May 09, 2018

ஔவையார்- நான்கு கோடி பாடல்- பதிவு- 15


               
          ஔவையார்- நான்கு கோடி பாடல்- பதிவு- 15

நாம் நல்ல நிலைமைக்கு
வந்து விடுகிறோம்
நமக்கு உதவி செய்தவரை
மறந்து விடுகிறோம்
அவரை பார்த்து
பல மாதங்கள்
பல வருடங்கள்
கழிந்து விட்டன
காலம் ஓடி விட்டது

பல வருடங்கள் கழித்து
ஒரு நாள் நமக்கு
உதவி செய்தவர்
நம்மை சந்திக்க
வருகிறார்
அவர் நம்மை சந்தித்து
ஒரு உதவி கேட்கிறார்

பிஸ்னஸ் கொஞ்சம்
நஷ்டத்தில் ஓடுகிறது
நான் கஷ்டப்படுகிறேன்
கொஞ்சம் கடன்
ஆகிவிட்டது
கடனை அடைக்க
முடியவில்லை
குடும்பத்தை ஓட்டுவது
கஷ்டமாக இருக்கிறது
பல்வேறு நெருக்கடிக்கிடையில்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்

எனக்கு
ஒரு காண்டிராக்ட்
கிடைத்தால்
நன்றாக இருக்கும்
அதை அனுமதி அளிப்பது
நீங்கள் தான் என்று
கேள்வி பட்டேன்
அதனால் நானே
நேரில் வந்தேன்
எனக்கு அந்த
காண்டிராக்ட்
உங்கள் முயற்சியால்
கிடைத்தால்
நான் சந்தோஷப்படுவேன்

கஷ்டத்தில் இருந்து
கொஞ்சம் விடுபடுவேன்
கடனை அடைத்து
விடுவேன்
குடும்பம் கொஞ்சம்
மகிழ்ச்சியாக இருக்கும்
நீங்கள் எனக்கு
உதவி செய்வீர்கள்
என்று வந்தேன்
நீங்கள் எனக்கு
அந்த காண்டிராக்டை
வாங்கித் தருவீர்களா
என்று கேட்கிறார்.

ஆனால் அந்த
காண்டிராக்டை பெறுவதில்
பயங்கரமான போட்டி
நிலவுகிறது
கோடிக்கணக்கில்
பணம் தருகிறோம்
எங்களுக்கு
அந்த காண்டிராக்டை
கொடுங்கள் என்று
நிறைய பேர்
நம்மை கேட்கிறார்கள்

நாம் வாழ வழி
இல்லாமல்
இக்கட்டான சூழ்நிலையில்
இருந்தபோது
நமக்கு உதவி
செய்தவருடைய
உதவியை
நினைத்துப் பார்த்து
கோடிக்கணக்கில்
பல்வேறு நபர்கள்
கொடுக்க
முன்வந்த நிலையிலும்
அதனை ஏற்றுக்கொள்ளாமல்
நமக்கு உதவி
செய்தவருக்கு
நாம் அந்த
காண்டிராக்ட்
கிடைப்பதற்கான
முயற்சிகள் செய்து
அவருக்கு
அந்த காண்டிராக்டை
கொடுக்கிறோம்

நீங்கள் செய்த
உதவியை நான்
மறக்க மாட்டேன்
உயிர் உள்ளவரை
நினைப்பேன்
என்று வாய் அளவில்
மட்டும் சொல்லாமல்
நமக்கு உதவி
செய்தவருக்கு
உதவி செய்வதற்கான
வாய்ப்பு வந்தபோது
நாம் உதவி செய்கிறோம்

இக்கட்டான சூழ்நிலையில்
நாம் இருக்கும் போது
நமக்கு உதவி
செய்தவர்களுடைய
உதவியை நாம்
என்றும் மறக்கக் கூடாது
அவர்களுக்கு நாம்
கொடுத்த வாக்குறுதியை
நாம் நினைவில் கொண்டு
அவர்களுக்கு நாம்
உதவி செய்யும்
காலம் வரும்போது
கண்டிப்பாக
உதவி செய்ய வேண்டும்
என்பதை நாம்
நினைவில் கொள்ள
வேண்டும்.

