August 02, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-53


            நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-53

பாண்டிய நாட்டில்
உள்ள
பிசிர் என்ற ஊரில்
ஆந்தையார் என்பவர்
வாழ்ந்து வந்தார்
அவருடைய ஊரின்
பெயரான பிசிர்
மற்றும்
அவருடைய
இயற்பெயரான
ஆந்தையார் ஆகிய
இரண்டையும்
சேர்த்து அவர்
பிசிராந்தையார் என்று
அழைக்கப்பட்டார்.


கோப்பெருஞ்சோழன்
சோழ நாட்டில்
உறையூர் என்னும்
பகுதியை ஆண்டு
கொண்டிருந்தான்

பிசிராந்தையார்
சோழ மன்னன்
கோப்பெருஞ்சோழன்
மீது  அளவற்ற
அன்பு கொண்டு
இருந்த காரணத்தினால்
கோப்பெருஞ்சோழனைப் பற்றி
நிறைய பாடல்களை
எழுதி இருந்தார்
கோப்பெருஞ்சோழனைக்
காண வேண்டும்
என்ற ஆவல் கொண்டு
தன்னுடைய
வாழ்க்கையின்
நாட்களை கழித்துக்
கொண்டு இருந்தார்
கோப்பெருஞ்சோழனைக்
காண வேண்டும்
என்ற ஆசையை
தன் வாழ்க்கையின்
லட்சியமாகக் கொண்டு
வாழ்ந்து கொண்டு
இருந்தார்

கோப்பெருஞ்சோழனைக்
காண வேண்டும்
என்ற ஆசை
பிசிராந்தையார்
மனதில் இருந்தாலும்
பிசிராந்தையாரால்
கோப்பெருஞ்சோழனை
சந்திக்க முடியவில்லை
ஏனெனில்
பிசிராந்தையாருடைய
ஊரானது
பாண்டிய நாட்டில்
இருந்தது
அது சோழ மன்னன்
கோப்பெருஞ்சோழன்
ஆளும்
சோழ நாட்டிலிருந்து
வெகு தொலைவில்
இருந்தததால்
பிசிராந்தையாரால்
உடனடியாக  
சோழ நாட்டிற்கு சென்று
கோப்பெருஞ்சோழனை
சந்தித்து
தன்னுடைய நட்பை
வெளிப்படுத்த
முடியவில்லை.
இந்த ஏக்கம்
பிசிராந்தையார்
மனதில் என்றும்
இருந்து கொண்டே
இருந்தது.

பிசிராந்தையாரின்
அளவற்ற புகழையும்,
வியக்க வைக்கும்
தமிழறிவையும்
கேள்விப்பட்ட
கோப்பெருஞ்சோழன்
பிசிராந்தையார் மீது
உண்மையான
நட்புக் கொண்டு
இருந்தார்
பிசிராந்தையாரைச்
சந்திக்க வேண்டும்
என்ற பேராவலைக்
கொண்டு இருந்தார்
இருந்தாலும்,
கோப்பெருஞ்சோழனுடைய
அளவுக்கு அதிகமான
வேலைப் பளுவின்
காரணமாக
பிசிராந்தையாரைச்
சந்திக்க முடியவில்லை

இருவரும் ஒருவரை
ஒருவர் பார்த்துக்
கொள்ளாமலேயே
அரசன், புலவன்
என்ற பேதம்
பாராட்டாமல்
உயர்வு, தாழ்வு
என்ற
மனப்பான்மை
கொள்ளாமல்
நட்புடன் பழகி
வந்தனர்.
அவர்கள் இருவரும்
தாங்கள் சந்தித்துக்
கொள்ளக்கூடிய
அந்த முக்கியமான
நாளை மிக ஆவலுடன்
எதிர்ப்பார்த்து
காத்துக் கொண்டிருந்தனர்

கோப்பெருஞ்சோழனின்
ஆட்சி நடந்து
கொண்டிருக்கும்போதே
அவருடைய இரண்டு
புதல்வர்களும்
ஆட்சியைக் கைப்பற்றி
அரியணை ஏறுவதற்காக
தன்னுடைய தந்தையான
கோப்பெருஞ்சோழனுக்கு
எதிராக போரிடத்
துணிந்தனர்,

இதனை
அறிந்து கொண்ட
கோப்பெருஞ்சோழன்
மன வேதனைப்பட்டு
ஆட்சியை விட்டு விட்டு
வடக்கிருந்து
உயிர் விடத்
துணிந்தான்

