April 24, 2019

பரம்பொருள்-பதிவு-6


                       பரம்பொருள்-பதிவு-6

(ஆ) கடவுள் சிலைகளின்
மூலம் பெறப்படும் சக்தி:

“இந்துமதக் கோயில்களில்
கர்ப்பக் கிரகத்தில் உள்ள
கடவுள் சிலை மற்றும்
கர்ப்பக் கிரகத்தில் உள்ள
கடவுள் சிலையை
மையமாக வைத்து
கோயிலைச் சுற்றி
அமைக்கப்பட்டுள்ள
அனைத்து கடவுள் சிலைகள்
ஆகியவற்றின் மூலமாக
பெறப்படும் சக்தியானது;
கோயிலுக்குள் செலுத்தப்பட்டு;
கோயிலுக்குள் சக்தியானது
உற்பத்தி செய்யப்படுகிறது ; “

“கோயிலுக்குள் உள்ள
பல்வேறு கடவுள்
சிலைகளின் மூலமாக
சக்தியானது பெறப்பட்டு ;
கோயிலுக்குள் செலுத்தப்பட்டு ;
கோயிலுக்குள் சக்தியானது
உற்பத்தி செய்யப்பட்டாலும் ;
அடிப்படை சக்தியாகவும் ;
முக்கிய சக்தியாகவும் ;
அனைத்திற்கும் ஆதார
சக்தியாகவும் ; உள்ளது
கர்ப்பக் கிரகத்தில் உள்ள
கடவுள் சிலை மூலமாக
பெறப்படும் சக்தியாகும் “

“கர்ப்பக் கிரகத்தில் உள்ள
கடவுள் சிலை
அதற்கென்று உள்ள
சில முக்கியமான
முறைகளை வைத்துத்தான்
செய்யப்பட வேண்டும் ;
அவ்வாறு செய்யப்படும்
போது தான்
கர்ப்பக்கிரகத்தில் உள்ள
கடவுள் சிலையை
மூலமாக வைத்து
சக்தியானது பெறப்பட்டு ;
கோயிலுக்குள் சக்தியானது
செலுத்தப்பட்டு ;
கோயிலுக்குள் சக்தியானது
உற்பத்தி செய்யப்படும் ; “

“கர்ப்பக் கிரகத்தில்
உள்ள கடவுள் சிலை
அதற்கென்று உள்ள
சில முக்கியமான
முறைகளை வைத்து
செய்யப்படவில்லையெனில்  ;
கர்ப்பக்கிரகத்தில் உள்ள
கடவுள் சிலையால்
சக்தியை பெறமுடியாது ;
அதன் காரணமாக
கோயிலுக்குள் சக்தியை
செலுத்த முடியாது ;
அதன் காரணமாக
கோயிலுக்குள் சக்தியை
உற்பத்தி செய்ய முடியாது ;”

“ பல நூற்றாண்டுகளைக்
கடந்த இந்துமதக்
கோயில்களும்
பல ஆயிரம் ஆண்டுகளைக்
கடந்த இந்துமதக்
கோயில்களும் – இந்த
உலகத்தில் கணக்கிலடங்காத
எண்ணிக்கையில் உள்ளன”

“கோயில்கள் எத்தனை
ஆண்டுகள் பழமையானதாக
இருக்கிறதோ
அத்தனை ஆண்டுகள் ;

கோயில்கள் எத்தனை
நூற்றாண்டுகள் பழையானதாக
இருக்கிறதோ
அத்தனை நூற்றாண்டுகள் ;

கோயில்கள் எத்தனை
ஆயிரம் ஆண்டுகள்
பழமையானதாக இருக்கிறதோ
அத்தனை ஆயிரம் ஆண்டுகள் ;

பழமையானது கோயில்களில்
கர்ப்பக் கிரகத்தில் உள்ள
கடவுள் சிலைகள்”

