September 11, 2018

திருக்குறள்-பதிவு-18


                      திருக்குறள்-பதிவு-18

ஒருவர் பேசிய
கருத்துக்களை மக்கள்
ஏற்றுக் கொண்டார்களா
அல்லது
ஏற்றுக் கொள்ளவில்லையா
என்பதை மக்கள்
எழுப்பும்
கரகோஷத்தை வைத்து
தெரிந்து கொள்ளலாம்.

கர+கோஷம்=கரகோஷம்
கர என்றால்
கையினால்
எழுப்பப்படும் ஒலி என்று
பொருள் எடுத்துக்
கொள்ள வேண்டும்

கோஷம் என்றால்
வாயினால் எழுப்பப்படும்
ஒலி என்று பொருள்
எடுத்துக் கொள்ள
வேண்டும்

கரகோஷம் என்றால்
கையினாலும், வாயினாலும்
ஒரே சமயத்தில்
எழுப்பப்படும் ஒலி
என்று பொருள்
எடுத்துக் கொள்ள
வேண்டும்

மக்கள் எழுப்பும்
கரகோஷத்தை இரண்டு
நிலைகளில் பிரிக்கலாம்

ஒன்று  : அறிந்து
         எழுப்பப்படும்
         கரகோஷம்

இரண்டு :அறியாமல்
         எழுப்பப்படும்
         கரகோஷம்

அறிந்து எழுப்பப்படும்
கரகோஷம் என்பது
உணர்வுடன்
எழுப்பப்படுவது

அறியாமல் எழுப்பப்படும்
கரகோஷம் என்பது
உணர்வு இல்லாமல்
எழுப்பப்படுவது

அறிந்து எழுப்பப்படும்
கரகோஷம் என்பது
பிடித்தும் இருக்கலாம்
பிடிக்காமலும்
இருக்கலாம்
ஆனால்,
அறியாமல் எழுப்பப்படும்
கரகோஷம் என்பது
பிடித்தால் மட்டுமே
எழுப்பப்படுவது ஆகும்

அறிந்து எழுப்பப்படும்
கரகோஷத்தை இரண்டு
நிலைகளில் பிரிக்கலாம்


ஒன்று:
ஒருவர் பேச்சை
முடித்தவுடன்
பிடித்திருந்தாலும்
பிடிக்காவிட்டாலும்
எழுப்பப்படும்
கரகோஷம் அறிந்து
எழுப்பப்படும் கரகோஷம்
எனப்படும்

இரண்டு:
ஒருவர் பேசிக்
கொண்டிருக்கும் போது
அவருடைய பேச்சு
பிடித்திருந்தாலும்
பிடிக்காவிட்டாலும்
எழுப்பப்படும் கரகோஷம்
அறிந்து எழுப்பப்படும்
கரகோஷம் எனப்படும்


அறியாமல் எழுப்பப்படும்
கரகோஷம் என்பது ஒரே
ஒரு நிலையை மட்டும்
தான் தன்னுள்
கொண்டிருக்கும்

ஒன்று:
ஒருவர் பேசிக்
கொண்டிருக்கும் போது
பேசுபவருடைய
பேச்சில் கவரப்பட்டு
மெய்மறந்து
நம்மை அறியாமல்
எழுப்பப்படும்
கரகோஷம்
அறியாமல் எழுப்பப்படும்
கரகோஷம் எனப்படும்

ஒருவர் பேசிக்
கொண்டிருக்கிறார்
அவருடைய பேச்சு
பிடித்து போய்
விட்டதால் ஏற்பட்ட
மகிழ்ச்சியில்
கரகோஷம் எழுப்பினால்
அது அறிந்து
எழுப்பப்படும் கரகோஷம்
பேசிக்
கொண்டிருப்பவருடைய
பேச்சு பிடிக்கவில்லை
என்றால் பேசுபவருடைய
பேச்சை நிறுத்தச்
சொல்லி
கலாட்டா செய்து
எழுப்பப்படும்
கரகோஷம்
அறிந்து எழுப்பப்படும்
கரகோஷம்
பேசிக்
கொண்டிருப்பவருடைய
பேச்சு அற்புதமாக
இருந்து
தன்னை மறந்து
அதாவது மெய்மறந்து
எழுப்பப்படும் கரகோஷம்
அறியாமல் எழுப்பப்படும்
கரகோஷம்
பேசுபவர் பேசி
முடித்து விடும்போது
அற்புதமாக பேசினார்
என்று கரகோஷம்
எழுப்பினால் அது
அறிந்து எழுப்பப்படும்
கரகோஷம்
பேசிக் கொண்டிருந்தவர்
பேசி முடித்தவுடன்
பேசி முடித்தான்
கழுத்தை அறுத்து
விட்டான் பாவி
என்று வெறுப்புடன்
எழுப்பப்படும்
கரகோஷம்
அறிந்து எழுப்பப்படும்
கரகோஷம் எனப்படும்