---------- இன்னும் வரும்
///////////////////////////////////////////////////


May 08, 2018

ஔவையார்- நான்கு கோடி பாடல்-பதிவு-14



               
            ஔவையார்- நான்கு கோடி பாடல்-பதிவு-14

"""""கோடானு கோடி
கொடுப்பினுந் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்

நாம் ஒருவரிடம்
சென்று
நான் ரொம்ப
கஷ்டப்படுகிறேன்
எனக்கு உதவி
செய்யுங்கள்
நான் படிப்பதற்கு
எனக்கு உதவி
செய்யுங்கள்
எனக்கு படிப்பதற்கு
உதவி செய்தால்
என் கஷ்டம்
குறைந்து
என் வீட்டை
பார்த்துக் கொள்ள
உதவியாக இருக்கும்

குடும்பத்தை பார்த்துக்
கொள்ள உதவியாக இருக்கும்
எனக்கு உதவி செய்யுங்கள்
என்று கேட்கிறோம்

அவர் நம்
ஏழ்மை நிலையை
அறிந்து
அவர் நம்மை
படிக்க வைப்பதற்கு
தேவையான பொருள்
உதவி அளித்து
வழிகாட்டி
படித்து முடித்தவுடன்
நமக்கு
அது சம்பந்தமாக
நல்ல வேலைக்கு
ஏற்பாடு செய்து
வேலை
வாங்கித் தருகிறார்.

நமக்கு உதவி செய்தவர்
நல்ல வேலைக்கு
வந்து விட்டாய்
உன்னை
உன் குடும்பத்தை
நன்றாக
பார்த்துக் கொள்
என்று அறிவுரை
கூறுகிறார்

நீங்கள் செய்த
இந்த உதவியை
நான்
உயிர் உள்ளவரை
மறக்கவே மாட்டேன்
நீங்கள் செய்த
உதவியை
என்றுமே
மறக்க மாட்டேன்
என்று சொல்கிறோம்

அதுமட்டுமல்லாமல்
பிற்காலத்தில்
உங்களுக்கு
ஏதேனும் உதவிகள்
தேவைப்பட்டால்
நான் எங்கிருந்தாலும்
உங்களை தேடி வந்து
உதவிகள் செய்வேன்
என்கிறோம்

நாம் தொடர்ந்து
முயற்சி செய்து
உயர்ந்த பதவிக்கு
வந்து விடுகிறோம்,


---------- இன்னும் வரும்
/////////////////////////////////////////////////////


May 07, 2018

ஔவையார்- நான்கு கோடி பாடல்- பதிவு-13



            ஔவையார்- நான்கு கோடி பாடல்- பதிவு-13

அதைப்போல
நமக்கு ஒரு ஆபத்து
என்றாலும்
நமக்கு ஒரு துன்பம்
என்றாலும்
நமக்கு ஒரு கெடுதல்
என்றாலும்
நமக்கு ஒரு சோகம்
என்றாலும்
ஓடோடி வருவதும்
துயரை துடைப்பதும்
நம்முடைய
சொந்தக்காரர்கள் தான்

வாழ்க்கையில் சந்தோஷம்
என்றாலும்
சோகம் என்றாலும்
அதில் கலந்து கொண்டு
நமக்கு ஆதரவாக
இருப்பவர்கள்
நம்முடைய சொந்தக்
காரர்கள் தான்.

