January 02, 2019

திருக்குறள்-பதிவு-78


                        திருக்குறள்-பதிவு-78

"என்னால் அற்புதத்தை
தாங்க முடியவில்லை
புருனோ …………………………………………….!
நான் செத்துக் கொண்டு
இருக்கிறேன்……………………………………!
என்னை
காப்பாற்று புருனோ ……………!
நான் செத்துக் கொண்டு
இருக்கிறேன்……………………………………!
என்றாள் போஸ்கா (FOSCA)
என்ற அந்த பெண்

“இப்போது நீ !
அற்புதத்தை நேருக்கு
நேராக சந்தித்துக் கொண்டு
இருக்கிறாய்……………………………… !
அற்புதத்தை தரிசனம்
செய்து கொண்டு
இருக்கிறாய்………………………………..!
அற்புதம் என்றால் என்ன
என்று கொஞ்சம் கொஞ்சமாக
உணர்ந்து கொண்டு
வருகிறாய்………………………………….!
அற்புதமாகவே கொஞ்சம்
கொஞ்சமாக மாறிக்
கொண்டே வருகிறாய்……!.

“இந்த பிரபஞ்சத்தில்
உள்ள அனைத்தும்
எப்படி ஒன்றுடன் ஒன்று
இணைக்கப்பட்டுள்ளது
என்பதை கொஞ்சம்
கொஞ்சமாக அறிந்து
கொண்டே வருகிறாய்………!
அவைகள் எப்படி
இயக்க ஒழுங்கு மாறாமல்
இயங்கிக் கொண்டிருக்கிறது
என்பதை கொஞ்சம்
கொஞ்சமாக அறிந்து
கொண்டே வருகிறாய்……..!
இவைகள் அனைத்தையும்
தன்னுள் வைத்து
இயக்கிக் கொண்டிருப்பது
எது என்பதை கொஞ்சம்
கொஞ்சமாக உணர்ந்து
கொண்டே வருகிறாய்…….!”

இப்போது நீ அற்புதமாகவே
மாறி விட்டாய்………………………! "

"சிறிது நேர
மௌனத்திற்குப்பின்
ஜியார்டானோ புருனோ
மீண்டும் பேச ஆரம்பித்தார்."

"இப்போது நீ படிப்படியாக
மாற்றம் அடைந்து கொண்டே
வருகிறாய்…………………………………….!
உன் சுவாசம் அற்புதத்தின்
மையத்தை விட்டு வெளி
வருகிறது………………………………………..!
இப்போது நீ பழைய
நிலைக்கு கொஞ்சம்
கொஞ்சமாக மாறிக்
கொண்டே வருகிறாய்……..!
நீ பழைய நிலைக்கு
மாறுவதை உன்னால்
உணர முடிகிறது அதை
கொஞ்சம் கொஞ்சமாக
உணர்ந்து கொண்டே
வருகிறாய்…………..!

"கொஞ்சம் கொஞ்சமாக
சுவாசம் உன்னுள் ஓட
ஆரம்பிக்கிறது………………………….!
உட்சுவாசம்
வெளி சுவாசம் என மாறி
மாறி ஓட ஆரம்பிக்கிறது…..! "

