May 30, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-15


               நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-15

முருங்கைக் கீரை
அற்புதமான
மருந்துப் பொருளாகும்
முருங்கைக் கீரையை
மருத்துவப் பொக்கிஷம்
என்று சொல்லலாம்

முருங்கைக் கீரையைப்
போல்
அனைத்து
நோய்களையும்
தீர்க்கும் சக்தி
வேறு எந்த
கீரைக்கும் கிடையாது

முருங்கைக் கீரை
உடல் சூட்டைத்
தணிக்கும்
உடல் சூடு அதிகம்
உள்ளவர்கள்
முருங்கைக் கீரை
சாப்பிட்டு வர
உடல் சூடு தணியும்

முருங்கைக் கீரையில்
விட்டமின் ஏ, பி, சி
சத்துக்களும்,
சுண்ணாம்புச் சத்து,
புரதம்,
இரும்பு,
கந்தகம்,
குளோரின்,
தாமிரம்,
கால்சியம்,
மெக்னீசியம்
போன்ற
சத்துக்களும் உள்ளன.

முருங்கைக் கீரையை
உணவில்
சேர்த்துக் கொள்வதால்
உடலுக்கு
நோய் எதிர்ப்பு
சக்தியும்,
உடலுக்கு
வலிமையும்,
உறுதியும்
கிடைக்கிறது

ஒரு நபருக்கு
தினந்தோறும்
வைட்டமின் ஏ
5000 I.U.(Internatiional Unit)
தேவைப்படுகிறது.
ஒரு வேளை
சாப்பிடும்
முருங்கைக் கீரையில்
வைட்டமின் ஏ
3260 I.U.(Internatiional Unit)
கிடைக்கிறது.

மனிதனுக்கு
தேவைப்படும்
20 அமினோ அமிலங்களில்
18 அமினோ அமிலங்கள்
முருங்கைக் கீரையில்
உள்ளது
மனித உடலால்
தயாரிக்கப்பட இயலாத
8 அத்தியாவசிய
அமினோ அமிலங்கள்
இறைச்சியில்
மட்டுமே கிடைக்கும்
அந்த 8 அமினோ
அமிலங்களையும்
கொண்ட
ஒரே சைவ உணவு
முருங்கைக் கீரை

முருங்கைக் கீரையில்
தயிரில் இருப்பதை விட
2 மடங்கு அதிக புரதமும்,
ஆரஞ்சுப் பழத்தில்
உள்ளதைப் போல
7 மடங்கு அதிக
வைட்டமின் சி யும்,
வாழைப்பழத்தில்
உள்ளதை விட
3 மடங்கு அதிக
பொட்டாசியமும்,
கேரட்டில்
உள்ளதைப் போல்
4 மடங்கு அதிக
வைட்டமின் ஏ வும்,
பாலில் உள்ளதைவிட
4 மடங்கு
அதிக கால்சியமும்,
கடல் பாசியை விட
3 மடங்கு அதிக
இரும்புச் சத்தும்,
இருக்கிறது

பழங்காலத்தில்
அரசர்கள்
வீரர்களுக்கு
முருங்கைக் கீரையை
உணவாகக் கொடுத்து
வந்துள்ளனர்
அதனால்
அவர்கள்
உடல்
வலிமையுடனும்
உறுதியுடனும்
போர் புரிந்தனர்
என்று கூறுகின்றனர்
வரலாற்று
ஆய்வாளர்கள்

முருங்கைக் கீரையில்
உள்ள
அதிசயிக்கத் தக்க
மருத்துவ
குணங்களை
கருத்தில் கொண்டு
அதை
சாப்பிடச் சொன்ன
நம் முன்னோர்கள்
புத்திசாலிகள்

---------- இன்னும் வரும்
//////////////////////////////////////////////


May 29, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-14


                நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-14

நம் முன்னோர்கள்
மருத்துவத்தில்
இரண்டு வகையான
முறையைக் கையாண்டனர்

ஒன்று  : நோய் அணுகாமல்
         பாதுகாப்பது

இரண்டு : நோய் ஏற்பட்டால்
         சிகிச்சை அளித்து
         நோயைக்
         குணப்படுத்துவது

