October 16, 2018

திருக்குறள்-பதிவு-35


                       திருக்குறள்-பதிவு-35

“””””சினமென்னும்
சேர்ந்தாரைக் கொல்லி
இனமென்னும்
ஏமப் புனையைச்
சுடும்””””

மனிதன் மூன்று
விஷயங்களைத் தன்னுள்
கொண்டு இயங்கிக்
கொண்டு இருக்கிறான்

ஒன்று  : எண்ணம்
இரண்டு : சொல்
மூன்று  : செயல்

சினம் என்பது
எழும்போது
அறிவானது வெளியே
சென்று விடுகிறது
இதனால்
எது நல்லது
எது கெட்டது
என்பதை ஆராய்ந்து
எண்ணிப் பார்த்து
முடிவெடுக்க முடியாத
காரணத்தினால்
மனிதன்
சொல்லக்கூடிய
சொல்லும்,
செய்யக்கூடிய
செயலும்
தவறாகவே முடிந்து
விடுகிறது.

உலகில் நடைபெறும்
குற்றங்களில்
பெரும்பாலும்
சினம் உள்ளே
எழும்போது
அறிவு வெளியே
சென்று விடுவதால்
தான் ஏற்படுகிறது

சினம் என்பது
எழுந்து இயங்க
ஆரம்பித்தவுடன்
நாம் என்ன
பேசுகிறோம்
நாம் என்ன
செயல் செய்கிறோம்
என்பது நமக்கே
தெரியாமல் போய்
விடுகிறது.

தவறான வார்த்தைகளை
பிறர் மனம்
புண்படும்படி
பேசுவோம்
செய்யும் செயல்களைக்
கூடத் தவறாகத்
தான் செய்வோம்
பிறர் ஏற்றுக்
கொள்ளாத்தகாத
செயல்களைத்
தான் செய்வோம்

முதல் நபர்
இரண்டாம் நபரிடம்
பேசிக்
கொண்டிருக்கும்போதே
பேச்சு முற்றி
வாக்குவாதம் நடந்து
சண்டையாகி விடுகிறது
இதனால் முதல் நபர்
சினம் கொண்டு
இரண்டாம் நபரை
கத்தியால் குத்திய
காரணத்தினால்
இரண்டாம் நபர்
அந்த இடத்திலேயே
இறந்து விடுகிறார்
முதல் நபர்
கொலைகாரர் என்ற
பட்டத்துடன்
தண்டனை பெற்று
வருகிறார்.

சினத்தால்
முதல் நபர் செய்த
தப்பால் கிடைத்த
தண்டணையால்
முதல் நபர் மட்டும்
கஷ்டப்படவில்லை
அவருடைய
குடும்பமும் சேர்ந்தே
கஷ்டப்படுகிறது
அதாவது
கொலைகாரன் மனைவி
கொலைகாரன்
பிள்ளைகள் என்று
அவர்களை
அவமானப்படுத்தி
அவர்களை
இச்சமுதாயத்தில் வாழ
முடியாத அளவிற்கு
மன வேதனையை
உண்டாக்குகிறது
இச்சமுதாயம்

கொலை செய்தவரை
பார்த்து இப்படி
தப்பு செய்துவிட்டீர்களே
என்று கேட்டால்
அறிவில்லாமல்
செய்து விட்டேன்
என்று அவர் சொல்வார்
அதாவது சினம்
என்பது எழுந்தபோது
அங்கே அறிவு
வெளியே சென்று
விட்டது என்பது
அதற்குப் பொருள்.

