January 13, 2019

திருக்குறள்-பதிவு-85


                       திருக்குறள்-பதிவு-85

ஜியார்டானோ புருனோ :
“ பைபிளில்
சொல்லப்பட்ட
கருத்திற்கு
எதிராக நான்
எழுதியதாக
சொல்லப்படும்
கருத்துக்களைப்
பற்றி நீங்கள்
கேட்ட
கேள்விகளைப்
பார்க்கும் போதும் ;

கத்தோலிக்க
கிறிஸ்தவ
திருச்சபைக்கு
எதிராக நான்
எழுதியதாக
சொல்லப்படும்
கருத்துக்களைப்
பற்றி நீங்கள்
கேட்ட
கேள்விகளைப்
பார்க்கும் போதும் ;

கிறிஸ்தவ
மதத்தில் உள்ள
நம்பிக்கைகளுக்கு
எதிராக நான்
எழுதியதாக
சொல்லப்படும்
கருத்துக்களைப்
பற்றி நீங்கள்
கேட்ட கேள்விகளைப்
பார்க்கும் போதும் ;

இப்படித்தான்
தீர்ப்பு வழங்க
வேண்டும்
என்று முன்கூட்டியே
தீர்மானித்து விட்டு ,
என்னை
குற்றவாளி என்று
நிரூபிப்பதற்காக
விசாரணை
என்ற பெயரில்
சாட்சியங்களை
உருவாக்க
முயற்சி செய்து
கொண்டிருப்பது
தெரிகிறது. “

விசாரணைக் குழு :
Father Bruno………!
போதும்
நிறுத்துங்கள்……………………!
போதும்
நிறுத்துங்கள்………………………!
போதும்………………………..
நி……றுத்துங்……………கள்………!!

ஜியார்டானோ புருனோ :
“ நான்
எழுதிய புத்தகத்தில்
உள்ள எந்த
ஒரு பக்கத்தையும்
கிழிக்காமல்
முழுமையான
புத்தகத்தை
முழுமையாக
கொண்டு வாருங்கள் “

“ தேவாலயத்தில்
(Church)
உள்ள அனைத்து
அறிஞர்களையும்
(Scholar)
அழைத்து வாருங்கள் “

“ நான் எழுதிய
புத்தகத்தில் உள்ள
அனைத்து
கருத்துக்களைப் பற்றியும்
அவர்கள்
ஒவ்வொருவரிடமும்
விவாதிக்க
நான் தயாராக
இருக்கிறேன் “

விசாரணைக் குழு :
(ஜியார்டானோ
புருனோ கேட்ட
கேள்விக்கு
எந்தவித பதிலும்
சொல்லாமல்
விசாரணைக்
குழுவில் உள்ள
அனைவரும்
மௌனமாக
இருந்தனர்
நீதிமன்றம்
அமைதியாக
இருந்தது)

ஜியார்டானோ புருனோ :
“ அமைதியாக
இருந்த
விசாரணைக்குழு
அதிகாரிகளைப்
பார்த்து,
ஜியார்டானோ
புருனோ கேட்டார்
உங்களுக்கு
உண்மையில்
என்ன தான்
வேண்டும்………?
என்னிடம்
நீங்கள் எதை
எதிர்பார்க்கிறீர்கள்…………!

விசாரணைக் குழு :
(ஜியார்டானோ
புருனோவின்
வார்த்தைக்கு
எந்தவித பதிலும்
சொல்லாமல்
விசாரணைக் குழுவில்
உள்ள அனைவரும்
மௌனமாக இருந்தனர்
நீதிமன்றம்
அமைதியாக இருந்தது)
///////////////////////////////////////////////////

“ஜியார்டானோ
புருனோவின்
மீது சுமத்தப்பட்ட
குற்றச்சாட்டுக்களின்
மேல்
ரோம் நகரத்தில்
நடைபெற்ற முதல்
விசாரணையானது
முடிவடைந்தது “