நாம் அன்றாடம்
உண்ணும் உணவுமுறைகள்
பெரும்பாலும்
நோயைக் குணப்படுத்தக்
கூடியவையாகவும்,
எதிர்பாராத விதமாக
நோய் ஏற்பட்டு விட்டால்
நோயைக் குணப்படுத்தும்
வகையிலும்
இருப்பது தான்
நம் உணவு முறையின்
சிறப்பு

கருவாடு
உடல் உஷ்ணத்தைக்
குறைக்கும்
உடலிலிருந்து
உஷ்ணம் வெளியேற
கருவாட்டைப்
பயன்படுத்தினர்
நம் முன்னோர்கள்

கருவாட்டில்
நோய் எதிர்ப்பு சக்தி
உண்டு

அன்றைய
கால கட்டங்களில்
வெப்பத்தினால்
ஏற்படக்கூடிய
பல்வேறு நோய்களுக்கும்
எதிர்பாராமல் ஏற்படக்கூடிய
பல்வேறு நோய்களுக்கும்
கருவாடே
மருந்தாகப் பயன்படுத்தப்
பட்டது.

இன்று
மருத்துவத் துறையில்
மருந்து கண்டுபிடிக்கப்படாத
பல்வேறு நோய்களுக்கும்
கருவாடே
சிறந்த மருந்தாகப்
பயன்படுத்தப் பட்டு
வருகிறது

தொற்று
நோய்க்கிருமிகளின்
தாக்கத்தால்
நோய் ஏற்படாமல்
இருக்கவும்
நோய் ஏற்பட்டால்
குணமடைச் செய்வதற்கும்
கருவாட்டை
பயன்படுத்தி
கருவாட்டுக் குழம்பு
செய்து சாப்பிட்டனர்
நம் முன்னோர்கள்

அதன் மூலம்
நோயின் பாதிப்பால்
பாதிக்கப்பட்ட
உடலை நோயின்
தாக்கத்திலிருந்து
காப்பாற்றிக் கொண்டனர்

நோயின் தாக்கம்
அதிகமாக இருப்பது
கை,கால்களில்
வீக்கம் இருப்பது
குண் விழுந்து
நடந்து செல்ல
முடியாமல் தவிப்பது
தவழ்ந்து செல்வது
போன்ற
நோய்க் குறியின்
பாதிப்பு ஏற்பட்டால்
அவற்றிலிருந்து
தங்களை
பாதுகாத்துக் கொள்ள
கருவாட்டுக் குழம்பு
செய்து சாப்பிட்டனர்

இன்றும்
மருந்து கண்டுபிடிக்கப்
படாத
இத்தகைய நோய்களுக்கு
கருவாட்டுக்
குழம்பை செய்து
பயன்படுத்தி
தங்களை நோயிலிருந்து
காப்பாற்றிக் கொள்கின்றனர்
மக்கள்

இத்தகைய
காரணங்களினால் தான்
கூழ் உடன்
கருவாட்டுக்
குழம்பையும் சேர்த்து
மக்களை
சாப்பிடச் சொன்னார்கள்

நோய் எதிர்ப்பு
சக்தியை
உண்டாக்குவதற்காகவும்
நோய் அணுகாமல்
தடுப்பதற்காகவும்
நோய் வந்து விட்டால்
நோயைக்
குணப்படுத்துவதற்காகவும்
கருவாட்டுக் குழம்பை
பயன்படுத்திய
நம் முன்னோர்கள்
புத்திசாலிகள்

கூழ் உடன்
கருவாட்டுக் குழம்பு
பயன்படுத்திய
நம் முன்னோர்கள்
முருங்கைக் கீரையையும்
எதற்காக
பயன்படுத்தினர்
என்பதை பார்ப்போம்

----------இன்னும் வரும்
////////////////////////////////////////////////////////

May 27, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-13


             நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-13

நோய்த் தொற்று
ஏற்பட்ட கிராமத்திலிருந்து
நோய்த் தொற்று
ஏற்டாத
கிராமத்தை
வேப்பிலையின் மூலம்
பாதுகாத்தாலும்
அதையும் மீறி
சில சமயங்களில்
நோய் எதிர்ப்பு சக்தி
குறைந்தவர்களுக்கு
நோய்த் தொற்று
ஏற்பட்ட
வாய்ப்பு இருக்கிறது

