August 28, 2012

இயேசு கிறிஸ்து-அழுகணிச்சித்தர்-முத்து- பதிவு-51



           இயேசு கிறிஸ்து-அழுகணிச்சித்தர்-முத்து-பதிவு-51  

          “”பதிவு ஐம்பத்துஒன்றை விரித்துச் சொல்ல  
                               ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :
பரலோகராஜ்யம் தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக் கொண்டு , மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும்.
                                                -------மத்தேயு - 25 : 1
அவர்களில் ஐந்துபேர்  புத்தியுள்ளவர்களும் , ஐந்துபேர் புத்தியில்லாதவர்களுமாயிருந்தார்கள்.
                                                -------மத்தேயு - 25 : 2
புத்தியில்லாதவர்கள் தங்கள் தீவட்டிகளை எடுத்துக் கொண்டுபோனார்கள், எண்ணெயையோ கூடக் கொண்டு போகவில்லை.
                                                -------மத்தேயு - 25 : 3
புத்தியுள்ளவர்கள் தங்கள் தீவட்டிகளோடுங்கூடத் தங்கள் பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டு போனார்கள்.
                                                -------மத்தேயு - 25 : 4
மணவாளன் வரத் தாமதித்தபோது அவர்கள் எல்லாரும் நித்திரைமயக்கமடைந்து துhங்கிவிட்டார்கள் .
                                                -------மத்தேயு - 25 : 5
நடுராத்திரியிலே : இதோ , மணவாளன் வருகிறார் . அவருக்கு எதிர் கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று .”
                                                -------மத்தேயு - 25 : 6
அப்பொழுது , அந்தக் கன்னிகைகள் எல்லாரும் எழுந்திருந்து , தங்கள் தீவட்டிகளை ஆயத்தப்படுத்தினார்கள் .
                                                -------மத்தேயு - 25 : 7
புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களை நோக்கி : உங்கள் எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சங்கொடுங்கள் , எங்கள் தீவட்டிகள் அணைந்துபோகிறதே என்றார்கள் .
                                                -------மத்தேயு - 25 : 8
புத்தியுள்ளவர்கள் பிரதியுத்தரமாக : அப்படியல்ல எங்களுக்கும் உங்களுக்கும் போதாமலிராதபடி , நீங்கள் விற்கிறவர்களிடத்திற் போய் உங்களுக்காக வாங்கிக் கொள்ளுங்கள் என்றார்கள் .
                                                -------மத்தேயு - 25 : 9
அப்படியே அவர்கள் வாங்கப் போனபோது மணவாளன் வந்து விட்டார்; ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடேகூடக் கலியாண வீட்டுக்குள் பிரவேசித்தார்கள் ; கதவும் அடைக்கப்பட்டது .
                                                -------மத்தேயு - 25 : 10
பின்பு , மற்றக் கன்னிகைகளும் வந்து : ஆண்டவரே , ஆண்டவரே எங்களுக்குத் திறக்க வேண்டும் என்றார்கள் .
                                                -------மத்தேயு - 25 : 11
அதற்கு அவர்  : உங்களை அறியேன் என்று , மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் .”
                                                -------மத்தேயு - 25 : 12
மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள் .
                                                -------மத்தேயு - 25 : 13

பரலோகராஜ்யம் தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக் கொண்டு
மணவாளனுக்கு எதிர்கொண்டு போகப் புறப்பட்ட
பத்து கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கிறது . அதில் ,
ஐந்து பேர்  புத்தியுள்ளவர்கள்
ஐந்து பேர்  புத்தியில்லாதவர்கள் .

நிகழ்காலத்தை கணக்கில் கொண்டு
நிகழ்கால செயல்முறைகளை கருத்தில் கொண்டு
நிகழ்கால செயல்முறைகளின் அடிப்படையில்
எதிர்காலத்தை சங்கடமின்றி ஏற்படுத்திக் கொள்ள
எதிர்காலத்தை துன்பமின்றி அமைத்துக் கொள்ள
எதிர்காலத்தை தனக்கு ஏற்றபடி உருவாக்கிக் கொள்ள
தனக்கு உகந்தபடி , தன் எண்ணப்படி ,
தன் குறிக்கோள்படி நிறைவேற்ற ,
செயல்களை வகுத்து அதன் வழி செயல்படுபவன் புத்தியுள்ளவன்
அவ்வாறு செயல்படாதவன் புத்தியில்லாதவன் .

நிகழ்காலத்தை கருத்தில் கொண்டு
எதிர்காலத்தை கணிப்பவன் புத்தியுள்ளவன் .
நிகழ்காலத்தை கருத்தில் கொள்ளாமல்
எதிர்காலத்தை கணிக்காமல் விடுபவன் புத்தியில்லாதவன் .

அறிவாளிக்கும் , புத்திசாலிக்கும் வேறுபாடு இருக்கிறது
சொல்வதை அப்படியே ஏற்பவன் அறிவாளி
அதனை பரிட்சித்து பார்த்து ஏற்பவன் புத்திசாலி .

நெருப்பு சுடும் என்று சொன்னால்
அதனுடைய தன்மைகளை மனதில் கொண்டு
கற்ற விளக்கங்களை நெஞ்சில் கொண்டு
அது அப்படித்தான் நெருப்பு
சுடும் தன்மையை தன்னுள் கொண்டுள்ளது
நெருப்பு சுடும் என்று ஏற்றுக் கொள்பவன் அறிவாளி .

ஆனால் , புத்திசாலி நெருப்பு சுடும் என்று சொன்னால்
அதை ஆராயாமல் ஏற்றுக் கொள்ள மாட்டான் .
நெருப்பிடம் சென்று கையை நீட்டுவான்
நெருப்பு சுட்டவுடன் ஆம் நெருப்பு சுடும்
என்பதை ஏற்றுக் கொள்வான் .

அறிவு கற்றதினால் வருவது .
புத்தி செயல்படுத்துவதால் வரும் அனுபவம்.
நிறைய படிப்பதை விட நிறைய அனுபவமே முக்கியம் .
அனுபவமே சிறந்த ஆசான் .
அனுபவமே ஒருவனுடைய
வாழ்க்கையை உயர்த்தும் ;
நேர்வழிக்கு செலுத்தும் ;
நல்வழிக்கு திருப்பும் ;
உயர்  நெறிக்கு செதுக்கும் ;

அறிவாளியாக இருப்பதை விட
புத்திசாலியாக இருப்பதே முக்கியம் .

எல்லாவற்றையும் பரிட்சித்து பார்க்க வேண்டும்
என்று எண்ணக் கூடாது .
எல்லாவற்றையும் பரிட்சித்து பார்க்க முடியாது .
எதை பரிட்சித்து பார்க்க வேண்டுமோ ?
எதை பரிட்சித்து பார்க்க முடியுமோ ?
எதை பரிட்சித்தால் தவறான
விளைவுகளை உண்டு பண்ணாதோ ?
அவைகளை மட்டுமே பரிட்சித்துப் பார்க்க வேண்டும் .
எதை பரிட்சித்துப் பார்க்க வேண்டும்
எதை பரிட்சித்து பார்க்கக் கூடாது என்ற
வேறுபாட்டை உணர்ந்து செயல்படுபவனும்
புத்திசாலிக்குள் அடக்கம் .

புத்தியுள்ளவர்கள் நிகழ்காலத்தில் ஒரு செயலைச் செய்யும் போது
எதிர்காலத்துடன் அச்செயல் எவ்வாறு தொடர்பு கொள்கிறது ;
நிகழ்காலத்தில் செய்யப்படும் செயல்
எதிர்காலத்தில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகிறது  ;
நிகழ்கால செயலுக்கும் , எதிர்கால விளைவிற்கும்
தொடர்பு இருக்கிறதா என்பதை ஆராய்ந்து
அதற்கேற்றபடி புத்தியுள்ளவர்கள்
நிகழ்காலத்தில் தங்கள் செயல்களை செய்வார்கள் .

