April 19, 2018

ஔவையார்- நான்கு கோடி பாடல்-பதிவு-6


               
ஔவையார்- நான்கு கோடி பாடல்-பதிவு-6

ஒன்பது நபர்கள்
பத்து ரூபாய்க்கு
ஐம்பது சிப்ஸ்கள்
வைத்து
விற்பனை செய்தாலும்
மக்கள் அதை
பெரும்பாலும்
வாங்கி சாப்பிடுவது
இல்லை
ஆனால்,
பத்து ரூபாய்க்கு
பத்து சிப்ஸ் வைத்து
மீதியிடங்களை காற்றால்
நிரப்பி ஏமாற்றி
விற்பனை செய்தாலும்
மக்கள் ஏன் இப்படி
மக்களை ஏமாற்றும்
விதத்தில் ஏமாற்றி
விற்பனை செய்கிறீர்கள்
என்று யாரும்
கேள்வி கேட்காமல்
ஒரு நபர் செய்த
அந்த சிப்ஸ் பாக்கெட்டை
வாங்கி பெரும்பாலான
மக்கள் அதனை
சாப்பிட்டு வருகின்றனர்,

இதுதான் கஷ்டப்பட்டு
உழைப்பவர்களுக்கும்,
வித்தியாசமான
யோசனைகளைப்
பயன்படுத்தியும்,
பிறர் எற்றுக்
கொள்ளத்தக்க
செய்ல்களைச் செய்தும்
திறமையாக வேலை
செய்பவர்களுக்கும்
உள்ள வித்தியாசம்
ஆகும்



இதே போல்
புலவர்களுக்கும்
ஒவையாருக்கும்
இடையே
நடைபெற்ற
நிகழ்ச்சியானது
கஷ்டப்பட்டு வேலை
செய்பவர்களுக்கும்,
வித்தியாசமான
யோசனைகளைப்
பயன்படுத்தியும்,
பிறர் ஏற்றுக்
கொள்ளத்தக்க
செய்ல்களைச் செய்தும்
திறமையாக வேலை
செய்பவர்களுக்கும்
உள்ள வித்தியாசம்
ஆகும்.

நாளை காலைக்குள்
நான்கு கோடி பாடல்கள்
வேண்டும் என்று
சொன்னவுடன்
யோசிக்காமல்
தாங்கள் தொடர்ந்து
செய்யும் வேலையான
பாடல் எழுதுவதையே
நினைவில் கொண்டு
காலைக்குள் எப்படி
பாடல் எழுதி
முடிப்பது
எத்தனை பேர்
அழைத்து
பாடல் எழுத
சொன்னாலும்
நான்கு கோடி பாடல்
எழுத முடியாதே
என்று யோசித்தனர்

அரசர் இட்ட
கட்டளையை
எப்படி முடிப்பது
எத்தனை ஆட்களைக்
கொண்டு முடிப்பது
என்று தான் யோசித்தனர்

இவர்கள் தான்
கஷ்டப்பட்டு
வேலை செய்பவர்கள்

செய்த வேலையை
தொடர்ந்து செய்து
கொண்டிருப்பார்கள்

கஷ்டப்பட்டு வேலை
செய்பவர்கள் அனைவரும்
தொடர்ந்து தாங்கள்
செய்த வேலையை
திரும்ப
திரும்ப செய்வார்கள்

இந்தப் புலவர்கள்
அனைவரும் ஒரே
விஷயத்தைத் தான்
யோசித்தனர்
எப்படி நான்கு கோடி
பாடல் எழுதுவது
என்பதை மட்டும் தான்

---------- இன்னும் வரும்
//////////////////////////////////////////////////

April 18, 2018

ஔவையார்-நான்கு கோடி பாடல்-பதிவு-5



ஔவையார்-நான்கு கோடி பாடல்-பதிவு-5


10 ரூபாய் மதிப்பு கொண்ட
சிப்ஸ் பாக்கெட்டில்
10 சிப்ஸ் தான்
போடப்பட்டு இருக்கும்
அந்த 10 சிப்ஸ்களும்
மற்ற ஒன்பது நபர்கள்
செய்த சிப்ஸை விட
வித்தியாசமான சுவை
கொண்டதாக இருக்கும்
மீதமுள்ள பக்கங்கள்
எல்லாம்
காற்று வைத்து
நிரப்பப்பட்டு வெற்றிடமாக
வைக்கப்பட்டிருக்கும்
என்ற அமைப்பைக்
கொண்ட
சிப்ஸ் பாக்கெட்டை
தயார் செய்தார்.
விற்பனை செய்தார்.

