September 07, 2018

திருக்குறள்-பதிவு-15


                        திருக்குறள்-பதிவு-15

டார்வினின்
கண்டுபிடிப்புக்கு
ஆதரவாக நடத்தப்பட்ட
கூட்டங்களும்,
டார்வினின்
கண்டுபிடிப்புக்கு
எதிராக நடத்தப்பட்ட
போராட்டங்களும்,
உச்ச நிலையை
அடைந்தது.

உலகத்தையே
புரட்டிப்போட்ட
டார்வினின் புத்தகம்
வெறும் 230 பக்கங்கள்
மட்டுமே கொண்டது
இந்தப் புத்தகம்
ஏற்படுத்திய
சூறாவளிக் காற்றில்
பைபிளில்
சொல்லப்பட்ட கருத்துக்கள்
தவறா அல்லது
சரியா என்று
நினைக்கும்
அளவிற்கு வந்து
விட்டது

பைபிளில் சொல்லப்பட்ட
கடவுளின் வார்த்தைகள்
சர்ச்சைக்கு உள்ளாவதையும்,
கேள்விக் குறியாவதையும்,
விரும்பாத கிறிஸ்தவ
பாதிரியார்கள்
டார்வின் புத்தகத்தை
கடுமையாக எதிர்த்தனர்.

கடவுளால்
உருவாக்கப்பட்டவன்
தான் மனிதன்
அத்தகைய மனிதன்
குரங்கிலிருந்து
வரவே முடியாது
அதற்கு வாய்ப்பே
இல்லை
இதனைப் பற்றி
பொது மேடையில்
விவாதிக்கத்
தயாரா என்று
கிறிஸ்தவ பாதிரியார்கள்
டார்வின்
ஆதரவாளர்களுக்கு
சவால் விட்டனர்

கிறிஸ்தவ
பாதிரியார்களின்
சவாலை ஏற்றுக்
கொண்டனர்
டார்வினின்
ஆதரவாளர்களான
ஹக்ஸிலியும், ஹுக்கரும்
டார்வினின் புத்தகத்தைப்
பற்றி விவாதம் நடத்த
இரண்டு அணியினரும்
1860-ஆம் வருடம்
ஜுன் மாதக் கடைசியில்
ஒரு நாளைத்
தேர்ந்தெடுத்தனர்

ஆக்ஸ்போர்டு
பல்கலைக் கழகத்தில்
பிரிட்டிஷ் சங்கத்தின்
சார்பில்
இந்த உலகப்
 பிரசித்திபெற்ற
விவாதம் நடக்கவிருந்தது

ஆக்ஸ்போர்டு பல்கலைக்
கழகத்தைச் சுற்றி
 பல மைல்
தொலைவு வரை
மனிதக் கூட்டமாக
இருந்தது
எங்கு நோக்கிலும்
மனிதத் தலைகளாகவே
காட்சியளித்தது
கடவுள் மனிதனைப்
படைத்தாரா அல்லது
மனிதன் குரங்கிலிருந்து
வந்தானா
என்பதைத் தெரிந்து
கொள்ளும் ஆவலில்
பல்லாயிரக்கணக்கான
மக்கள் ஒரே
நேரத்தில் திரண்டதால்
ஆக்ஸ்போர்டு பல்கலைக்
கழகத்தின் விழா
மன்றத்தில் விவாதத்தை
நடத்த முடியாமல்
போனது

ஆக்ஸ்போர்டு
பல்கலைக் கழகத்திற்கு
மாற்றாக
உடனடியாக
ஆக்ஸ்போர்டு லைப்ரரி
மியூசியம் இருந்த
பெரிய கட்டிடம்
தேர்ந்தெடுக்கப்பட்டு
அந்த கட்டிடத்தில்
விவாதத்தை
நடத்துவதற்கு ஏற்பாடு
செய்யப்பட்டது

மக்கள் வெள்ளத்தால்
அந்த இடமே
நிரம்பி வழிந்தது
வெளிநாடுகளில் இருந்து
வந்திருந்த விஞ்ஞானிகள்
அனைவரும் நடைபெறப்
போகும் நிகழ்வுகளை
காண்பதற்காக
காத்திருந்தனர்

மனிதன் என்பவன்
ஆண்டவனால் படைக்கப்
பட்டவன் என்று
வாதிடுவதற்கு,
மதத்துறையில்
சிறந்து விளங்குபவரும்,
மக்களிடையே
பிரபலமானவருமான
சோபிசாம் என்று
அழைக்கப்படும்
பிஷப் வில்பர்போர்ஸ்
அமர்ந்திருந்தார்

குரங்கிலிருந்து வந்தவன்
மனிதன் என்ற
டார்வின் கோட்பாட்டை
ஆதரித்து பேசுவதற்காக
டார்வினின்
ஆதரவாளர்களான
ஹக்ஸிலியும், ஹுக்கரும்
கலந்து கொண்டனர்.