புத்தியில்லாதவர்கள் எதையும் தீர்மானிக்காமல் ,கணிக்காமல் ,
விளைவுகளை கருத்தில் கொள்ளாமல் ,
எதைப்பற்றியும் கவலைப்படாமல் ,
நிகழ்கால செயலுக்குரிய விளைவு எதிர்காலத்தில்
எப்படி பிரதிபலிக்கும் என்பதை உணராமல் ,
நிகழ்காலத்தில் செய்யும் செயலுக்குரிய விளைவு
எதிர்காலத்தில் எத்தகைய முடிவைக் கொண்டு வரும் என்பதை
நினைவில் கொள்ளாமல் செயல்படுவார்கள்.

அத்தகைய நிலையில் , அத்தகைய தன்மை கொண்ட ,
புத்தியில்லாத ஐந்து பேர்  தீவட்டி கொண்டு போகும் போது
அதனுடன் எண்ணெயை கூட எடுத்துக் கொண்டு போகவில்லை .
புத்தியுள்ள ஐந்து பேர்   தீவட்டி எடுத்துக் கொண்டு போகும் போது
அதனுடன் பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டு போனார்கள்.

புத்தியில்லாதவர்கள் எண்ணெய் தீர்ந்தால் தீவட்டி எரியாதே
அதனால் தீவட்டிக்கு எண்ணெய் கொண்டு செல்ல வேண்டுமே
என்று அவர்கள் நினைக்கவில்லை .
புத்தியுள்ளவர்கள் தீவட்டியில் உள்ள எண்ணெய் தீர்ந்தால்
தீவட்டி அணைந்து விடும் .
தீவட்டி அணையாமல் தொடர்ந்து
எரிய எண்ணெய் வேண்டும் என்பதை
தொலைநோக்கு பார்வையுடன் சிந்தித்து
நிகழ்கால செயலை எதிர்கால விளைவுடன் தொடர்பு படுத்தி
எண்ணெய் கொண்டு சென்றனர்.

மணவாளன் வர தாமதமானதால் அவர்கள் துhங்கி விட்டார்கள் .
நடுராத்திரியிலேயே மணவாளன் வருகிறார் ;
எதிர்கொண்டு வருகிறார்  ; எதிர்கொண்டு போகப் புறப்படுங்கள் ;
என்ற சத்தம் உண்டாயிற்று .
சத்தம் கேட்டு விழிப்புற்ற கன்னிகைகளில்
புத்தியில்லாத ஐந்து கன்னிகைகள்
புத்தியுள்ள ஐந்து கன்னிகைகளை நோக்கி ,
எங்கள் தீவட்டிகள் அணைந்து போகும் நிலையில் உள்ளது
உங்களிடமுள்ள எண்ணெயில்
எங்களுக்கு கொஞ்சம் கொடுங்கள் என்றனர்.

புத்தியுள்ள ஐந்து கன்னிகைகள் எங்களிடமுள்ள எண்ணெயில்
உங்களுக்கு கொஞ்சம் கொடுத்து இருவரும் எண்ணெயை
தேவைக்கேற்றபடி செயலுக்கு உகந்த படி
பயன்படுத்துவது என்பது இயலாத காரியம் .
ஆகவே உங்கள் தேவைக்கேற்ற படி
விற்கிறவர்களிடத்திற் போய்
உங்களுக்காக வாங்கிக் கொள்ளுங்கள்

என்றனர் புத்தியுள்ள ஐந்து கன்னிகைகள்


புத்தியில்லாத கன்னிகைகள் எண்ணெய் வாங்க போன போது
மணவாளன் வந்து விட்டார் .
ஐந்து புத்தியுள்ள கன்னிகைகள் நிகழ்கால செயலை
எதிர்கால விளைவுடன் ஒப்பிட்டு செயல்படுத்தியவர்கள்
ஆராய்ந்து செயல்பட்டவர்கள் ;
இந்த செயலுக்கு இந்த விளைவு தான் ஏற்படும்
என்பதை உணர்ந்தவர்கள் ;
புத்தி தெளிந்தவர்கள் ;
சாதுர்யம் நிறைந்தவர்கள் ;
அறிவு விளக்கமடைந்தவர்கள் ;
யோசித்து செயல்பட்டவர்கள் ;
ஆகியவற்றை தன்னுள் கொண்ட
என்ற தன்மைகளை தன்னுள் அடக்கிய
புத்தியுள்ள ஐந்து கன்னிகைகளும்
மணவாளனோடே கூடக்
கல்யாண வீட்டுக்குள் பிரவேசித்தார்கள் .
கதவும் அடைக்கப்பட்டது .

எதிர்காலச் சிந்தனையை தன்னுள் கொள்ளாத
செயலுக்குரிய விளைவை ஆராயாத
புத்தியில்லாத ஐந்து கன்னிகைகளும்
கதவு திறக்க வேண்டும்
ஆண்டவரே எங்களுக்காக கதவு திறக்க வேண்டும் என்று கூக்குரலிட
அதற்கு அவர்  உங்களை நான் அறியேன் என்று
மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன் என்றார் .

நம்மில் பலர்  புத்தியுள்ளவர்களாகவும்
புத்தியில்லாதவர்களாகவும் இருக்கிறோம்

ஆண்டவரை விசுவாசித்து
ஆண்டவர்  மேல் நம்பிக்கை கொண்டு
ஆண்டவர்  மேல் அன்பு கொண்டு
ஆண்டவர்  வரவை எதிர்  நோக்காமல்
ஆண்டவருடன் இணைந்து செல்லக் கூடிய
ஆண்டவர்  வழி நடக்கக் கூடிய
ஆண்டவர்  காட்டும் பாதை வழி பயணிக்காமல்
அறிவை இழந்து
உள்ளம் தடுமாறி
கற்பனைக் கோட்டையில் மிதந்து
பிறருக்கு தீங்கிழைக்கும் செயல்களைச் செய்து
மற்றவர்  மனதை வாட்டி
எளியோரை வதைத்து ;
வறியோரை மிதித்து ;
ஏழ்மையை அவமதித்து ;
நல்லோரை அழித்து ;
நாணயமுள்ளோரை சிதைத்து ;
கருணையுள்ளோரை புதைத்து ;
இரக்கமுள்ளோரை எரித்து ;
அன்பு பாராட்டாமல்
யாரையும் அரவைனைத்துச் செல்லாமல்
அகம்பாவம் பிடித்து
ஆணவ மிகுதியில்
சிற்றின்ப சகதியில் புரண்டு
பாவங்களை உற்பத்தி செய்து
பாவங்களை சுமந்து கொண்டு

செல்கின்றனர் புத்தியில்லாதவர்கள்


செயலுக்குரிய விளைவை பகுத்து ஆராய்ந்து ,
நிகழ்காலத்தை எதிர்காலத்துடன் ஒப்பிட்டு ஆராய்ந்து ,
தற்கால செயல்களை எதிர்கால விளைவுடன்
ஒப்பிட்டு ஆராய்ந்து ,
செயல்களை வகுப்பதால் பாவம்
மீள முடியாத நரகத்தையும் ,
ஆற்ற முடியாத ரணத்தையும் ,
தாங்க முடியாத துயரத்தையும் ,
சொல்ல முடியாத துன்பத்தையும் ,
காட்ட முடியாத வேதனையையும் ,
கொண்டு வரும் என்பதை மனதில் நிறுத்தி
அல்லவைகளை நீக்கி , நல்லவைகளை செய்து
புண்ணியத்தை சேர்த்து
வாழ்க்கையை நடத்துகின்றனர்  புத்தியுள்ளவர்கள்.

புத்தியுள்ளவர்கள் புண்ணியம் சேர்க்கின்றனர் ;
புத்தியில்லாதவர்கள் புண்ணியம் சேர்ப்பதில்லை;

ஆண்டவர்  வரும் நாளிலே ,
நியாயத் தீர்ப்பு வழங்கும் வேளையிலே ,
புண்ணியம் சேர்த்து வைத்த புத்தியுள்ளவர்களை
ஆண்டவர்  தம்முடன் அழைத்துச் செல்வார் .