“பல நூற்றாண்டுகளாக
கர்ப்பக் கிரகத்தில் உள்ள
கடவுள் சிலைக்கு
அபிஷேகங்கள்,
பூஜைகள் செய்தும்
கர்ப்பக்கிரகத்தில் உள்ள
கடவுள் சிலையானது
உடையாமல்
இருந்தால் மட்டுமே ;
கீறல் ஏதும் விழாமல்
இருந்தால் மட்டுமே ;
கர்ப்பக்கிரகத்தில் உள்ள
கடவுள் சிலையானது
சக்தியை பெற்று ;
கோயிலுக்குள் சக்தியை
செலுத்தி ;
கோயிலுக்குள் சக்தியை
உற்பத்தி செய்ய முடியும் ;”

“ கர்ப்பக் கிரகத்தில் உள்ள
கடவுள் சிலையானது
பல நூற்றாண்டுகளைக்
கடந்தாலும் ;
பல அபிஷேகங்கள்
பல பூஜைகள் செய்தாலும்
கடவுள் சிலையானது
உடையாமல்
கீறல் விழாமல் இருக்க
வேண்டுமானால் ;
கர்ப்பக் கிரகத்தில் உள்ள
கடவுள் சிலையானது
மூன்று முக்கியமான
தன்மைகளைத் தன்னுள்
கொண்டதாக இருக்க
வேண்டும் “

ஒன்று :
கர்ப்பக் கிரகத்தில் உள்ள
கடவுள் சிலையானது
உயிருள்ள கல்லினால்
மட்டுமே செதுக்கப்பட்டிருக்க
வேண்டும்

இரண்டு:
கர்ப்பக் கிரகத்தில் உள்ள
கடவுள் சிலையானது
ஆகமசாஸ்திர முறைப்படி
செதுக்கப் பட்டிருக்க வேண்டும்


மூன்று :
கர்ப்பக் கிரகத்தில் உள்ள
கடவுள் சிலையானது
உயிரோட்டத்துடன் இருக்க
வேண்டும்

“இந்த முன்று தன்மைகளும்
கர்ப்பக் கிரகத்தில் உள்ள
கடவுள் சிலையில்
இருந்தால் மட்டுமே
கடவுள் சிலையானது
உடைந்து போகாமல் ;
கீறல் விழாமல் இருக்கும்
இல்லையென்றால் ,
சிலையானது உடைந்து
விடும் - அல்லது
கீறல் விழுந்து விடும் ; “

“இந்துமதக் கோயில்களில்
கர்ப்பக்கிரகத்தில்
வைத்து வழிபடுவதற்கு
செதுக்கப்படும் கடவுள்
சிலைக்கு உயிருள்ள
கல்லை எப்படி
தேர்ந்தெடுக்கிறார்கள் ;
எப்படி ஆகமசாஸ்திர
முறைப்படி சிற்பங்களைச்
செதுக்குகிறார்கள் ;
எப்படி சிலைகளை
உயிரோட்டத்துடன்
இருக்கும்படி
அமைக்கிறார்கள் ;
என்று தெரியுமா…………………………?”

--------   இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  23-04-2019
/////////////////////////////////////////////////////

April 21, 2019

பரம்பொருள்-பதிவு-5


                       பரம்பொருள்-பதிவு-5

“கோயில் கோபுரங்களில்
உள்ள கோபுரக் கலசங்கள்
பிரபஞ்ச சக்தியை கிரகித்து
கோயிலுக்குள் செலுத்தி
கோயிலுக்குள் சக்தியை
உற்பத்தி செய்யும்
மிகப்பெரிய வேலையை
செய்து வருகின்றன “

“கோபுரக் கலசங்கள்
என்பது தங்கம், வெள்ளி,
செப்பு மற்றும் ஐம்பொன்
இவைகளில் ஏதேனும்
ஒன்றால் செய்யப்பட்டதாக
இருக்கும் “