இந்த விவாதத்திற்கு
அடிப்படை காரணமான
சார்லஸ் டார்வின்
இந்த விவாத
மண்டபத்திற்கு வரவில்லை
அவர் தன்னுடைய
வீட்டில் ஆராய்ச்சியில்
ஈடுபட்டுக்
கொண்டிருந்தார்

டார்வினின் ஆதரவாளர்கள்
டார்வினை சந்தித்து
தாங்கள் விவாதத்தில்
கலந்து கொள்ள
விவாத மண்டபத்திற்கு
வர வேண்டும்
என்று கேட்டுக் கொண்டதற்கு
சார்லஸ் டார்வின்
சொன்ன வார்த்தைகள்
மிகவும் முக்கியத்துவம்
வாய்ந்தது

--------- இன்னும் வரும்
--------- 07-09-2018
/////////////////////////////////////

September 06, 2018

திருக்குறள்-பதிவு-14


                   திருக்குறள்-பதிவு-14

கிறிஸ்தவர்களின்
புனித நூலான
பைபிளில் சொல்லப்பட்ட
கருத்துக்கு மாறுபட்டு
டார்வினின்
கண்டுபிடிப்பு இருந்ததால்
ஒட்டுமொத்த
கிறிஸ்தவர்களும்
டார்வினுக்கு எதிராக
திரும்பினர்.

கிறிஸ்தவர்கள்
டார்வினை
இவர் குரங்கு
இவர் அப்பா குரங்கு
இவர் மூதாதையர்
அனைவரும் குரங்கு
என்று திட்டி தீர்த்தனர்.
டார்வின் தலையையும்
குரங்கு உடலையும்
இணைத்து கேலி
சித்திரம் போட்டார்கள்.

டார்வின் கடவுளின்
முதல் எதிரி என்றனர்;
இவர் நரகத்துக்குத்
தான் போவார்
என்றனர்;
டார்வினின் பிறந்த
நாளை பேய்
தினம் என்று
அறிவித்தனர்;

டார்வினுடைய புத்தகத்தை
மொத்தமாக வாங்கி
மக்கள் கூடும்
இடங்களில் எல்லாம்
கிழித்து வானத்தை
நோக்கி எறிந்தனர்

டார்வினின் புத்தகம்
சாக்கடையில் தான்
இருக்க வேண்டும் என்று
டார்வின் புத்தகத்தை
வாங்கி அதை கிழித்து
சாக்கடையில் போட்டனர்

டார்வின் புத்தகத்தை
மொத்தமாக வாங்கி
குவியலாக தெருவில்
ஒரே இடத்தில்
குவியலாக குவித்து
தீயிட்டு கொளுத்தினர்

பைபிளில் சொல்லப்பட்ட
கருத்துக்கு எதிராக
டார்வினின் கண்டுபிடிப்பு
இருக்கிறது
கிறிஸ்தவர்களின்
நம்பிக்கையை
இழிவு படுத்துவதாக
டார்வினின் கண்டுபிடிப்பு
இருக்கிறது என்று
டார்வின் புத்தகத்தை
கிறிஸ்தவ சர்ச்சுகளிள்
படிக்கட்டுகளில் வைத்தனர்
சர்ச்சுகளுக்கு வருபவர்கள்
அந்த புத்தகத்தை
மிதித்து விட்டு
ஆண்டவரை வணங்க
கிறிஸ்தவ சர்ச்சுகளுக்குள்
செல்லும் வகையில்
படிக்கட்டுகளில்
வரிசையாக அடுக்கி
வைத்தனர்
அவ்வாறே டார்வின்
புத்தகத்தை மிதித்து
விட்டு சர்ச்சுகளுக்குள்
சென்றனர்.

கிறிஸ்தவ சர்ச்சுகளில்
கருப்பு உடை தரித்த
விவிலிய பக்தர்கள்
தங்களின் கால்களின் கீழ்
டார்வினின் புத்தகத்தை
மிதித்தவாறு இறைவனின்
புனிதக் கொள்கையை
சாத்தானாகிய
டார்வினிடமிருந்து
காப்பதாக உறுதி
பூண்டார்கள்

புத்தகம் வெளியான
ஒரு சில நாட்களில்
முழு இங்கிலாந்தில்
ஏற்பட்ட புயல்
ஒரு சில
மாதங்களுக்கெல்லாம்
அகில உலகையும்
தாக்க ஆரம்பித்து
உலகில் உள்ள
பல மொழிகளில்
டார்வினின் புத்தகம்
மொழி பெயர்க்கப்பட்டது       

உலகில் உள்ள
கிறிஸ்தவர்கள் அனைவரும்
ஒட்டு மொத்தமாக
டார்வினை எதிர்த்தனர்.