புத்தியில்லாதவர்கள் புண்ணியம் செய்யாதவர்கள் ஆண்டவரே
எங்களையும் ஏற்றுக் கொள்ளும் என்றால்
எங்களை ஏற்றுக்கொள்ளும் என்று கூக்கூரலிட்டால்
எங்களை ஏற்றுக்கொள்ளும் என்று கதறி அழுதால்
உங்களை அறியேன் என்று
மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன் என்று ஆண்டவர்  
புத்தியில்லாதவர்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்

புத்தியுள்ளவர்களை மட்டும் தன்னுடன் ஏற்றுக் கொள்வார்.
.

ஆண்டவர்  எப்பொழுது வருவார்
எந்த நேரத்தில் வருவார்
எந்த காலத்தில் வருவார்
என்பது ஒருவருக்கும் தெரியாது ஆகையால்
ஆண்டவர்  வரவை எதிர்பார்த்து
எப்பொழுதும் விழிப்புடன் இருங்கள்
நல்லதே நினைத்து நல்லதே சொல்லி
நல்லதே செய்து வாருங்கள்
நல்வழி சென்று நேர்வழி நின்று
புண்ணியத்தை சேர்த்து வைப்பதன் மூலம்
ஆண்டவரின் அன்பை
ஆண்டவரின் அருளைப் பெறமுடியும்
என்கிறார்  இயேசு .



அழுகணிச் சித்தர் :

“”“முத்து முகப்படியோ முச்சந்தி வீதியிலே
பத்தாம் இதழ்பரப்பி பஞ்சணையின் மேலிருத்தி
அத்தை அடக்கிநிலை ஆருமில்லா வேளையிலே
குத்து விளக்கேற்றி என் கண்ணம்மா
                கோலமிட்டுப் பாரேனோ !””“
                   ------அழுகணிச்சித்தர்---பெரியஞானக் கோவை-----

அனைத்தும் ஒன்றாக இருந்தது ;
அனைத்தும் ஒன்றுக்குள் இருந்தது ;
அனைத்தும் ஒன்றாக இணைந்திருந்தது ;
அனைத்தும் ஒன்றுக்குள் ஒன்றாக பிணைந்திருந்தது ;
அந்த ஒன்று இரண்டாகப் பிரிந்தது .

பேருயிரிலே கலந்து நின்ற சிற்றுயிரானது
பேருயிரிலேயிருந்து பிரிந்து தனியே வந்தது .
பேருயிர் , சிற்றுயிர்  என இரண்டானது .
இதுவே ஜீவாத்மா , பரமாத்மா என அழைக்கப்படுகிறது .
அமைதி நிலையான - இருப்பு நிலை
இயக்க நிலையாக மாற்றம் பெறும் போது
பேருயிர் , சிற்றுயிர்  என்ற
இரு நிலைகளைக் கொண்டதாக இருக்கிறது .

பிரிந்து வந்த ஒன்று , தான் இணைந்து நின்ற ஒன்றை
நாடுவது இயற்கையின் இயல்பு .
பிரிந்து வந்த சிற்றுயிர்  தான் இணைந்து இருந்த பேருயிரை
நாடிச் செல்வது இயல்பு .
இணைந்த இரண்டு பிரிந்து போய்
மீண்டும் , மீண்டும் இணைவதற்காக
சிற்றுயிர் ,  பேருயிருடன் இணைவதற்காக
மேற்கொள்ளும் முயற்சியே ,
தவிக்கின்ற தவிப்பே ,
மெய்ப்பொருள் நாட்டம் .
பிரிந்த சிற்றுயிருக்குள்ளே உட்கலந்து நிற்கிறது
அந்த மெய்ப்பொருளாகிய பேருயிர்  என்னும் சோதி ;
பேருயிரில் எப்படி சிற்றுயிர்  இருந்ததோ அவ்வாறே
சிற்றுயிரிலும் பேருயிர்  உட்கலந்து நிற்கிறது ;

பேருயிரிலிருந்து சிற்றுயிர்  பிரிந்த பின்பும்
சிற்றுயிரில் பேருயிர்  கலந்து நிற்கிறது .
பேருயிரிலிருந்து சிற்றுயிர்  பிரிந்த பின்பும்
பேருயிர்  சிற்றுயிரில் உட்கலந்து நின்ற போதும்
சிற்றுயிர்  பேருயிரை உணர முடியாமல் தவிக்கிறது .

சிற்றுயிரை அறியாமை இருளானது
சூழ்ந்து மறைப்பதால் ,
மாயை சூழ்ந்திருப்பதால் ,
இருளானது கவ்வி இருப்பதால் ,
பேருயிரிலிருந்து பிரிந்த சிற்றுயிரானது
தான் எதிலிருந்து பிரிந்து வந்ததோ
அந்த பேருயிரை உணர முடியாமல் தவிக்கிறது .

பேருயிரை உணர்வதற்கும், அறிவதற்கும் ,அடைவதற்கும்,
நாடுவதற்கும் ,இணைவதற்கும் ,பிணைவதற்கும்
சிற்றுயிர்  பேருயிருடன் இணைந்து
பழைய நிலையை அடைவதற்கும் ;
ஆதி நிலையை தொடுவதற்கும் ;
முதல் நிலையை உணர்வதற்கும் ;
பல , பல ஜென்மங்களாக பிறவி பல எடுத்து ,
கர்ம வினையில் சிக்கி ,
பிறப்பு - இறப்பு சூழலில் மாட்டி ,
துன்பச் சகதியில் சிக்குண்டு ,
சிற்றுயிர்  பேருயிருடன் இணைவதற்காக
மேற்கொள்ளும் முயற்சியே
போராடும் நிலையே
மெய்ப்பொருள் நாட்டம் - இதனையே
சிற்றுயிர்  பேருயிரை நாடுவது ,
ஜீவாத்மா பரமாத்மாவை நாடுவது ,
ஜீவாத்மா பரம்பொருளை நாடுவது,
ஜீவாத்மா மெய்ப்பொருளை நாடுவது ,
அடைவது இணைவது ஒன்றாவது என்று சொல்லலாம் .

எதில் இருந்ததோ ,
எதில் கலந்திருந்ததோ ,
எதிலிருந்து வந்ததோ ,
எதிலிருந்து பிரிந்ததோ ,
அதிலே இணைவது
ஒன்றாவது என்பதே இயற்கை நீதி .
இதை உணர்வதே பிரம்மஞானம்
அதை அடைவதே முக்தி .

எல்லா சிற்றுயிரும் பேருயிரை நாடும்
என்று சொல்லமுடியாது .
சிற்றுயிரின் ,
கர்ம வினைப் பதிவுகளுக்கேற்ப ;
ஊழ்வினையின் உந்துதலுக்கேற்ப ;
பயிற்சியின் தாக்கத்திற்கேற்ப ;
முயற்சியின் உயர்வுக்கேற்ப ;
அறிவின் தெளிவிற்கேற்ப ;
சிந்தனையின் தாக்கத்திற்கேற்ப ;
பிறப்பின் கடமைக்கேற்ப ;
விதியின் செயலுக்கேற்ப ;
மதியின் துhண்டுதலுக்கேற்ப ;
அனுபவத்தின் விளக்கேத்திற்கேற்ப ;
செயல்களின் நடைமுறைக்கேற்ப ;
தேடுதலின் விளைவுக்கேற்ப ;
கடமையின் உழைப்புக்கேற்ப ;
நாட்டத்தின் தன்மைக்கேற்ப ;
ஒழுக்கத்தின் நடத்தைக்கேற்ப ;
சிற்றுயிர்  பேருயிரை நாடிச் செல்லும் .

பேருயிரான பரம்பொருள்
எல்லாம் வல்ல இறைவன்
எங்கு இருக்கிறான் ; எப்படி இருக்கிறான் ;
எந்த விதத்தில் இருக்கிறான் ;
எத்தகைய தன்மையை தன்னுள் கொண்டிருக்கிறான் ;
என்பதை முதலில் அறிய வேண்டும் .



