February 08, 2019

திருக்குறள்-பதிவு-101


                      திருக்குறள்-பதிவு-101

பெல்லரமினோ :
“ ஜெர்மனி, இங்கிலாந்து,
ஸ்கேண்டினேவியா
(Scandinavia),
ஸ்விட்சர்லாந்து
(Switzerland)
மற்றும் ஃப்ளாண்டர்ஸ்
(Flanders)
பேரரசர்கள்
எங்களுக்கு சவாலாக
இருக்கிறார்கள் “

ஜியார்டானோ புருனோ:
“உங்களைப் பார்த்து
கற்றுக் கொண்டார்கள் “

“அதை பயன் படுத்தும்
போது உங்களுக்கு
எதிராக இருக்கிறது
அவ்வளவு தான் “

பெல்லரமினோ :
“ எதை
சொல்கிறீர்கள்…………..? “

ஜியார்டானோ புருனோ:
“ ஒவ்வொரு நாடும்
தங்கள் நாட்டிற்கென்று
ஒரு மதத்தை தனியாக
நிறுவுவதன் மூலம்
மதத்தின் பெயரால்
மக்களுடைய நம்பிக்கையை
அடித்தளமாக்கி அதன்
மூலம் அதிகாரத்தை
கைப்பற்றி - மக்களை
அடிமையாக வைத்து
அரசாட்சி செய்வது எப்படி
என்று உங்களிடம்
இருந்து கற்றுக்
கொண்டதை செயல்படுத்த
நினைக்கிறார்கள் – அது
உங்களுக்கு எதிராக
இருக்கிறது. “

பெல்லரமினோ :
இத்தகைய தவறான
ஒரு நிலை ஏற்பட்டு
விடக்கூடாது
என்பதற்காக தான்
நாங்கள் பாடு பட்டுக்
கொண்டு இருக்கிறோம் “

ஜியார்டானோ புருனோ:
“ நம்பிக்கையின் பெயரால்
மக்களை அடிமைகளாக
வைத்து நீங்கள் ஆள
நினைப்பது தவறில்லை ;
அதை வேறு நாடுகள்
செய்ய முற்படும்போது
நீங்கள் ஏன் அதை
எதிர்க்கிறீர்கள் ;
உங்களுக்கு எதிராக
அவர்கள்
இருக்கிறார்கள் என்ற
காரணத்திற்காகவா……….? “

பெல்லரமினோ :
“ எது உண்மையான
நம்பிக்கை என்பதைப்
பொறுத்துத் தான்
அனைத்தும் இருக்கிறது “

ஜியார்டானோ புருனோ:
“ உங்களுடைய
நம்பிக்கையை
பாதுகாப்பதற்குத் தான
ஆயிரக்கணக்கான
இஸ்லாமியர்களையும்
யூதர்களையும் உயிரோடு
எரித்து கொல்கிறீர்களா “

“ உங்களுடைய
நம்பிக்கையை
பாதுகாப்பதற்குத் தான்
நீங்கள் ஸ்பெயினை
பயன் படுத்துகிறீர்களா………….? “

பெல்லரமினோ :
“ ஸ்பெயின் நாடு
கிறிஸ்தவ மதத்தின் மீது
நம்பிக்கை கொண்ட நாடு
அனைத்து விதமான
மத விரோத போக்கிற்கும்
ஸ்பெயின் உற்ற
துணையாக இருக்கிறது, “

ஜியார்டானோ புருனோ:
“கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபை வலிமையாக
இருக்கும் ஐரோப்பாவை
சிறு சிறு துண்டுகளாக
உடைத்து அதன்
வலிமையை சிதைப்பதற்குத்
தேவையான அனைத்து
விதமான செயல்களையும்
செய்து வைத்திருக்கிறது “

“ அழிவிற்கான விதையை
விதைத்து விட்டு
அழிவு எப்போது
ஏற்படும் என்பதை
கவனித்துக் கொண்டு
இருக்கிறது “

பெல்லரமினோ :
“ கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையால்
நடைமுறைப்படுத்தப்பட்டு
மக்களால்
பின்பற்றப்பட்டு வரும்
சட்டதிட்டங்களையும் ;
மத நம்பிக்கைகளையும் ;
ஒற்றுமையையும் ;
எவர் ஒருவர் அழிக்க
நினைத்தாலும் ;
அவருடைய
செயலை தடுத்து ;
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையை பாதுகாக்க
வேண்டிய மிகப்பெரிய
பொறுப்பு எங்களுக்கு
இருக்கிறது.”

“ கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையை எவர்
ஒருவர் அழிக்க
நினைத்தாலும் ;

“ ஆண்டாண்டு காலமாக
கிறிஸ்தவர்களால்
கடைபிடிக்கப்பட்டு வரும்
மத நம்பிக்கைகளை
எவர் ஒருவர்
இழிவு செய்தாலும் ;

பைபிளில் சொல்லப்பட்ட
ஆண்டவரின்
வார்த்தைகளை எதிர்த்து
எவர் ஒருவர்
கருத்து கூறினாலும் ;

அவர் கத்தோலிக்க
கிறிஸ்தவ
திருச்சபைக்கும் ;
கிறிஸ்தவர்களுக்கும் ;
எதிரியாகவே
கருதப்படுவார் ;
நம்பிக்கை
துரோகியாகவே
கருதப்படுவார் ;

ஜியார்டானோ புருனோ:
“ தயவு செய்து என்னை
மீண்டும் என்னுடைய
சிறை அறைக்கு
அழைத்து செல்லுங்கள்! “

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------   08-02-2019
/////////////////////////////////////////////////////////////


February 07, 2019

திருக்குறள்-பதிவு-100


                      திருக்குறள்-பதிவு-100

(ஜியார்டானோ புருனோ
தனக்கு வழங்கப்பட்ட
ஆடையை உடுத்திக்
கொண்டு அரண்மனை
போல் இருக்கும் ஒரு
வீட்டின் மேல் நடந்து
சென்று கொண்டிருந்த
போது அவர் காதில்
கிறிஸ்தவ பாடல்களும்
இசையும் கேட்டதால்
ஜன்னல் வழியாக
பார்த்தார். அந்த சர்ச்சில்
கிறிஸ்தவ பாடல்களை
சிலர் பாடிக் கொண்டிருக்க ;
அந்த பாடலுக்கு ஏற்றபடி
சிலர் நடனமாடிக்
கொண்டு இருந்தனர் ;”

“ அந்த காட்சியினைக்
கண்டு கொண்டிருந்தார்
ஜியார்டானோ புருனோ
அந்த நேரத்தில் அங்கு
வந்து சேர்ந்த
பெல்லரமினோ பேசத்
தொடங்கினார்)

பெல்லரமினோ :
" பாருங்கள் !
நன்றாக பாருங்கள் !
வாழ்க்கை எவ்வளவு
இன்பமயமானது என்பதை
ரசித்துக் கொண்டே
பாருங்கள் "

" கொள்கை ; கோட்பாடு ;
குறிக்கோள் - என்று
அலைந்து திரிந்து
கொண்டிருப்பவர்கள்
வாழ்க்கை இன்பமயமானது
என்பதை அறிந்து
கொள்ள முடியாமலேயே
இறந்து விடுகின்றனர், "

" நீங்களும் ஏன் அந்த
தேவையற்ற குப்பைகளை
சுமந்து கொண்டு திரிகிறீர்கள். "

" வாழ்க்கையின்
இன்பமயமான வாசல்கள்
அனைத்தும் உங்களுக்காக
திறந்தே
வைக்கப்பட்டிருக்கிறது ;
நீங்கள் அந்த கதவுகளை
அடைத்து விட்டு
துன்பத்தின் சுவாசத்தினைத்
தான் சுவாசிப்பேன் என்று
அடம் பிடிக்கிறீர்கள் "

“ யாருடனும் சேராமல்
தனிமையில் இருந்து
கொண்டு உங்களை
நீங்களே ஏன் தனிமைப்
படுத்திக் கொள்கிறீர்கள். “

“ கிறிஸ்தவ மதத்தில்
இருந்து விலகி இருப்பதோடு
மட்டுமல்லாமல் ;
கிறிஸ்தவ மதத்திலிருந்து
வெகு தொலைவுக்கு
பிரிந்து சென்று
கொண்டிருக்கிறீர்கள்.”

" கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையின் உயர்ந்த
பதவிகளை அலங்கரிப்பதற்கு
தேவையான ஆழ்ந்த
அறிவும், சிறந்த ஞானமும்
உங்களிடம் இருக்கிறது”

“ அதுமட்டுமல்லாமல்
கார்டினலாக ஆவதற்குரிய
அனைத்து தகுதிகளையும்
நீங்கள் பெற்றுள்ளீர்கள் “

“ அப்படி இருக்கையில்
நீங்கள் ஏன் உங்கள்
வாழ்க்கையை வீணடித்துக்
கொண்டு இருப்பதோடு
மட்டுமல்லாமல்
எதற்காக உங்கள்
உயிரையும் இழப்பதற்கு
தயாராக இருக்கிறீர்கள் “