ஒன்பது நபர்கள் செய்த
சிப்ஸ் பாக்கெட்டில்
உள்ள சுவையை விட
ஒரு நபர் செய்த
சிப்ஸ் பாக்கெட்டில்
உள்ள சிப்ஸ்
வித்தியாசமான சுவை
கொண்டதாக இருந்தது
இது தான் வித்தியாசமான
யோசனைகளைப்
பயன்படுத்துவது.

பத்து ரூபாய்க்கு
பத்து சிப்ஸ் போட்டு
அடைத்து
மற்ற பக்கங்களை
காற்றை அடைத்து
வெற்றிடமாக வைத்து
விற்றாலும்
மக்கள் அதை விரும்பி
வாங்குகின்றனர்
இது பிறர் ஏற்றுக்
கொள்ளும் வகையில்
செயல்களைச் செய்வது
ஆகும்.

10 ரூபாய்க்கு 10 சிப்ஸ்
போட்டு விற்கிறான்
மற்ற இடங்களை
வெற்றிடமாக வைத்து
ஏமாற்றி விற்கிறான்
என்று யாரும்
கோபப்பட்டு கேள்விகள்
கேட்பதில்லை

மக்களுக்கு பிடித்திருக்கின்ற
காரணத்தினால்
10 ரூபாய்க்கு 10 சிப்ஸ்
போட்டு விற்றாலும்
மற்ற இடங்களை
காற்று அடைத்து
ஏமாற்றி விற்பனை
செய்தாலும்
அதில் உள்ள
ஏமாற்று வேலை
தெரிந்தாலும்
மக்கள் அதை
விருப்பப்பட்டு
வாங்குகின்றனர்,
இதுதான்
பிறர் ஏற்றுக் கொள்ளும்
வகையில் செயல்களைச்
செய்வது

ஒருவர் மட்டும் தனியாக
சிப்ஸ் செய்யும்
இந்த வேலை தான்
ஒரு வேலை
செய்யும் போது
வித்தியாசமாக
யோசனைகளைப்
பயன்படுத்தியும்
பிறர் ஏற்றுக் கொள்ளும்
வகையில் செயல்களைச்
செய்தும்
திறமையாக வேலை
செய்பவர்கள் ஆவர்.

கஷ்டப்பட்டு வேலை
செய்த ஒன்பது
நபர்களின்
சிப்ஸ் பாக்கெட்டை
பெரும்பாலானவர்கள்
வாங்கி சாப்பிடுவதில்லை.

ஆனால்
வித்தியாசமான
யோசனைகளைப்
பயன்படுத்தியும்,
பிறர் ஏற்றுக்
கொள்ளத்தக்க
வகையில்
செயல்களைச் செய்தும்
ஒருவரால் செய்யப்பட்ட
சிப்ஸ்ஸை
அனைவரும் வாங்கி
விருப்பமுடன்
சாப்பிட்டு வருகின்றனர்.

ஒன்பது நபர்கள்
செய்து விற்பனை
செய்த சிப்ஸ்
பாக்கெட்டை விட
ஒருவர் மட்டும்
விற்பனை செய்த
சிப்ஸ் பாக்கெட்
மட்டும் வேறுபட்டு
இருக்கிறது


---------- இன்னும் வரும்
//////////////////////////////////////////////////////////////////



April 17, 2018

ஔவையார்-நான்கு கோடி பாடல்-பதிவு-4



ஔவையார்-நான்கு கோடி பாடல்-பதிவு-4   


கஷ்டப்பட்டு
உழைத்த
ஒன்பது
மாணவர்களுக்கும்
ஒரு மதிப்பெண்
வினாவுக்கு
எவ்வாறு பதில்
வழங்க வேண்டும்
மூன்று மதிப்பெண்
கொண்ட வினாவிற்கு
எவ்வாறு பதில் வழங்க
வேண்டும் என்ற
விவரம் தெரியவில்லை

ஆனால்
வித்தியாசமாக யோசித்து
திறமையாக
வேலை செய்த
ஒரு மாணவனுக்கு மட்டும்
ஒரு மதிப்பெண்
வினாவுக்கு
எவ்வாறு பதில்
வழங்க வேண்டும்
மூன்று மதிப்பெண்
கொண்ட
வினாவிற்கு எவ்வாறு
பதில் வழங்க வேண்டும்
என்ற விவரம் தெரிந்து
இருந்தது,

இது தான் கஷ்டப்பட்டு
வேலை செய்பவனுக்கும்
வித்தியாசமான
யோசனைகளை
பயன்படுத்தி
திறமையாக
வேலை செய்பவனுக்கும்
உள்ள வித்தியாசம்
ஆகும்.

