December 19, 2018

திருக்குறள்-பதிவு-70


                       திருக்குறள்-பதிவு-70

டாலமி சொன்ன
பூமி மையக் கோட்பாடு
தவறு என்றும் ;
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ் கொன்ன
சூரிய மையக் கோட்பாடே
சரியானது என்றும் ;
ஜியார்டானோ புருனோ
சொன்ன காரணத்தினால்
ஜியார்டானோ புருனோ
பைபிளில் உள்ள
கருத்திற்கு எதிராக
கருத்து சொல்கிறார் ;
கத்தோலிக்க
கிறிஸ்தவ திருச்சபைக்கு
எதிராக செயல்படுகிறார் ;
என்று மதத் துவேஷ
குற்றம் அவர் மேல்
சுமத்தப்பட்டு
ஜியார்டானோ புருனோ
1585-ஆம் ஆண்டு
இங்கிலாந்திலிருந்து
வலுக்கட்டாயமாக
வெளியேற்றப்பட்டார்.

1585-ஆம் ஆண்டு
இங்கிலாந்திருந்து
வெளியேற்றப்பட்ட
ஜியார்டானோ புருனோ
பிரான்ஸில்
தங்கினார்
அங்கு அவர்
அரிஸ்டாட்டில்
சொன்ன கருத்துக்கள்
பலவற்றில் உள்ள
குறைகளை சுட்டிக்காட்டி
சரியான விளக்கங்களை
மக்களிடம்
கொண்டு சென்றார்
அரிஸ்டாட்டிலை
எதிர்த்து கருத்து
சொன்ன காரணத்தினால்
ஜியார்டானோ புருனோ
1586-ஆம் ஆண்டு
பிரான்ஸிலிருந்து
வலுக்கட்டாயமாக
வெளியேற்றப்பட்டார்

பிரான்ஸிலிருந்து
வெளியேறிய
ஜியார்டானோ புருனோ
ஜெர்மனி சென்றார்

ஜெர்மனியில்
1586-1587
1587-1588
ஆகிய இரண்டு
ஆண்டுகள்
ஜெர்மனியில் தங்கி
அரிஸ்டாட்டிலின்
கருத்துக்கு எதிர்
கருத்து தெரிவித்த
காரணத்தினால்
ஜெர்மனியின்
கோபத்திற்கு ஆளான
காரணத்தால்
ஜியார்டானோ
புருனோவால்
ஜெர்மனியில்
நீண்ட நாட்கள்
இருக்க முடியவில்லை

1588-ஆம் ஆண்டு
பராகுவே(Prague)
சென்றார்

1591-ஆம் ஆணடு
இத்தாலிக்க நண்பர்கள்
ஜியார்டானோ
புருனோவை
அழைத்ததின் பேரில்
ஜியார்டானோ புருனோ
இத்தாலி சென்றார்
நினைவாற்றல்
கணக்கை எப்படி
பயன்படுத்த வேண்டும்
என்பதையும்,
அதன் மாய
மந்திரங்களை
எப்படி பயன்படுத்த
வேண்டும் என்பதையும்
கற்றுக் கொடுப்பதற்காக
அழைக்கப்பட்டார்

ஜியோவானி மொசிங்கோ
(Giovanni Mocenigo)
எதிர்பார்த்தபடி
ஜியார்டானோ புருனோ
மாயங்கள் எதுவும்
சொல்லித் தரவில்லை
ஏமாந்த
ஜியோவானி மொசிங்கோ
ஜியார்டானோ புருனோ
கிறிஸ்தவ மதத்திற்கு
எதிராக
செயல்படுகிறார்
என்று அவரை
குற்றம் சாட்டி
மதத் துவேஷம்
என்ற போர்வையில்
கத்தோலிக்க
கிறிஸ்தவ
திருச்சபையிடம்
புருனோவைக்
காட்டி கொடுத்தார்