டார்வினை
ஆதரிப்பவர்கள் கூட
டார்வின் புத்தகத்தை
அதிக அளவில்
வாங்கவில்லை
டார்வினை
எதிர்ப்பவர்கள் தான்
டார்வின் புத்தகத்தை
அதிக அளவில்
வாங்கினர்

டார்வின் புத்தகத்தில்
அப்படி என்னதான்
எழுதப் பட்டிருக்கிறது
என்பதைத்
தெரிந்து கொள்வதற்கு
உலகில் உள்ள
கிறிஸ்தவ மத
குருமார்கள் மட்டுமல்ல
உலகில் உள்ள
கிறிஸ்தவர்களில்
பெரும்பாலானவர்கள்
வாங்கினர்

டார்வின் புத்தகத்திற்கு
கிறிஸ்தவர்களால்
எவ்வளவு எதிர்ப்பு
டார்வினுக்கு இருந்ததோ
அதற்கு சமமான ஆதரவு
கடவுள் இல்லை
என்று சொல்பவர்களால்
டார்வினுக்கு உண்டானது

டார்வின் ஆதரவாளர்கள்
உண்மையான குரங்கைப்
பிடித்து வந்து
குரங்கை அழகாக
அலங்கரித்து
வண்டியில் வைத்து
வீதிவீதியாக அழைத்து
வந்தனர்
டார்வின் வாழ்க
நம் மூதாதையர்
வாழ்க என்று
கோஷங்கள் எழுப்பிக்
கொண்டு சென்றனர்.

சிலர் டார்வின்
படத்தையும்,
சிலர் டார்வின்
புத்தகத்தையும்,
சிலர் குரங்கையும்
வண்டியில் வைத்து
டார்வின் வாழ்க
என்று கோஷம் எழுப்பிக்
கொண்டு சென்றனர்.

டார்வினுக்கு எதிராக
அனைத்து கிறிஸ்தவர்கள்
ஒரு புறமும்,
டார்வினுக்கு ஆதரவாக
கடவுள் இல்லை
என்று சொல்பவர்கள்
மறுபுறமும்,
இருந்து கொண்டு
ஒருவருக் கொருவர்
மோதிக் கொண்ட
மோதல் உலக அளவில்
உச்ச நிலையை
அடைந்தது.

அடுத்து என்ன நடக்கப்
போகிறது என்று
உலகமே நடக்கும்
நிகழ்வுகளை வேடிக்கைப்
பார்த்துக் கொண்டிருந்தது


---------  இன்னும் வரும்
---------  06-09-2018
/////////////////////////////////////


September 04, 2018

திருக்குறள்-பதிவு-13


                        திருக்குறள்-பதிவு-13

இங்கிலாந்தில்
1859 ஆம் ஆண்டு
நவம்பர் 24 ஆம் நாள்
காலை பொழுது
விடிந்து கொண்டிருந்த
போது இந்த
உலகத்திற்கு தெரியவில்லை
ஒரு புதிய கருத்து
அன்று எழும்பப் போகிறது;
அந்த கருத்து
உலகம் முழுவதும்
பெரிய மாற்றத்தை
ஏற்படுத்தப் போகிறது;
கடவுள் உண்டு
என்று சொல்பவர்களுக்கும்
கடவுள் இல்லை
என்று சொல்பவர்களுக்கும்
பெரிய போராட்டம்
வெடிக்கப் போகிறது;
வரலாற்றில்
மறக்க முடியாத
நாளாக இந்த நாள்
இருக்கப் போகிறது
என்று தெரியாமல்,
குமுறப்போகும்
எரிமலையின் சீற்றம்
தெரியாமல்,
சுழன்றடிக்கப் போகும்
சூறாவளிக் காற்றின்
வேகம் தெரியாமல்,
பொங்கப்போகும்
கடலின் கோபம் தெரியாமல்,
இந்த உலகம்
உறக்கத்திலிருந்து
மெதுவாக விழித்துக்
கொண்டிருந்தது

1859 ஆம் ஆண்டு
நவம்பர் மாதம்
24 ஆம் நாள் மதியம்
01.00 மணிக்கு
“On the Origin of
Species by Means of
Natural Selection, or the
Preservation of
Favoured Races in the
Struggle for life”
என்ற புத்தகம்
வெளியிடப்பட்டது
உயிர்களின் தோற்றம்
என்று அழைக்கப்படும்
இந்த புத்தகம்
சொல்ல வருவது
பரிணாம வளர்ச்சி
கோட்பாடு
இந்த புத்தகத்தை
எழுதியவர்
சார்லஸ் டார்வின்