“”“முத்து முகப்படியோ முச்சந்தி வீதியிலே”””
முத்து முகப்பு என்றால்
முத்தை அடையக் கூடிய வாசல் என்று பொருள்.
முத்து எங்கே இருக்கிறது சிப்பிக்குள் இருக்கிறது ;
முத்து எதற்குள் இருக்கிறது சிப்பிக்குள் இருக்கிறது ;
சிப்பிக்குள் முத்து இருக்கிறது என்ற விவரம்
முதலில் நமக்குத் தெரிய வேண்டும் .
முத்து எங்கே இருக்கிறது ;
எதற்குள் இருக்கிறது ;
எந்த நிலையில் இருக்கிறது ;
அதனைக் காணும் வழியாது ;
அதனை எடுக்கும் முறையாது ;
அதனை துய்க்கும் நிலையாது ;
என்ற விவரங்கள் தெரிந்தால் மட்டுமே
அதாவது முத்து சிப்பிக்குள் இருக்கிறது
என்ற விவரங்கள் தெரிந்தால் மட்டுமே ,
சிப்பியின் வாசலை திறந்து சென்று
முத்தை அடைய முடியும் .
முத்தை கைப்பற்றி அவரவர்  நிலைக்கேற்ப
அதைக் கையாள முடியும் .
தன் தேவைக்கேற்ப அதைப் பயன்படுத்திக்
கொள்ள முடியும் .
அதைப்போல கடவுள் எங்கு இருக்கிறார் ;
எந்த இடத்தில் இருக்கிறார் ;
அவரை அடையும் வழி எது என்று தெரிந்தால் மட்டுமே
கடவுளை அடைய முடியும் .
இறைவன் இருக்குமிடத்தை அறிந்து ,
இறைவனை அடையக்கூடிய வழிமுறைகளைத் தெரிந்து ,
இறைவன் இருக்கும் வாசலைத் திறந்து ,
சென்றால் மட்டுமே இறைவனை அடையலாம் .

முச்சந்தி வீதி என்றால்
மூன்று வீதிகள் சந்திக்கும் இடம் என்று பொருள் .
மூன்று வீதிகள் நம் உடலில்
எங்கு சந்திக்கின்றன ;
எந்த விதத்தில் சந்திக்கின்றன ;
என்பதை முதலில் அறிய வேண்டும் .

இரண்டு கண்களுக்கு இடையில் உள்ள நெற்றிக்கண்ணிலிருந்து
அதாவது தலையின் முன்பக்கத்திலிருந்து நேராக உள் நோக்கி
தலையின் பின் பக்கம் வரை ஒரு கோடு வரைய வேண்டும்
இதுவே ஒன்றாவது வீதி .

தலையின் உச்சியிலிருந்து கீழ்நோக்கி
ஒரு கோடு வரைய வேண்டும்
இதுவே இரண்டாது வீதி .

ஒரு காதிலிருந்து மற்றொரு காதுக்கு உள்நோக்கி
ஒரு கோடு வரைய வேண்டும்
இதுவே மூன்றாவது வீதி.

இந்த மூன்று கோடுகளும்
அதாவது மூன்று வீதிகளும் சந்திக்கும் புள்ளி
முச்சந்தி வீதி என்று அழைக்கப்படும்.
இறைவன் இருக்குமிடம் இந்த முச்சந்தி வீதியில் தான்.

முகப்படியோ முச்சந்தி வீதியிலே என்றால்
மூன்று வீதிகள் இணையும் இடத்தில் உள்ள
முச்சந்தியில் உள்ள இறைவனை அடைவதற்கான
முகப்பு வாசல் அடியில் இருக்கிறது
முச்சந்தி அடியில் இருக்கிறது என்று பொருள் .

முத்து முகப்படியோ முச்சந்தி வீதியிலே என்றால்
சிப்பிக்குள் முத்து இருக்கிறது என்பதை உணர்ந்து ,
அதை அடையக்கூடிய வழிமுறைகளை ஆராய்ந்து ,
அதை அடைந்து தன் தேவைகளை
நிறைவேற்றிக் கொள்வதைப் போல
நம் உடலில் கடவுள் முச்சந்தி வீதியில் இருக்கிறான்
என்பதை உணர்ந்து ,
மூன்று வீதிகள் இணையும் இடத்தில் உள்ள
முச்சந்தியில் உள்ள இறைவனை அடைவதற்கான
முகப்பு வாசல் அடியில் இருக்கிறது
முச்சந்தி அடியில் இருக்கிறது என்பதை உணர்ந்து ,
அவனை அடையக்கூடிய வழிகளை
ஆராய வேண்டும் என்று பொருள் .



பத்தாம் இதழ்பரப்பி பஞ்சணையின் மேலிருத்தி””
பத்தாம் என்றால் பத்தாவது வாசல் என்றும்
குவிந்து என்றால் மூடியிருக்கிறது என்றும்
பரப்பி என்றால் விரிந்திருக்கிறது திறந்திருக்கிறது என்றும்
பொருள் கொள்ளலாம் .

பத்தாம் இதழ் பரப்பி என்றால்
பத்தாவது வாசலைத் திறந்து என்று பொருள் .

நமது உடலில் ஒன்பது ஓட்டைகள் உள்ளன :
இந்த ஒன்பது ஓட்டைகளை
ஒன்பது வாசல்கள் என்கிறோம் .
ஒன்பது வாசல்கள் எனப்படுபவை :
கண்கள் இரண்டு ,
மூக்கினுடைய துவாரங்கள் இரண்டு ,
காதுகள் இரண்டு ,
வாய் ஒன்று ,
மூத்திர துவாரமான ஒரு லிங்கம் ,
மலதுவாரமான ஒரு குதம்.

கழுத்துக்கு மேலே 7 வாசல் ,
கழுத்துக்கு கீழே 2 வாசல் ,
ஆக மொத்தம் 9 வாசல் .
நமது உடலில் 9 வாசல்கள் உள்ளது .
பத்தாவது வாசல் சூட்சும வாசல் ,
இறைநிலைக்கான நுழைவு வாயில் என்று அழைக்கப்படுகிறது.

அணை என்றால் தடுத்து வைத்தல் என்று பொருள்.
தன்னை கடந்து செல்லாமல் தடுத்தல்
தன்னுள் உட்புகாமல் தடுத்தல் என்று பொருள்.

பஞ்சு +  அணை =  பஞ்சணை
பஞ்சணை என்றால் பஞ்சைப் போன்ற மெல்லிய அணை
அதாவது பஞ்சைப் போன்ற மெல்லிய சவ்வு என்று பொருள்.

பத்தாவது வாசலை மெல்லிய சவ்வுப் படலம் மூடி இருக்கிறது.
பத்தாவது வாசலை கடந்தால் இறைவனை அடையலாம்.
பத்தாவது வாசலை மூடியுள்ள , பஞ்சால் செய்யப்பட்ட ,
அணை போல் உள்ள ,மெல்லிய சவ்வு படலத்தை விலக்கி
உட்புகுந்து செல்ல வேண்டும் .

பத்தாவது வாசலை கடந்து உள்ளே செல்ல வேண்டுமானால்
கர்ம வினைகள் முழுவதும் கழிந்து இருக்க வேண்டும் .
கர்ம வினைகள் முழுவதும் கழிந்தால் மட்டுமே
பத்தாவது வாசலைத் திறந்து உட்புக முடியும்.
கர்ம வினைகள் கழிய வேண்டுமானால்
சிற்றின்பங்கள் புதைக்கப்பட வேண்டும் ;
பேரின்பங்கள் நுகரப்பட வேண்டும் ;
கர்மவினைகள் கழித்தவனால் மட்டுமே
கர்மவினையை கழிக்கும் திறமை உடையவனால் மட்டுமே
கர்மவினையை எரிக்கும் வல்லமை பெற்றவனால் மட்டுமே
பத்தாவது வாசலைத் திறந்து உட்புக முடியும் .
மற்றவர்களால் பத்தாவது வாசலைத் திறந்து உட்புக முடியாது .



“”அத்தை அடக்கிநிலை ஆருமில்லா வேளையிலே””
அத்தை அடக்கிநிலை என்றால்
பத்தாவது வாசலைத் திறப்பதற்கான
திறவுகோலான கர்மவினைகளை கழித்த நிலை
என்று பொருள் .

