February 04, 2019

திருக்குறள்-பதிவு-97


                       திருக்குறள்-பதிவு-97 

“ ஜியார்டானோ புருனோ
சிறை வைக்கப்பட்டுள்ள
சிறைக் கதவின்
முன்னாலும் ;
அதைச் சுற்றி உள்ள
சிறைக் கதவின்
முன்னாலும் ;
ஒரு சில காவலர்கள்
மட்டுமே நின்று கொண்டு
காவல் காத்துக்
கொண்டு இருந்தனர் ; “,

“ புதியதாக
சிறைக்காவலர்கள் அங்கே
நுழைந்து ஏற்கனவே
அங்கே காவல் காத்துக்
கொண்டிருந்தவர்களை
அனுப்பி வைத்து விட்டு
அவர்கள் அனைவரும்
ஒவ்வொரு சிறைக்
கதவின் முன்னாலும்
ஒரு காவலர் வீதம்
நின்று கொண்டனர், “

“ ஒரு சில காவலர்கள்
மட்டுமே இருந்த
அந்த இடத்தில்
நிறைய எண்ணிக்கையில்
சிறைக்காவலர்கள்
பாதுகாப்புக்காக
நின்று கொண்டிருந்தனர் ;
சிறையில் பாதுகாவல்
பலப்படுத்தப்பட்டு இருந்தது ;”

“ சிறிது நேரம் கழித்து
போப்பின் பாதுகாவலர்கள்
உள்ளே நுழைந்தனர் ;
அவர்கள் அனைவரும்
உள்ளே நுழைந்தவுடன்
அங்கிருந்த சிறை
காவலர்கள் அனைவரும்
வெளியே சென்று விட்டனர் ;”

“ போப்பின் பாதுகாவலர்கள்
அனைவரும் ஒவ்வொரு
சிறைக்கதவின் முன்னாலும்
நின்று கொண்டனர் ;
அந்த இடம் போப்பின்
பாதுகாவலர்களுடைய
கட்டுப் பாட்டுக்கள் வந்தது ; “

“ ஜியார்டானோ புருனோ
இருக்கும் சிறை
அறையிலிருந்து
குறிப்பிட்ட எல்லை வரை
போப்பின் பாதுகாவலர்கள்
காவல் காத்துக் கொண்டு
நின்று கொண்டிருந்தனர். “

“ சித்திரவதை செய்யப்பட்ட
ஜியார்டானோ புருனோ
எழுந்து நிற்க முடியாமல்
அவருடைய சிறை
அறையில் உட்கார
முடியாமல் படுத்துக்
கொண்டு இருந்தார் ;
அவர் படுத்துக்
கொண்டிருந்த இடம்
தரையிலிருந்து
ஒன்றரை அடி உயரமும்
ஒரு ஆள் படுக்கும்
அளவிற்கு நீளம். அகலம்
கொண்டதாக இருந்தது;”

“யார் இவர் ? என்று
எவராலும் அடையாளம்
கண்டுபிடிக்க
முடியாத அளவிற்கு
கருப்பு அங்கியை
அணிந்து கொண்டு
போப் கிளமெண்ட் VIII
அவர்கள் நடந்து வர
பாதர் டிராகாக்லியோலோ
அவரைத் தொடர்ந்து
அவர் பின்னால் நடந்து
வந்து கொண்டிருந்தார்.”

“ போப் வருவதைப்
பார்த்த ஒரு பாதுகாவலர்
ஜியார்டானோ
புருனோவின்
சிறைக்கதவிற்கு முன்னால்
சென்று நின்று கொண்டார் “

“ போப் ஜியார்டானோ
புருனோவின்
சிறைக்கதவிற்கு
முன்னால் வந்து நின்றார் ;
சிறைக் கதவின்
வெளியில் இருந்து
அந்த கதவில் உள்ள
சிறிய துவாரத்தின் வழியாக
தன்னுடைய இடது
கண்ணால் ஜியார்டானோ
புருனோவைப் பார்த்தார் ; “