“கோபுரக் கலசத்திற்குள்
உயிர்ச்சக்தி கொண்ட
பொருள் வைக்கப்பட்டிருக்க
வேண்டும் - அப்படி
உயிர்ச்சக்தி கொண்ட பொருள்
கோபுரக் கலசத்திற்குள்
வைக்கப்பட்டு இருந்தால்
மட்டுமே கோபுரக் கலசங்கள்
பிரபஞ்ச சக்தியை
கிரகிக்கும் - இல்லை என்றால்
கோபுரக் கலசங்கள் பிரபஞ்ச
சக்தியை கிரகிக்காது “

“கோபுரக் கலசங்கள் பிரபஞ்ச
சக்தியை கிரகிக்க வேண்டும்
என்பதற்காக - கோபுரக்
கலசத்திற்குள்
நவ தானியங்கள் அல்லது
பாதரசம் வைப்பார்கள்”

“ நவ தானியங்கள்
உயிர்ச்சக்தியுடன் இருக்கும்
வரை தான் - கோபுரக்
கலசங்கள் பிரபஞ்ச சக்தியை
கிரகிக்கும் தன்மையுடன்
இருக்கும்- நவ தானியங்கள்
உயிர்ச்சக்தியை இழந்து
விட்டால் கோபுரக் கலசங்கள்
பிரபஞ்ச சக்தியை கிரகிக்கும்
சக்தியை இழந்து விடும்”

“ கோபுரக் கலசத்தில்
நிரப்பப்பட்டிருக்கும்
நவதானியங்கள் எனப்படும்
நெல், கம்பு, கேழ்வரகு,
திணை, வரகு,சோளம்,
மக்காச்சோளம், சாமை
எள் ஆகியவை 12 ஆண்டுகள்
வரை தான் உயிர்ச்சக்தி
கொண்டதாக இருக்கும் ;
12 வருட காலத்தை
தாண்டும் போது அந்த
நவதானியங்கள்
தங்கள் உயிர்ச்சக்தியை
இழந்து விடும் ; “

“ 12 வருடங்கள் கழித்து
கோபுரக் கலசங்கள்
பிரபஞ்ச சக்தியை
கிரகிக்கக்கூடிய தன்மையை
இழந்து விடக் கூடிய
நிலைக்கு வந்து விடும் ;
12 வருடங்களுக்கு
ஒரு முறை கும்பாபிஷேகம்
என்ற பெயரில்-கோபுரக்
கலசத்தில் உள்ள
உயிர்ச்சக்தியை இழந்த
நவதானியங்கள் மாற்றப்பட்டு
புதியதாக உயிர்ச்சக்தி
கொண்ட நவதானியங்கள்
நிரப்பப்படுகின்றன “

“நவதானியங்கள் ஒரு
குறிப்பிட்ட காலம்
வரை தான் உயிர்ச்சக்தி
கொண்டதாக இருக்கும் ;
அந்த குறிப்பிட்ட காலம்
முடிந்தவுடன் அந்த
நவதானியங்களை
மாற்ற வேண்டும்- ஆனால்
பாதரசம் எப்போதும்
உயிர்ச்சக்தியுடன்
தான் இருக்கும்;-பாதரசம்
ஒருபோதும் தன்
உயிர்ச்சக்தியை இழக்காது  
எனவே கோபுரக் கலசத்தில்
ஒருமுறை பாதரசத்தை
நிரப்பி விட்டால்
12 வருடங்களுக்கு
பாதரசத்தை மாற்ற
வேண்டிய அவசியம் இல்லை;”

“இவ்வாறாக கோபுரக்
கலசங்கள் பிரபஞ்ச சக்தியை
கிரகிக்கின்றன;”

“கோபுரக் கலசங்களின்
நீளம், அகலம், உயரம்
ஆகியவற்றைப்
பொறுத்து தான்
கோபுரங்கள் அமைக்கப்பட
வேண்டும் “

