March 16, 2019

திருக்குறள்-பதிவு-126


                        திருக்குறள்-பதிவு-126

 " கிறிஸ்தவ
குடும்பத்தில் பிறந்து ;
கிறிஸ்தவராகவே வாழ்ந்து ;
கிறிஸ்தவ மதத்தின்
உயர்ந்த பதவிகளை
அடைந்த ஒருவரை ;
கிறிஸ்தவ உலகம் கண்டிராத
அறிவுலக மாமேதையை ;
கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த
ஜியார்டானோ புருனோவை ;
கிறிஸ்தவ மதத்தைச்
சேர்ந்தவர்களே உயிரோடு
எரித்து கொன்று
விட்டார்கள் ; - என்பது
தான் வேதனைப் பட
வேண்டிய விஷயம் ! "

" ஜியார்டானோ புருனோ
யாரையும் எதிரியாக
நினைத்ததில்லை ;
யாரையும் எதிரியாக
பார்த்ததில்லை ;
ஏனென்றால் அவருக்கு
எதிராக எதிரியாக நின்று
கொண்டு எதிர்க்கக் கூடிய
தகுதி யாருக்கும்
இருந்ததே இல்லை; "

" கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபை
நடைமுறைப்படுத்தி
வைத்திருக்கும்
பழக்க வழக்கங்களில்
சீர்திருத்தம்கொண்டு வர
வேண்டும் என்று சொன்ன
காரணத்திற்காக கத்தோலிக்க
கிறிஸ்தவ திருச்சபை அவரை
எதிரியாக நினைத்து
அவரை எதிர்த்தது ;"

" சர்ச்சுகளில்
கடைபிடிக்கப்பட்டு வரும்
மத நம்பிக்கைகளில்
மாற்றம் கொண்டு
வர வேண்டும் என்று
சொன்ன காரணத்திற்காக
சர்ச்சுகள் அவரை
எதிரியாக நினைத்து
அவரை எதிர்த்தது ; "

" சூரியனை மையமாக
வைத்து பூமி சுற்றுகிறது
என்று பைபிளில் உள்ள
கருத்துக்கு எதிராக கருத்து
சொன்ன காரணத்திற்காக
கிறிஸ்தவர்கள் அனைவரும்
அவரை எதிரியாக நினைத்து
அவரை எதிர்த்தனர் ; "

" உலகில் உள்ள அனைத்து
கிறிஸ்தவ மக்களும் ஒன்றாக
சேர்ந்து அவரை எதிர்த்து
நின்ற போதிலும் தான்
கொண்ட கொள்கையில்
சற்றும் பிறழாமல்
வாழ்ந்த காரணத்தினால்
அவரை உயிரோடு எரித்து
கொன்று விட்டனர் ; "

" ஜியார்டானோ புருனோ
என்ற - புரட்சி நெருப்பை
வாத்திகன் நகரம்
தன்னுடைய மத நெருப்பால்
உயிரோடு எரித்து
கொன்று விட்டது "

" ஜியார்டானோ புருனோ
என்ற நெருப்பை
மத நெருப்பால்
எரித்த இடத்தில்
நிறுவப்பட்டுள்ள
ஜியார்டானோ புருனோவின்
சிலை வாத்திகன்
நகரத்தைப் பார்த்தவாறு
அமைக்கப்பட்டுள்ளது "

" தவறு செய்தவர்கள்
தாங்கள் செய்த தவறை
உணர்ந்து திருந்த வேண்டும்
என்ற காரணத்திற்காகவும் ;
இதைப் போன்ற தவறுகளை
இனி செய்யக் கூடாது
என்ற காரணத்திற்காகவும் ;
ஜியார்டானோ
புருனோவின் சிலையின்
பார்வையிலிருந்து
வெளிப்படும் நெருப்பானது
வாத்திகன் நகரை
ஒவ்வொரு கணமும்
எரித்துக் கொண்டு
அவர்களை எச்சரிக்கை
செய்யும் விதத்தில்
இருக்க வேண்டும்
என்ற காரணத்திற்காகவும் ;
ஜியார்டானோ புருனோவின்
சிலை வாத்திகன்
நகரத்தைப் பார்த்தவாறு
அமைக்கப்பட்டுள்ளது "

" கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபை நடைமுறைப்படுத்தி
வைத்திருக்கும்
பழக்க வழக்கங்களில்
சீர்திருத்தம் கொண்டு
வர வேண்டும் என்று
சொன்ன காரணத்திற்காக
ஜியார்டானோ புருனோ
உயிரோடு எரித்துக்
கொல்லப்படவில்லை ; "

" சர்ச்சுகளில் கடைபிடிக்கப்பட்டு
வரும் மத பழக்கங்களில்
மாற்றம் கொண்டுவர
வேண்டும் என்று
சொன்ன காரணத்திற்காக
ஜியார்டானோ புருனோ
உயிரோடு எரித்துக்
கொல்லப்படவில்லை '

" காலம் காலமாக கிறிஸ்தவ
மதத்தில் கடைபிடித்து வரும்
பழக்க வழக்கங்களில்
மாற்றம் கொண்டுவர
வேண்டும் என்று
சொன்ன காரணத்திற்காக
ஜியார்டானோ புருனோ
உயிரோடு எரித்துக்
கொல்லப்படவில்லை "

" ஜியார்டானோ புருனோ
உயிரோடு எரித்து
கொல்லப்பட்டதற்கு
இவைகள் அனைத்தும்
ஒரு காரணம் தானே
தவிர - இவைகள்
மட்டுமே காரணம் இல்லை "

" ஜியார்டானோ புருனோவின்
தொலைநோக்கு பார்வையின்
மூலம் கண்டறிந்த
உண்மையை சொன்ன
காரணமே அவர்
உயிரோடு எரிக்கப்பட்டதற்கு
முக்கிய காரணம் ; "

" அந்த காரணத்தை
நாமும் நம்முடைய
சந்ததிகளும் அந்த
உண்மைகளை அறிந்து
கொள்ளாமல் விட்டு
விட்டால் எதிர்காலத்தில்
நாமும் நம்முடைய
சந்ததிகளும் மட்டுமல்ல
உலகில் உள்ள மக்கள்
அனைவரும் அடிமைகளாக
இருக்க வேண்டிய
சூழ்நிலை தான் ஏற்படும் "

" ஜியார்டானோ புருனோ
தொலை நோக்கு
பார்வையின் மூலம்
கண்டறிந்த உண்மையை
நாம் முதலில் தெரிந்து
கொள்வோம் அப்பொழுது
தான் - நாம் வருங்கால
சந்ததிக்கும்
அந்த காரணத்தை
சொல்ல முடியும் "

" ஜியார்டானோ புருனோ
உயிரோடு எரித்துக்
கொல்லப்பட்டதற்கு முக்கிய
காரணம் இது தான்……………………?"

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  16-03-2019
/////////////////////////////////////////////////////




March 13, 2019

திருக்குறள்-பதிவு-125


                     திருக்குறள்-பதிவு-125

“உலகமே உற்றுக்
கவனித்துக் கொண்டிருந்த
ஜியார்டானோ
புருனோவின் சிலை
திறக்கும் நாளான
1889-ஆம் ஆண்டு
ஜுன் மாதம்
9-ம் தேதி அதிகாலை
சூரியன் உதிக்க
ஆரம்பித்து விட்டது ;
விடியல் விடியத்
தொடங்கி விட்டது ;
உயிர்கள் விழிக்கத்
தொடங்கி விட்டது ;”

“ வீடுகளிலும் ;
தெருக்களிலும் ;
கடைகளிலும் ;
மக்கள் கூடும்
அனைத்து இடங்களிலும் ;
மக்களுடைய
பேச்சுச் சத்தமோ
மக்களுடைய
காலடி ஓசையோ
எதுவுமே கேட்கவில்லை ;
மக்கள் அனைவரும்
தங்களுடைய வீட்டின்
கதவுகள் ;
ஜன்னல்கள் ; ஆகிய
அனைத்தையும்
அடைத்து வைத்து
விட்டு வீட்டிற்குள்
அமைதியாக இருந்தனர் “