அத்தை அடக்கிநிலை ஆருமில்லா வேளையிலே என்றால்
பத்தாவது வாசலைத் திறக்கும் திறவுகோலான
கர்மவினைகளை கழித்த நிலையில்
ஆத்மாவானது எந்தப் பதிவுகளும் இல்லாமல்
துhய்மையாக இருக்கும் ஒரு நிலை என்று பொருள் .

கர்மவினைகளைக் கழித்து பத்தாவது வாசலை
எப்படி திறப்பது என்பதற்கான வழிமுறைகளை
அடுத்த அடிகளில் கூறுகிறார் .



“”குத்து விளக்கேற்றி என் கண்ணம்மா
                கோலமிட்டுப் பாரேனோ !””“
குத்து விளக்கேற்றி என்றால்
மூலாதாரத்தில் உறங்கிக் கிடக்கும்
குண்டலினி சக்தியைத் தட்டி எழுப்பி
மேலேற்றுதல் என்று பொருள் .

கோலமிட்டு என்றால்
மூலாதாரத்தில் உறங்கிக் கிடக்கும்
குண்டலினி சக்தியை தட்டி எழுப்பி ,
மேலே எழச் செய்து ஆதாரங்களைத் துளைத்து ,
சக்தியைப் பெற்று ,
ஆறாதாரங்களைக் கடந்து,
பத்தாவது வாசலை அடைதல் என்று பொருள் .

குத்து விளக்கேற்றி என் கண்ணம்மா
           கோலமிட்டுப் பாரேனோ என்றால்
மூலாதாரத்தில் உறங்கிக் கிடக்கும்
குண்டலினி சக்தியை எழுப்பி மேலே எழச் செய்து ,
ஆதாரங்களைத் துளைத்து , சக்தியைப் பெற்று ,
ஆறாதாரங்களைக் கடந்து ,
பத்தாவது வாசலை அடைந்து ,
அதனைத் திறந்து உட்புகுந்து ,
ஜோதி வடிவமாக உள்ள , இறைவனை தரிசித்தல்
என்று பொருள் .

இறைவன் இருக்குமிடத்தை அறிந்து ,
இறைவனை அடையக்கூடிய வழிமுறைகளை உணர்ந்து ,
இறைவனை அடையக்கூடிய ,
வழிமுறைகளை பயன்படுத்தி ,
இறைவனை அடைந்து ,
தான் அவனாக மாறி ,
உயர்வான நிலையை அடைவேன்
என்கிறார்  அழுகணிச்சித்தர் .



இயேசு கிறிஸ்து - அழுகணிச்சித்தர் :
இயேசு ,
ஆண்டவரால் படைக்கப்பட்ட உயிரினங்கள்
சிற்றின்ப சகதியில் சிக்கி
பாவமூட்டைகளை சேர்க்காமல்
புண்ணியத்தை சேர்ப்பதன் மூலம்
உயிரினங்கள் ஆண்டவருடன் இணைய முடியும்
என்கிறார் .

அவ்வாறே ,
அழுகணிச்சித்தரும் ,
பேருயிரிலிருந்து பிரிந்து ,
மாயையில் விழுந்து ,
கர்மவினையில் சிக்கி ,
பிறப்பு - இறப்பு சுழற்சியில் மாட்டி ,
ஜென்மம் பல எடுத்து ,
சிற்றுயிரானது கர்மவினைகளைக் கழிப்பதன் மூலம்
மீண்டும் பேருயிரோடு இணைகிறது
என்கிறார் .


          “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                               போற்றினேன் பதிவுஐம்பத்துஒன்று ந்தான்முற்றே “”
               


August 15, 2012

இயேசுகிறிஸ்து-அழுகணிச்சித்தர்-புல்லரிடத்பதிவு50



    இயேசு கிறிஸ்து-அழுகணிச்சித்தர்-புல்லரிடத்திற்-பதிவு-50
               
      “”பதிவு ஐம்பதை விரித்துச் சொல்ல    
                     ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :  

விபசாரத்திலே கண்டு பிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் கொண்டு வந்து , அவளை நடுவே நிறுத்தி :
                                                -------யோவான் - 8 : 3

போகதரே , இந்த ஸ்திரீ விபசாரத்தில் கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டாள்.
                                                -----யோவான் - 8 : 4

இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்ல வேண்டுமென்று மோசே நியாயப் பிரமாணத்தில் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே , நீர்  என்ன சொல்லுகிறீர்  என்றார்கள் .
                                                -----யோவான் - 8 : 5

அவர் மேல் குற்றஞ்சுமத்துவதற்கான காரணம் உண்டாகும் பொருட்டு அவரைச் சோதிக்கும் படி இப்படிச் சொன்னார்கள். இயேசுவோ குனிந்து , விரலினால் தரையிலே எழுதினார்  . “
                                                -----யோவான் - 8 : 6

அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக் கொண்டிருக்கையில் , அவர்  நிமிர்ந்து பார்த்து : உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக் கடவன் என்று சொல்லி , “
                                                -----யோவான் - 8 : 7

அவர்  மறுபடியும் குனிந்து தரையிலே எழுதினார்  . “
                                                ----யோவான் - 8 : 8

அவர்கள் அதைக் கேட்டு , தங்கள் மனச் சாட்சியினால் கடிந்து கொள்ளப்பட்டு , பெரியோர்  முதல் சிறியோர்  வரைக்கும் ஒவ்வொரு வராய்ப்போய் விட்டார்கள் . இயேசு தனித்திருந்தார்  , அந்த ஸ்திரீ நடுவே நின்றாள் .
                                                -----யோவான் - 8 : 9

"இயேசு நிமிர்ந்து அந்த ஸ்திரீயைத் தவிர வேறொருவரையுங் காணாமல் : ஸ்திரீயே உன்மேல் குற்றஞ்சாட்டினவர்கள் எங்கே? ஒருவனாகிலும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார்  . “
                                                -------யோவான் - 8 : 10

அதற்கு அவள் : இல்லை , ஆண்டவரே , என்றாள் .இயேசு அவளை நோக்கி : நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை ; நீ போ , இனி பாவஞ் செய்யாதே என்றார்  . “
                                                -------யோவான் - 8 : 11

இக்கட்டான சூழ்நிலை என்பது எல்லோருடைய வாழ்க்கையிலும்
ஏதாவது ஒரு காலகட்டத்தில் , ஏதாவது ஒரு நிலையில்,
ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் வந்து விட்டு சென்றிருக்கும்.

வாழ்க்கையில் ஒரு முறையோ , இரு முறையோ ,பல முறையோ
இக்கட்டான சூழ்நிலை வந்து ,
வாழ்க்கையை பதம் பார்த்து சென்றிருக்கலாம் அல்லது
வாழ்க்கையை பதப்படுத்தி சென்றிருக்கலாம் .

வாழ்க்கையை உயர்வான நிலைக்கு உயர்த்தி விட்டிருக்கலாம் அல்லது
தாழ்வான நிலைக்கு தள்ளி விட்டிருக்கலாம் .

அரியணையில் அமர்த்தி இருக்கலாம் அல்லது
புதைச் சேற்றில் புதைத்து இருக்கலாம் .

வெற்றியின் இன்பங்களை சுவைத்து இருக்கலாம் அல்லது
தோல்வியின் துன்பச் சுமைகளை சுமந்து இருக்கலாம் .

சிரிப்புகளில் விளையாடி இருக்கலாம் அல்லது
கண்ணீரில் கரைந்து இருக்கலாம் .

முன்னேற்றத்தின் முகவரியைப் பார்த்து இருக்கலாம் அல்லது
வீழ்ச்சியுற்றதின் காயங்களை கண்டு இருக்கலாம் .

சுகபோகத்தின் இன்ப நாளங்களை வருடி இருக்கலாம் அல்லது
ஏழ்மையின் தாக்கத்தினை புரிந்து இருக்கலாம் .

நினைத்தது கிடைத்ததில் மகிழ்ந்திருக்கலாம் அல்லது
நினைத்தது கிடைக்காததில் கவலையுற்றிருக்கலாம் .