“ தன்னை யாரோ
பார்க்கிறார்கள் என்பதை
உணர்ந்து கொண்ட
ஜியார்டானோ புருனோ
சிறிதாக எழுந்து
உடலை சிறிது தூக்கி
பார்த்த போது - அந்த
சிறைக் கதவின்
துவாரத்தின் வழியாக
யாரோ ஒருவர்
தன்னை பார்க்கிறார்
என்பது ஜியார்டானோ
புருனோவிற்கு தெரிந்தது
ஆனால் அவர் யார்
என்று தெரியவில்லை
யார் நீங்கள்………………….?
என்றார். “

“ போப் கண்ணை
துவாரத்திலிருந்து
வெளியே
எடுத்துக் கொண்டார் ;
சிறிது நேரம் போப்
அமைதியாக இருந்தார் ;
மீண்டும் தன்னுடைய
வலது கண்ணால்
அந்த துவாரத்தின்
வழியாக இரண்டாவது
முறையாக ஜியார்டானோ
புருனோவைப்‘ பார்த்தார் ;”

“ இரண்டாவது முறையாக
ஜியார்டானோ புருனோ
யார் நீங்கள்……………………..?
என்று கேட்டார் “

“ கண்ணை கதவின்
துவாரத்தில் இருந்து
எடுத்த போப் கதவை
விட்டு சிறிது தள்ளி
நின்று கொண்டு
சிறிது நேரம் யோசித்தார்
பாதர் டிராகாக்லியோலோ
போப்பைப் பார்த்துக்
கொண்டே இருந்தார் “

“ போப் சிறையை விட்டு
வெளியே செல்ல
எத்தனித்த போது
ஜியார்டானோ புருனோ
மூன்றாவது முறையாக
யார் நீங்கள்…………..?
என்று கேட்ட ஒலி
போப்பின் காதில் விழுந்த
காரணத்தினால் சற்று
நின்றார் போப், “

“ பின்னர் சாதாரண
நிலைக்கு திரும்பிய
போப் அந்த சிறையிலிருந்து
வெளியே வந்தார் ;
அவர் பின்னாலேயே
பாதர் டிராகாக்லியோலோ
சென்று கொண்டு
இருந்தார் ; “

“ போப்பின் பாதுகாவலர்கள்
அனைவரும் சென்று
விட்ட பின் மீண்டும்
அந்த சிறையின்
காவலர்கள்
சிறையை பாதுகாக்கும்
பாதுகாப்பு பணியை
எடுத்துக் கொண்டு
சிறையை பாதுகாத்தனர்.”

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  04-02-2019
/////////////////////////////////////////////////////////////



February 03, 2019

திருக்குறள்-பதிவு-96


                        திருக்குறள்-பதிவு-96

(பாதர் டிராகாக்லியோலோ
போப் கிளமெண்ட்-VIII
அவர்களை அவருடைய
அறையில் நேரில்
சந்தித்தார்.
இருவரும் பேசுகிறார்கள்)

போப் கிளமெண்ட்-VIII ;
“யார் இந்த ஜியார்டானோ
புருனோ…………………………………? “

பாதர் டிராகாக்லியோலோ :
“ஜியார்டனோ புருனோ
தத்துவம், வானியல்,
மருத்துவம், இயற்கை
அறிவியல், இறையியல்,
The Art of Memory
ஆகியவற்றில் 
புலமை பெற்றவர்.”

போப் கிளமெண்ட்-VIII ;
“ சுருக்கமாக அவரை
ஒரு அறிவாளி என்று
சொல்லுங்கள்…………….! “

பாதர் டிராகாக்லியோலோ :
“ அறிவாளி என்ற
வார்த்தைக்கு
தகுதியானவர் தான் “

போப் கிளமெண்ட்-VIII ;
“ அவர் தன்னுடைய
குணத்தை மாற்றிக்
கொள்ள மாட்டாரா……………? “

பாதர் டிராகாக்லியோலோ :
“அவருடைய
குணத்தைத்தான் மாற்ற
முயற்சி செய்தோம்
முடியவில்லை “

போப் கிளமெண்ட்-VIII ;
“ முடியவில்லை என்ற
வார்த்தையைக் கேட்கும்
போது எனக்கு கொஞ்சம்
அச்சமாகத் தான் இருக்கிறது “

பாதர் டிராகாக்லியோலோ :
“ நான் உண்மையைச்
சொன்னேன்.”