“மக்கள் அனைவரும் தங்கள்
உயிரை கைகளில் பிடித்துக்
கொண்டு என்ன
நடக்கப் போகிறதோ என்ற
அச்சத்துடன் இருந்த
காரணத்தினால் - யாரும்
வீட்டை விட்டு
வெளியே வரவில்லை ”

“தெருக்கள் அனைத்தும்
வெறிச்சோடிக் கிடந்தது ;
அந்த நகரம் முழுவதும்
மயான அமைதி நிலவியது ;

“சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக
மேலேறத் தொடங்கியது ;”

“ அந்த நேரத்தில் யாரும்
எதிர்பாராத வகையில்
தெருக்களில் மக்கள்
பேசும் சத்தமும் ;
காலடி ஓசையும் ;
வீட்டிற்குள்
இருந்தவர்களுக்கு கேட்டது “

“ நேரம் ஆக ஆக
மக்களுடைய
பேச்சுச் சத்தமும் ;
காலடி ஓசையும் ;
அதிகரித்துக்
கொண்டே வந்தது; “

“ மக்கள் அனைவரும்
கொஞ்சம் கொஞ்சமாக
வீட்டை விட்டு வெளியே
வரத் தொடங்கினர் ;
அவர்கள் அனைவரும்
ஜியார்டானோ புருனோ
உயிரோடு எரித்துக்
கொல்லப்பட்ட இடமான
காம்போ டி ஃபியோரி
(Campo dei Fiori)
என்ற இடத்தை நோக்கி
சென்று அந்த இடத்தில்
ஒன்றாக கூடினர் “

“ அந்த இடத்தில் உள்ள
வீடுகளில் உள்ளவர்கள்
தங்கள் வீடுகளிலுள்ள
கதவுகளையும் ;
ஜன்னல்களையும் ;
திறந்து வெளியே நடக்கும்
நிகழ்வுகளை பார்த்துக்
கொண்டு இருந்தனர் ;
மாடிகளில் ஏறி நின்று
கொண்டு பார்த்துக்
கொண்டு இருந்தனர் ; “

“அந்த இடம் முழுவதும்
மக்கள் வெள்ளத்தால்
நிரம்பி வழிந்தது ;
ஜியார்டானோ புருனோவின்
ஆதரவாளர்கள் மட்டுமல்ல
மக்களும் அதிக அளவில்
அந்த இடத்தில்
கூடி இருந்தனர் ;”

“ கத்தோலிக்க திருச்சபையின்
எச்சரிக்கையையும் மீறி
ஏராளமானவர்கள் அந்த
இடத்தில் கூடி இருந்தனர் “

“சிறுவர் முதல் முதியோர்
வரை வயது பேதம்
இல்லாமல் அந்த இடத்தில்
கூடி இருந்தனர் “

“ ஜியார்டானோ
புருனோவின் கருத்துக்கள்
உண்மையானது ;
நியாயமானது ; - என்று
நினைத்து அவரைப்
பின்பற்றுபவர்கள் ;
தலை சிறந்த
தத்துவ மேதைகள் ;
சிறந்த அறிஞர்கள் ;
புகழ் பெற்ற பேச்சாளர்கள் ;
என்று கணக்கிலடங்காதவர்கள்
அந்த இடத்தில்
கூடி இருந்தனர் ; “

“ மக்கள் வெள்ளத்தால்
அந்த இடமே நிரம்பி
வழிந்து கொண்டிருந்தது ;
மக்கள் தொடர்ந்து
அந்த இடத்தை நோக்கி
வந்து கொண்டு இருந்தனர் ; “

“ வெயிலின் தாக்கம்
அதிகமாக இருந்தது ;
மக்கள் அனைவரும்
வெயிலின் வெம்மையிலிருந்து
தங்களை பாதுகாத்துக்
கொள்வதற்காக
தாங்கள் கொண்டு வந்த
குடையை பிடித்துக் கொண்டு
நின்று கொண்டு இருந்தனர் ; “