மதியினால் வென்று விட்டேன் என்று பெருமை பட்டிருக்கலாம் அல்லது
விதி என்னை வென்று விட்டது என்று மனம் சோர்ந்து விட்டிருக்கலாம் .

காலத்தை நான் வென்றுவிட்டேன்
என்று மகிழ்ச்சி கொண்டிருக்கலாம் அல்லது
காலம் என்னை வென்றுவிட்டது என்று வருத்தப்பட்டிருக்கலாம்

இக்கட்டான சூழ்நிலையில் எடுக்கப்படும் முடிவு - நம்
வாழ்க்கையை தீர்மானிக்கும் முடிவாக இருக்கலாம் அல்லது
வாழ்க்கையை முடிக்கும் தீர்மானமாக இருக்கலாம்.

மாற்றத்தை உருவாக்குவதாக இருக்கலாம்  அல்லது
மனதைக் கொன்று வருத்தப்பட வைப்பதாக இருக்கலாம்

விண்ணைத் தொடுவதாக இருக்கலாம் அல்லது
வீழ்ச்சியைத் தருவதாக இருக்கலாம் .

ஏற்றத்தை தருவதாக இருக்கலாம் அல்லது
ஏமாற்றத்தை கொடுப்பதாக இருக்கலாம் .

இக்கட்டான சூழ்நிலையில் முடிவெடுக்கும் நிலை என்பது
இருதலைக் கொள்ளி எறும்பு போன்ற நிலை .
அத்தகைய நிலை வாழ்க்கையில் எட்டி பார்க்கும் ;
உரசிப் பார்க்கும் ; தாக்கிப் பார்க்கும் ; தள்ளிப் பார்க்கும் ;
தயங்காமல் , தள்ளாடாமல் ,
சிந்தனை தடுமாறாமல் ,
உயர்ந்த நோக்கத்துடன் ,
மாறா குறிக்கோளுடன் ,
சாயா இருதயத்துடன் ,
தள்ளாடா மனதுடன் ,
தயங்காத உள்ளத்துடன் ,
அறிவின் வழிநின்று ,
தொலைநோக்கு பார்வையுடன் ,
துல்லியமான கணிப்புடன் ,
காலத்தை கருத்தில் கொண்டு ,
எதிர்காலத்தை நினைவில் கொண்டு ,
அனுபவத்தை மனதில் கொண்டு ,
அறிவுரைகளை சிந்தனையில் கொண்டு ,
அலசிப் பார்த்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு ,
வேற்றுமைகளை அறிந்து தீர்க்கமான எண்ணத்துடன் ,
இக்கட்டான சூழ்நிலையில் ,
இத்தகைய தன்மைகளைக் கொண்டு முடிவெடுத்தவன் சிறப்படைவான்.
எடுக்காதவன் விரக்தியடைவான் .
இத்தகைய ஒரு இக்கட்டான சூழ்நிலையை
பலமுறை , பல நிலைகளில் , பல்வேறுபட்ட உருவங்களில்
இயேசுவின் வாழ்க்கையில் கொண்டு வந்து
அவரை குற்றவாளியாக்கிட துடித்தது ஒரு கூட்டம்
அவரை மாய்த்து விட நினைத்தது மமதையர்  நெஞ்சம் .

வாழ்க்கையில் இன்பங்களைத் தேடியோ
வசந்தங்களை நாடியோ தன் மானத்தை விற்கவில்லை.
தான் பெற்ற அன்பை பாதுகாக்கவும் ,
தன்னுடன் பிணைக்கப்பட்ட பாசத்தை பாதுகாக்கவும் ,
தன்னுடன் இணைந்த உயிர்களை உயிர்  கொடுப்பதற்காகவும் ,
தன்னுடன் இணைந்த உயிர்களை உயிர்பிப்பதற்காகவும் ,
உறவுகளை வாழ்விப்பதற்காகவும் ,
உண்மைகளை உறங்க வைத்து ,
சத்தியத்தை சாய வைத்து ,
சமுதாயம் தந்த களங்கத்தை ஏற்று ,
ஏளனப் பேச்சுக்களையும் ,
ஆணவ செயல்களையும் ,
அடிமைத்தன நெஞ்சங்களையும் ,
வெறிகொண்ட வேங்கையின் தாகத்தையும் ,
தணிக்கும் வகையில் நடந்து ,
ஓரமாகச் சென்றாலும் ஓடி வந்து முட்டும்
சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டு ,
கண்ணீர்  கடலில் நீந்தி
கவலை தோய்ந்த இதயத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கும் இனம்

காலத்தால் கைவிடப்பட்டு சமுதாயத்தால் தண்டிக்கப்பட்டவள் ;
இயற்கை தந்த பிழை  ; காலம் செய்த களங்கம் ;
விலை மகளிர்  இனம் .

இத்தகைய விலைமகள் ஒருத்தியை
நடுத்தெருவில் கொண்டு வந்து நிறுத்தினர்.
விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணொருத்தியை மறைநுhல் வல்லுநரும்,
பரிசேயரும் கொண்டு வந்து நடுவில் நிறுத்தி ,
போதகரே இப்பெண் விபசாரத்தில் கையும் களவுமாக பிடிபட்டாள் .
இப்படிப்பட்டவர்களை கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பது
மோசஸ் நமக்கு கொடுத்த சட்டம்
நீர் என்ன சொல்கிறீர்கள் என்றனர் .
அவர்  மேல் குற்றம் சுமத்த ஏதாவது கண்டு பிடிக்கும் படி
அவரை சோதிக்க இப்படிக் கேட்டனர்.
இயேசுவை இக்கட்டான சூழ்நிலையில் தள்ள வேண்டும்
அவர்  மேல் குற்றம் கண்டுபிடிக்க
அவர்  மேல் குற்றம் சுமத்த
அவரை குற்றவாளியாக்க இவ்வாறு கேட்டனர் .

மோசஸ் கூறியது போல் செய்யுங்கள் என்று இயேசு கூறினால்
இயேசு மீது குற்றம் சாட்ட முடியும்
இயேசுவை களங்கப்படுத்த முடியும்
இயேசுவை அவமானப் படுத்த முடியும்
உங்களது கருணை எங்கே போயிற்று ?
உங்களது மன்னித்தல் என்னவாயிற்று ?
அன்பு எங்கே சென்று விட்டது ?
என்று கேட்க முடியும் .

மோசஸ் கூறியது நியாயமல்ல என்று கூறினால் ,
நீங்கள் மோசஸை அழிக்கவும்,
எங்கள் மதத்தைக் குலைக்கவும் ,
களங்கப் படுத்தவும் வந்திருக்கிறீர்கள்
ஆனால் மக்களிடம் அழிப்பதற்காக நான் வரவில்லை
நிறைவு செய்யவே வந்துள்ளேன் என்று கூறி வருகிறீர்கள் .
அது எப்படி நிறைவு செய்ய வந்திருந்தால்
மோசஸை பின்பற்றுங்கள் என்று எப்படி கூற முடியும் என்று
ஒரு இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கி இயேசுவை குற்றவாளியாக்க
பொறியில் சிக்க வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தனர்.

ஆனால் இயேசுவோ குனிந்து தரையில் தன் விரல்களால்
எழுதிக் கொண்டிருந்தார்.
எதிராளி கோபமாக இருக்கும் போது
நம்மை பகையாளியாக நினைப்பவன்
நம்மை எதிரியாக பாவிப்பவன்
நம்மேல் கோபம் கொண்டு வார்த்தைகளை வீசினால்
நாமும் எதிர்  வார்த்தை பேசக் கூடாது
அமைதியாக இருக்க வேண்டும்.

ஒருவர்  கோபமாக இருக்கும் போது
அவர் கண்களை நேருக்கு நேர் பார்க்கக்கூடாது
அதனால் தான் இயேசு
தன்னை குற்றவாளியாக்க கோபத்துடன் துடிப்பவர்களை
நேருக்கு நேர்  பார்க்காமல்
தரையில் குனிந்து எழுதத் தொடங்கினார்.
ஆனால் நீர்  என்ன சொல்கிறீர்
நீர்  என்ன கூறுகிறீர்  என்ற கேள்வி திரும்ப திரும்ப கேட்டதால்
அவர்  தலை நிமிர்ந்து
உங்களில் பாவம் செய்யாதவர்  யாரோ
அவர்  அவள் மீது முதலில் கல் எறியட்டும் என்றார்
மீண்டும் தலை குனிந்தார்.