சினம் என்பது
எழும்போது
அறிவு என்பது
வெளியே சென்று
விடுகிறது
நாம் குற்றம் செய்து
குற்றவாளியாகி
தண்டிக்கப்படுகிறோம்
நாம் மட்டும்
கெட்டப் பெயர்
வாங்கிக் கொண்டு
கஷ்டப்படப்பட
மாட்டோம்
நம்முடைய குடும்பமும்
சேர்ந்தே கஷ்டப்படும்
என்பதை நினைவில்
கொண்டு
மனிதன் சினம்
எழும்போது அது
எழாத வண்ணம்
பார்த்துக் கொள்ள
வேண்டும்
என்பதைத் தான்
“””சினமென்னும்
சேர்ந்தாரைக் கொல்லி
இனமென்னும்
ஏமப் புனையைச்
சுடும்””””
என்ற திருக்குறளின்
மூலம் நமக்கு
தெரியப்படுத்துகிறார்
திருவள்ளுவர்

--------- இன்னும் வரும்
---------- 16-10-2018
/////////////////////////////////////////////


October 15, 2018

திருக்குறள்-பதிவு-34


                     திருக்குறள்-பதிவு-34

(10)கல்கி அவதாரம்

தான் நலமாக வாழ
வேண்டும் என்பதற்காக
எச்செயலையும்
செய்யத் தயாராக
இருந்த மனிதர்கள்
வாழ்ந்து கொண்டிருந்த
சமயத்தில் அதாவது
அதர்மத்தின் உச்சத்தில்
மக்கள் வாழ்ந்து
கொண்டிருந்த நிலையில்
உண்டான
கல்கி அவதாரம்
இரண்டு விதமான
விஷயங்களை தெளிவு
படுத்துகிறது

ஒன்று :யாருக்கு
       மறுபிறவி
       உண்டு
       என்பதைத் தெளிவு
       படுத்துகிறது

இரண்டு: யாருக்கு
         மறுபிறவி
         இல்லை
         என்பதைத் தெளிவு
         படுத்துகிறது

கடவுள் எங்கே இருக்கிறார்
அவரை அடையக்கூடிய
வழி என்ன
அதற்கு பயன்படுத்தப்
படுவது எது
என்பதை உணர்ந்து
கர்மாவைக் கழித்து
இறைவனுடன்
இரண்டறக் கலந்து
இறைவனாகவே மாறி
விட்டவர்களுக்கு
மறுபிறவி என்பது
கிடையாது
அத்தகையவர்களுக்கு
கல்கி அவதாரம்
என்பது தான் கடைசி
அதற்கு மேல்
அவர்களுக்கு அவதாரம்
என்பது இல்லை

கல்கி அவதாரம்
படத்தை எடுத்துப்
பார்த்தால் குதிரையின்
பின்னங்கால்கள்
இரண்டும் தரையிலும்,
முன்னங்கால்கள்
இரண்டும் பூமியில்
படாமல் மேல்
நோக்கியும் தூக்கிக்
கொண்டு இருக்கும்
இது எதை குறிக்கிறது
என்றால் தன்னிலும்
மேல் நிலையில் உள்ள
சக்தியுடன் அதாவது
இறைவனுடன்
தொடர்பு கொண்டு
இறைவனாகவே
மாறி விட்டவர்களுக்கு
பிறவி என்பது கிடையாது
என்பதைக் குறிக்கிறது

நீரில் தோன்றிய உயிரினம்
விலங்காகி, மனிதனாகி
இறைவனாகும் போது
பரிணாமம் முடிவடைகிறது
என்பதால் கல்கி
அவதாரத்துடன்
அவதாரங்கள்
முடிந்து விடுகிறது

கடவுள் எங்கே
இருக்கிறார் அவரை
அடையக்கூடிய வழி என்ன
அதற்கு பயன்படுத்தப்
படுவது எது
என்பதை உணர்ந்து
கர்மாவைக் கழித்து
இறைவனுடன்
இரண்டறக் கலந்து
இறைவனாகவே
மாறாதவர்களுக்கு
மறுபிறவி என்பது உண்டு

அதனால் அவர்கள்
மீண்டும் இந்த
கர்மாவின் காரணமாக
பிறக்க வேண்டும்
அதாவது தாயின்
வயிற்றில் தண்ணீரில்
இருந்து ஆரம்பிக்க
வேண்டும்.