போப் கிளமெண்ட்-VIII ;
“அவர் விசாரணையில்
எவ்வாறு நடந்து கொண்டார். “

பாதர் டிராகாக்லியோலோ :
“அவர் பல நேரம்
அமைதியாக ஆழ்ந்த
சிந்தனையில் இருக்கிறார் ;
சில நேரங்களில்
மட்டுமே பேசுகிறார் ;
அவர் எத்தகைய குண
நலன்களைக் கொண்டவர்
என்பதை எங்களால்
கணிக்க முடியவில்லை ; “

போப் கிளமெண்ட்-VIII ;
“அவர் ஆண்டவரை நோக்கி
ஜபம் செய்கிறாரா………………..?”

பாதர் டிராகாக்லியோலோ :
“அவர் ஜபம் செய்ததை
நான் பார்த்ததேயில்லை”

போப் கிளமெண்ட்-VIII ;
“சித்திரவதையின்
போது அவர் எவ்வாறு
நடந்து கொண்டார்………………?

பாதர் டிராகாக்லியோலோ :
“சித்திரவதையின் போது
இவர் நடந்து கொண்ட
விதத்தைப் பார்க்கும் போது
இவர் மனிதரா என்று
எண்ணத் தோன்றுகிறது ;

சாதாரண மனிதர்களால்
ஜியார்டானோ
புருனோவைப் போல்
வலியைத் தாங்கிக்
கொண்டு சத்தம்
போடாமல்
இருக்க முடியாது ;
அழாமலும்
இருக்க முடியாது ;

இவர் கிறிஸ்தவ
மத நம்பிக்கைகளை
கடை பிடிக்காமல்
தனித்தே இருக்கிறார் ;
யாருடனும் ஒட்டாமல்
தனித்தே இருக்கிறார் ;
இயங்கும் இந்த
பிரபஞசத்தை விட்டே
தனித்தே இருக்கிறார் ;

அவரை புரிந்து
கொள்ள முடியவில்லை ; “

போப் கிளமெண்ட்-VIII ;
“ஜியாடர்டானோ புருனோ
சொல்லும் சீர்திருத்தங்களை
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையில்
நடைமுறைப்
படுத்துவதற்கான
தேவையான
சாத்தியக் கூறுகள்
ஏதேனும் இருக்கிறதா…..? ”

பாதர் டிராகாக்லியோலோ :
“அப்படி எதுவும்
இருப்பதாக எனக்கு
தெரியவில்லை”

போப் கிளமெண்ட்-VIII ;
“சட்டங்கள் இயற்றி
இதனை நடைமுறைப்
படுத்த முயற்சி
செய்தால் முடியுமா. “

பாதர் டிராகாக்லியோலோ :
“ இதற்காக அனைவரும்
ஒத்துழைக்க வேண்டும்
ஆனால் ஒத்துழைப்பார்கள்
என்று சொல்ல முடியாது.”

போப் கிளமெண்ட்-VIII ;
“இந்த வழக்கு ஆரம்பித்த
நாளிலிருந்து என் மனம்
சொல்ல முடியாத ஆழ்ந்த
கவலையில் இருக்கிறது”

“ஏதேனும் தவறு செய்து
விடுவேனோ என்று
பயந்து கொண்டிருக்கிறேன்”

“சிறு தவறு நேர்ந்து
விட்டாலும் நம்மை மட்டுமல்ல
நாம் சார்ந்துள்ள மதத்தையும்
இழிவாக பேசக்கூடிய
நிலைக்கு ஆளாக நேரிடும்”

“இதனை நினைத்து நான்
அமைதி இழந்து
தவிக்கிறேன்”

“நீண்ட நாட்களாக
நான் சரியாக
உண்ணுவதும் இல்லை  ;
உறங்குவதும் இல்லை ;”

“ஆண்டவரால் நான்
ரட்சிக்கப்பட்ட நாளில் இருந்து
இவ்வளவு மன சஞ்சலத்தை
நான் அடைந்தது இல்லை”

“பரிசுத்த ஆவியால் நான்
நிரப்பப்பட்டவில்லையோ
என்று சந்தேதிக்கும்
நிலைக்கு ஆளாகியிருக்கிறேன்”

“இந்த விசாரணை என்னை
மிகுந்த வேதனைக்கு
உள்ளாக்கி இருக்கிறது”

“அவர் என்ன தான்
நினைக்கிறார்”

“அவர் கடைசியாக
என்ன சொன்னார்.”