இவ்வுலகில்
வாழ்ந்தது
போதும் என்று
முடிவு செய்து,
இவ்வுலக
வாழ்க்கையைத் துறக்க
விரும்பும் அரசர்கள்
வடக்கிருந்து
உயிர் விடுதல்
என்பது
அக்காலத்திய மரபு

வடக்கிருத்தல் என்பது
தன்னுடைய
நாட்டில் உள்ள
ஆறு, குளம் போன்ற
நீர் நிலைகளுக்குச் சென்று
அதன் இடையே
மணல் திட்டு
ஒன்றை உருவாக்கி
வடக்கு திசை
நோக்கி
அமர்ந்தபடி
உண்ணா நோன்பிருந்து
மரணத்தை தழுவுவது
எனப்படும்

--------- இன்னும் வரும்
------------02-08-2018
//////////////////////////////////////////////



July 31, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-52


            நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-52
இராமர் தான்
அமர்ந்து இருந்த
இருக்கையை விட்டு
எழுந்து சென்று
ஶ்ரீநிவாசனை
நோக்கி ஓடினார்.
இராமர் முதலில்
அவனை அடிக்கட்டும்
பின்னர் எல்லோரும்
சேர்ந்து அவனை
அடிப்போம் என்று
அனைவரும் எண்ணினார்கள்.

இராமர் ஶ்ரீநிவாசனை
நோக்கி ஓடி
அவனைக் கட்டியணைத்து
தன்னுடைய மார்புடன்
அன்புடன் தழுவிக்
கொண்டார்,
நண்பா நேற்று
தான் வந்தேன்
உன்னைக் காண
வேண்டும் என்று
நினைத்தேன் துடித்தேன்
நல்ல வேளையாக
நீயே வந்து விட்டாய்
நான் மிகுந்த
மகிழ்ச்சி அடைகிறேன்
என்று நண்பனை
அழைத்துக் கொண்டு
போய் அரியணை மீது
தன்னுடன் அமர்த்திக்
கொண்டார் இராமர்,
சபையில் பரபரப்பும்
அதிசயமும் ஏற்பட்டன

ஆச்சரியத்தால் அதிசயித்து
நின்ற சபையோர்களைப்
பார்த்து இராமர்
பேசத் தொடங்கினார்.

குருநாதா,
தம்பி பரதா,
இலட்சுமணா, சத்ருகனா,
ஆஞ்சநேயா, மன்னர்களே
பதினான்கு ஆண்டுகளாக
தீராத கவலை ஒன்று
என் மனதை வாட்டிக்
கொண்டிருந்தது
அந்த கவலை
இன்று தான் தீர்ந்தது

சித்திரகூட பருவதத்தின்
அருகில் மந்தாகினி
நதிக்கரையில் நான்
தங்கியிருந்த போது
தம்பி பரதன் வந்து
தந்தையார் பொன்னுலகம்
புகுந்தார் என்று சொன்னான்.

என்னுடைய பாசமிகு
தந்தையார் எனக்கு
முடிசூட்டி மகிழ
விரும்பினார்.
இந்த முடிசூட்டு
விழாவில் தந்தையார்
கலந்து கொண்டு
மகிழ்ச்சி அடைவதற்கு
வழி இல்லையே
என்று எண்ணி
எண்ணி வருந்தினேன்
இந்த உலகத்தில்
உள்ள எல்லோரும்
என்னை ராகவேந்திரா,
ரகுநாதா என்று
தான் அழைப்பார்கள்

இந்த உலகத்திலேயே
அப்பா ஒருவர்
மட்டும் தான் என்னை
“அடே ராமா!” என்று
பாசமழை பொழிய அழைப்பார்
எனவே என்னுடைய
மனக்கவலை
மாற “அடே ராமா!”
என்று அன்பு கனிய
அழைத்த என்னுடைய
நண்பனான ஶ்ரீநிவாசன்
தான் என் அப்பாவாகும்

என்னுடைய நண்பன்
ஶ்ரீநிவாசன் என் தந்தை
வடிவில் வந்து
“அடே ராமா!” என்று
அழைத்து என்
மனக்கவலையை
மாற்றி விட்டார்
என்று கூறி கண்ணீர்
சிந்தினார் இராமர்,

இந்த நிகழ்வைக்
கண்ட அனைவரும்
வியந்தனர்
இராமர், ஶ்ரீநிவாசன்
நட்பைக் கண்டு
அதிசயித்தனர்,