அதனைத் தொடர்ந்து
குழந்தை பூமியில்
விழுந்து தவழ்ந்து
நின்று ,ஓடி,
முழுமைத் தன்மை
பெற பல்வேறு
நிலைகளைக் கடக்க
வேண்டும் என்ற
நிலைகளைக் காட்டும்
தசாவதாரத்தின்
பத்து நிலைகளைத்
தொடர வேண்டும்

ஒவ்வொரு முறையும்
பிறந்து வரும்
மனிதன் தனது
கர்மாவைக் கழித்து
இறைவனை உணர்ந்து
இறைவனாக மாறவில்லை
எனில் மீண்டும் மீண்டும்
பிறக்க வேண்டும்

கல்கி அவதாரம்
படத்தில் குதிரையின்
பின்னங்கால்கள்
இரண்டும் தரையிலும்
இரண்டு கால்கள்
பூமியில் படாமல்
மேல்நோக்கியும் இருக்கும்
அந்தக் குதிரையின்
மேல் ஒருவன்
அமர்ந்தபடி கத்தியை
சுழற்றுவது போலவும்
படம் வரையப்பட்டிருக்கும்

அதாவது ஒருவன்
தன்னிலும் மேலான
சக்தியான இறைவனுடன்
தொடர்பு கொண்டு
இறைவனாக மாறாமல்
சிற்றின்பத்தில்
ஈடுபட்டு சண்டையிட்டுக்
கொண்டு வாழ்பவருக்கு
கர்மா என்பது
கூடிக்கொண்டே செல்லும்
அவருக்கு மறுபிறவி
உண்டு என்பதை
இப்படம் குறிக்கிறது

மறுபிறவி யாருக்கு
உண்டு என்பதையும்
மறுபிறவி யாருக்கு
இல்லை என்பதையும்
கல்கி அவதாரம்
விளக்குகிறது

குரங்கிலிருந்து
மனிதன் வந்தான் அதாவது
விலங்கிலிருந்து
மனிதன் வந்தான் என்றார்
சார்லஸ் டார்வின்

சார்லஸ் டார்வினுக்கு
பல நூற்றாண்டுகளுக்கு
முன்பாகவே
தசாவதாரத்தின் மூலம்
நரசிம்ம அவதாரத்தில்
சிங்கம் முகமும்
மனித உடலும்
கொண்ட உயிரினத்திலிருந்து
மனிதன் வந்தான் என்று
நம் முன்னோர்கள்
சொன்னார்கள்

விலங்கும், மனிதனும்
சேர்ந்த நிலையான
யாளி என்ற
உயிரினத்திலிருந்து
விலங்கு நிலை
கழிக்கப்பட்டு மனிதன்
வந்தான் என்பதையும்,

மனிதனிடம் ஏற்படும்
மாற்றத்தை கவனித்தாலே
உயிரினங்களின் பரிணாமக்
கோட்பாட்டைமனிதனே
வெளிப்படுத்துகிறான்
என்பதையும் நாம்
தெரிந்து கொண்டோம்
  
--------- இன்னும் வரும்
---------- 15-10-2018
////////////////////////////////////////////


October 13, 2018

திருக்குறள்-பதிவு-33


                    திருக்குறள்-பதிவு-33

(8) பலராமர் அவதாரம்

நாட்டில் தனக்கென்று
ஒரு இராச்சியத்தை
அமைத்துக் கொண்டு,
சட்ட திட்டங்களை
அமைத்துக் கொண்டு,
வாழ்ந்த மனிதன்
தன் பசியின்
தேவையைத் தீர்த்துக்
கொள்வதற்காக
உழுது பயிரிட்டு
விவசாயம் செய்து
வாழ்ந்தான்
விவசாயம் செய்வதற்கு
ஏதுவாக கலப்பையை
பயன் படுத்தினான்

உயிரினங்களின்
பரிணாமக்
கோட்பாட்டின்படி
நாட்டில் வாழ்ந்த
மனிதன் விவசாயம்
செய்து வாழ்வதற்கு
ஏதுவாக கலப்பையை
பயன் படுத்தி
விவசாயம் செய்து
வாழ்ந்தான்
என்பதைக் குறிப்பதே
பலராமர் தன் தோளில்
சுமந்திருக்கும்
கலப்பை ஆகும்.

இது தான்
பலராமர் அவதாரம்
எனப்படும்.