பாதர் டிராகாக்லியோலோ :
“நான் போப் கிளமெண்ட்-VIII
அவர்களிடம் மட்டும் தான்
பேசுவேன் என்று சொன்னார்.”

போப் கிளமெண்ட்-VIII ;
“ஜியார்டானோ புருனோவை
பார்க்க வேண்டும்.”

பாதர் டிராகாக்லியோலோ :
“ஜியார்டானோ புருனோவை
இங்கே அழைத்து வர
நான் ஏற்பாடு செய்கிறேன்”

போப் கிளமெண்ட்-VIII ;
“நான் சிறையில் யாருக்கும்
தெரியாமல் ரகசியமாக
பார்க்க விரும்புகிறேன்”

பாதர் டிராகாக்லியோலோ :
“அப்படியே ஆகட்டும்”

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  03-02-2019
/////////////////////////////////////////////////////////////


February 02, 2019

திருக்குறள்-பதிவு-95


                       திருக்குறள்-பதிவு-95

"நடுத்தர வயதுப்பெண்
ஒருவர் கிறிஸ்தவ
மதத்திற்கு எதிராக
கருத்து சொன்னார்  
என்பதற்காக - அவர்
சொன்ன கருத்தை
சரியானதா? தவறானதா?
என்று கூட ஆராய்ந்து
பார்க்காமல் - அந்த
பெண்ணை சூன்யக்காரி
என்று பழி சுமத்தி   
அவரை சித்திரவதை செய்து
உயிரோடு எரித்து
கொல்வதற்காக ,சென்று
கொண்டிருந்த கூட்டத்துடன்
சேர்ந்து - அந்த செயலைச்
செய்வதற்கு இளவயது
ஜியார்டானோ புருனோ
அவர்களை நோக்கி
ஓடிக் கொண்டிருந்தார் "

"ஜியார்டானோ புருனோ
செய்யத் துணிந்த - அந்த
பாவப்பட்டசெயலைத் தான்
செய்யாதே என்று சொல்லிக்
கொண்டே - ஜியார்டானோ
புருனோவின் மேல் அன்பு
கொண்ட ஒரு ஆண்
ஜியார்டானோ புருனோவை
துரத்திக் கொண்டு அவர்
பின்னால் ஓடிக்
கொண்டிருந்தார் "

" நான்கு ஆண்கள்
படிக்கட்டின் மீது 
விரைவாக ஓடி ஏறி
முதல் மாடியை
அடைந்தனர் ;கதவை
தள்ளினர் - அங்கே
தனியாக பார்ப்பதற்கே
பாவமாக உட்கார்ந்து
கொண்டிருந்த - அந்த
நடுத்தர வயதுப் பெண்ணை
தூக்கி நிறுத்தி - வெளியே
இழுத்து வந்த போது
அந்த பெண் கால்
தடுமாறி கீழே விழுந்தாள் :
வேண்டாம்..! வேண்டாம்..!
என்று அந்த பெண்
அலறினாள். "

" கால் தடுமாறி படிக்கட்டில்
தலை கீழாக விழுந்து
கிடந்த அந்த பெண்ணின்
தலைமுடியை பிடித்து
இழுத்துக் கொண்டே
படிக்கட்டில் ஒருவன்
கீழே இறங்கினான் "

" அங்கே மதவாதிகள்
மேடைமேல் பலர் நின்று
கொண்டு - நடந்து
கொண்டிருந்த அந்த
பாவப்பட்ட செயலை
ஊக்குவித்து வழிநடத்திக்
கொண்டு இருந்தனர் "

" பலர் ஒன்றாகக் கூடி அந்த
பெண்ணை நிற்க வைத்து
நடக்க வைத்து இழுத்து
சென்று அங்கே தனியாக
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த
கம்பத்தில் அவளை நிற்க
வைத்து இரண்டு பேர்
அவளை கெட்டியாகப்
பிடித்துக் கொண்டனர் "