"அற்புதத்தின் மூலம்
கிடைத்த சக்தி
உன் உடல் முழுவதும்
கொஞ்சம் கொஞ்சமாக
பரவ ஆரம்பிக்கிறது………………….!
உன்னுடைய தலையில்
இருந்து படிப்படியாக
கீழே இறங்கி உன்னுடைய
கழுத்திற்கு வருகிறது…….………!
கழுத்தில் இருந்து
படிப்படியாக கீழே இறங்கி
உன்னுடைய தோளுக்கு
வருகிறது…………………………………………..!
தோளில் இருந்து
படிப்படியாக கீழே இறங்கி
உன்னுடைய இடுப்பிற்கு
வருகிறது…………………………………………..!
இடுப்பிலிருந்து
படிப்படியாக கீழே இறங்கி
உன்னுடைய கால்களுக்கு
வருகிறது…………………………………………..!
அற்புதத்தின் அற்புத சக்தி
அற்புதத்தின் அளப்பறிய
சக்தி உன்
உடல் முழுவதும்
கொஞ்சம் கொஞ்சமாக
பரவுகிறது………………………………………!
பரவிக் கொண்டே
வருகிறது………………………………………..!
இப்போது நீ அற்புதத்தால்
முழுவதும் நிரப்பப்பட்டு
விட்டாய்……………………………………………!!
இப்போது நீ
அற்புதம் என்றால் என்ன
என்பதை உணர்ந்து
கொண்டு விட்டாய்" என்றார்
ஜியார்டானோ புருனோ

"ஜியார்டானோ புருனோ
தன்னுடைய ஆன்ம ஒளியை
போஸ்கா (FOSCA) என்ற
அந்த பெண்ணின் உயிரில்
ஏற்றி வைத்தார்".

ஜியார்டானோ புருனோ
பேச ஆரம்பித்தார்,
"அற்புதம் என்றால் என்ன
என்பதை நான் உனக்கு
காட்டி விட்டேன் !
அற்புதம் என்றால் என்ன
என்பதை இந்நேரம் நீ
உணர்ந்து கொண்டு இருப்பாய்…?
இனிமேல் அற்புதம்
அற்புதம் என்று
அற்புதத்தை தேடி
அலையாதே" என்று
போஸ்கா (FOSCA) என்ற
அந்த பெண்ணிடம் பேசி
விட்டு ஜியார்டானோ
புருனோ கதவை திறந்து
கொண்டு வெளியே
சென்று விட்டார்.

அற்புதத்தை நேரில் சந்தித்து
அந்த அற்புதமாக
மாறி விட்ட போஸ்கா (FOSCA)
அற்புதம் என்றால் என்ன
என்பதை ஜியார்டானோ
புருனோவின் மூலமாக
முதன் முதலாக
தெரிந்து கொண்டாள்.

"அற்புதத்தை முதன்
முதலாக தரிசிக்கும் போது
போஸ்காவிற்கு (FOSCA)
ஏற்பட்ட அச்சத்தின் பாதிப்பு
அவளை மிரட்சியடைய
வைத்து விட்டதால்
அவளையும் அறியாமல்
அவள் கண்களிலிருந்து
கண்ணீர் அரும்பியது
தன்னை மறந்து அவள்
கதறி அழுதாள் ;
தேம்பி தேம்பி அழுதாள் ;
மனம் விட்டு அழுதாள் ;
அவளுடைய அழுகுரலின்
ஒலி அந்த வீட்டையே
அதிர வைத்தது ;தன்னை
மறந்து அந்த பெண்
சத்தம் போட்டு அழுது
கொண்டு இருந்தாள் ;
அற்புதத்தை உணர்ந்த
நிலையை
போஸ்காவால் (FOSCA)
வார்த்தைகளால் வெளிப்
படுத்த முடியவில்லை !
கண்ணீரால் மட்டுமே
வெளிப்படுத்த முடிந்தது !! " .

---------  இன்னும் வரும்
---------  02-01-2019
///////////////////////////////////////////////////////////



January 01, 2019

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்-01-01-2019


           ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் - 01-01-2019 !!!

அன்பிற்கினியவர்களே !