பாவமில்லாதவர்களால் மட்டுமே தண்டனை வழங்க முடியும்
பாவம் செய்யாதவர்கள் மட்டுமே தண்டனை வழங்க
தகுதியில்லாதவர்  என்கிறார் .
பாவம் செய்யாதவர்  யார் ?
பாவம் செய்யாவிட்டாலும்
பாவம் செய்யாவாவது நினைத்திருப்பர்
பாவம் செய்ய நினைப்பதவும்
கிட்டத்தட்ட பாவம் செய்வதற்கு சமம் .

அதனால் தான் இயேசு உங்களில் பாவமற்றவராக
யார்  இருக்கிறாரோ ?
அவர்  முதலில் அவள் மீது கல் எறியட்டும் என்றார்.
மீண்டும் அவர்  தலைகுனிந்தார் .
ஏனெனில் ஜனங்களை பார்த்துக் கொண்டேயிருந்தால்
கோபத்தால் கட்டுண்டவர்கள்
அறிவு தடுமாறி அவள் மீது கோபத்தில் கல் எறிந்து விடக்கூடும்
என்ற காரணத்திற்காக அவர்  தலை குனிந்தார்.

அதைக் கேட்ட அவர்கள் தங்கள் மனசாட்சியால் தண்டிக்கப்பட்டு
முதியவர்கள் முதலில் மறைந்து விட்டனர்.
ஏனெனில் அவர்கள் நீண்ட காலம் வாழ்ந்து வருபவர்களாதலால்
மிக அதிகமாக பாவம் செய்திருப்பர்.
இளைஞர்கள் அந்த அளவிற்கு பாவிகள் அல்லர்.
ஏனெனில் அவர்கள் பாவம் செய்ய போதுமான நேரம் இல்லை.
அதனால் தான் முதியவர்கள் முதலிலேயே சென்று விட்டனர்.
இறுதியில் சிறியோர்  வரை ஒவ்வொருவராக சென்று விட்டனர் .
இயேசு தலை நிமிர்ந்து பார்த்த போது
அனைவரும் போய் விட்டதைக் கண்டார்.

இயேசு தலை நிமிர்ந்து பார்த்த போது
அம்மாதைத் தவிர வேறு யாரும் இல்லை
அவர்  அவளிடம் பெண்ணே உன் மீது
குற்றம் சுமத்தியவர்கள் எங்கே என கேட்டார்
 அதற்கு அவள் யாருமேயில்லை என்றாள் .

கடந்த காலம் கடந்துவிட்டது சென்றது சென்றதுதான் .
அதனை மறந்துவிடு .
இந்தச் சூழ்நிலையில் இருந்து ,
இந்த நிகழ்வில் இருந்து ,
இந்த செயலில் இருந்து ,
சில பாடங்களைக் கற்றுக் கொள் .
சில அனுபவங்களைக் கற்றுக் கொள் .

அவை தவறுகள் என்று நினைத்தால்
அதே தவறுகளை எதிர்காலத்திலும் செய்து கொண்டிராதே .
நான் உன் மீது குற்றஞ் சொல்லவில்லை.
தவறுகள் ஏதேனும் செய்ததாக நீ உணர்ந்தால்
அது உன்னைப் பொறுத்தது அதை மீண்டும் செய்யாதே
நடந்ததை மறந்து விடு .

ஏதேனும் தவறு செய்வதாக நீ உணர்ந்தால்
அதை மீண்டும் செய்யாதே.
உன்னை நானும் நிந்திக்க மாட்டேன்.
நான் உன் மீது குற்றஞ்சொல்லவில்லை.
தவறு என்று நீ உணர்ந்தால் அந்த தவறை செய்யாதே
அது போதும் என்றார்.
அம்மாதிற்கு மன மாற்றத்தை உண்டாக்கினார்.

கடந்தது கடந்தாதக இருக்கட்டும்
சென்றது சென்றதே நீ புதுமை பெற்று விட்டாய் .
எல்லாமே நல்லது தான் நீ மன்னிக்கப்பட்டாய் என்றார்.

கடந்த காலத்தில் நீ செய்த தவறால்
நிகழ் காலத்தில் நீ பாதிக்கப்பட்டால்
அத்தகைய தவறை
தவறென நீ உணர்ந்தால்
அதை உணரக்கூடிய பக்குவம் உனக்கு வந்து விட்டால்
மீண்டும் அந்த தவறை செய்யாதே
என்கிறார்  இயேசு .



அழுகணிச்சித்தர்  :

புல்ல ரிடத்திற்போய்ப் பொருள் தனக்குக் கையேந்திப்
பல்லை மிகக்காட்டிப் பரக்க விழிக்கிறண்டி
பல்லைமிகக் காட்டாமல் பரக்க விழிக்காமல்
புல்லரிடம் போகாமல் என்கண்ணம்மா
                பொருளெனக்குத் தாராயோ
                                -----அழுகணிச் சித்தர்---பெரியஞானக் கோவை----

பாவத்தை உண்டு பண்ணக் கூடிய ,
பாவத்தை ஏற்படுத்தக் கூடிய ,
பாவத்தை விளைவிக்கக் கூடிய ,
பாவத்தை தரக்கூடிய ,
செய்களைச் செய்வதால் மட்டும் பாவம் உண்டாகாது .
பாவத்தை உண்டு பண்ணக்கூடிய
செயல்களை சிந்திப்பதாலோ
மனதில் நினைப்பதாலோ
எண்ணத்தால் எண்ணுவதாலோ
கூட பாவம் உண்டாகும் .

செயல்களைச் செய்வதால் உண்டாகும் பாவமும்
எந்தச் செயல்களைச் செய்வதால் பாவம் உண்டாகுமோ?
அந்தச் செயல்களை நினைப்பதாலும் உண்டாகும் பாவமும் சமம் .
செயல்களை வெளிப்படையாகச் செய்யும் போது
சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட செயலாக இருந்தால்
சட்டதிட்டதிற்கு உட்பட்ட செயலாக இல்லாமல் இருந்தால்
சமுதாய ஒழுக்க நெறிக்குள் உட்படாததாக இருந்தால்
சமுதாயத்தால் செய்யக்கூடாதவை செய்யத் தகாதவை என்று
ஒதுக்கி வைக்கப்பட்டதாக இருந்தால்
சட்டத்திற்கு உட்பட்டு நீதிக்குள் கட்டுப்பட்டு
நீதிபதியின் மூலம் தண்டனை தரப்படுகிறது .

பாவத்தை தரக்கூடிய செயலை
துன்பத்தை அளிக்கக்கூடிய செயலை
மனவருத்தத்தை உண்டாக்கக்கூடிய செயலை
செய்வதன் மூலம் சட்டத்தின் மூலம்
நீதிபதியின் மூலம் தண்டனை தரப்படுகிறது .

தவறான செயலை செயல்படுத்துவதே
பாவமாக கொள்ளப்பட்டு தண்டனை தரப்படுகிறது .
சமுதாயமும் செயலின் மூலம் உண்டாக்கக்கூடிய பாவத்திற்கு
தான் தண்டனை என்று நினைத்துக் கொள்கிறது .
பாவம் என்பது செயலின் மூலம் விளைவது
அதற்குரிய தண்டனையை நீதிபதி கொடுப்பார்  என்று
சமுதாயம் நினைத்துக் கொண்டிருக்கிறது .

பாவம் தரக்கூடிய செயலை ஒருவன் நினைக்கும் போதே
அவன் பாவம் செய்தவனாகிறான்.
நினைப்பின் அடிப்படையில் உண்டாகும்
பாவத்திற்கு தண்டனை இல்லை என்று
மனிதன் நினைத்து கொள்கிறான் .
எனவே தவறானவைகளை மனதில் நினைக்கிறான் .
மனதில் நினைப்பவைகளை யாரும் பார்க்கமுடியாது என்று
எண்ணம் கொண்டு தவறாக எண்ணங்களை எண்ணுகிறான் .