“கோபுரக் கலசங்கள்
மூலம் கிரகிக்கப்படும்
பிரபஞ்ச சக்தியானது
கோபுரத்தின் வழியாக
இறங்கி கோயிலுக்குள்
செல்கிறது”

“கோபுரக் கலசங்கள்
மூலமாக கிரகிக்கப்படும்
சக்தியானது கோபுரத்தின்
குறுகிய இடம் வழியாக
உட்புறமாக இறங்கி
அகன்று கொண்டே
சென்று கோபுரத்தின்
கீழ் வரை சென்று
கோயிலுக்குள் சென்று
சக்தியை உற்பத்தி
செய்கிறது “

“கோபுர கலசத்திற்கு
ஏற்றவிதத்தில்
கோயில் கோபுரங்கள்
அமைக்கப்படவில்லை எனில்
கோபுரக் கலசங்கள்
வழியாக கிரகிக்கப்படும்
பிரபஞ்ச சக்தியானது
கோபுரங்கள் வழியாக
கீழே இறங்காது ;
கோபுரக் கலசங்கள்
மூலமாக கோயிலுக்குள்
சக்தியை உற்பத்தி செய்ய
முடியாத நிலை உருவாகும்

எனவே, கோயிலுக்குள்
சக்தியானது கோபுரக்
கலசங்கள் மூலமாக
உற்பத்தி செய்யப்பட
வேண்டுமானால்
கோபுரக் கலசங்கள்
எத்தகைய நீளம்,
அகலம், உயரம்,
கொண்டிருக்கிறதோ
அதற்கேற்றவாறு கோயில்
கோபுரங்களின் நீளம்,
அகலம், உயரம்,
அமைக்கப்பட வேண்டும்
இல்லை என்றால்,
கோபுரக் கலசங்கள்
மூலமாக பிரபஞ்ச
சக்தியை கிரகித்து
கோயிலுக்குள் செலுத்தி
கோயிலுக்குள் சக்தியை
உற்பத்தி செய்ய முடியாது

--------   இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  21-04-2019
/////////////////////////////////////////////////////


April 20, 2019

பரம்பொருள்-பதிவு-4


                      பரம்பொருள்-பதிவு-4

“நம் உடலில் கடவுள்
எங்கு இருக்கிறார்.
அவரை அடையக்கூடிய
வழி என்ன,
எந்த முறையைப்
பின்பற்றி அவரை
அடையலாம் என்பதை
உணர முடியாமல்
இருப்பவர்களும்
கடவுளுடன் இணைந்து
தனக்கு தேவையானதை
பெற்றுக் கொண்டு
தன்னுடைய ஆசையை
பூர்த்தி செய்து கொள்ள
வேண்டும் என்ற
உயர்ந்த நோக்கத்துடன்
இந்த மூன்று
விஷயங்களையும்
அடிப்படையாக வைத்து
இந்துமதக் கோயில்கள்
அன்று முதல்
இன்று வரை
கட்டப்பட்டு வருகின்றன “

“இந்த மூன்று
விஷயங்களை
அடிப்படையாக வைத்து
உலகில் உள்ள அனைத்து
இந்து மதக் கோயில்களும்
கட்டப்பட்டு இருந்தாலும்
முக்கியமான மூன்று
விஷயங்களை சூட்சுமமாக
தன்னுள் கொண்டு
இந்துமதக் கோயில்கள்
செயல்பட்டு வருகின்றன “