“ பலத்த கரகோஷங்களுக்கு
இடையே மக்களுடைய
ஆரவாரங்களுக்கிடையே
ஜியார்டானோ
புருனோவின் முழுஉருவ
வெண்கல சிலை ;
வாத்திகனைப் பார்த்தவாறு
அமைக்கப்பட்டுள்ள சிலை ;
1889-ஆம் ஆண்டு
ஜுன் மாதம் 9-ம் தேதி
திறக்கப்பட்டது ;”

“ அடிமை விலங்கை
அறுத்தெறிய வந்த
புரட்சியாளர் ;
ஜியார்டானோ புருனோ
வாழ்க ! “

“ மதவெறிக்கு
அடிபணியாத மாமேதை ;
ஜியார்டானோ புருனோ
வாழ்க ! “

என்று அங்கு கூடியிருந்த
மக்கள் எழுப்பிய கரகோஷம்
அந்த நகரத்தையே
அதிர வைத்தது.

“ சிலையைத் திறந்து
வைத்து - அறிஞர்கள்
ஆற்றிய உரை வரலாற்று
முக்கியத்துவம் கொண்டவை
அவைகள்……………………………….!”

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  13-03-2019
//////////////////////////////////////////////
1889-ஆம் ஆண்டு
ஜுன் மாதம் 9-ம் தேதி
வாத்திகன் நகரத்தைப்
பார்த்தவாறு
திறக்கப்பட்ட
ஜியார்டானோ
புருனோவின்
சிலை இது தான்
///////////////////////////////////////////////







March 12, 2019

திருக்குறள்-பதிவு-124


                     திருக்குறள்-பதிவு-124

“ஜியார்டானோ
புருனோவின் பார்வை
வாத்திகன் நகரத்தைப்
பார்த்தபடியும் ;
ஜியார்டானோ
புருனோவின் முழுஉருவ
வெண்கல சிலை
வாத்திகன் நகரத்தைப்
பார்த்தபடியும் தான் ;
அமைக்கப்படும் என்று
ஜியார்டானோ
புருனோவின்
ஆதரவாளர்கள்
திட்டவட்டமாக சொல்லி
விட்ட காரணத்தினால்
ஜியார்டானோ புருனோவின்
ஆதரவாளர்களும் ;
ஜியார்டானோ புருனோவின்
எதிர்ப்பாளர்களும் ;
தங்கள் பேச்சுவார்த்தைகளை
முடித்துக் கொண்டனர் “

“ ஜியார்டானோ புருனோ
உயிரோடு எரித்து
கொல்லப்பட்ட இடமான
காம்போ டி ஃபியோரி
(Campo dei Fiori)
மீது ஜியார்டானோ
புருனோவின் சிலை
அமைக்கப்படும் என்றும் ;

ஜியார்டானோ புருனோ
எரிந்த சரியான
இடத்தில் ஜியார்டானோ
புருனோவின் முழுஉருவ
வெண்கல சிலை
அமைக்கப்பட்டு
திறக்கப்படும் என்றும் ;

ஜியார்டானோ
புருனோவின் பார்வை
வாத்திகன் நகரத்தை
பார்த்தபடியும் ;
சிலை வாத்திகன்
நகரத்தைப் பார்த்த
வண்ணமும் தான்
அமைக்கப்படும் என்றும் ;

ஜியார்டானோ
புருனோவின் சிலை
1889-ஆம் ஆண்டு
ஜுன்மாதம் 9-ம் தேதி
திட்டமிட்டபடி
திறக்கப்படும்
என்றும் அறிவிக்கப்பட்டது ; “

“ ஜியார்டானோ
புருனோவின் சிலை
திறக்கப்படக் கூடாது ;
அப்படியே திறக்கப்பட்டாலும்
வாத்திகன் நகரத்தை
பார்த்தபடி
இருக்கக் கூடாது ;
என்று போராடிய
வாத்திகன் நகரம் ;
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபை ;
சர்ச்சுகள் ; கிறிஸ்தவர்கள் ;
ஆகியோருக்கு இந்த
செய்தி பெரும்
அதிர்ச்சியை ஏற்படுத்தியது ; “

“ கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையைச்
சேர்ந்தவர்கள்
ஒவ்வொரு வீட்டின்
கதவைத் தட்டி
அந்த வீட்டில்
உள்ளவர்களிடம்
பேசினர் “

“ ஜியார்டானோ
புருனோவின் சிலை
திறப்புக்கு எதிர்ப்பு
தெரிவிக்க வேண்டும் ;
ஜியார்டானோ
புருனோவின் சிலை
திறப்புக்கு எதிர்ப்பு
தெரிவிக்காமல் ஆதரவு
அளித்து சிலை
திறப்பு விழாவில்
கலந்து கொண்டால் ;

கிறிஸ்தவ மதத்தின்
மூலம் பெற்று வரும்
அனைத்து சலுகைகளும்
ரத்து செய்யப்படும் ;

சர்ச்சின்
உறுப்பினரிலிருந்து
நீக்கப்படுவார் ;
உலகின் எந்த மூலையில்
உள்ள சர்ச்சிலும்
அவர்கள் உறுப்பினராக
இருக்க முடியாது ;

சுருக்கமாக சொல்ல
வேண்டுமானால்
கிறிஸ்தவ மதத்திலிருந்து
நீக்கப்படுவார் என்று
அறிவுறுத்தப்பட்டது ; “

“ இந்த செயல் அந்த
நகரம் முழுவதும்
நடைபெற்றது “

“ இதற்கு ஜியார்டானோ
புருனோ ஆதரவாளர்கள்
எதிர்வினை எதுவும்
ஆற்றாமல் இருந்தது
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையினர்
மத்தியிலும் ;
கிறிஸ்தவர்கள் மத்தியிலும் ;
மக்கள் மத்தியிலும் ;
பெருத்த ஆச்சரியத்தை
ஏற்படுத்தியது ; “

“ அவர்களுடைய அமைதி
எத்தகைய விளைவுகளை
ஏற்படுத்தும் என்று
தெரியாமல் அனைவரும்
ஆச்சரியம் கலந்த
பயத்துடன் இருந்தனர் ‘

“ சிலை திறப்பு விழாவிற்கு
முந்திய நாள்
என்ன நடக்கும்
எது நடக்கும் - என்று
கலக்கத்துடன் - அந்த
நகரமே அமைதியாக
இருந்தது - மக்கள்
நடமாட்டம் இல்லாமல்
தெருக்கள் அனைத்தும்
வெறிச்சோடிக் கிடந்தன “

“நேரம் ஆக ஆக
மக்கள் யாருமே
தெருவில் நடமாடவில்லை ;
ஏதேனும் அசம்பாவிதம்
நிகழ்ந்து அதில் மாட்டிக்
கொள்ளக்கூடாது ;
என்பதற்காக
மக்கள் அனைவரும்
முன்னெச்சரிக்கை
நடவடிக்கையாக வீட்டை
பூட்டிக் கொண்டு
வீட்டிற்குள் இருந்தனர் ;
யாரும் வீட்டை விட்டு
வெளியே வரவில்லை ; ‘

“ சிலை திறப்புக்கு
முந்திய நாளே
இப்படி இருந்தால்
சிலை திறப்பு அன்று
எத்தகைய விளைவுகள்
ஏற்படுமோ என்று
அஞ்சி மக்கள்
அனைவரும் ஒருவித
பயத்துடனே இருந்தனர் “

“ ஜியார்டானோ புருனோவின்
சிலை திட்டமிட்டபடி
திறக்கப்படுமா
திறக்கப்படாதா என்ற
கேள்விக்குறியுடன்
உலகமே உறங்காமல்
விழித்துக் கொண்டிருந்தது “

“கொஞ்சம் கொஞ்சமாக
இரவு விடிந்து
கொண்டிருந்தது  

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  12-03-2019
//////////////////////////////////////////////