மனதில் பாவத்தை உண்டு பண்ணக்கூடிய
தவறானவைகளை எண்ணினால்
யாரும் பார்க்க மாட்டார்கள்
யாரும் அறிய மாட்டார்கள்
யாரும் தண்டனை கொடுக்க மாட்டார்கள் என்று
மனிதன் தவறாக நினைத்துக் கொள்கிறான் .

மனிதன் மனதில் நினைப்பவைகளை
இறைவன் வாசித்துக் கொண்டிருக்கிறான்.
காலம் வரும் போது , நேரம் கனியும் போது ,
பாவத்தை உண்டு பண்ணக் கூடிய தவறான எண்ணங்களுக்கு
இறைவன் தண்டனை தருகிறான் .
செயலுக்கு உரிய தண்டனையை நீதிபதி கொடுத்தால்
தவறான எண்ணங்களை நினைப்பவர்களுக்கு
ஆண்டவன் தண்டனை தருகிறான் .

தண்டனைகள் சட்ட திட்டத்திற்கு உட்பட்டோ
இறைவன் நியதிக்கு உட்பட்டோ
தண்டனை கொடுக்கப்பட்டாலும்
இவைகள் கர்மவினையின் தாக்குதலுக்கு ஏற்ப
கர்ம வினையின் பாதிப்புக்கேற்ப
கர்மவினையின் ஆளுகைக்கு உட்பட்டே
நடக்கும் செயல்கள் ஆகும் .

கர்மவினைகள் எழக்கூடாது என்றால்
மாயை வலைக்குள் சிக்கக்கூடாது.
மாயை வலைக்குள் சிக்காமல் இருக்க வேண்டுமென்றால்
சிற்றின்ப சகதியில் மாட்டக்கூடாது .
சிற்றின்ப சகதியில் மாட்டக் கூடாது என்றால்
பேராசையில் மூழ்கி திளைக்கக் கூடாது .
பேராசையே புறத் தேவைகளை நிறைவு செய்ய
ஒருவரிடம் போய் கையேந்தும் நிலைக்கு ஆளாக்கி விடுகிறது .

புல்லர்  என்றால் சிறுமைக்குணம் கொண்டவர்  என்று பொருள் .
நல்லவைகளை எண்ணாதவர்
நல்லவைகளை செய்யாதவர்
என்றும் பொருள் கொள்ளலாம் .
அத்தகைய சிறுமைக் குணம் கொண்ட
புல்லரிடம் போய் , புல்லர்  பலரிடம் போய் ,
வாழ்க்கைத் தேவையை நிறைவு செய்யும் பொருளுக்காக
புறத் தேவைகளை பூர்த்தி செய்யும் பொருளுக்காக
அன்றாடத் தேவையை முடித்து வைக்கும் பொருளுக்காக
சிற்றின்பத் தேவையை நிறைவு செய்யும் பொருளுக்காக
அடிமையாக கையேந்தி
செயற்கையாக முகத்தில் சிரிப்பை வரவழைத்து
பல்லைக் காட்டி விழிகள் அடிமைத் தனத்தால் பிதுங்க
கண்களை அலை பாய விடுகிறேன் .

அழியக்கூடிய நித்தியமில்லாத பொருளுக்காக
ஒன்றும் இல்லாதவர்களிடம்
சிறுமைக்குணம் கொண்டோரிடம்
கயமைத் தனம் கொண்டோரிடம்
நல்லெண்ணம் இல்லாதவரிடம் சென்று நிற்கிறேன் .
புறத் தேவைகளை நிறைவு செய்ய அழியக்கூடிய பொருளுக்காக
சிறுமைக்குணம் கொண்டோரிடம் சென்று நிற்காமல்,
அவரிடம் கையேந்தி நிற்காமல் , பல்லைக் காட்டாமல்,
விழிகளை அலை பாயவிடாமல்
நித்தியமாய் அழிவில்லாமல் இருக்கும்
என்றும் நித்தியமாய் இருக்கும்
எல்லையில்லாத காலத்தை கடந்த , உருவமில்லாத ,
குணமில்லாத , நித்தியமான பொருளை
எனக்கு கிடைக்கும் படிச் செய்து
தான் அவனாக மாறும் நிலையை எனக்கு அளித்து
இணையில்லாததுடன் இணையும் அருளை எனக்குக் கொடுத்து
பேரின்ப பெருவாயிலைத் திறந்து
முக்தி என்னும் நிலையை எனக்கு
தந்தருள்வாய் என்கிறார் .

சிற்றின்பத் தேவைகள் சுவை தரக் கூடியவை
இன்பம் அளிக்கக் கூடியவை
மகிழ்ச்சியை கொடுக்கக் கூடியவை
நிரந்தரமானவை என்ற எண்ணம் கொண்டு
மாயை வலையில் சிக்கி
தகாத செயல்கள் செய்து
பாவத்தை உருவாக்கி கர்மவினையில் மாட்டிக் கொண்டேன் .

அழியக்கூடிய அநித்தியத்தின் மேல் பற்றுள்ளவன்
அதனை  தேடி ஓடுபவன்
அதனை நாடி அலைபவன்
கர்மவினையில் மாட்டிக் கொள்வான் .
பிறப்பு - இறப்பு சுழற்சியில் சிக்கிக் கொள்வான்
என்பதை உணர்ந்து கொண்டேன் .

கடந்த காலத்தில் நான் செய்த தவறுகளை உணர்ந்துகொண்டேன்
புத்தி தெளிந்தேன் ; அறிவு விளக்கம் பெற்றேன் ;
சிந்தனை திறக்கப் பெற்றேன் ;
அநித்தியத்தை நாடி ஓடுபவன் அநித்தியமானவன் ;
நித்தியத்தை நாடி ஓடி நித்தியத்தை அடைபவன் ;
நித்தியமாவான் என்பதை உணர்ந்து கொண்டேன் .
தவறுகளை திருத்திக் கொண்டேன் ;
செயல்களை மாற்றிக் கொண்டேன் ;
ஒழுக்கங்களை நெறிப்படுத்திக் கொண்டேன்;
அநித்தியத் தன்மை கொண்ட பொருட்களின் பின் ஓடாமல்
அதை அளிக்கக்கூடியவர்களிடம் சொல்லாமல்
சிறுமைக்குணம் கொண்டோர்கள் முன் நில்லாமல்
பல்லைக் காட்டாமல் விழிகளை பிதுக்காமல்
நித்தியத்தையும்
நித்தியத்தை அடையும் வழிமுறைகளையும் எனக்கு தந்து
நித்தியத்தை அடைந்து இறைவனுடன் கலக்கும்
பெறும் பேற்றினை எனக்கு அளித்து
நித்திய வாழ்வை எனக்குத் தர வேண்டும்
என்கிறார்  அழுகணிச் சித்தர் .



இயேசு கிறிஸ்து - அழுகணிச்சித்தர் :

இயேசு ,
கடந்தகாலத்தில் சிற்றின்பத் தேவைக்காக
செய்த செயல் தவறு என்று உணர்ந்து கொண்டாயானால்
இனிவரும் காலங்களில் அத்தகைய தவறை செய்யாதே .
தவறை உணர்ந்து , நல்ல வழியில் செல்
என்கிறார் .

அவ்வாறே ,
அழுகணிச் சித்தரும் ,
கடந்த காலத்தில் சிற்றின்பத் தேவைகள்
அநித்தியமானவை என்பதை உணராமல்
தவறான வழியைப் பின்பற்றி அதன் வழி சென்றேன் .
தவறை உணர்ந்து கொண்ட எனக்கு
பேரின்பத்தை காட்டி நித்தியத்தை
எனக்கு அளிக்க வேண்டும்
நான் செய்த தவறை உணர்ந்து கொண்டேன்
நல்ல வழியை எனக்குக் காட்டுவாயாக என்கிறார்.

         “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                     போற்றினேன் பதிவுஐம்பது  ந்தான்முற்றே “”