நம்முடைய நண்பர்கள்
நமக்கு
கோடி ரூபாய் மதிப்புடைய
உதவிகள் செய்து
இருந்தாலும்
அல்லது
கோடி பொன் மதிப்புடைய
உதவிகள் செய்து
இருந்தாலும்
வீட்டில் நல்லது
நடந்தாலும்
அல்லது
கெட்டது நடந்தாலும்
நமக்கு
சொந்தக் காரர்களின்
தயவு தேவை,

நம்முடைய நண்பர்கள்
நமக்கு
கோடி ரூபாய்க்கு
சமமான உதவிகள்
செய்து இருப்பினும்
நாம் நம்முடைய
சொந்தக் காரர்களுடன்
நாம் சேர்ந்து இருக்க
வேண்டும்

எனவே,
சொந்தக் காரர்களுடன்
எவ்வளவு தான்
சண்டை இருந்தாலும்,
மனக் கசப்பு இருந்தாலும்
எங்கிருந்தாலும்
எந்த ஊரில் இருந்தாலும்
எந்த நாட்டில் இருந்தாலும்
நமக்கும்
நம்முடைய
சொந்தக்காரர்களுக்கும்
இடையே உள்ள
பகைமை
உணர்ச்சியை நீக்கி
சுமூகமாக உறவுடன்
சொந்தக்காரர்களுடன்
இணைந்து இருக்க
வேண்டும்

சொந்தக் காரர்களுடன்
நட்புடன்
பிணைந்தே இருக்க
வேண்டும்

கோடி ரூபாய்க்கு
சமமான உதவிகளை
நம் நண்பர்கள் செய்து
இருந்த போதிலும்
சொந்தக்காரர்களுடன்
இணைந்து இருக்கக்கூடிய
இந்த செயல் தான்
கோடி ரூபாய் பெறும்
அல்லது
கோடி பொன் பெறும்
என்கிறார் ஔவையார்

இது மூன்றாம் செயல்
இது மூன்றாம் கோடி
பெறும் செயல்
இது கோடி ரூபாய்
பெறும் செயல்
அல்லது
இது கோடி பொன்
பெறும் செயல்
இது செய்ய வேண்டும்
என்று ஔவையார்
சொன்ன செயல்

ஔவையார்
செய்ய வேண்டும்
என்று சொன்ன
நான்காவது செயல்
என்ன என்று
பார்ப்போம்

--------- இன்னும் வரும்
///////////////////////////////////////////////////


May 06, 2018

ஔவையார்- நான்கு கோடி பாடல்- பதிவு-12


              ஔவையார்- நான்கு கோடி பாடல்- பதிவு-12

"""""கோடி கொடுப்பினும்
குடிப்பிறந்தார் தம்முடனே
கூடுதலே கோடி பெறும்""""""

குடி குடியைக்
கெடுக்கும் என்பது
பழமொழி
இந்த பழமொழியில்
இரண்டு குடி
இருக்கிறது
முதல் குடி
உடல்நலத்தைக்
கெடுக்கக் கூடிய
மதுபானத்தைக் குறிக்கும்
இரண்டாவது குடி
குடும்பத்தைக்
குறிக்கும்
மதுபானத்தைக் குடித்தால்
குடிப்பவருடைய குடும்பம்
பாதிப்பு அடையும்
என்பது தான்
இந்த
பழமொழிக்கு அர்த்தம்

குடி என்றால் குடும்பம்
குடி பிறந்தோர் என்றால்
குடும்பத்தில் பிறந்தவர்கள்
என்று பொருள்
குடிப்பிறந்தோர் என்றால்
இரத்த சம்பந்தமுடையவர்கள்
என்று பொருள்
இரத்த சம்பந்தமுடையவர்கள்
என்றால்
சொந்தக்காரர்கள்
என்று பொருள்
குடிப்பிறந்தோர் என்றால்
சொந்தக்காரர்கள் என்று
பொருள்

நமக்கும்
நம்முடைய
சொந்தக் காரர்களுக்கும்
இடையே
ஆயிரம் சண்டைகள்
இருக்கலாம்
மனக்கசப்பு இருக்கலாம்
மன வருத்தம் இருக்கலாம்
மன வேறுபாடு இருக்கலாம்
விரோத மனப்பான்மை
இருக்கலாம்
பிரிவு ஏற்பட்டு இருக்கலாம்
ஒருவரை ஒருவர்
சண்டை போட்டு
பிரிந்து
இருக்கக் கூடிய
சூழ்நிலை
ஏற்பட்டு இருக்கலாம்