டாலமி சொன்ன
பூமி மையக் கோட்பாடு
தவறு என்றும் ;
சூரியனை
மையமாக வைத்து
பூமி சுற்றுகிறது
என்ற நிக்கோலஸ்
கோப்பர் நிக்கஸ்
சொன்ன கோட்பாடு
சரியானது என்றும் ;
ஜியார்டானோ புருனோ
சொன்ன
காரணத்திற்காக
பைபிளில் உள்ள
கருத்திற்கு எதிராக
கருத்து சொன்னார் ;
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபைக்கு எதிராக
செயல்பட்டார் ;
என்று
1592-ஆம் ஆண்டு
மே மாதம் 22-ஆம் தேதி
ஜியார்டானோ புருனோ
கைது செய்யப்பட்டார்

1593-ஆம் ஆண்டு
ரோமிற்கு கொண்டு
வரப்பட்டார்
அன்றைய போப்
எட்டாம் கிளமெண்ட்
(Pope Clement VIII)
தன்னுடைய நிலையில்
உள்ள உண்மையை
உணர்ந்து கொள்வார்
அதனை புரிந்து
கொண்டு நல்ல
ஒரு முடிவை
எடுப்பார் என்று
ஜியார்டானோ புருனோ
எதிர்பார்த்தார்
ஆனால்
ஜியார்டானோ
புருனோவின்
எதிர்பார்ப்பு
ஈடேறவில்லை
ஜியார்டானோ புருனோ
சிறையில்
அடைக்கப்பட்டார்.

---------  இன்னும் வரும்
---------  19-12-2018
///////////////////////////////////////////////////////////


December 17, 2018

திருக்குறள்-பதிவு-69


                       திருக்குறள்-பதிவு-69

1581-ஆம் ஆண்டு
பிரான்ஸ் வந்த
ஜியார்டானோ புருனோ
பிரான்ஸிலுள்ள
பாரிசில் அரசர்
மூன்றாம் ஹென்றியின்
(Henry III) ஆதரவுடன்
1581-1582
1582-1583
ஆகிய இரண்டு
ஆண்டுகள் தங்கினார்

இங்கே ஜியார்டானோ
புருனோ தன்னுடைய
அசாத்திய பேச்சுத்
திறமையால் தனக்கென்று
பல நண்பர்களை
உருவாக்கிக் கொண்டார்
இவர்கள் அனைவரும்
ஜியார்டானோ புருனோ
அவர்களின் பேச்சால்
கவரப்பட்டவர்கள் ;
இவர்கள் அனைவரும்
கடவுள் தொடர்பான
செயல்களில்
நம்பிக்கை உள்ளவர்கள் ;
நினைவுக் கலையை
பலப்பல வடிவங்களில்
அவர்களுக்கு
ஜியார்டானோ புருனோ
சொல்லித் தந்தார்.

ரோமாண்டுலாலி
(Raymond Lully)
பற்றியும்,
நினைவுக்கலையின்
அற்புதம் பற்றியதுமான
இவரின் வெளியீடுகள்
பாரிஸில் தான் நிகழ்ந்தன.

ஜியார்டானோ புருனோ
1583-ஆம் ஆண்டு
இங்கிலாந்து சென்றார்
அங்கே காஞ்டெலாஜோ
என்ற நண்பரின்
உதவியுடன்
இங்கிலாந்து அரசியை
(Queen Elizabeth I)
அணுகினார்.
1583-1584
1584-1585
ஆகிய இரண்டு ஆண்டுகள்
இங்கிலாந்தில் தங்கினார்
இங்கிலாந்தில் இரண்டு
ஆண்டுகள் வாழ்ந்த
போதே அவரது
சிறந்த படைப்புகள்
வெளியிடப்பட்டன
இங்கு தான் பிரபஞ்சம்
பற்றிய தனது புதிய
கருத்தை புத்தகமாக
வெளியிட்டார்
ஜியார்டானோ புருனோ

இங்கிலாந்தில் தான்
ஜியார்டானோ புருனோ
உலகப் பிரசித்திப்
பெற்ற தன்னுடைய
புத்தகங்களை ;
வரலாற்றை மாற்றி
அமைத்த தன்னுடைய
புத்தகங்களை ;
மிகப் பெரும்
பிரச்சினைகளை
ஏற்படுத்திய தன்னுடைய
புத்தகங்களை ;
வெளியிட்டார்


டa Cena de
le Ceneri
(1584 ; The Ash
Wednesday Supper)