இராமர்
மிகப்பெரிய அரசர்
அரசவையில் மன்னர்கள்
கூடியிருக்கிறார்கள்
மரியாதைக்குரிய
மனிதர்கள்
கூடியிருக்கிறார்கள்
என்று நினைக்காமல்
ஶ்ரீநிவாசன்
இராமரை நண்பனாக
மட்டும் பார்த்தான்
காலம் , இடம், நேரம்
பார்த்து தனது நட்பை
வெளிப்படுத்தவில்லை

தன்னுடைய நண்பனான
இராமருடைய நட்பை
மட்டுமே நினைத்தார்
அதனால் அரசவையில்
உள்ள யாரைப் பற்றியும்
கவலைப் படாமல்,
யாரேனும் ஏதேனும்
சொல்வார்களா என்று
அச்சமுறாமல்
அனைவர் முன்னிலையிலும்
“அடே ராமா!” என்று
நண்பனான இராமரை
உரிமையுடன்
நட்பு பொழிய அழைத்தார்.

இராமர் மேல்
எத்தகைய தூய்மையான
நட்பு கொண்டிருந்தானோ
அத்தகைய நட்பை
அரசவையில் அனைவர்
முன்னிலையிலும்
வெளிப்படுத்தினான்

அதைப்போல இராமரும்
காலம், இடம், நேரம்
பார்க்காமல் அரசவையில்
மன்னர்கள் கூடியிருக்கிறார்கள்
மரியாதைக்குரிய மனிதர்கள்
கூடியிருக்கிறார்கள்
தன்னுடைய உறவினர்கள்
கூடியிருக்கிறார்கள்
என்பதை நினைக்காமல்
தன்னுடைய நண்பன்
ஶ்ரீநிவாசனுடைய நட்பை
மட்டுமே நினைத்தார்
அதனால் அரசவையில்
உள்ள யாரைப் பற்றியும்
கவலைப் படாமல்,
யாரேனும் ஏதேனும்
சொல்வார்களா என்று
அச்சமுறாமல்
அனைவர் முன்னிலையிலும்
நண்பனைக் கட்டி
அணைத்துக் கொண்டார்,

ஶ்ரீநிவாசன் மேல்
எத்தகைய தூய்மையான
நட்பு கொண்டிருந்தாரோ
அத்தகைய நட்பை
அரசவையில் அனைவர்
முன்னிலையிலும்
வெளிப்படுத்தினார் இராமர்.

இதிலிருந்து ஶ்ரீநிவாசன்
இராமர் மேல்
வைத்த நட்பும்,
இராமர் ஶ்ரீநிவாசன்
மேல் வைத்த நட்பும்
எந்த சூழ்நிலையிலும்
ஒரே மாதிரியாக
இருக்கும் நட்பு
என்பதைத் தெரிந்து
கொள்ளலாம்,

----------இன்னும் வரும்
------------31-07-2018
//////////////////////////////////////////////


July 30, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-51


              நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-51

இராமர் இளமையில்
ஶ்ரீநிவாசன் என்ற
நண்பனுடன் நட்பு
கொண்டு இருந்தார்.

இராமர், ஶ்ரீநிவாசனை
அடேய் சீனு
என்று தான் அழைப்பார்
அதைப்போல்
ஶ்ரீநிவாசனும், ராமரை
அடேய் ராமா என்று
தான் அழைப்பார்.

இராமர் வசிட்ட
முனிவரிடம் பல
கலைகளைக் கற்று
தாடகையை
வதம் புரிந்து விட்டு
சீதா கல்யாணம்
முடித்தபின்
கானகம் சென்றார்.

ஏழையாக இருந்த
ஶ்ரீநிவாசன்
பல ஊர்கள் சென்று
அலைந்து திரிந்து விட்டு
பல ஆண்டுகள் கழித்து
அயோத்தியை
அடைந்தான்.

“எங்கே? என் நண்பன்
ராமர் எங்கே?”
என்று கேட்டான்.
கானகம் சென்றிருக்கிறார்
என்பதை அறிந்தான்.
ராமர் காட்டுக்கு
சென்றதை நினைத்து
அழுதான்
அந்தோ ராமா
நீ கானகம் சென்றாயே
உனக்கு யார்
துணையாக இருப்பார்
மழை, வெயில், பனி
ஆகியவற்றால் நீ
துன்புறக்கூடிய
நிலை வருமே
அப்பொழுது நீ
என்ன செய்வாய்
நான் உன்னுடன்
வந்து இருந்தால்
உனக்கு துணையாக
இருந்து இருப்பேனே
என்று தன்னுள் கூறிக்
கொண்டு வருத்தப்பட்டான்.