அவ்வாறு
நோய்த் தொற்று
ஏற்பட்டால்
அந்த நோயைக்
குணப்படுத்துவதற்கும்
அந்த
நோய்த் தொற்று
மற்றவருக்கும்
பரவாமல் தடுப்பதற்கும்
மருந்துகளைப்
பயன்படுத்தாமல்
உணவின் மூலம்
நோயைக் குணப்படுத்தும்
முறையைக்
கையாண்டனர்
நம் முன்னோர்கள்

மருத்துவ குணம்
கொண்ட
உணவுகளில்
நோய் எதிர்ப்பு சக்தி
கொண்டவையாகவும்
நோயைக்
குணப்படுத்தக்
கூடியவையாகவும்
உள்ளவைகளில்
மிக முக்கியமாகக்
கருதப்படும்
மூன்று உணவுப்
பொருள்களை
தேர்ந்தெடுத்து
பயன்படுத்தினர்
அவைகளில்

ஒன்று கூழ்
இரண்டு கருவாட்டுக் குழம்பு
மூன்று முருங்கைக் கீரை

கூழ்
கேழ்வரகு, அரிசி,
உப்பு
ஆகியவற்றைக்
கொண்டு தயார்
செய்யப்படும்
கேழ்வரகு கூழ்
உடம்புக்கு
குளிர்ச்சியைத் தரும்
கேழ்வரகில் கால்சியம்
சத்து அதிகமாக
உள்ளதால்
எலும்புகளுக்கு
நல்லது
உடம்புக்கு வலுவைத்
தரும்

நோய் வந்தால்
உடல் பலவீனப்படும்
உடல் தளர்ச்சி
அடையும்
எழுந்து நடக்க
முடியாது

இதனை
சரிசெய்தவற்காக
இந்த கேழ்வரகு
கூழை தயார் செய்தனர்

மேலும்
கூழில்
தேவைப்படும்
மூலிகைப் பொருட்கள்
சிலவற்றைக் கலந்து
கூழ் தயார்
செய்தனர்

கூழை
பெரிய பெரிய  
அண்டாக்களில்
தயார் செய்தனர்
அந்த ஊரில்
எவ்வளவு
மக்கள் இருக்கிறார்களோ
அவ்வளவு
மக்களும்
சாப்பிடுவதற்கு
ஏற்றார்போல்
கூழ் தயார்
செய்தனர்

ஊரின் மையப்பகுதியிலோ
கல்யாண மண்டபத்திலோ
கோயிலிலோ
கூழை தயார் செய்தனர்

கூழுடன்
மேலும்
இரண்டு
பொருட்களையும்
அதாவது
கருவாட்டுக்
குழம்பையும்
முருங்கைக்கீரையும்
தயார் செய்தனர்

இவைகள்
இரண்டும்
மருத்துவ குணம்
கொண்டவை
அதனால்
கூழுடன்
இவைகள்
இரண்டையும்
தயார் செய்தனர்

இவைகள்
இரண்டிலும் உள்ள
மருத்து குணங்கள்
எவை என
பார்ப்போம்

--------- இன்னும் வரும்
////////////////////////////////////////////////////////


May 26, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-12


              நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-12

அம்மை நோய்
வந்து விட்டால்
அதனை குணமடையச்
செய்வதற்கு
ஆங்கில மருத்துவத்தில்
அன்றும் இன்றும்
மருந்து கண்டு
பிடிக்கப்படவில்லை
உலகில் எங்குமே
அம்மை நோய்க்கு
மருந்து கண்டுபிடிக்கப்
படவில்லை

அம்மை மருந்து
கண்டுபிடிக்கப்படாத
அந்த காலத்திலும் சரி
இந்த காலத்திலும் சரி
அம்மை நோய்
வந்து விட்டால்
அதனை போக்குவதற்கு
பயன்படுத்திக் கொண்டு
இருப்பது தான் வேப்பிலை

வேப்பிலை
ஒரு மிகச் சிறந்த
கிருமி நாசினி ஆகும்

அம்மை நோய்க்கு
மருந்து கண்டுபிடிக்கப்படாத
அந்தக் காலங்களில்
அம்மை நோய்
ஏற்பட்டு விட்டால்
அம்மை நோயிலிருந்து
குணமடைவதற்கும்
அம்மை நோய்
பரவாமல்
பாதுகாப்பதற்கும்
பயன்படுத்தப்பட்டது
தான் வேப்பிலை