சார்லஸ் டார்வின்
எழுதிய இந்த புத்தகம்
வெளியான அன்றே
1250 பிரதிகளும் விற்று
தீர்ந்து விட்டன
அந்த புத்தகத்தின்
அன்றைய விலை
15 ஷில்லிங்

சார்லஸ் டார்வினின்
உயிரினங்களின்
பரிணாமக் கோட்பாடு
சொல்ல வருவது
இது தான்
உயிரினங்கள் அனைத்தும்
கொஞ்சம் கொஞ்சமாக
மாற்றமடைந்து, சின்ன
உயிரிகளிலிருந்து பெரிய
உயிரியாக மாற,
ஒவ்வொரு விலங்கினமாக
மாறி மாறி
இன்றைய உருவத்துக்கு
வந்திருக்கின்றன
எதுவும் ஒரே நாளில்
படைக்கப்பட்டதல்ல

உயிரினங்களின்
வாழ்க்கைப் போராட்டத்தில்
தகுதியும், திறமையும்
உள்ளவை நிலைத்து நிற்கும்
மற்றவை அழிந்து போகும்
இது புதிய இனங்களின்
உருவாக்கத்திற்கு
வழியேற்படுத்தும்

அதுமட்டுமல்ல
மனிதன் குரங்கிலிருந்து
வந்தவன் என்றார்
சார்லஸ் டார்வின்

உயிரினங்களின்
பரிணாமக்
கோட்பாட்டை கேட்டு
உலகமே ஸ்தம்பித்தது

உலகில் உள்ள
உயிர்கள் அனைத்தையும்
ஒரே நாளில் ஆண்டவன்
உருவாக்கினார் என்று
பைபிளில் சொல்லப்பட்ட
கருத்துக்கு
டார்வினின் கருத்து
மாறுபட்டு இருந்தது

ஆண்டவன் மனிதனை
படைத்தார் என்று
பைபிளில் சொல்லப்பட்ட
கருத்துக்கு மாறாக
குரங்கிலிருந்து வந்தவன்
மனிதன் என்று
டார்வின் சொன்ன
கருத்து பைபிளுக்கு
விரோதமாக இருந்தது

பல நூற்றாண்டு காலமாக
பைபிளில் சொல்லப்பட்டு
வந்த கருத்துக்கு
மாறாக டார்வின்
கண்டுபிடிப்பு இருந்ததால்
ஒட்டு மொத்த
கிறிஸ்தவர்களின் எதிர்ப்புக்கு
ஆளானது டார்வினின் புத்தகம்

பல நூற்றாண்டு காலமாக
மக்கள் நம்பிக் கொண்டு
இருந்த நம்பிக்கைக்கு
எதிராக டார்வினின்
கருத்து இருப்பதால்,
மக்களின் நம்பிக்கையை
கொச்சைப் படுத்தும்
வகையில்
டார்வினின் கண்டுபிடிப்பு
இருப்பதால்,
மக்களின் நம்பிக்கையை
தகர்க்கும் விதத்தில்
சார்லஸ் டார்வினின்
கண்டு பிடிப்பு இருப்பதால்,
மக்கள் தாங்கள்
கொண்ட நம்பிக்கையே
தவறோ என்று மக்கள்
சந்தேகிக்கும் வகையில்
டார்வினின் கண்டுபிடிப்பு
இருப்பதால்
டார்வினின் கண்டுபிடிப்பை
கிறிஸ்தவர்களும்
கிறிஸ்தவ அமைப்புகளும்
கடுமையாக எதிர்த்தன

டார்வின் கண்டு பிடித்த
கண்டுபிடிப்பு
சரியானது என்று சொல்லி
டார்வினுக்கு ஆதரவாக
ஒரு கூட்டம் கூடியது

இத்தகைய சூழ்நிலையில்
உலகம் இரண்டாக
உடைந்தது
கடவுள் உண்டு என்று
சொல்பவர்கள் ஒரு புறமும்
கடவுள் இல்லை
என்று சொல்பவர்கள்
மறு புறமும் இருந்தனர்

கடவுள் உண்டு என்று
சொல்பவர்கள்
டார்வினை எதிர்த்தனர்
கடவுள் இல்லை
என்று சொல்பவர்கள்
டார்வினை ஆதரித்தனர்

---------  இன்னும் வரும்
---------  04-09-2018
///////////////////////////////////////////////////////////