பத்து நபர்கள் சிப்ஸ்
என்ற உணவுப்பொருளை
செய்து அதை
பாக்கெட்டில் அடைத்து
விற்பனை செய்தார்கள்

அந்த பத்தில்
ஒன்பது நபர்கள்
தனித்தனியாக
விற்பனை செய்த
சிப்ஸ் பாக்கெட்
ஒரே மாதிரியாக
இருந்தது

ஒரு சிப்ஸ்
பாக்கெட்டில்
50 சிப்ஸ் வீதம்
10 ரூபாய்
என்ற விலையில்
அந்த ஒன்பது நபர்களும்
தனித்தனியாக
அந்த சிப்ஸ் பாக்கெட்டை
செய்தார்கள்
தனித்தனியாக
விற்பனை செய்தார்கள்

பத்தில் ஒரு நபர்
மட்டும்
சிப்ஸ் பாக்கெட்டை
வித்தியாசமான
யோசனைகளை
பயன்படுத்தியும்,
பிறர் ஏற்றுக்
கொள்ளத்தக்க வகையில்
செயல்களைச் செய்தும்
திறமையாக
வேலை செய்து
சிப்ஸ் பாக்கெட்டை
செய்தார்.

---------- இன்னும் வரும்
//////////////////////////////////////////////////////////////////



April 16, 2018

ஔவையார்-நான்கு கோடி பாடல்-பதிவு-3


  
ஔவையார்-நான்கு கோடி பாடல்-பதிவு-3



இந்த ஒன்பது
மாணவர்களும்
மனப்பாடம் செய்தவர்கள்
திருக்குறளை இயற்றியது
திருவள்ளுவர்
என்று தொடர்ந்து
பலமுறை
மனப்பாடம் செய்தவர்கள்
விழுந்து விழுந்து
மனப்பாடம் செய்தவர்கள்

திருக்குறளை இயற்றியவர்
திருவள்ளுவர்
என்ற வரியை
தொடர்ந்து
திரும்ப திரும்ப மனப்பாடம்
பண்ணி வைத்திருந்த
காரணத்தினால்
சாப்பிட்டதை
அப்படியே
வாந்தி எடுத்த மாதிரி
திருக்குறளை இயற்றியவர்
திருவள்ளுவர்
என்று ஒன்பது
மாணவர்களும்
பதில் எழுதினர்

மூன்று மதிப்பெண்கள்
இந்தக் கேள்வியின் பதிலுக்கு
கொடுத்து இருக்கிறார்களே
நாம் எழுதும்
இந்த பதில் போதுமா
என்று யாரும்
நினைக்கவில்லை
இது சரியான பதிலா
என்று கூட
ஒன்பது மாணவர்களும்
நினைக்கவில்லை
படித்ததை
அப்படியே
எழுதி விட்டார்கள்
மனப்பாடம் செய்ததை
அப்படியே கக்கி விட்டார்கள்
இது தான் கஷ்டப்பட்டு
வேலை செய்பவர்கள்
செய்யும் செயல்

தாங்கள் என்ன
கற்றுக் கொண்டோமோ
அதை அப்படியே
செய்வார்கள்
கஷ்டப்பட்டு வேலை
செய்பவர்கள்

பத்து மாணவர்களில்
ஒரு மாணவன்
மட்டும் வித்தியாசமான
யோசனையை பயன்படுத்தி
எழுதினான்

தமிழ் மறை,
உத்தர வேதம்,
தெய்வ நூல்,
திருவள்ளுவம்,
திருவள்ளுவப்பயன்,
முப்பால்,
பொய்யாமொழி,
வாயுரை வாழ்த்து,
பொதுமறை,
பொருளுரை,
முதுமொழி,
உலகப்பொது மறை,
என்று பல்வேறு பட்ட
சிறப்புப் பெயர்களால்
அழைக்கப்படும்
திருக்குறளை
தெய்வப் புலவர்,
செந்நாப்போதார்,
பொய்யில் புலவர்,
நாயனார்,
நான்முகனார்,
மாதானுபங்கி,
முதற்பாவலர்,
திருநாவலர்,
தேவர்,
வான்புகழ் கொண்ட
பெருந்தகையார்
என்று பல்வேறு
பெயர்களால்
சிறப்பிக்கப்படக்கூடிய
திருவள்ளுவர்
என்பவர் இயற்றினார்

இவ்வாறு பதில் எழுதிய
ஒரு மாணவனுக்கு
மூன்றுக்கு மூன்று
மதிப்பெண்கள்
கிடைத்தது

ஒன்பது மாணவர்களும்
கஷ்டப்பட்டு வேலை
செய்பவர்களுக்கு
எடுத்துக்காட்டு

மூன்றுக்கு மூன்று
மதிப்பெண் பெற்ற
மாணவன் மட்டுமே
வித்தியாசமான
யோசனைகளை பயன்படுத்தி
திறமையாக 
வேலை செய்பவர்களுக்கு
எடுத்துக்காட்டு