 " அந்த கூட்டத்தில் ஒருவன்
ஒரு வீட்டின் மாடியில்
விரைவாக ஏறினான் - அந்த
நெருப்பில் ஒரு தடிமனான
இரும்புக் கம்பி பழுகக்
காய்ச்சப்பட்டுக்
கொண்டிருந்தது
பழுகக் காய்ச்சப்பட்ட அந்த
இரும்புக் கம்பியை எடுத்துக்
கொண்டு அவன் விரைவாக
கீழே இறங்கினான் "

"ஒருவன் அந்த பெண்ணின்
மேலாடையைக் கிழிக்க
அந்த பழுகக் காய்ச்சப்பட்ட
இரும்புக் கம்பியைக்
கொண்டு வந்தவன்
அந்த பெண்ணின் நெஞ்சில்
சூடு வைத்தான் - அந்த
பெண் அலறிய ஒலி அங்கே
கூடியிருந்தவர்களுக்கும்
ஜியார்டானோ
புருனோவுக்கும் கேட்கவில்லை "

"ஆனால் இப்போது அந்த
பெண் அலறிய அந்த ஒலி
ஜியார்டானோ புருனோவின்
காதில் கேட்க ஆரம்பித்தது."

" ஜியார்டானோ
புருனோவிற்கு சிறிது
சிறிதாக நினைவு வர
அவர் சிந்திக்க ஆரம்பித்தார்
ஒரு பெண் சொன்ன
கருத்து கிறிஸ்தவ
மதத்திற்கு எதிராக
இருக்கிறது என்று
குற்றம் சாட்டப்பட்டு அது
சரியானதா? தவறானதா?
என்று கூட ஆராய்ந்து
பார்க்காமல் சித்திரவதை
செய்து கொல்வதற்காக
சென்ற கூட்டத்துடன்
தானும் சென்று செய்த
செயலை நினைத்தார் "

" தான் சொன்ன கருத்து
கிறிஸ்தவ மதத்திற்கு எதிராக
இருக்கிறது என்று குற்றம்
சாட்டப்பட்டு அது சரியானதா ?
தவறானதா ? என்று கூட
ஆராய்ந்து பார்க்காமல்
சித்திரவதை செய்து
கொல்வதற்காக தனக்கு
எதிராக செய்ப்பட்டுக்
கொண்டிருக்கும்
செயல்களை நினைத்தார் "

" சிறிய வயதில் அந்த
பெண்ணிற்கு தான் செய்த
சித்திரவதையையும் ;
தற்போது பிறர் தனக்கு
செய்து கொண்டிருக்கும்
சித்திரவதையையும் ;
ஒப்பிட்டு நோக்கினார் ;  
ஜியார்டானோ புருனோவிற்கு
ஒரு உண்மை
புரிய ஆரம்பித்தது. "

செய்த பாவம்
செய்தவனை சும்மா
விடாது என்பதை
உணர்ந்து கொண்டார் "

" பாவத்தைச் செய்து விட்டு
பாவத்தின் விளைவிலிருந்து
யாரும் தப்ப முடியாது
என்பது அவருக்கு
புரிய ஆரம்பித்தது "

" நீங்கள் உங்கள்
பாவங்களில் சாவீர்கள்
என்று இயேசு கிறிஸ்து
சொன்ன கருத்து அவர்
காதில் விழுந்து
எதிரொலித்துக்
கொண்டே இருந்தது. "

" ஜியார்டானோ புருனோ
உங்களுக்கு கொஞ்சம்
கொஞ்சமாக நினைவு
திரும்பி கொண்டு
இருக்கிறது - நீங்கள்
நான் பேசுவதை கேட்டுக்
கொண்டு இருக்கிறீர்கள் என்று
பாதர் டிராகாக்லியோலோ
சொல்லிக் கொண்டிருக்கும்
போது ஜியார்டானோ
புருனோவை ஒரு பலகையில்
படுக்க வைத்து அவருடைய
சிறை அறைக்கு தூக்கிக்
கொண்டு சென்று கொண்டிருந்தனர்.

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  02-02-2019
/////////////////////////////////////////////////////////////