ஒன்று :
சக்தியை உற்பத்தி
செய்தல்

இரண்டு :
சக்தியை குவித்து
வைத்தல்

மூன்று :
சக்தியை பரிமாற்றம்
செய்தல்

“ உலகில் உள்ள
அனைத்து இந்துமதக்
கோயில்களையும்
எடுத்துக் கொண்டால்
இந்துமதக் கோயில்கள்
ஒவ்வொன்றும்
ஒரு குறிப்பிட்ட
சக்தியை உற்பத்தி செய்து ;
அந்த சக்தியை
குவித்து வைத்து ;
அந்த சக்தியை
பரிமாற்றம் செய்து
கொண்டிருக்கும் ;
மிகவும் சக்தி வாய்ந்த
சக்தி மையங்களாகத்
திகழ்ந்து கொண்டு
இருக்கின்றன ;
இந்துமதக் கோயில்கள்
என்பதை நினைவில்
வைத்துக் கொள்ளுங்கள் “

“இந்த பிரபஞ்சத்தில்
பல்லாயிரக்கணக்கில்
பல்வேறு விதமான
சக்திகள் இருக்கும் ‘போது “

“ஒரு குறிப்பிட்ட
சக்தியை மட்டும்
பிரபஞ்சத்தில்
இருந்து கிரகித்து,
அந்த குறிப்பிட்ட
சக்தியை மட்டும்
கோயிலுக்குள் செலுத்தி……………!

“ அந்த குறிப்பிட்ட
சக்தியை மட்டும்
கோயிலுக்குள்
ஒரு குறிப்பிட்ட
இடத்திற்குள் சுற்றி
வரும்படி குவித்து………….!

கோயிலுக்கு கடவுளை
வணங்க வருபவர்கள்
குவித்து வைக்கப்பட்டுள்ள
அந்த குறிப்பிட்ட
சக்தியை மட்டும்
தங்களுக்குள் பரிமாற்றம்
செய்து கொள்ளும்
வகையில்……………………………..!

இந்துமதக் கோயில்களை
கட்டி வைத்திருக்கின்றனர்”

“இத்தகைய கடினமான
ஒரு மெய்ஞ்ஞான
விஷயத்தையும் ;
கற்பனையும் செய்து
பார்க்க முடியாத
அறிவுபூர்வமான
ஒரு விஷயத்தையும் ;
மக்கள் அனைவரும்
பயன்பெற வேண்டும்
என்ற உயர்ந்த
நோக்கத்துடன் நம்
முன்னோர்கள் செய்து
வைத்திருக்கிறார்கள் ; “

ஒன்று
சக்தியை உற்பத்தி
செய்தல்

“ கோயிலுக்குள் சக்தியை
உற்பத்தி செய்வதற்கு
பல்வேறு முறைகள்
கையாளப்பட்டாலும்
முக்கியமான
இரண்டு முறைகள்
கோயிலுக்குள் சக்தியை
உற்பத்தி செய்வதற்கு
பயன்படுத்தப்படுகின்றன ”

(அ) பிரஞ்சத்தின் மூலம்
பெறப்படும் சக்தி

(ஆ) கடவுள் சிலைகளின்
மூலம் பெறப்படும் சக்தி

“இந்த இரண்டு
நிலைகளில் பெறப்படும்
சக்தியையும் கோயிலுக்குள்
செலுத்தி கோயிலுக்குள்
சக்தியானது உற்பத்தி
செய்யப்படுகிறது”

(அ) பிரஞ்சத்தின் மூலம்
பெறப்படும் சக்தி

“ஒரு கோயில் எந்த
சக்தியை அளிப்பதற்காக
உருவாக்கப்பட்டதோ
அந்த சக்தியை
பிரபஞ்சத்தில் இருந்து
கிரகிக்கும் வகையில்
இந்துமதக் கோயில்கள்
அமைக்கப்பட்டிருக்கும்”

“கோயிலில் பிரபஞ்ச
சக்தியை கிரகித்து
பிரபஞ்ச சக்தியை
கோயிலுக்குள் செலுத்தி
கோயிலுக்குள் சக்தியை
உற்பத்தி செய்வதற்கு
கோபுரக் கலசங்கள்
பயன்படுத்தப்படுகின்றன”

--------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  20-04-2019
/////////////////////////////////////////////////////