ஜியார்டானோ புருனோ :
“ என்னுடைய குணத்தை
அறிந்து கொள்வதற்கும் ;
என்னுடைய மனதில்
என்ன இருக்கிறது
என்பதை தெரிந்து
கொள்வதற்கும்  ;
தாங்கள் என்னை
உங்கள் அறைக்கு
தனிமையில் அழைத்து
பேசிக் கொண்டிருக்கிறீர்கள் ;”

(ஜியார்டானோ
புருனோவின்
வார்த்தைகளைக் கேட்டு
மிரண்டு போன
பெல்லரமினோ
சுதாரித்துக் கொண்டு
மீண்டும் பேசலானார்,)

பெல்லரமினோ :
“ கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையின்
நடவடிக்கைகளில் மாற்றம்
கொண்டு வர வேண்டும்
என்பதற்காகவும் ;
கிறிஸ்தவ மக்களால்
கடைபிடிக்கப்பட்டு
வரும் மத நம்பிக்கைகளில்
சீர்திருத்தம் கொண்டு வர
வேண்டும் என்பதற்காகவும் ;
நீங்கள் ஐரோப்பா
முழுவதும் சுற்றி
வந்து இருக்கிறீர்கள் ; “

“ கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபைக்கென்று
தனிச்சட்டங்கள்
இருக்கின்றன “

“ பல நூற்றாண்டுகளாக
நடைமுறைப்படுத்தப்பட்டு
காலம் காலமாக மக்களால்
கடைபிடிக்கப்பட்டு வரும்
அந்த சட்டங்களை
மாற்றுவது என்பது
அவ்வளவு எளிதான
காரியமல்ல “

 “ கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையின் சட்ட
திட்டங்களை
நிறைவேற்றுவதற்காகவும் ;
அதன் மத
நம்பிக்கைகைளை
அனைவரும் கடைபிடிக்க
வேண்டும் என்பதற்காகவும் ;
செய்யப்பட்ட செயல்கள்
அனைத்துமே ஒரு
வரலாறு தான் ;
அந்த வரலாற்றை
எப்படி மாற்ற முடியும்………..? “

ஜியார்டானோ புருனோ:
“ வெற்றி பெற்றவர்களால்
எழுதப்படுவது தான்
வரலாறு - அதில்
பொய்கள் தான் நிரம்பி
இருக்கும் - உண்மை
கொஞ்சமும் இருக்காது ;
உண்மையை மாற்ற
முடியாது - ஆனால்
பொய்யை எளிதாக
மாற்றலாம் ; “

“ நீங்கள் கத்தோலிக்க
கிறிஸ்தவ திருச்சபையை
உலகில் உள்ள மக்களை
மிரட்டி அடிமைகளாக
வைத்திருப்பதற்கு- ஒரு
ஆயுதமாகத் தான்
பயன்படுத்துகிறீர்கள் “

“ அடிமையாக இருக்க
மறுத்து சுதந்திரக்
காற்றை சுவாசிக்க
நினைப்பவர்களை நீங்கள்
சித்திரவதை செய்து
கொன்று விடுகிறீர்கள் “

“ சுதந்திரம் கொடுக்கவில்லை
என்றாலும் பரவாயில்லை
ஒருவரையும் அடிமையாக
வைத்திருக்காதீர்கள். “
  
---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  07-02-2019
/////////////////////////////////////////////////////////////



February 06, 2019

திருக்குறள்-பதிவு-99


                       திருக்குறள்-பதிவு-99

பெல்லரமினோ :
“நான் என்ன செய்ய
வேண்டும் என்று
நீங்கள் நினைக்கிறீர்கள் “

கார்டினல் சார்டோரி :
“ கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையின் மூலம்
ஆண்டவரின்
வார்த்தைகளை
மக்களிடம் கொண்டு
செல்லும் புனிதமான
பணியை நாம்
மேற்கொண்டிருக்கும்
போது ஜியார்டானோ
புருனோவைப்
போன்றவர்களால்
சில சமயங்களில்
பிரச்சினைகள்
எழத்தான் செய்யும் ; “

“ ஆனால், மற்ற
பிரச்சினைகளைப்
போல் ஜியார்டானோ
புருனோவின்
பிரச்சினையைக் கருதிக்
கொண்டு சரியான
விதத்தில்
பிரச்சினையைக்
கையாளவில்லை என்றால்
இதனால் ஏற்படக்கூடிய
அனைத்து
விளைவுகளுக்கும்
நாம் தான்
பொறுப்பேற்க
வேண்டி வரும் ; “