""தாய்க்குப்
பின் தாரம்"""
              
என்ற பழமொழி
எவ்வளவு உயர்ந்த
அர்த்தங்களை
தன்னுள் கொண்டுள்ளது
என்பது எத்தனை
பேருக்குத் தெரியும்

கடவுளின் குணங்களாக
முக்கியமாக இரண்டைக்
குறிப்பிடலாம்

 ஒன்று  : அன்பு
இரண்டு : கருணை

மாமரத்தில் உள்ள
மாங்காயை மாமரம்
தன்னுடைய காம்பின்
மூலம் கீழே விழாமல்
தாங்கி பிடித்துக்
கொண்டு இருக்கிறது.
இதற்குப் பெயர்
தான் அன்பு ;

மாங்காய்க்கு
தேவையானதை
மாமரம் அந்த
காம்பு வழியாக
அளித்துக் கொண்டு
இருக்கிறது
இதற்குப் பெயர்
தான் கருணை ;

மனிதரில் இந்த
இரண்டு உயர்ந்த
குணங்களும் உலகில்
இரண்டு நபர்களுக்கு
மட்டுமே அதிகமான
அளவில் உள்ளது.

   ஒன்று  : தாய்
  இரண்டு  : தாரம்

ஒரு தாய்
தான் பெற்றெடுத்த
பிள்ளையை
பாதுகாப்பாக வைத்துக்
கொண்டு பராமரித்துக்
கொண்டு வருகிறாள்
இதற்குப் பெயர்
தான் அன்பு ;

அந்த பிள்ளை
தன்னுடைய அன்றாடக்
கடமைகளைத்
தானே செய்யத்
துவங்குவதற்கு முன்பும் ;
தன்னுடைய கடமைகளைத்
தானே செய்யத்
துவங்கிய பின்பும் ;
அந்த பிள்ளைக்கு
உடல் நிலை
சரியில்லாத போது
தன்னுடைய
அத்தியாவசிய
அன்றாடக் கடமைகளைத்
தானே செய்ய
முடியாமல் போகும் போதும் ;
தாயானவள் தன்னுடைய
பிள்ளைக்குத் தேவையான
அத்தனை செயல்களையும்
செய்கிறாள். இதற்குப்
பெயர் தான் கருணை ;

அந்த ஆண் குழந்தை
பெரியவனாக வளர்ந்து
திருமணம் நடந்து
முடிந்து கணவன்,
மனைவி என்ற
உறவிற்குள்
நுழைந்த பிறகு
மனைவியானவள்
கணவனை மிகுந்த
அன்புடன் பார்த்துக்
கொள்கிறாள்
இதற்குப் பெயர்
தான் அன்பு ;

கணவனுக்கு உடம்பு
சரியில்லை என்ற
நிலை வரும்போது ;
தன்னுடைய அன்றாட
அத்தியாவசிய
கடமைகளைத்
தன்னால் செய்ய
முடியாத நிலை
கணவருக்கு வரும்போது ;
மனைவியானவள்
கணவனுக்கு செய்ய
வேண்டிய அன்றாட
அத்தியாவசியமானக்
கடமைகளைச் செய்கிறாள் ;
இதற்குப் பெயர்
தான் கருணை ;

ஒரு ஆண் பிள்ளையாக
இருக்கும் போதும் ;
உடல் நிலை குன்றி
இருக்கும் போதும் ;
தன் அன்றாடக்
கடமைகளை தானே
செய்ய முடியாமல்
இருக்கும் போதும் ;
தாய் எப்படி தன்னுடைய
பிள்ளைக்குச் செய்ய
வேண்டிய அன்றாட
அத்தியாவசியக்
கடமைகளைச் செய்ய
அன்பையும் ;
கருணையையும் ;
வாரி வழங்குகிறாளோ !

அவ்வாறே,
அந்த ஆண் பிள்ளை
திருமணம் முடிந்து
கணவன், மனைவி
என்ற பந்தத்திற்குள்
நுழைந்த பிறகு,
உடல் நிலை
குன்றிய நிலைக்கு
ஆளாகும் போது ;
தன்னுடைய அன்றாட
அத்தியாவசியக்
கடமைகளைத் தானே
செய்ய முடியாமல்
போகும் போது ;
மனைவி தன்னுடைய
கணவனுக்குத் தேவையான
கடமைகளைச் செய்ய
அன்பையும் ;
கருணையையும் ;
வாரி வழங்குகின்றாள்