அம்மை நோயைக்
குணப்படுத்தும் சக்தியும்
அம்மை நோயைப்
பரவாமல் தடுக்கும்
சக்தியும்
வேப்பிலையில்
உள்ளதை கண்டுபிடித்த
நம் முன்னோர்கள்
அம்மை நோயைக்
குணப்படுத்த
வேப்பிலையைப்
பயன் படுத்தினர்

அம்மை ஆரம்பித்தது
முதல் குணமாகி
நோயாளி எழுந்திருக்கும்
நிலை உருவாகும் வரை
வேப்பிலையை
பல்வேறு விதங்களில்
பயன்படுத்தினர்
நம் முன்னோர்கள்

அம்மை வந்து விட்ட
வீட்டிலின் வாசலில்
வேப்பிலையை
சொருகி வைப்பார்கள்
அதற்கு அர்த்தம்
இந்த வீட்டில் ஒருவருக்கு
அம்மை நோய் வந்திருக்கிறது
ஆகவே சுத்தமாக
இருப்பவர்கள் மட்டுமே
வீட்டிற்குள்
வர வேண்டும்
என்று பொருள்

அதுமட்டுமல்ல
அம்மை நோயினால்
பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து
வெளிக்கிளம்பும் கிருமிகள்
வேப்பிலையில் பட்டு
கிருமிகள் இறந்து விடும்
இதனால் அம்மை நோய்
வெளியில் பரவி
மற்றவர்களுக்கு இந்த
அம்மைநோய்
பரவாமல் தடுக்கப்படும்,

வெள்ளைத்
துணியின் மேல்
வேப்பிலையைப் பரப்பி
அம்மை நோயால்
பாதிக்கப்பட்டவரை
படுக்க வைப்பார்கள்

மேலும்
நோயாளியைச் சுற்றிலும்
வேப்பிலையை
போட்டு வைப்பார்கள்
வேப்பிலையை
நோயாளியின் மேல்
காற்று படுமாறு
எடுத்து வீசுவார்கள்

கீழே உள்ள
வேப்பிலையிலிருந்து
எழும் காற்றும்
சுற்றியுள்ள வேப்பிலையிலிருந்து
எழும் காற்றும்
வேப்பிலையை பயன்படுத்தி
வீசும் போது எழும் காற்றும்
உடலின் வெளிப்புறத்தில்
உள்ள நோய்க்கிருமிகளைக்
கொல்வதோடு
உடலின் உள்புறத்தில்
உள்ள நோய்க்கிருமிகளைக்
கொல்லும் சக்தியையும்
கொண்டது வேப்பிலை

தலைக்கு தண்ணீர்
விடும் போது
தண்ணீரில்
வேப்பிலையைப் போட்டு
வெயிலில் சிறிது நேரம்
வைத்து விட்டுத் தான்
பிறகு அம்மை நோய்
பாதிக்கப்பட்டவருக்கு
தலைக்கு தண்ணீர்
விடுவார்கள்.
இதனால் உடலில்
உள்ள கிருமிகள்
கொல்லப்படுவதோடு
உடல் எரிச்சலையும்
தடுக்கும்

இவ்வாறு அம்மை
நோய் பாதித்தவருக்கு
வேப்பிலையை
பயன்படுத்தி செய்யும்
செயல்கள் யாயும்
நாம் பார்த்து இருப்போம்

இந்த செயல்கள் எல்லாம்
அம்மை நோய் பாதிக்கப்பட்டவருக்கு
அம்மை நோய் குணமாகுவதற்கும்,
அம்மை நோய் மற்ற
இடங்களுக்கு பரவாமல்
தடுப்பதற்கும்
செய்யப்படுவது ஆகும்

உலகத்திற்கே
மருத்துவம்
சொல்லிக் கொடுத்தவர்கள்
நம் முன்னோர்கள்
நம்மைச் சுற்றியுள்ள
இயற்கை வளத்தை வைத்தே
நோயைக் குணப்படுத்தக்
கூடிய முறைகளை
சொல்லிச் சென்று
அதை இன்றும்
கடைப்பிடிக்க வைத்த 
நம் முன்னோர்கள் 
புத்திசாலிகள்

--------- இன்னும் வரும்
////////////////////////////////////////////