“ ஜியார்டானோ
புருனோவின்
பிரச்சினை ஒரு
தனி நபருடைய
பிரச்சினையாக
இல்லாமல்
உலகளாவிய
பிரச்சினையாக
தற்போது மாற்றப்பட்டு
இருக்கின்ற காரணத்தினால்
இந்த உலகமே
ஜியார்டானோவின்
பிரச்சினையை உற்று
கவனிக்கும் நிலையில்
இருக்கிறது ;”

பெல்லரமினோ :
“ இந்த பிரச்சினையை
எப்படி தீர்ப்பது
என்பதை அறிந்து
கொள்வதற்காகத் தான்
நான் உங்களைத்
தேடி வந்தேன் “

கார்டினல் சார்டோரி :
“இந்த பிரச்சினை குறித்து
போப் அவர்களிடம்
பேசிப் பாருங்கள் “

பெல்லரமினோ :
“ நான் போப்
அவர்களை சந்தித்தேன் “

“ ஜியார்டோனோ புருனோ
உயிரோடு எரித்துக்
கொல்லப்படுவதை
அவர் விரும்பவில்லை “

“ ஜியார்டோனோ புருனோ
உயிரோடு இருக்க
வேண்டும் என்பதையே
போப் அவர்கள்
விம்புகிறார் “

“ அதுமட்டுமில்லை,
இந்த விசாரணையின்
மீது போப் அவர்கள்
அதிக அளவு அக்கறை
கொண்டு இருக்கிறார் “

“ சிறிய தவறு கூட
நேர்ந்து விடக்கூடாது
என்பதில் கவனமாக
இருக்கிறார் “

கார்டினல் சார்டோரி :
“ அப்படி என்றால்
ஜியார்டானோ புருனோ
மனம் மாற வேண்டும் “

“ மனம் மாறுவார் என்று
நீங்கள் நினைக்கிறீர்களா “

பெல்லரமினோ :
“எனக்குத் தெரியவில்லை”

கார்டினல் சார்டோரி :
“ஜியார்டானோ
புருனோவை
சித்திரவதை செய்து
மனமாற்றம் அடையச்
செய்ய முடியாது

ஆனால்,
ஒன்று செய்யலாம் “

பெல்லரமினோ :
“என்ன செய்யலாம்”

கார்டினல் சார்டோரி :
“ அவரை சிறையிலிருந்து
வெளியே அழைத்து
வந்து உங்களுடைய
தனிமையான இடத்தில்
வைத்து அவரிடம்
நட்பு ரீதியாக
பேசிப் பாருங்கள் “

பெல்லரமினோ :
“ இது சரியாக வரும்
என்று நீங்கள்
நினைக்கிறீர்களா…………….? “

கார்டினல் சார்டோரி :
“ ஜியார்டானோ
புருனோவின்
குணத்தை அறிந்து
கொள்வதற்கும்
அவர் மனதில்
என்ன இருக்கிறது
என்பதை தெரிந்து
கொள்வதற்கும்
ஒரு நல்ல வாய்ப்பாக
ஜியார்டோனோ
புருனோவின்
சந்திப்பை நீங்கள்
ஏன் பயன்படுத்திக்
கொள்ளக் கூடாது…………………..? “

“ பல வருடங்களாக
சிறையில் இருந்தவர் ;
பலவிதமான
சித்திரவதைகளை
அனுபவித்தவர் ;
சுதந்திரத்தின் சுவாசக்
காற்று எப்படி இருக்கும்
என்பதை அவருக்கு
கொஞ்சம் காட்டுங்கள் ;
என்ன நடக்கிறது
என்று பார்ப்போம் “

பெல்லரமினோ :
“ முயற்சி செய்து
பார்க்கிறேன் “

கார்டினல் சார்டோரி :
“ஒன்றை மட்டும்
நினைவில் கொள்ளுங்கள்
பெல்லரமினோ………….? “

“ பெல்லரமினோவாக
இருக்கும் தாங்கள்
கார்டினல் என்ற
பதவியைப் பெற்று
கார்டினல்
பெல்லரமினோவாக
பதவி ஏற்கப்
போகிறீர்கள் என்பதை
நினைவில்
கொள்ளுங்கள்.”

“ அந்த பதவிக்குரிய
புனிதத்தை
காப்பாற்றுவதற்காக
எத்தகைய
செயல்களைச்
செய்ய வேண்டுமோ
அத்தகைய
செயல்களை
துணிந்து
செய்யுங்கள்.”

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  06-02-2019
/////////////////////////////////////////////////////////////