அறிந்து எழுப்பப்படும்
கரகோஷம்
விரும்பினாலும்
விரும்பாவிட்டாலும்
பேச்சின்
இடையிலும்
பேச்சின் முடிவிலும்
எழுப்பப்படும்
ஆனால்
அறியாமல் எழுப்பப்படும்
கரகோஷம் பேச்சிற்கு
இடையில் மட்டுமே
எழுப்பபப்படும்

ஹக்ஸ்லிக்கு
மக்கள் எந்தவிதமான
கரகோஷத்தை
எழுப்பினார்கள் என்பதை
இனி பார்ப்போம்.

--------- இன்னும் வரும்
--------- 11-09-2018
/////////////////////////////////////////////////////


September 10, 2018

திருக்குறள்-பதிவு-17


                     திருக்குறள்-பதிவு-17

ஹக்ஸிலி சிரித்துக்
கொண்டே மேடை
மீது ஏறினார்
அன்பார்ந்த மக்களே
நான் இங்கே
விஞ்ஞானத்தைப்
பற்றித் தான்
பேச வந்திருக்கிறேன்
மதத்தைப் பற்றி
பிரச்சாரம் செய்வதற்கு
நான் வரவில்லை
மதத்தைப் பற்றி
பிரச்சாரம் செய்வதற்கு
பிஷப் வில்பர்போர்ஸ்
போன்ற மதவாதிகள்
நம் நாட்டில்
நிறைய
எண்ணிக்கையில்
உள்ளார்கள்
ஆகவே நான்
பேசுவதை
மதரீதியாக
பார்க்காமல்
விஞ்ஞான ரீதியாக
பாருங்கள் என்று
தன் பேச்சை
துவங்கினார்.

ஒன்று பரிணாமத்தில்
பல்வேறு மாற்றங்களை
அடைந்து
முழுமை அடைகிறது

பரிணாமத்தில் முழுமை
அடைந்த ஒன்று
தன் நிலையில்
முழுமை
அடைந்த பிறகு
அதாவது இறுதிநிலை
அடைந்து விட்ட பிறகு
பரிணாமம் என்பது
கிடையாது

ஒரு மாமர
விதையை
விதைத்தால்
அந்த விதை
மாஞ் செடியாகி,
மா மரமாகிறது
மாமரத்தில்
பூ உற்பத்தியாகி,
பூ - மாங்காயாகி,
மாங்காய் - மாம்பழம் ஆகி
பல்வேறு மாற்றங்களை
அடைகிறது
மாமர விதையின்
இறுதி வடிவம்
மாம்பழம் என்பதால்
அதற்கு மேல்
பரிணாமம் என்ற
ஒன்று கிடையாது

ஒன்று பரிணாமத்தில்
பல்வேறு மாற்றங்களை
அடைந்து முழுமை
அடைந்த பின்பு
பரிணாமம் என்பது
கிடையாது

தாயின் வயிற்றில்
பிஷப் வில்பர்போஸ்
ஐந்து நாள்
பிண்டமாயிருக்கும் போது
அந்தப் பிண்டம்
ஒரு பென்சிலின்
முனையளவு கூட
இருந்திருக்காது
அதுவே
பத்து மாதத்திற்குப்
பின் ஒரு முழு
உருவமாய் வளர்ச்சி
பெற்ற பின்பு
தான் இவர்
பிறந்திருக்கிறார்
முழு வளர்ச்சி
அடையாமல்
பிறக்கவிலை,

கரு உருவாகி
பல்வேறு மாற்றங்களை
அடைந்து குழந்தை
என்ற முழுமை
நிலையை அடைந்த
பின்பு பரிணாமம்
முடிவடைந்து விடுகிறது
பரிணாமம் என்பது
முடிவடைந்த பின்னர்
தான் அவர்
பிறந்தார்
என்பதை சிறிதும்
சிந்திக்காமல்
பேசி விட்டார்