இருந்தாலும்
நம் வீட்டில்
நடைபெறும்
அனைத்து நல்ல
விஷயங்கள் ஆனாலும்
கெட்ட விஷயங்கள்
ஆனாலும்
சொந்தக்காரர்களை
முன் வைத்துத்தான்
செய்யக்கூடிய
நிலை உண்டு

சொந்தக்காரர்கள்
இல்லாமல்
எந்த விசேஷங்களும்
செய்ய முடியாது
சொந்தக்காரர்களை
முன்னிலைப்படுத்தித்தான்
நாம் எந்த
விசேஷங்களையும்
செய்ய முடியும்

நமக்கு சிறு வயது
முதலே
நண்பர்கள்
பல விதத்திலும்
உதவி செய்து
இருந்திருப்பார்கள்
உயிர் நண்பர்களாக
இருந்திருப்பார்கள்
ஆபத்துக் காலங்களில்
ஓடி வந்து
உதவி செய்து கொண்டு
இருந்திருப்பார்கள்
இக்கட்டான
சூழ்நிலையில்
நமக்கு உதவிகரமாக
இருந்திருப்பார்கள்
கவலை நேர்ந்த நேரத்தில்
நமக்கு ஆதரவதாக
இருந்திருப்பார்கள்
துன்பம் சூழ்ந்த நேரத்தில்
நமக்கு துணையாக
இருந்திருப்பார்கள்

ஆனால்
அனைத்து நண்பர்களையும்
துணைக்கு
வைத்துக் கொள்ளலாம்
ஆனால்
நண்பர்களை முன்னிறுத்தி
நாம் நம்முடைய
வீட்டு விசேஷங்களை
செய்ய முடியாது

வீட்டில்
நல்ல விசேஷம் நடந்தாலும்
கெட்ட விசேஷம் நடந்தாலும்
எந்த விசேஷம் நடந்தாலும்
சொந்தக்காரர்களை
முன்னிலைப்படுத்தாமல்
எந்த விசேஷமும்
செய்யாமல்
இருக்க முடியாது

---------இன்னும் வரும்
//////////////////////////////////////////////////////////////////


May 05, 2018

ஔவையார்- நான்கு கோடி பாடல்-பதிவு-11


            ஔவையார்- நான்கு கோடி பாடல்-பதிவு-11

நாம் என்ன
சாப்பாடு
சாப்பிடுகிறோமோ
அந்த
சாப்பாட்டையே
விருந்தினருக்கும்
கொடுத்து
அந்த
சாப்பாட்டை
சாப்பிடச் சொல்வது
வேறுபாடு காட்டாமல்
உபசரிப்பது ஆகும்.

நாம் சாப்பிடும்
சாப்பாட்டை
நம்மை
தேடி வரும்
விருந்தினருக்கு
கொடுக்காமல்
தங்களுக்கு நல்ல
சாப்பாடு
விருந்தினருக்கு வேறு
ஒரு சாப்பாடு
என்று
வேறுபாடு காட்டி
விருந்தினர்களை
சாப்பாட்டை
போட்டு
சாப்பிடச் சொல்வது
வேறுபாடு காட்டி
உபசரிப்பது ஆகும்.

தங்கள்
வீட்டிற்கு வரும்
விருந்தினர்களை
முறைப்படி உபசரிக்காமல்
தங்களுக்கு
ஒரு சாப்பாடு
விருந்தினருக்கு
ஒரு சாப்பாடு என்று
வேறுபாடு காட்டி
உபசரிக்கும்
சொந்தக்காரர்கள்,
நண்பர்கள்,
சுற்றத்தார்கள்
ஆகியோருடைய
வீட்டிற்கு
செல்லக்கூடிய
இக்கட்டான
சூழ்நிலை ஏற்பட்டாலும்
தவிர்க்க முடியாத
சந்தர்ப்பம்
ஏற்பட்டாலும்
சந்தர்ப்ப சூழ்நிலையால்
அவர்களுடைய வீட்டில்
சாப்பிடக்கூடிய
நிலை ஏற்பட்டால்
நாம் சாப்பிடாமல்
இருக்க வேண்டும்