De I'infinito
universo et mondi
(1584 ; On the
Infinite Universe
and Worlds)


De la causa,
principio et uno
(1584 ; Concerning
the Cause,
principle, and One)

இந்த மூன்று
புத்தகங்களிலும்
ஜியார்டானோ புருனோ
தன்னுடைய இரண்டு
முக்கியமான
கருத்துக்களை விளக்கமாக
குறிப்பிட்டு இருந்தார்

ஒன்று
சூரியனை மையமாக
வைத்து பூமி
சுற்றுகிறது என்ற
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ் சொன்ன
கருத்து சரியானது
என்ற கருத்தை
வெளியிட்டு இருந்தார்

இரண்டு
விண்மீன்களுக்கு
இடையே ஈதர் என்ற
காற்று உள்ளது
என்ற கருத்தை
வெளியிட்டு இருந்தார்.

பிரபஞ்சம்
எல்லையில்லாதது ;
முடிவில்லாதது ;
பிரபஞ்சத்தின் ஒரு
பகுதியாக உள்ளது தான்
சூரிய குடும்பம் ;

சூரிய குடும்பத்தில்
பூமி தன்னைத்தானே
சுற்றுகிறது ;
பூமி தன்னைத்தானே
சுற்றுவதால் இரவுபகல்
உண்டாகிறது ;
சூரியன் என்பது இரவு
வானத்தில் தெரியும்
விண்மீன் போல
இருப்பது ஆகும் ;
“””“”சூரியன் தான்
பூமி போன்ற
கோள்களின் மையம்””””
சூரியனை மையமாக
வைத்துத் தான்
பூமி சுற்றுகிறது
இவையனைத்தும்
சேர்ந்தது தான்
சூரிய குடும்பம் ;

வானத்தில் தெரியும்
பல்வேறுபட்ட
விண்மீன்களுக்கும்
இதே போன்ற
கோள்கள் உண்டு ;
விண்மீன்கள்
பிரபஞ்ச வெளியில்
விரவிக் கிடக்கின்றன ;

விண்மீன்கள் இயற்பியல்
விதிப்படி இயங்குகின்றன ;
விண்மீன்களுக்கு
இடையே ஈதர் என்ற
காற்று உள்ளது ;
என பல்வேறுபட்ட
கருத்துக்களை விதைத்தார்
ஜியார்டானோ புருனோ

டாலமி சொன்ன
பூமி மையக் கொள்கை
தவறு என்றும் ;
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ் சொன்ன சூரிய
மையக் கொள்கையே
சரியானது என்றும் ;
ஜியார்டானோ புருனோ
சொன்னது அவருக்கு
பிரச்சினையை கொஞ்சம்
கொஞ்சமாக கொண்டு
வந்து கொண்டு இருந்தது

---------  இன்னும் வரும்
---------  17-12-2018
///////////////////////////////////////////////////////////


December 16, 2018

திருக்குறள்-பதிவு-68


                       திருக்குறள்-பதிவு-68

1576-ஆம் ஆண்டு
ஜியார்டானோ
புருனோ
ரோமை விட்டு
வெளியேறினார்

அவர் முதலில்
ஜெனிவா (Geneva)
சென்றார்

1579-ஆம் ஆண்டு
ஜெனிவாவிலிருந்து
டௌலோவ் (Toulouse)
சென்றார்

அங்கு
1579 முதல் 1581 வரை
இரண்டு ஆண்டுகள்
தங்கினார்
முதுகலை
பட்டம் பெற்றார்
கற்பித்தல் தொழிலை
நடத்தி வந்தார்

ஜியார்டானோ புருனோ
காலத்தில்
அரிஸ்டாட்டில்
சொல்வது தான்
சரியானது என்றும்
அது தான் அறிவியல்
என்றும் இருந்தது

அரிஸ்டாட்டில்
சொன்னால்அனைத்தும்
சரியானதாக இருக்கும்
என்று அனைவரும்
கண்மூடித்தனமாக
நம்பிக் கொண்டிருந்த
காலகட்டம்

அந்தக் காலகட்டத்தில்
வாழ்ந்த மக்கள்
ஒருவர் கூட
அரிஸ்டாட்டில்
சொன்ன கண்டுபிடிப்பில்
தவறு இருக்கிறது
என்று சொன்னால்
ஏற்றுக் கொள்ள
மாட்டார்கள்

