February 10, 2019

திருக்குறள்-பதிவு-102


                      திருக்குறள்-பதிவு-102


(போப் அறையில்
பாதர் டிராகாக்லியோலோ
அமைதியாக நின்று
கொண்டிருக்க ;
போப் கிளமெண்ட்-VIII ;
கார்டினல் சார்டோரி  ;
பெல்லரமினோ  ;
ஆகியோரிடையே
சூடான வாக்கு வாதம்
நடைபெற்றுக்
கொண்டிருந்தது)


போப் கிளமெண்ட்-VIII :
“ கார்டினல் சார்டோரி
உங்களைக் கண்டு
நாங்கள் பலமுறை
பொறாமைப்பட்டிருக்கிறோம் ;
உங்களுடைய அறிவுத்
திறமையைக் கண்டு
நாங்கள் வியந்திருக்கிறோம் ;
சந்தேகம் என்ற
ஒன்றே ஏற்படாதவர் ;
என்று பெருமைப்
பட்டிருக்கிறோம் ; “

“ உங்களுக்கு ஏதேனும்
சந்தேகம் ஏற்பட்டு
இருக்கிறதா…….? “

கார்டினல் சார்டோரி :
“ புனித தந்தையே !
எனக்கு எந்த சந்தேகமும்
ஏற்படவில்லை “

“ ஆனால் தாங்கள்
என்ன நினைக்கிறீர்கள் ?
என்பதையும் ;
தாங்கள் என்ன
சொல்ல வருகிறீர்கள் ?
என்பதையும் ;
என்னால் புரிந்து
கொள்ள முடியவில்லை ; “

பெல்லரமினோ :
ஞகத்தோலிக்க
கிறிஸ்தவ திருச்சபைக்கும்
கிறிஸ்தவ மதத்திற்கும்
எதிராக செயல்பட்டவர்களை
தூக்கில் போடுவது ;
உயிரோடு எரிப்பது ;
என்று அளிக்கப்பட்ட பல
தண்டனைகளை மக்கள்
பார்த்து விட்டார்கள் “

“ இனிமேலும்
இதைப்போல் தண்டனைகள்
வழங்கப்பட்டால் - மக்கள்
இதைப் பார்த்துக் கொண்டு
சும்மா இருப்பார்களா
என்று தெரியவில்லை; “

கார்டினல் சார்டோரி :
“ ஜியார்டானோ
புருனோவை உயிரோடு
எரிப்பதன் மூலம்
மக்களுக்கு ஒன்றை
புரிய வைக்கலாம் ;
கிறிஸ்தவ மதத்தை
எதிர்ப்பவர்களுக்கு
இத்தகைய நிலை தான்
ஏற்படும் என்பதை
புரிய வைக்கலாம் ; “

“ ஜியார்டானோ
புருனோவை உயிரோடு
எரிக்காவிட்டால் ;
கிறிஸ்தவ மதத்தை
எதிர்ப்பவர்களுக்கும் ;
கிறிஸ்தவ
மதத்தை எதிர்க்க
நினைப்பவர்களுக்கும்
மனதில் தைரியம்
வந்து விடும் “

“ யார் வேண்டுமானாலும்
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையின்
நடவடிக்கைகளை
எதிர்க்கலாம் ;
கிறிஸ்தவர்கள் பின்பற்றும்
மத நம்பிக்கைகளை
இழிவு செய்யலாம் ;
பைபிளில் உள்ள
கருத்துக்கு எதிராக
கருத்து சொல்லலாம் ;
என்ற நிலை
உருவாகி விடும் “

 “ ஜியார்டானோ
புருனோவை உயிரிரோடு
எரிப்பதன் மூலம்
கிறிஸ்தவ மதத்தை யாரும்
எதிர்க்கவும் மாட்டார்கள் ;
கிறிஸ்தவ மதத்தை
எதிர்க்க வேண்டும்
என்ற தைரியமும்
யாருக்கும் வராது ;