இத்தகைய
காரணங்களினால்
தான் நாம்
“ தாய்க்கு பின் தாரம் “
என்கிறோம்

இது வரை
நாம் தாயையும்,
தாரத்தையும் மதித்துப்
போற்றவில்லை என்றால்
இந்த ஆங்கிலப்
புத்தாண்டு
01-01-2019 ஆம் ஆண்டில்
இருந்தாவது அவர்களை
மதித்துப் போற்றுவோம்

ஆங்கில புத்தாண்டு
வாழ்த்துக்கள் !!
01-01-2019

-------என்றும் அன்புடன்
-------K.பாலகங்காதரன்
-------01-01-2019
/////////////////////////////////////////////////

December 30, 2018

திருக்குறள்-பதிவு-77


                     திருக்குறள்-பதிவு-77

“இந்தப் பிரபஞ்சத்தில்
உட்சுவாசத்தை
(INNER BREATH)
யாரெல்லாம்
செய்கிறார்கள்
என்று தெரியுமா?” என்றார்
ஜியார்டானோ புருனோ

“எனக்கு தெரியாது!”
என்றாள் அந்தப் பெண்

“இந்தப் பிரபஞ்சத்தில்
உள்ள உயிரினங்கள்
அனைத்தும்
உட்சுவாசத்தை
செய்து வருகின்றன
மனிதர்களில் ஒருசில பேர்
உட்சுவாசத்தை முறைப்படி
உணர்ந்து செய்து
வருகின்றனர்” என்றார்
ஜியார்டானோ புருனோ

மேலும்
ஜியார்டானோ புருனோ
சில தகவல்களை
அந்தப் பெண்ணிற்கு
சொல்கிறார்
“உயிரினங்கள் அனைத்தும்
அவைகளுக்கு ஏற்ற
வகையில் உட்சுவாசத்தை
தொடர்ந்து செய்து
வருகின்றன ;
இவ்வாறு தொடர்ந்து
இந்த உயிரினங்கள்
உட்சுவாசத்தை செய்து
வருகின்ற காரணத்தினால்
இயற்கையில் தங்களுக்கு
ஏற்படக்கூடிய
இடர்ப்பாடுகளை
முன்கூட்டியே உணர்ந்து
தங்களுக்கு ஏற்படக்கூடிய
இடர்ப்பாடுகளிலிருந்து
தங்களை காப்பாற்றிக்
கொள்வதற்கான
வழிமுறைகளை வகுத்து
இந்தப் பிரபஞ்சத்தில்
இயற்கையோடு
இணைந்து ஒன்றுபட்டு
வாழ்கின்றன ! ”

“ஆனால், மனிதன்
உட்சுவாசம் என்பது என்ன
என்று தெரியாத
காரணத்தினாலும்
உட்சுவாசத்தை முறைப்படி
கற்றுத் தேர்ந்து
செய்யாத காரணத்தினாலும்
இந்தப் பிரபஞ்சத்தில்
உயிருடன் வாழும் போது
வாழ்க்கையில் ஏற்படக்கூடிய
இடர்ப்பாடுகளை
முன்கூட்டியே உணர்ந்து
தங்களுக்கு ஏற்படக்கூடிய
இடர்ப்பாடுகளிலிருந்து
தங்களை காப்பாற்றிக்
கொள்வதற்கான
வழிமுறைகளை வகுக்காமல்
இந்தப் பிரபஞ்சத்தில்
இயற்கையோடு இணைந்து
வாழ முடியாத நிலையை
மனிதன் அடைகிறான் ! ”
என்றார்
ஜியார்டானோ புருனோ

“இத்தகைய சிறப்பு
மிக்க உட்சுவாசத்தை
தெரிந்து கொண்டால்
அற்புதம் ! அற்புதம் !
என்று அலையாமல்
அற்புதத்தை உணர்ந்து
அற்புதமாகவே
மாறி விடுவாய்………..!!”
என்றார்
ஜியார்டானோ புருனோ

”என் அருகில் வா இங்கே
வந்து அமர்ந்துகொள்
உன் சுவாசத்தை
அடி வயிற்றிலிருந்து மேல்
நோக்கி நன்றாக இழு
உன் சுவாசம்
வெளிப்புறமாகவும்
உட்புறமாகவும்
ஓடிக் கொண்டு இருப்பதை
நீ இப்போது உணர்கிறாய்”.

