரே
                     ----சிவவாக்கியர்-----பெரியஞானக் கோவை----

களவாடும் போது கள்வனுக்கு பயம் !
காதலிக்கும் போது காதலர்க்கு பயம் !
ஈன்றெடுக்கும் போது தாய்க்கு பயம் !
தேர்தல் முடிவு வரும் போது அரசியல்வாதிக்கு பயம் !
பரிட்சை முடிவு தெரியும் போது மாணவனுக்கு பயம் !
திருமணத்தின் போது பெண்ணுக்கு பயம் !
திருமணம் முடிந்த போது ஆணுக்கு பயம் !
பசி வாட்டும் போது ஏழைக்கு பயம் !
படித்து முடித்த போது பட்டதாரிக்கு பயம் !
சிந்திக்கும் போது கற்பனைக்குப் பயம் !
உறவாடும் போது ஒழுக்கத்துக்குப் பயம் !
முன்னேறும் போது முயற்சிக்கு பயம் !
வாழும் போது நம்பிக்கைக்கு பயம் !
இறக்கும் போது இறப்பிற்கு பயம் !

என்று பல்வேறு வகைப்பட்ட பயத்தால்
வாழ்க்கையை ஓட்டும் மக்களுக்கு

  இன்பத்தின்  கதவுகளைத் திறந்து காட்டுகிறேன் ;
  இல்லாமையை நீக்கி காட்டுகிறேன் ;
  துன்பத்தைத் துரத்திக் காட்டுகிறேன் ;
  வறுமையை விரட்டிக் காட்டுகிறேன் ;
  ஏழ்மையை விலக்கிக் காட்டுகிறேன் ;
  சோகங்களை ஓட்டிக் காட்டுகிறேன் ;
  முக்திக்கான திறவுகோலைக் காட்டுகிறேன் ;
  ஞானத்திற்கான வழியைக் காட்டுகிறேன் ;
  ஆன்மீகத்தின் உயர்வுகளை காட்டுகிறேன் ;
  பிரபஞ்சத்தின் ரகசியத்தைக் காட்டுகிறேன் ;
  மறைபொருளின் சூட்சுமத்தைக் காட்டுகிறேன் ;
  ஆதிஅந்தத்தை முடிச்சவிழ்த்துக் காட்டுகிறேன் ;

என்று சாமிக்குரிய இலக்கணங்களாக
இந்த உலகம் வகுத்து வைத்திருக்கும்
காலம் காலமாக இந்த உலகத்தால்
பின்பற்றப்பட்டு வந்திருக்கும்
சாமியாருக்குடைய அங்க அடையாளங்கள் ,
பேச்சு வழக்கங்கள் ,
செயல்படும் விதங்கள் ,
நடைமுறை ஒழுக்கங்கள் ,
கடைப்பிடிக்கப்படும் சம்பிரதாயங்கள் ,
பின்பற்றப்படும் வாழ்வியல் நெறிமுறைகள் ,

ஆகியவற்றைக் கொண்டு
      சத்தியங்கள் சொல்லுகிறேன் ;
      உண்மையை உரைக்கிறேன் ;
      பொய்மையை விரட்டுகிறேன் ;
      நித்தியத்தை விதைக்கிறேன் ;
      அநித்தியத்தை புதைக்கிறேன் ;
      அறிவுக் கதவை திறக்கிறேன் ;
      ஞான ஒளி ஏற்றுகிறேன் ;
      முக்தியை அளிக்கிறேன் ;
      முழுமுதற் பொருள் ஆக்குகிறேன் ;
      பரம் பொருளுடன் இணைக்கிறேன் ;
      பிறப்பை அறுக்கிறேன் ;
      இறவாவரம் அளிக்கிறேன் ;

என்று தன்னைக் காத்துக் கொள்ள ;
தன் வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொள்ள ;
தன் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ள ;
தன் வம்சத்தை உயர்த்திக் கொள்ள ;
தனக்கு புகழை தேடிக் கொள்ள ;
தன் பெருமையை வளர்த்துக் கொள்ள ;

நீதியின் இலக்கணத்தைப் பற்றியும் ;
நீதி என்றால் என்ன என்பதைப் பற்றியும் ;
நீதியின் தன்மைகளைப் பற்றியும் ;
ஞானத்தின் வழிமுறைகளைப் பற்றியும் ;
ஞானத்தை அடைந்தவர்களைப் பற்றியும் ;
அன்றாடம் நாள் தவறாமல்,
நேரம் தவறாமல் , காலம் தவறாமல் ,

கதைகள் பல பேசிக்கொண்டு ;
கவிதைகள் பல இயற்றிக் கொண்டு ;
உதாரணங்கள் பல கொடுத்துக் கொண்டு ;
ஏமாந்தவர்களை எட்டி மிதித்துக் கொண்டு ;
ஆறியாமையை ஏழ்மையை தனக்கு
சாதகமாகப் பயன் படுத்திக் கொண்டு ;

பணம் சம்பாதித்து செல்வம் பல சேர்த்து
மாளிகைகள் பல கட்டி , வாகனங்கள் பல வாங்கி
நிலங்கள் பல பெற்று ,வீடுகள் பல கட்டி
வாழ்க்கையை நடத்துபவர்கள்
ஏமாந்தவர்களின் அறியாமையை
தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு,

சுக போக வாழ்க்கை நடத்தும்
உண்மையான சாமியாக இல்லாமல்
போலி சாமியார்  வேடம் போட்டு காலத்தை ஓட்டி
வாழ்க்கையை செல்வச் செழிப்பாக நடத்துபவர்கள்;

பாவத்திற்கான சம்பளத்தைப் பெற்று
விலக்க முடியாத தீர்க்க முடியாத
கொடுமையான துன்பங்களை
அதாவது நரக வாழ்க்கையை அனுபவிப்பார்கள்;

நரக வாழ்க்கை என்றால் ,
செய்த தீவினைக்கு ஏற்ற துன்பத்தின் பலன்
கொடுமையானதாக இருக்கும் ;
அது இப்பிறவியிலோ அல்லது அடுத்த ஜென்மத்திலோ
செய்த பாவத்திற்கான பலனை,

வார்த்தையில் சொல்ல முடியாத
அளவிற்கு மிகக் கொடிய பலனை அனுபவிப்பார்கள்
என்கிறார்  சிவவாக்கியர்.



இயேசு கிறிஸ்து - சிவவாக்கியர் :
இயேசு ,புறத்தில் போடப்படும் வேஷங்கள் இறை ஒளியை தராது .
அகத்தில் செய்யப்படும் இறை வழிபாடே இறை ஒளியை
ஏற்றி வைக்கும் .

புற தோற்றம் நரகத்தில் தள்ளி விடும் பாவத்தை
உண்டு பண்ணும் என்கிறார்.

அவ்வாறே,
சிவவாக்கியரும், புறத்தில் செய்யப்படும் வேஷங்கள்
இறைத் தன்மையைக் காட்டாது.
அவை மீள முடியாத துன்பத்தைக் கொடுக்கும் என்கிறார்.
  

        “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                           போற்றினேன் பதிவுஇருபத்துஆறு  ந்தான்முற்றே “”