“ முதல் விசாரணை
முடிவு அடைந்ததும்
ஜியார்டானோ
புருனோ
சிறைக்கு கொண்டு
செல்லப்பட்டு
சிறையில்
அடைக்கப்பட்டார் “

---------  இன்னும் வரும்
---------  13-01-2019
/////////////////////////////////////////////////////////////


January 12, 2019

திருக்குறள்- பதிவு-84


                      திருக்குறள்- பதிவு-84

விசாரணைக் குழு :
“ இயேசு கிறிஸ்து
சிலுவையில்
அறையப்படவில்லை ;
அவர் தூக்கில் இடப்பட்டார் ;
அவர் இறக்க  
விரும்பவில்லை ;
அவருடைய
விருப்பத்திற்கு
மாறாகத் தான்
அவர் இறந்தார் ;
அவர் ஒரு
சோகமான மனிதர் ;
அவர் மக்களை
கவருவதற்காக
அற்புதங்களை செய்ய
விருப்பப் பட்டார் ;என்று
நீங்கள் எழுதி
இருக்கிறீர்கள் “

விசாரணைக் குழு :
“ கன்னியர்கள்
(Convents)
குருக்கள் (Priests)
ஆகியோரிடம் உள்ள
அனைத்து
வருமானங்களையும்
திரும்பப் பெற வேண்டும்
ஏனென்றால் அவர்கள்
இந்த உலகத்தை இழிவு
படுத்துபவர்கள் என்று
நீங்கள் எழுதி
இருக்கிறீர்கள் “

விசாரணைக் குழு :
“குருக்கள் திருமணம்
செய்வது என்பது
தேவாலயத்தை
அசிங்கப்படுத்துவது
போன்றது
மற்றும்
அது ஒரு பாவச்
செயல் என்று
கருதப்பட்டு வருகிறது
உண்மையில்  
திருமணம் என்பது
இயற்கையின் ஒரு
அற்புதமான பரிசு என்று
நீங்கள் எழுதி
இருக்கிறீர்கள் “

விசாரணைக் குழு :
“ தற்போது
உள்ள எந்த
ஒரு மதத்தையும்
உத்தமமான மதம் என்று
ஏற்றுக் கொள்ள முடியாது
ஏனென்றால் ஒவ்வொரு
மதமும் மனிதனை
அடிமையாக வைத்து
தனக்குத் தேவையானதை
நிறை வேற்றிக் கொள்ளும்
ஒரு மாபெரும் சக்தியாகத்
தான் மதம்
இருந்து வருகிறது
( என்றும் )
ஒற்றுமையை குலைத்து
பிரிவினையை ஏற்படுத்தி
உறவுகளை பிரிக்கும்
மோதலை உண்டாக்கும்
ஒரு மாபெரும்
சக்தியாகத் தான் மதம்
இருந்து வருகிறது
( என்றும் )
தனது மதத்தை
நிலை நிறுத்துவதற்காக
பிற மதத்தையும்
பிற மதத்தைச் சார்ந்த
மக்களையும் பிற
நாட்டையும் இரக்கமின்றி
அழிக்கக் கூடிய
ரத்தப் போர்களை
உண்டாக்கக் கூடிய
ஒரு மாபெரும்
சக்தியாகத் தான் மதம்
இருந்து வருகிறது
( என்றும்)
நீங்கள் எழுதி
இருக்கிறீர்கள் “

விசாரணைக் குழு :
“ கத்தோலிக்க
கிறிஸ்தவ
திருச்சபைகள் பயன்படுத்தும்
செயல்முறைகள்
அப்போஸ்தலர்கள்
பயன்படுத்தும்
முறைகளைப் போல்
இருப்பது இல்லை என்று
நீங்கள் எழுதி இருக்கிறீர்கள் “

ஜியார்டானோ புருனோ :
“ ஏனென்றால்
அப்போஸ்தலர்கள்
நல்ல உதாரணங்களைக்
கொண்டு மக்களுக்கு
உபதேசம் செய்வார்கள்
ஆனால் நீங்கள்
அப்படி செய்வதில்லை “