எந்த ஒன்று
முழுமை அடைந்து
விட்டதோ
அந்த ஒன்று
அதற்கு மேல்
மாற்றமடையாது
மனிதன் என்பவன்
முழுமையான வளர்ச்சி
அடைந்தவன்
அதனால் பரிணாமத்தில்
மனிதனுக்கு பின்
எதுவும் தோன்றவில்லை

என் முன்னோர்கள்
குரங்காக இருந்தார்கள்
என்று கூறிக்
கொள்வதில்
எனக்கு சிறிதளவு கூட
தயக்கம் இல்லை
ஆனால் பிஷப்
வில்பர்போர்ஸின்
பரம்பரை என்று
என்னைக்
கூறிக்கொள்ளத் தான்
நான் பெரிதும்
வெட்கமடைகிறேன்
என்றார்

ஹக்ஸ்லி பேசி
முடித்து விட்டு
திரண்டு இருந்த
மக்கள் கூட்டத்தைப்
பார்த்தார்

சார்லஸ் டார்வினை
ஆதரிப்பவர்கள்
சார்லஸ் டார்வினை
எதிர்ப்பவர்கள்
என்ற இரண்டு
நிலையிலேயே மக்கள்
பிரிந்து நின்று
அவர்களுடைய
பேச்சை கேட்க
குழுமியிருந்ததால்
மூன்றாவதாக
தனியாக நின்று
தீர்ப்பு சொல்வதற்கு
யாரும் இல்லை

டார்வினின்
கண்டுபிடிப்புக்கு
ஆதரவாகவும்
டார்வினின்
கண்டுபிடிப்புக்கு
எதிராகவும்
இருவேறுபட்ட
எண்ணங்களைக்
கொண்ட
பிரிவினரிடையே
நடைபெற்ற
விவாதத்தில்
மக்கள் யாருடைய
பக்கம் இருந்தார்கள்
யாருடைய
கருத்துக்கு
ஆதரவாக
இருந்தார்கள்
யாருடைய கருத்தை
உண்மை என்று
ஏற்றுக்
கொண்டார்கள்
என்பதை இனி
பார்ப்போம்

--------- இன்னும் வரும்
--------- 10-09-2018
/////////////////////////////////////


September 08, 2018

திருக்குறள்-பதிவு-16


                      திருக்குறள்-பதிவு-16

விவாதத்தில் கலந்து
கொள்ள வேண்டும்
என்று கேட்டுக் கொண்ட
சார்லஸ் டார்வினின்
ஆதரவாளர்களுக்கு
டார்வின் பேசிய
வார்த்தைகள் இது தான்

என் மூலமாக என்ன
வெளிப்பட வேண்டுமோ
அது வெளிப்பட்டு விட்டது
நான் என்ன கண்டு
பிடிக்க வேண்டுமோ
அதை கண்டு பிடித்து
இந்த உலகத்திற்கு
அளித்து விட்டேன்
அத்துடன் என் கடமை
முடிந்து விட்டது
அதை ஏற்றுக் கொள்வதும்
ஏற்றுக் கொள்ளாததும்
இந்த சமுதாயத்தைச்
சார்ந்தது என்னைச்
சார்ந்தது கிடையாது

என்னுடைய கண்டுபிடிப்பில்
உண்மை இருக்கிறது
என்று அறிபவர்கள்
என்னுடைய கண்டுபிடிப்பை
எற்றுக் கொள்ளட்டும்
என்னுடைய கண்டுபிடிப்பில்
உண்மை இல்லை
என்று வெறுப்பவர்கள்
எதிர்க்கட்டும்
எதிர்ப்பவர்களுக்காக
நான் விவாதம் செய்து
என்னுடைய காலத்தை
வீணாக்க நான்
விரும்பவில்லை
நான் இன்னும்
கண்டுபிடிக்க வேண்டியது  
நிறைய இருக்கிறது
ஆகவே, என்னை ஆராய்ச்சி
செய்ய விடுங்கள்
விவாதத்திற்கு என்னை
அழைக்க வேண்டாம் என்றார்
சார்லஸ் டார்வின்

இந்தப் பிரபஞ்சம்
விசித்திரம் நிறைந்தது
ஒரு விஷயத்தை
இந்த சமுதாயத்திற்கு
அளிக்க வேண்டுமானால்
அந்த விஷயத்தை
அளிக்கக் கூடிய
தகுதியான  நபர்
கிடைக்கும் வரைக்கும்
இந்த பிரபஞ்சம்
காத்திருக்கும் அவர்
வந்தவுடன் அந்த
விஷயத்தை அந்த
நபர் மூலமாக
காலம் பார்த்து
வெளிப்படுத்தும் உலகத்தில்
கண்டுபிடிக்கப்பட்டு
அளிக்கப்பட்டு வந்த
விஷயங்கள் அனைத்தும்
இப்படித்தான் இந்த
மக்களுக்கு வழங்கப்பட்டது
அதில் ஒன்றுதான்
சார்லஸ் டார்வினின்
பரிணாமக் கோட்பாடு