போப் கிளமெண்ட்-VIII :
“ ஜியார்டானோ
புருனோவை உயிரோடு
எரிக்கும் செயலைச்
செய்தால் நடைபெற்றுக்
கொண்டிருக்கும் ஆட்சி
கடவுளின் ஆட்சியாக இராது ;
பயங்கரவாதிகளின்
ஆட்சியாகத் தான் இருக்கும் ; “

கார்டினல் சார்டோரி :
“ ஜியார்டானோ
புருனோவின் கருத்துக்கள்
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையின் மாளிகை
வரை வந்து விட்டது
என்று சொல்கிறார்கள் “


போப் கிளமெண்ட்-VIII :
“ போப்பை நீங்கள்
கிறிஸ்தவ மதத்திற்கு
எதிரானவர் என்கிறீர்களா….? “

“போப்பையே நீங்கள்
சந்தேகப் படுகிறீர்களா……..? “


கார்டினல் சார்டோரி :
“அதை நான்
சொல்லவில்லை “

“அதை நான்
சொல்லவில்லை “

ஜியார்டானோ
புருனோவின் கருத்துக்கள்
புனித போப்பின்
ஆத்மாவிற்குள் புகுந்து
பாதிப்பை ஏற்படுத்துகிறது
என்றால் - இனிமேலும்
இத்தகைய ஒரு பிரச்சினை
ஏற்படக்கூடாது என்றால்
அதற்கு ஒரே வழி
ஜியார்டானோ
புருனோவை உயிரோடு
எரிப்பது மட்டும் தான். “


பெல்லரமினோ :
ஜியார்டோனோ
புருனோவை உயிரோடு
எரித்தால் - அவரை
உயிரோடு எரிப்பதற்காக
வைக்கப்பட்ட நெருப்பு
உயிரோடு எரித்ததோடு
மட்டுமில்லாமல்
எரித்த அந்த நெருப்பு
அணையாமல் தொடர்ந்து
பல நூற்றாண்டுகள்
எரிந்து மிகப்பெரிய
பாதிப்புகளை ஏற்படுத்திக்
கொண்டே இருக்கும் “

கார்டினல் சார்டோரி :
“நாம் கிறிஸ்தவ
மதத்திற்கு எதிராக
செயல்பட்ட ஜியார்டானோ
புருனோவிற்கு என்ன
தண்டனை வழங்க
வேண்டும் என்பதைப்
பற்றி பேசிக்
கொண்டிருக்கிறோமோ ?
( அல்லது )
அவருடைய பாவங்களை
எப்படி மன்னிப்பது ;
எப்படி அவருக்கு கடவுள்
அருள் கிடைக்கச் செய்வது ;
என்பதைப் பற்றி - நாம்
பேசிக் கொண்டிருக்கிறோமோ?
என்பது எனக்கு தெரியவில்லை.”

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  09-02-2019
/////////////////////////////////////////////////////////////

February 08, 2019

திருக்குறள்-பதிவு-101


                      திருக்குறள்-பதிவு-101

பெல்லரமினோ :
“ ஜெர்மனி, இங்கிலாந்து,
ஸ்கேண்டினேவியா
(Scandinavia),
ஸ்விட்சர்லாந்து
(Switzerland)
மற்றும் ஃப்ளாண்டர்ஸ்
(Flanders)
பேரரசர்கள்
எங்களுக்கு சவாலாக
இருக்கிறார்கள் “