ஜியார்டானோ புருனோ :
“நீங்கள்
என் மேல்
தொடர்ந்தாற்போல்
பல்வேறு விதமான
குற்றச் சாட்டுக்களைச்
சுமத்தி வார்த்தை
ஜாலங்களைப் பயன்படுத்தி
பல்வேறு விதமான
கேள்விகளைக் கேட்டுக்
கொண்டே வருகிறீர்கள்
நீங்கள் கேட்கும்
கேள்விகளை தவறு
என்று நிரூபிக்க என்
சார்பாக என் தரப்பு
நியாயங்களை
எடுத்துக் கூறி
வாதிடுவதற்குக் கூட
நீங்கள் எனக்கு வாய்ப்பு
அளிக்காமல் தொடர்ந்து
கேள்விகளைக் கேட்டுக்
கொண்டே இருக்கிறீர்கள் “

“ நீங்கள் தொடர்ந்தாற்போல்
கேள்விகளைக் கேட்டு
என்னை பதில் சொல்ல
விடாமல் தடுப்பதன் மூலம்
எனக்காக நான்
வாதிடுவதற்குக் கூட
நீங்கள் என்னை
அனுமதிக்கவில்லை
என்பதிலிருந்து
என்னை நீங்கள்
குற்றவாளியாக்க முயற்சி
செய்து கொண்டிருக்கிறீர்கள்
என்பது தெள்ளத்
தெளிவாக தெரிகிறது “

“ நான் நிறைய புத்தகங்களை
எழுதி இருக்கிறேன்
மக்களுக்கு பயன்படும்
வகையில் அறிவியல்
கண்டுபிடிப்புகளை
தத்துவங்களை
என்னுடைய
புத்தகங்களின் வாயிலாக
நல்ல கருத்துக்களை
நல்ல விவாதங்களாக
எழுதி இருக்கிறேன் “

“ நான் எழுதியுள்ள
பல்வேறு புத்தகங்களில்
உள்ள வார்த்தைகளை
வெட்டி எடுத்து
உங்களுக்கு எத்தகைய
அர்த்தங்கள்
தேவைப்படுகிறதோ
அத்தகைய அர்த்தங்களுக்கு
ஏற்ப வார்த்தைகளை
ஒன்றாகக் கோர்த்து
வரிசையாக அடுக்கி
கேள்விகளை உருவாக்கி
அவைகளைக் கேட்டு
என்மேல் குற்றச்
சாட்டுக்களைச் சுமத்தி
என்னை கிறிஸ்தவ
மதத்திற்கு
எதிரானவன் என்ற
நிலையை உருவாக்க
உங்களால் என்ன
என்ன செயல்களைச்
செய்ய முடியுமோ அந்த
செயல்களை எல்லாம்
நீங்கள் திறம்படச் செய்து
இருக்கிறீர்கள் என்பது
நீங்கள் கேட்கும்
கேள்விகளில் இருந்து
தெள்ளத் தெளிவாக
தெரிகிறது “

விசாரணைக் குழு :
போதும்…………………!
போதும்…………………!
போதும்………………..!

---------  இன்னும் வரும்
---------  12-01-2019
/////////////////////////////////////////////////////////////



January 10, 2019

திருக்குறள்-பதிவு-83


                      திருக்குறள்-பதிவு-83

விசாரணைக் குழு :
“Father Bruno…………..!
நீங்கள் எழுதியுள்ள
அனைத்து
புத்தகங்களையும்
படித்து பார்த்தோம் ;
அதில் நீங்கள்
பைபிளில் சொல்லப்பட்ட
கடவுளின் வார்த்தைக்கு
எதிராக பல்வேறு
கருத்துக்களையும் ;
கத்தோலிக்க
கிறிஸ்தவ திருச்சபைக்கு
எதிராக பல்வேறு
கருத்துக்களையும் ;
எழுதி இருப்பதிலிருந்து
நீங்கள் கிறிஸ்தவ
மதத்திற்கும் ;
கிறிஸ்தவ மதம்
நடைமுறைப்
படுத்தி வைத்து
இருக்கும் அனைத்து
நடவடிக்கைகளுக்கும் ;
எதிரானவர் என்பது
உங்களுடைய
எழுத்துக்களில்
இருந்து தெள்ளத்
தெளிவாக தெரிகிறது ”