சார்லஸ் டார்வின்
விவாதத்திற்கு வராத
காரணத்தினால் விழா
நாயகன் டார்வின்
இல்லாமலேயே விவாதம்
தொடங்க ஆயத்தமானது

ஆண்டவன் தான் இந்த
உலகத்தைப் படைத்தான்
என்று பேசுவதற்காக
கிறிஸ்தவர்களின் சார்பாக
பிஷப் வில்பர்போர்ஸ்
சிலுவை ஏந்திய கரங்களுடன்
பலத்த ஆரவாரங்களிடையே
தன்னுடைய பேச்சை
துவங்கினார்

மதிப்பிற்குரிய மகா ஜனங்களே
பரமபிதாவின் பெயரால்
நான் உங்களை
ஒன்று கேட்கிறேன்
சாத்தானின் அவதாரமான
சார்லஸ் டார்வின்
நீங்கள் எல்லாம்
குரங்கிலிருந்து
தோன்றியவர்கள் என்று
கொஞ்சமும் நாக்கு
கூசாமல் கூறுகிறார்.
நீங்களே கூறுங்கள்
உங்களுடைய பாட்டன்களும்
முப்பாட்டன்களும்
குரங்குகளா
உங்கள் பாட்டன் குரங்கா
உங்கள் பாட்டி குரங்கா
யாரை குரங்கு என்று
நீங்கள் தீர்மானிக்கப்
போகிறீர்கள்

மற்றொரு கேள்வியையும்
நான் உங்களிடம் கேட்கிறேன்
டார்வின் தன்னுடைய
அபத்தமான தத்துவத்தில்
கூறியிருக்கிறார்
புழு பூச்சியாகி,
பூச்சி வண்டாகி,
வண்டு பறவையாகி,
பறவை பிராணியாகி,
பிராணி குரங்காகி,
குரங்கு மனிதனானான் என்று
இந்தப் பரிணாமப்படி
பார்த்தால்
குரங்கிலிருந்து
தோன்றிய மனிதன்
இத்தனை லட்ச
ஆண்டுகளுக்குப்  பின்னும்
எந்தவித பரிணாம
வளர்ச்சியும் கொள்ளாமல்
அப்படியே தானே
இருக்கிறான்
ஏன் அவனுக்கு இன்னும்
ஒரு கொம்போ,
ஒரு இறக்கையோ,
ஒரு வாலோ அல்லது
வேறு எதுவுமே
உண்டாகவில்லை

குரங்கின் பரிணாமம்
மனிதன் என்றால்
மனிதனின் பரிணாமம்
என்ன என்று டார்வின்
தன்னுடைய தத்துவத்தில்
என்ன கூறியிருக்கிறார்
பரிணாமம் என்றால்
அதற்கு ஒரு இறுதி
முடிவு இருக்க முடியாதே
இதைச் சிந்தித்து பார்க்காமல்
நம்மைப் படைத்த
ஆண்டவனை ஏளனம்
செய்வது என்பது
எவ்வளவு பெரிய பாவம்
என்பதை நீங்கள்
உணரவில்லையா
இந்த எனது கேள்விக்கு
டார்வினின் ஆதரவாளர்கள்
என்ன பதில் சொல்லப்
போகிறார்கள்
என்னுடைய கேள்விக்கு
ஏற்ற பதிலைச்
சொல்லாமல் போனால்
இங்கே குழுமியிருக்கும்
மக்கள் மத்தியில்
தங்கள் தலைவன்
டார்வின் எழுதிய
புத்தகத்தை கிழித்தெறிய
முற்படுவார்களா என்று
சரமாரியாக கேள்வி
கேட்டார்

இதற்கு டார்வின்
ஆதரவாளர்களான
ஹக்ஸிலியும், ஹுக்காரும்
என்ன பதில் சொல்ல
போகிறார்கள் என்று
அனைவரும் காத்துக்
கொண்டிருந்தனர்

--------- இன்னும் வரும்
--------- 08-09-2018
/////////////////////////////////////