“ஆமாம் ! ஆமாம் ! நான்
அதை உணர்கிறேன்
புருனோ……………………………! ”

“நன்றாக உன்
சுவாசத்தை கவனி
இரண்டு சுவாசங்களும்
ஓடிக் கொண்டு
இருப்பதை உண்ர்கிறாய்”.

“ஆமாம் ! ஆமாம் ! நான்
அதை உணர்கிறேன்
புருனோ……………………………! ”

இப்போ உன் சுவாசத்தை
வேகப்படுத்து !
வேகப்படுத்து !
இன்னும்
வேகப்படுத்து !!
இன்னும்
வேகப்படுத்து !!!
வேகப்படுத்திக் கொண்டே
இருக்கிறாய்……………………………………. !
வேகப்படுத்திக் கொண்டே
இருக்கிறாய்……………………………………. !
சுவாசம்
வேகத்தின் உச்சத்தை
அடைகிறது
உன் உடம்பு இப்போது
அதிர ஆரம்பிக்கிறது………….!
உன் உடம்பு அதிர்வதை
இப்போது நீ
உணர்கிறாய் !
அந்த சக்தி பல்கிப்
பெருகுகிறது !
பெருகிக் கொண்டே
இருக்கிறது !
அந்த சக்தி உன்
உடம்பை முழுவதும்
தன் கட்டுப் பாட்டிற்குள்
கொண்டு வந்து விட்டது…….!
ஆமாம் ஆமாம்
இந்த பிரபஞ்சத்தின்
ஆளுகைக்குள் நீ
வந்து விட்டாய்……………………………….!
இப்போது நீ அற்புதத்தின்
வாயிலை அடைந்து
விட்டாய்…………………!
ஆமாம் உன்
வெளி சுவாசம் முழுவதும்
நின்று விடுகிறது !!!
இப்போது உன்
உட்சுவாசம்
மட்டுமே ஓட
ஆரம்பிக்கிறது,,,,,,,,,,,,!

“உன்னுடைய உட்சுவாசம்
நேராக உன் தலை
உச்சியை சென்று
மோதுகிறது……………….!”

“ஐயோ! புருனோ
என்னால் தாங்க
முடியவில்லை நான்
செத்துக் கொண்டு
இருக்கிறேன்………………………….?
செத்துக் கொண்டு
இருக்கிறேன்………………………..?
என்னை காப்பாற்று,,,,,,,,,!
புருனோ என்னை
காப்பாற்று………………………………..!”

“சுவாசம் உன்
உச்சந்தலையின்
மையத்தை நோக்கி
நகர்கிறது”

“ஐயோ! புருனோ
என்னால் தாங்க
முடியவில்லை நான்
செத்துக் கொண்டு
இருக்கிறேன்,,,,,,,,,,,,,,,,,!
செத்துக் கொண்டு………………..
செத்து ………………….
என்னை,,,,,,,,,,,,,,,,,,
என்னை,,,,,,,,,,,,,,,,,,,,,,
காப்பாற்று,,,,,,,,,,,,,,,,,,
காப்பாற்று,,,,,,,,,,,,,,,,,,,,
என்னை,,,,,,,,,,,,,,,,,,,,,
என்னை,,,,,,,,,,,,,,,,,,,,,,
நான்
செத்துக் கொண்டு
இருக்கிறேன்,,,,,,,,,,,,,,,,,!

---------  இன்னும் வரும்
---------  29-12-2018
///////////////////////////////////////////////////////////