காட்டை அடைந்தான்
ராமா ராமா என்று
கூவியழைத்த வண்ணம்
பித்தனைப் போல
கானகம் முழுவதும்
அலைந்தான்
காடெல்லாம் தேடினான்
ராமரைத் தேடி ஓடினான்
எவ்வளவு முயற்சிகள்
செய்தும் ஶ்ரீநிவாசனால்
ராமர் சென்ற
கானகத்தை அவனால்
கண்டு பிடிக்க முடியவில்லை
பதினான்கு ஆண்டுகள்
உருண்டு ஓடி
மறைந்து விட்டன

ஶ்ரீநிவாசன்
அயோத்தியை அடைந்தான்
இராமருக்கு
மகுடாபிஷேகம்
நடந்து கொண்டிருந்தது
மாதர்கள் மங்கல நாதம்
முழங்கிக் கொண்டு
இருந்தார்கள்
முனிவர்கள் மந்திரத்தை
உச்சாடனம் செய்து
கொண்டிருந்தார்கள்
மன்னர்கள் கைகூப்பி
நின்று கொண்டிருந்தார்கள்
கோலாகலமாக விழா
நடந்து கொண்டிருந்தது

அங்கே வந்தான்
ஏழை ஶ்ரீநிவாசன்
காவல் காரனை நோக்கி
“அடே ராமன் வந்து
விட்டானா” என்று கேட்டான்.

ஆம் வந்து விட்டார்
மகுடாபிஷேகம் நடந்து
கொண்டிருக்கிறது
என்றான் காவல்காரன்
ஶ்ரீநிவாசனுக்கு
அளவற்ற மகிழ்ச்சி
உண்டாகியது
தனக்கே மகுடாபிஷேகம்
நடப்பது போல்
உள்ளம் மகிழ்ந்தான்
ஒரே ஓட்டமாக
துள்ளி ஓடினான்
இரத்தின சிங்காசனத்தில்
வீற்றிருக்கின்ற
சக்கரவர்த்தித் திருமகனான
இராமரைக் கண்டான்

இளமையில் அழைத்த
நட்பின் பழக்கம்
உண்மையான நட்பின்
வெளிப்பாடு
அவையில் யாரைப்
பற்றியும் கவலைப்படவில்லை
மற்றவர்கள் என்ன
நினைப்பார்களோ
என்று நினைக்கவில்லை
ராமரிடம் எத்தகைய
நட்பை ஶ்ரீநிவாசன்
கொண்டிருந்தானோ
அத்தகைய நட்புடன்
"""""அடே ராமா
காட்டுக்குச் சென்றாயே
எப்படா வந்தாய்"""""
என்றான் ஶ்ரீநிவாசன்

இது தான் எந்த
சூழ்நிலையிலும் ஒரே
மாதிரியாக
இருக்கும் நட்பு
ஶ்ரீநிவாசனுக்கு தன்னைச்
சுற்றி இருப்பவர்கள்
யாரும் கண்ணுக்கு
தெரியவில்லை
இராமர் மட்டுமே
கண்ணுக்கு தெரிந்தார்
இராமர் மேல் கொண்ட
நட்பு மட்டுமே தெரிந்தது

ஶ்ரீநிவாசன் ராமரை
“ராமா” என்றும்
“எப்படா” என்றும்
“டா” போட்டு அழைத்த
வார்த்தைகளைக்
கேட்ட இலட்சுமணரின்
கண்கள் சிவந்தன
இவன் தலையை
துண்டிப்பேன் என்று
எடுத்தார் கோதண்டம்

பரதர், சத்ருக்கனர்
கோபத்துடன் பாய்ந்தனர்
ஆனுமந்தர் வாலை எடுத்தார்
இவனைக் கட்டி
ஏழு கடலுக்கும்
அப்பால் எறிவேன் என்றார்

வசிட்ட முனிவர்
ரகு நாதனுக்கு நான்
தான் பேரிட்டேன்
எனினும் நானே
ராமா என்று
அழைப்பதில்லை
அழைத்ததில்லை
ராகவேந்திரா ராமச்சந்திரா
என்று தானே
அழைக்கின்றேன்
இந்த மூடன் அடே
ராமா என்று அழைத்தானே
இவனை விட்டு
வைக்கலாமா என்று
சினந்து தருப்பைக்
கட்டை எடுத்து ஓங்கினார்
ஆ ஆ என்று
ஒலி எங்கும் எழுந்தது.

ஶ்ரீநிவாசனுடைய
சொற்கள் அரச அவையைக்
குலுங்க வைத்தது.
சபையில் பெரிய
பரபரப்பு உண்டாகியது


---------இன்னும் வரும்
------------30-07-2018
////////////////////////////////////////////