நாம் ஒருவரை
கண்மூடித் தனமாக
நம்பி விட்டால்
அவர் உண்மையாக
தப்பு செய்து
இருந்தாலும்
அவர் தப்பு
செய்திருக்கிறார்
என்று பிறர் சொன்னால்
நாம் அந்த உண்மையை
ஏற்றுக் கொள்ள
மாட்டோம்

அத்தகைய ஒரு
மனநிலையில்
அதாவது
அரிஸ்டாட்டில் செய்த
தப்பை சொன்னாலும்
அதை ஏற்றுக்
கொள்ளாத மன
நிலையில்
மக்கள் இருந்தனர்

அதாவது மக்கள்
அனைவரும்
அரிஸ்டாட்டிலின் மீதும்
அவருடைய அறிவியல்
கண்டுபிடிப்பின்
மீதும் அளவற்ற
நம்பிக்கை
வைத்து இருந்தனர்
அரிஸ்டாட்டிலை
விஞ்ஞான
உலகத்தின் கடவுளாக
நினைத்திருந்தனர்

அந்த
காலகட்டத்தில் தான்
ஜியார்டானோ புருனோ
அரிஸ்டாட்டிலை
எதிர்த்து பல்வேறு
விதமான கருத்துக்களை
வலியுறுத்தி
அரிஸ்டாட்டில்
சொன்ன கருத்துக்களை
தப்பு என்று
எடுத்துக் காட்டுகளுடன்
எடுத்துச் சொல்லி
கட்டுரைகள்
எழுதி இருந்தார்

ஆண்களுக்கும்
பெண்களுக்கும்
பற்களின்
எண்ணிக்கை வேறுபடும்
பெண்களின் பற்களின்
எண்ணிக்கை
ஆண்களின் பற்களின்
எண்ணிக்கையை
விட குறைவு
என்று அரிஸ்டாட்டில்
எழுதி இருந்தார்

அதைத் தவறு
என்று சுட்டிக் காட்டி
ஜியார்டானோ புருனோ
அரிஸ்டாட்டிலை
எதிர்த்து
கருத்து சொன்னது
ஜியார்டானோ புருனோ
அரிஸ்டாட்டிலை
எதிர்க்கிறார்
என்ற நிலையை
உருவாக்கி விட்டது

அதுமட்டுமல்லாமல்
அரிஸ்டாட்டிலின்
பெரும்பாலான
கருத்துக்கள்
பைபிளில் உள்ள
கருத்துக்களுடன்
ஒன்றுபட்டு இருந்த
காரணத்தினால்
ஜியார்டானோ  புருனோ
அரிஸ்டாட்டிலை
எதிர்த்து
கருத்து சொன்னது
பைபிளையும்
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையையும்
மறைமுகமாக
ஜியார்டானோ
புருனோ எதிர்க்கிறார்
என்ற நிலையை
உருவாக்கி விட்டது

அரிஸ்டாட்டிலின்
கருத்து தவறு என்றால்
பைபிளின் கருத்தும்
தவறு என்று தானே
அர்த்தம்

பைபிளை மக்களிடம்
கொண்டு செல்லும்
கத்தோலிக் கிறிஸ்தவ
திருச்சபையின்
செயல்களும் தவறு
என்று தானே அர்த்தம்

ஜியார்டானோ புருனோ
அரிஸ்டாட்டிலின்
கருத்தை தவறு
என்று சொன்னதன்
மூலமாக
மறைமுகமாக
பைபிளையும்
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையையும்
இழிவு படுத்தியது
போல் ஆகிவிட்டது

எனவே
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபை
ஜியார்டானோ புருனோ
மீது அளவற்ற
கோபம் கொண்டது

அதன் விளைவாக,
ஜியார்டானோ புருனோ
டௌலோவ்விலிருந்து
பிரான்ஸ் நோக்கி
1581-ஆம் ஆண்டு
பயணம் செய்ய
வேண்டியது
ஆகிவிட்டது

---------  இன்னும் வரும்
---------  16-12-2018
///////////////////////////////////////////////////////////