கஷ்டப்பட்டு வேலை
செய்தவன்
மூன்றுக்கு
ஒரு மதிப்பெண் பெற்றான்
ஆனால்
வித்தியாசமாக யோசித்து
திறமையாக வேலை
செய்பவன்
மூன்றுக்கு மூன்று மதிப்பெண்
பெற்றான்

---------- இன்னும் வரும்
//////////////////////////////////////////////////////////////////

April 15, 2018

திருநங்கையர் தின வாழ்த்து மடல்-15-04-2018


திருநங்கையர் தின வாழ்த்து மடல்-15-04-2018

உலகில் தோன்றுவதை
எல்லாம் இரண்டு
நிலைகளில் பிரித்துவிடலாம்

ஒன்று  : பிறப்பதினால் தோன்றுவது
இரண்டு : மாற்றமடைவதினால்
          தோன்றுவது

பிறப்பது என்பது புதிதாகத்
தோன்றுவது
மாறுவது என்பது
பிறந்தது வளரும் போது
இடையில் ஏற்படக்கூடிய மாற்றம்

ஆண், பெண் இரண்டு பேரும்
பிறப்பதின் மூலம்
தோன்றுகிறார்கள்
திருநங்கைகள் மட்டும்
மாற்றத்தின் மூலம்
தோன்றுகிறார்கள்.

ஒரு விதையிலிருந்து
ஒரு செடி தோன்றுகிறது
இது பிறப்பது
பிறந்த செடியில்
பூவானது காயாகிறது,
காயானது கனியாகிறது
காய், கனி ஆகியவை
மாற்றத்தின் மூலம்
தோன்றுகிறது.

ஒரு ஆண் குழந்தை
அல்லது பெண் குழந்தை
தாயின் கருவறையிலிருந்து
வெளியே வந்து பிறக்கிறது
இது பிறப்பதன் மூலம்
தோன்றுவது
பிறந்த பிறகு குழந்தை
குழந்தை பருவம்,
இளமை பருவம்,
வாலிப பருவம்,
முதுமை பருவம் என
பல்வேறு பருவ
நிலைகளைக் கடக்கிறது
இந்த பருவங்கள்
அனைத்தும் பிறந்தபின்
மாற்றத்தின் மூலம்
தோன்றுபவைகள்

அதைப்போல
ஒரு குழந்தை பிறந்தபின்
அது வளர்ந்த நிலையில்
ஏற்படக்கூடிய
மாற்றத்தின் விளைவாக
தோன்றுபவர்கள் திருநங்கைகள்

பிறந்த ஆண் குழந்தைக்கு
நான் ஆண் குழந்தை
பிறந்திருக்கிறேன்
என்று தெரியாது
அதைப்போல பிறந்த பெண்
குழந்தைக்கு நான்
பெண் குழந்தை
பிறந்திருக்கிறேன் என்று
தெரியாது
இவர்களைச் சுற்றி இருக்கும்
சொந்தங்கள் உணர்ந்து
அவர்களுடைய
பிறப்பை கொண்டாடுகிறது

ஆனால் பிறந்து வளர்ந்ததில்
மாற்றம் உண்டாகி
தங்களுக்குள்
திருநங்கை தோன்றுவதை
உணர்ந்த போது
அவர்கள் சொல்கிறார்கள்
ஆனால் இந்த சமுதாயம்
ஏற்றுக் கொள்வதில்லை
அதை கொண்டாடுவதில்லை

பிறந்த போது
ஆண் குழந்தை அல்லது
பெண் குழந்தையால்
சொல்ல முடிவதில்லை
இச்சமுதாயம் பிறப்பினால்
ஏற்படும் தோற்றத்தை
கொண்டாடுகிறது
ஆனால்
பிறந்த பின் உடல் மற்றும்
மனதில் ஏற்படக்கூடிய
மாற்றத்தை திருநங்கைகள்
சொல்லும் போது
இச்சமுதாயம் ஏற்றுக்
கொண்டு மாற்றத்தினால்
ஏற்படக்கூடிய தோற்றத்தை
கொண்டாடுவதில்லை.

பிறப்பினால்  ஏற்படும்
தோற்றத்தையும்,
இடையில் மாற்றத்தினால்
ஏற்படும் தோற்றத்தையும்
எப்பொழுது இச் சமுதாயம்
சமமாக மதிக்க ஆரம்பிக்கிறதோ
அப்பொழுது தான்
சமதர்ம சமுதாயம் மலரும்
திருநங்கைகள் வாழ்வில்
ஒளிவீசும்

திருநங்கையர் தின வாழ்த்துக்கள்-15-04-2018

என்றும் அன்புடன்
K.பாலகங்காதரன்