வேறுபாடு காட்டி
உபசரிப்பவர்கள்
வீட்டில்
சாப்பாட்டை
சாப்பிடாமல்
இருப்பவர்களுடைய
மிகப்பெரிய செயல்
கோடி ரூபாய்
மதிப்பு உடையது என்று
சொல்லலாம்
அல்லது
கோடி பொன் மதிப்பு
உடையது என்று
சொல்லலாம்

இது இரண்டாம் செயல்
இது இரண்டாம் கோடி
பெறும் செயல்
இது கோடி ரூபாய்
பெறும் செயல்
அல்லது
இது கோடி பொன்
பெறும் செயல்
இது செய்ய வேண்டாம்
என்று ஔவையார்
சொன்ன செயல்

முதல் இரண்டு
செயல்களை
செய்ய வேண்டாம்
என்று
சொன்ன ஒளைவையார்
அடுத்த
இரண்டு செயல்களை
செய்ய வேண்டும்
என்று சொல்கிறார்.

எந்த இரண்டு
செயல்களை
ஔவையார்
செய்ய வேண்டும்
என்று சொல்கிறாரோ
அந்த இரண்டு
செயல்களைத்
தெரிந்து கொள்வோம்,

---------- இன்னும் வரும்
///////////////////////////////////////////////////

April 30, 2018

ஔவையார்-நான்கு கோடி பாடல்-பதிவு-10


    
ஔவையார்-நான்கு கோடி பாடல்-பதிவு-10


"""""உண்ணீர் உண்ணீரென்று
உபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெறும்"""""

விருந்தினராக வருபவர்களை
உபசரிப்பதை
இரண்டு நிலைகளில்
பிரித்து விடலாம்

ஒன்று   : வேறுபாடு காட்டி
           உபசரிப்பது

இரண்டு : வேறுபாடு காட்டாமல்
          உபசரிப்பது

நாம் ஒரு
வேலையாக
ஒரு இடத்திற்கு
செல்கிறோம்
ரொம்ப நேரம்
ஆகி விட்டது
எதிர்பாராத விதமாக
தெரிந்தவர் வீட்டிற்கு
செல்ல வேண்டிய
சூழ்நிலை ஏற்பட்டு
விட்டது
அவர் வீட்டில்
சாப்பாடு சாப்பிடச்
சொல்கிறார்கள்

நாம் அவர் வீட்டில்
சாப்பிடுகிறோம்
நமக்கு ஒரு
சாப்பாடு போட்டு
அவரும்
அவருடைய குடும்பமும்
வேறு ஒரு
சாப்பாடு
சாப்பிடுகிறார்கள்
அவர்கள் அனைவரும்
நல்ல சாப்பாடும்
நமக்கு ஏதோ
ஒரு சாப்பாடும்
போட்டு சாப்பிட
சொல்கிறார்கள்
இது வேறுபாடு
காட்டி
சாப்பாடு போட்டு
உபசரிப்பது

ஒரு சில
வீடுகளில் பார்த்தால்
சாப்பிட
போகும் போது
சாப்பாடு உள்ள
பாத்திரங்கள்
சாப்பாடு போட்டு
சாப்பிட வேண்டிய
பாத்திரங்கள் என்று
உணவு வகைகள்
அனைத்தையும்
கொண்டு வைத்து
அறையில் வைத்து
அனைவரையும்
ஒன்றாக
அமரச் சொல்லி
அனைவருக்கும்
சாப்பாடு போட்டு
சாப்பிடச் சொல்வது
மட்டும் இல்லாமல்
அனைவரும்
ஒன்றாக அமர்ந்து
சாப்பிடுவார்கள்
இது
வேறுபாடு காட்டாமல்
உபசரித்து சாப்பாடு
போடுவது ஆகும்

---------- இன்னும் வரும்
////////////////////////////////////////