(9)கிருஷ்ண அவதாரம்

பல்வேறு குழுக்களாக
பிரிந்து தனித்தனியாக
தங்களுக்கென்று ஒரு
ராச்சியத்தை அமைத்துக்
கொண்டு தங்களுடைய
உணவுத் தேவையை
தாங்களே பூர்த்தி
செய்து கொள்ளும்
வகையில் விவசாயம்
செய்து வாழ்ந்த
மனிதன் நாளடைவில்
நிலம், நீர், ஆகாயம்
ஆகியவற்றில்
எல்லைகளை
வகுத்துக் கொண்டு
பல்வேறு
சட்டதிட்டங்களை
உருவாக்கிக் கொண்டு
வாழ்ந்தான்

பல்வேறு
சட்டதிட்டங்களை
வகுத்துக் கொண்டு
மனிதன் வாழ்ந்தாலும்
விலங்கின் தலையும்,
மனித உடலும்
கொண்ட யாளி என்ற
உயிரினத்திலிருந்து
விலங்கு நிலை
கழிக்கப்பட்டு
தோன்றிய மனிதனிடம்
விலங்கின் முக்கியமான
இரண்டு செயல்கள்
அப்படியே மனிதனிடம்
பதிந்து விட்டது

ஒன்று : உயிர் பறித்தல்
இரண்டு: பிறர்
         சுதந்திரத்தை
         பறித்தல்

சிங்கம் மானைக்
கொல்லும் செயல்
என்பது,
மானின் உயிரை
பறித்தலையும்,
மானின் சுதந்திரத்தை
பறித்தலையும்
குறித்தாலும்
அவைகள் தங்கள்
உணவுத் தேவைக்காகத்
தான் கொல்கிறதே
ஒழிய பிற
உயிர்களை
துன்புறுத்தி கொல்ல
வேண்டும் என்ற
தப்பான எண்ணம்
கொண்டு
கொல்லவில்லை

ஆனால் மனிதன்
தான் வாழ
வேண்டும் என்பதற்காக
மனதால்
நினைத்து கூட
பார்க்க முடியாத
எல்லாவிதமான
தப்பான காரியத்தையும்
செய்யத் துணிவதுடன்,
பிற உயிரை
பறித்தலையும்,
பிறர் சுதந்திரத்தைப்
பறித்தலையும்
பேராசை, சினம்,
கடும்பற்று,
முறையற்ற
பால்கவர்ச்சி,
உயர்வு - தாழ்வு
மனப்பான்மை,
வஞ்சம் ஆகிய
ஆறு வகையான தீய
குணங்களைக் கொண்டு
பாவம் என்று
தெரிந்தும் துணிந்து
பாவத்தைச்
செய்கிறான்.

உலகில் செய்யப்பட்டுக்
கொண்டிருக்கும்
அனைத்து
பாவங்களையும்
நாம் நன்கு
ஆராய்ந்து பார்த்தால்
உலகில் செய்யப்படும்
பெரும்பாலான
பாவங்கள் அனைத்தும்
உயிர் பறித்தல்,
பிறர் சுதந்திரத்தைப்
பறித்தல் என்ற
இரண்டுக்குள்
தான் இருக்கும்
என்பதையும்
இதிலிருந்து
மனிதன்
விலங்குத் தன்மையுடன்
தான் இருக்கிறான்
மனிதத் தன்மையை
அடையவில்லை
என்பதையும்
நாம் தெரிந்து
கொள்ளலாம்

இவ்வாறு
தான் நலமாக
வாழ வேண்டும்
என்பதற்காக
பிற உயிரை
பறிப்பது
பிறர் சுதந்திரத்தை
பறிப்பது
போன்ற செயல்களை
செய்யும் மனிதர்கள்
வாழ்ந்த நிலையை
அதாவது அதர்மத்தின்
உச்சத்தில்
மனிதனுடைய வாழ்க்கை
இருந்ததைக் குறிப்பது
கிருஷ்ண அவதாரம்
ஆகும்

--------- இன்னும் வரும்
---------- 13-10-2018
///////////////////////////////////////////