விசாரணைக் குழு :
“நீங்கள்
மோசஸையும்
இயேசு கிறிஸ்துவையும்
தந்திரக் காரர்கள்
(Magician)
என்றும் அவர்கள்
செய்தவை அற்புதங்கள்
இல்லை என்றும்
நீங்கள் எழுதி
இருக்கிறீர்கள்……..? “

ஜியார்டானோ புருனோ :
“அற்புதம் என்பது
இந்த பிரபஞ்சத்தில்
எல்லா இடங்களிலும்,
எல்லாப் பொருட்களிலும்,
எல்லா உயிர்களிலும்,
நீக்கமற நிறைந்து
விரிந்து , பரந்து,
இணைந்து .
பிணைந்து கிடக்கிறது
அந்த தெய்வீகமான
அற்புதம் ;
தெய்வீகமான
வழியில் தொடர்ந்து
இயங்கிக் கொண்டு
இருப்பதோடு  
மட்டுமல்லாமல் ,
தன்னை இந்த
பிரபஞ்சத்தில்
வெளிப்படுத்திக்
கொண்டே இருக்கிறது. “

விசாரணைக் குழு :
“நீங்கள் தத்துவவாதி
அல்லவா அதான்
புரியாத மாதிரியே
பேசுகிறீர்கள் “

ஜியார்டானோ புருனோ :
“ நான் உண்மையைப்
பேசுகிறேன்
அதனால் தான்
நான் பேசும்
வார்த்தைகளின்
அர்த்தம்
உங்களுக்கு
புரியவில்லை……………….?
நீங்கள் உண்மையை
உணர்ந்தால்
நான் பேசும்
வார்த்தைகளின்
அர்த்தம் உங்களுக்கு
புரியும்………………………! “

விசாரணைக் குழு :
“ நீங்கள் பேசும்
வார்த்தைகளின்
அர்த்தத்தை
புரிந்து கொள்வதற்காக
நாங்கள் இங்கு
வரவில்லை…….?
நாங்கள் பேசும்
வார்த்தைகளின்
அர்த்தத்தை
உங்களுக்கு புரிய
வைக்க வேண்டும்
என்பதற்காகவே
நாங்கள் இங்கு
வந்திருக்கிறோம். “

விசாரணைக் குழு :
“Father Giordano
Bruno…………..!
நாங்கள் அனைவரும்
உங்களுக்கு உதவி
செய்வதற்காகத்
தான் இங்கு
இருக்கிறோம் !
நீங்கள் கிறிஸ்தவ
மதத்தின்  மீதும் ;
கிறிஸ்தவ மதம்
கடைபிடித்து வரும்
நம்பிக்கைகளின்  
மீதும் ;
பைபிளில்
சொல்லப்பட்ட
கருத்துக்களின் மீதும் ;
நீங்கள் நம்பிக்கை
வைத்திருப்பது
உண்மை என்றால்
அந்த நம்பிக்கைக்கு
உரிய தகுந்த
ஆதாரங்களை
எங்களுக்கு நீங்கள்
தர வேண்டும் “

“உங்கள் மேல்
சுமத்தப்பட்டுள்ள
பல்வேறு குற்றச்
சாட்டுக்களுக்கு
இந்த நீதிமன்றம்
ஏற்றுக் கொள்ளும்
வகையில்
நீங்கள் தகுந்த
பதில்களை
அளிப்பதன் மூலம்
உங்களை நீங்கள்
குற்றமற்றவர்
என்பதை நிரூபிக்க
முடியும்
இந்த நீதிமன்றம்
ஏற்றுக் கொள்ளும்
வகையில் நீங்கள்
தகுந்த பதிலை
அளிக்கவில்லை
எனில்………………………..? “

---------  இன்னும் வரும்
---------  10-01-2019
///////////////////////////////////////////////////////////