ஜியார்டானோ புருனோ:
“உங்களைப் பார்த்து
கற்றுக் கொண்டார்கள் “

“அதை பயன் படுத்தும்
போது உங்களுக்கு
எதிராக இருக்கிறது
அவ்வளவு தான் “

பெல்லரமினோ :
“ எதை
சொல்கிறீர்கள்…………..? “

ஜியார்டானோ புருனோ:
“ ஒவ்வொரு நாடும்
தங்கள் நாட்டிற்கென்று
ஒரு மதத்தை தனியாக
நிறுவுவதன் மூலம்
மதத்தின் பெயரால்
மக்களுடைய நம்பிக்கையை
அடித்தளமாக்கி அதன்
மூலம் அதிகாரத்தை
கைப்பற்றி - மக்களை
அடிமையாக வைத்து
அரசாட்சி செய்வது எப்படி
என்று உங்களிடம்
இருந்து கற்றுக்
கொண்டதை செயல்படுத்த
நினைக்கிறார்கள் – அது
உங்களுக்கு எதிராக
இருக்கிறது. “

பெல்லரமினோ :
இத்தகைய தவறான
ஒரு நிலை ஏற்பட்டு
விடக்கூடாது
என்பதற்காக தான்
நாங்கள் பாடு பட்டுக்
கொண்டு இருக்கிறோம் “

ஜியார்டானோ புருனோ:
“ நம்பிக்கையின் பெயரால்
மக்களை அடிமைகளாக
வைத்து நீங்கள் ஆள
நினைப்பது தவறில்லை ;
அதை வேறு நாடுகள்
செய்ய முற்படும்போது
நீங்கள் ஏன் அதை
எதிர்க்கிறீர்கள் ;
உங்களுக்கு எதிராக
அவர்கள்
இருக்கிறார்கள் என்ற
காரணத்திற்காகவா……….? “

பெல்லரமினோ :
“ எது உண்மையான
நம்பிக்கை என்பதைப்
பொறுத்துத் தான்
அனைத்தும் இருக்கிறது “

ஜியார்டானோ புருனோ:
“ உங்களுடைய
நம்பிக்கையை
பாதுகாப்பதற்குத் தான
ஆயிரக்கணக்கான
இஸ்லாமியர்களையும்
யூதர்களையும் உயிரோடு
எரித்து கொல்கிறீர்களா “

“ உங்களுடைய
நம்பிக்கையை
பாதுகாப்பதற்குத் தான்
நீங்கள் ஸ்பெயினை
பயன் படுத்துகிறீர்களா………….? “

பெல்லரமினோ :
“ ஸ்பெயின் நாடு
கிறிஸ்தவ மதத்தின் மீது
நம்பிக்கை கொண்ட நாடு
அனைத்து விதமான
மத விரோத போக்கிற்கும்
ஸ்பெயின் உற்ற
துணையாக இருக்கிறது, “

ஜியார்டானோ புருனோ:
“கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபை வலிமையாக
இருக்கும் ஐரோப்பாவை
சிறு சிறு துண்டுகளாக
உடைத்து அதன்
வலிமையை சிதைப்பதற்குத்
தேவையான அனைத்து
விதமான செயல்களையும்
செய்து வைத்திருக்கிறது “

“ அழிவிற்கான விதையை
விதைத்து விட்டு
அழிவு எப்போது
ஏற்படும் என்பதை
கவனித்துக் கொண்டு
இருக்கிறது “

பெல்லரமினோ :
“ கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையால்
நடைமுறைப்படுத்தப்பட்டு
மக்களால்
பின்பற்றப்பட்டு வரும்
சட்டதிட்டங்களையும் ;
மத நம்பிக்கைகளையும் ;
ஒற்றுமையையும் ;
எவர் ஒருவர் அழிக்க
நினைத்தாலும் ;
அவருடைய
செயலை தடுத்து ;
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையை பாதுகாக்க
வேண்டிய மிகப்பெரிய
பொறுப்பு எங்களுக்கு
இருக்கிறது.”

“ கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையை எவர்
ஒருவர் அழிக்க
நினைத்தாலும் ;

“ ஆண்டாண்டு காலமாக
கிறிஸ்தவர்களால்
கடைபிடிக்கப்பட்டு வரும்
மத நம்பிக்கைகளை
எவர் ஒருவர்
இழிவு செய்தாலும் ;

பைபிளில் சொல்லப்பட்ட
ஆண்டவரின்
வார்த்தைகளை எதிர்த்து
எவர் ஒருவர்
கருத்து கூறினாலும் ;

அவர் கத்தோலிக்க
கிறிஸ்தவ
திருச்சபைக்கும் ;
கிறிஸ்தவர்களுக்கும் ;
எதிரியாகவே
கருதப்படுவார் ;
நம்பிக்கை
துரோகியாகவே
கருதப்படுவார் ;

ஜியார்டானோ புருனோ:
“ தயவு செய்து என்னை
மீண்டும் என்னுடைய
சிறை அறைக்கு
அழைத்து செல்லுங்கள்! “

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------   08-02-2019
/////////////////////////////////////////////////////////////


February 07, 2019

திருக்குறள்-பதிவு-100


                      திருக்குறள்-பதிவு-100

(ஜியார்டானோ புருனோ
தனக்கு வழங்கப்பட்ட
ஆடையை உடுத்திக்
கொண்டு அரண்மனை
போல் இருக்கும் ஒரு
வீட்டின் மேல் நடந்து
சென்று கொண்டிருந்த
போது அவர் காதில்
கிறிஸ்தவ பாடல்களும்
இசையும் கேட்டதால்
ஜன்னல் வழியாக
பார்த்தார். அந்த சர்ச்சில்
கிறிஸ்தவ பாடல்களை
சிலர் பாடிக் கொண்டிருக்க ;
அந்த பாடலுக்கு ஏற்றபடி
சிலர் நடனமாடிக்
கொண்டு இருந்தனர் ;”

“ அந்த காட்சியினைக்
கண்டு கொண்டிருந்தார்
ஜியார்டானோ புருனோ
அந்த நேரத்தில் அங்கு
வந்து சேர்ந்த
பெல்லரமினோ பேசத்
தொடங்கினார்)

பெல்லரமினோ :
" பாருங்கள் !
நன்றாக பாருங்கள் !
வாழ்க்கை எவ்வளவு
இன்பமயமானது என்பதை
ரசித்துக் கொண்டே
பாருங்கள் "

" கொள்கை ; கோட்பாடு ;
குறிக்கோள் - என்று
அலைந்து திரிந்து
கொண்டிருப்பவர்கள்
வாழ்க்கை இன்பமயமானது
என்பதை அறிந்து
கொள்ள முடியாமலேயே
இறந்து விடுகின்றனர், "

" நீங்களும் ஏன் அந்த
தேவையற்ற குப்பைகளை
சுமந்து கொண்டு திரிகிறீர்கள். "

" வாழ்க்கையின்
இன்பமயமான வாசல்கள்
அனைத்தும் உங்களுக்காக
திறந்தே
வைக்கப்பட்டிருக்கிறது ;
நீங்கள் அந்த கதவுகளை
அடைத்து விட்டு
துன்பத்தின் சுவாசத்தினைத்
தான் சுவாசிப்பேன் என்று
அடம் பிடிக்கிறீர்கள் "

“ யாருடனும் சேராமல்
தனிமையில் இருந்து
கொண்டு உங்களை
நீங்களே ஏன் தனிமைப்
படுத்திக் கொள்கிறீர்கள். “

“ கிறிஸ்தவ மதத்தில்
இருந்து விலகி இருப்பதோடு
மட்டுமல்லாமல் ;
கிறிஸ்தவ மதத்திலிருந்து
வெகு தொலைவுக்கு
பிரிந்து சென்று
கொண்டிருக்கிறீர்கள்.”

" கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையின் உயர்ந்த
பதவிகளை அலங்கரிப்பதற்கு
தேவையான ஆழ்ந்த
அறிவும், சிறந்த ஞானமும்
உங்களிடம் இருக்கிறது”

“ அதுமட்டுமல்லாமல்
கார்டினலாக ஆவதற்குரிய
அனைத்து தகுதிகளையும்
நீங்கள் பெற்றுள்ளீர்கள் “

“ அப்படி இருக்கையில்
நீங்கள் ஏன் உங்கள்
வாழ்க்கையை வீணடித்துக்
கொண்டு இருப்பதோடு
மட்டுமல்லாமல்
எதற்காக உங்கள்
உயிரையும் இழப்பதற்கு
தயாராக இருக்கிறீர்கள் “

ஜியார்டானோ புருனோ :
“ என்னுடைய குணத்தை
அறிந்து கொள்வதற்கும் ;
என்னுடைய மனதில்
என்ன இருக்கிறது
என்பதை தெரிந்து
கொள்வதற்கும்  ;
தாங்கள் என்னை
உங்கள் அறைக்கு
தனிமையில் அழைத்து
பேசிக் கொண்டிருக்கிறீர்கள் ;”

(ஜியார்டானோ
புருனோவின்
வார்த்தைகளைக் கேட்டு
மிரண்டு போன
பெல்லரமினோ
சுதாரித்துக் கொண்டு
மீண்டும் பேசலானார்,)

பெல்லரமினோ :
“ கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையின்
நடவடிக்கைகளில் மாற்றம்
கொண்டு வர வேண்டும்
என்பதற்காகவும் ;
கிறிஸ்தவ மக்களால்
கடைபிடிக்கப்பட்டு
வரும் மத நம்பிக்கைகளில்
சீர்திருத்தம் கொண்டு வர
வேண்டும் என்பதற்காகவும் ;
நீங்கள் ஐரோப்பா
முழுவதும் சுற்றி
வந்து இருக்கிறீர்கள் ; “

“ கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபைக்கென்று
தனிச்சட்டங்கள்
இருக்கின்றன “

“ பல நூற்றாண்டுகளாக
நடைமுறைப்படுத்தப்பட்டு
காலம் காலமாக மக்களால்
கடைபிடிக்கப்பட்டு வரும்
அந்த சட்டங்களை
மாற்றுவது என்பது
அவ்வளவு எளிதான
காரியமல்ல “

 “ கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையின் சட்ட
திட்டங்களை
நிறைவேற்றுவதற்காகவும் ;
அதன் மத
நம்பிக்கைகைளை
அனைவரும் கடைபிடிக்க
வேண்டும் என்பதற்காகவும் ;
செய்யப்பட்ட செயல்கள்
அனைத்துமே ஒரு
வரலாறு தான் ;
அந்த வரலாற்றை
எப்படி மாற்ற முடியும்………..? “

ஜியார்டானோ புருனோ:
“ வெற்றி பெற்றவர்களால்
எழுதப்படுவது தான்
வரலாறு - அதில்
பொய்கள் தான் நிரம்பி
இருக்கும் - உண்மை
கொஞ்சமும் இருக்காது ;
உண்மையை மாற்ற
முடியாது - ஆனால்
பொய்யை எளிதாக
மாற்றலாம் ; “

“ நீங்கள் கத்தோலிக்க
கிறிஸ்தவ திருச்சபையை
உலகில் உள்ள மக்களை
மிரட்டி அடிமைகளாக
வைத்திருப்பதற்கு- ஒரு
ஆயுதமாகத் தான்
பயன்படுத்துகிறீர்கள் “

“ அடிமையாக இருக்க
மறுத்து சுதந்திரக்
காற்றை சுவாசிக்க
நினைப்பவர்களை நீங்கள்
சித்திரவதை செய்து
கொன்று விடுகிறீர்கள் “

“ சுதந்திரம் கொடுக்கவில்லை
என்றாலும் பரவாயில்லை
ஒருவரையும் அடிமையாக
வைத்திருக்காதீர்கள். “
  
---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  07-02-2019
/////////////////////////////////////////////////////////////