June 08, 2019

பரம்பொருள்-பதிவு-22


                    பரம்பொருள்-பதிவு-22

8.கலாகர்ஷணம்
(சக்தி அழைத்தல்)

“எந்த கடவுள்
சிலையை நிறுவப்
போகிறோமோ?
அந்த கடவுள்
சிலைக்குரிய
சக்தியை
பிரபஞ்சத்தில்
இருந்து கிரகித்து
கிரகித்த கடவுள்
சக்தியை
கும்பத்தில்
இறக்குவதற்கு
கலாகர்ஷணம்
என்று பெயர் “

“அதாவது
கும்பாபிஷேகம்
செய்யப்படும்
கடவுள் சிலையின்
சக்தியை
பிரபஞ்சத்தில்
இருந்து
கிரகித்தல்
என்று பொருள்”

“எந்த கடவுள்
சிலைக்குரிய
சக்தியை
கும்பத்தில்
இறக்க வேண்டுமோ ?
அந்த கடவுள்
சிலைக்கு முன்னால்
ஏற்கனவே தயார்
செய்து
வைத்திருக்கும்
கும்பத்தை
அந்தக் கடவுள்
சிலைக்கு முன்னால்
வைக்க வேண்டும் “

“அந்த கடவுள்
சக்தியை
வித்யா தேகமாக
இருக்கும்
அந்தக் கும்பத்தில்
இறக்க வேண்டும்”

“கும்பத்தில்
இறக்கப்பட்ட
கடவுள் சக்தியானது
குறிப்பிட்ட
காலம் வரையில்
அந்த கும்பத்தில்
இருக்கும் வகையில்
மந்திரக் கிரியைகள்
செய்யப்பட
வேண்டும்”

“அவ்வாறு செய்தபின்
அந்தக் கும்பத்தை
தகுந்த ஆசாரியன்
தலையில்
வைத்து கோயிலைச்
சுற்றி வரச்
செய்ய வேண்டும்”

“கும்பத்தை
ஆசாரியன்
தலையில் வைத்து
கோயிலைச்
சுற்றி வரச்
செய்யும் போது
மங்கள வாத்தியங்கள்
அனைத்தும்
இசைக்கப் பட
வேண்டும்;
வாத்திய
கோஷங்கள்
அனைத்தும்
முழங்கப்பட
வேண்டும் ;
நான்கு வேதங்கள்
பாராயணம்
செய்யப்பட வேண்டும் ;
திருமுறை
ஓதப்பட வேண்டும் ;
சாமரம் ,
குடை ,
கொடி விதானம் ,
மங்கள விதானம் ,
மங்கள தீபம் ,
தீவர்த்தி ,
இவைகளோடு
அழைத்து வர
வேண்டும் ;
வாசனைப்பொடி ,
சந்தனம் ,
பன்னீர்  ,
இவற்றைத்
தெளித்துக் கொண்டு
வர வேண்டும் ;”

“எட்டு திசைகளிலும்
தேங்காய்
சிடலையிட்டு ;
சூடம் காட்டிக்
கொண்டு ;
வரச் செய்து
சகலவிதமான
மரியாதைகள்
கும்பத்திற்குச் செய்து ;
கும்பத்தை
யாக சாலைக்குக்
கொண்டு வர
வேண்டும் ;”

“எந்த கடவுள்
சிலையை நிறுவப்
போகிறோமோ?
அந்தக் கடவுள்
சிலைக்குரிய
சக்தியை
பிரபஞ்சத்தில்
இருந்து கிரகித்து ;
கும்பத்தில் இறக்கி ;
கும்பத்தில்
ஒரு குறிப்பிட்ட
காலம் வரை
இருக்கும் வகையில்
செயல்களைச் செய்து ;
கும்பத்திற்குரிய
சடங்குகளைச் செய்து ;
கும்பத்தை முறைப்படி
பூஜித்து ;
கோயிலைச் சுற்றி
வந்து யாகசாலையில்
வைக்க வேண்டும் ;
இந்த செயல்கள்
அனைத்தும்
கொண்டது தான்
கலாகர்ஷணம்
ஆகும் “

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 08-06-2019
/////////////////////////////////////////////////////


June 04, 2019

பரம்பொருள்-பதிவு-21


                         பரம்பொருள்-பதிவு-21

7.கும்பஸ்தாபனம்

“கும்பஸ்தாபனம்
என்றால் கும்பத்தை
நிறுவுதல்
என்று பொருள்”

“அதாவது
எந்த கடவுள்
சிலையை
நிறுவப்போகிறோமோ ?
அந்த கடவுள்
சிலைக்குரிய சக்தியை;
கும்பமானது
பிரபஞ்சத்தில்
இருந்து கிரகிப்பதற்கு
ஏற்ற வகையில்
எத்தகைய முறைகளை
கும்பத்திற்கு செய்ய
வேண்டுமோ ?
அத்தகைய முறைகளை ;
கும்பத்திற்கு செய்து ;
கும்பத்தை தயார்
செய்வதற்கு ;
கும்பஸ்தாபனம்
எனப் பெயர் “

“கும்பத்தை
நிறுவும் இந்த
நிகழ்வு தான்
கும்பாபிஷேகத்தின்
போது நடைபெறும்
மிக முக்கியமான
நிகழ்வு ஆகும்”

“கும்பமானது
தங்கம், வெள்ளி
தாமிரம், மண்
ஆகியவற்றில்
ஏதேனும் ஒன்றைக்
கொண்டு செய்ததாக
இருக்க வேண்டும் ;
கும்பத்திற்கென்று
நிர்ணயிக்கப்பட்ட
நீளம், அகலம்
கொண்டதாக கும்பம்
இருக்க வேண்டும் ;”

“எந்தவிதமான
குறைபாடும் இல்லாமல்
இருக்கும்படி செய்யப்பட்ட
கும்பத்தையும் ;
பார்ப்பதற்கு
அழகான விதத்தில்
இருக்கும்படி
அமைந்ததாக இருக்கும்
கும்பத்தையும் ;
எத்தனை கும்பம்
தேவைப்படுகிறதோ
அத்தனை
கும்பத்தையும் ;
தேர்ந்து எடுத்துக்
கொள்ள வேண்டும் ;”

“கும்பத்தின் சிற்பதோஷம்
நீங்குவதற்காக
மந்திரத்தால் மந்திரித்து ;
கும்பத்தை
நெருப்பில் காட்டி ;
செம்மண்ணை
கும்பத்தின் மேலே பூசி ;
கும்பத்தை
நூலால் சுற்றி ;
பரிசுத்தமாக இருக்கும்
ஆற்று நீர் அல்லது
ஊற்றுநீரால்
கும்பத்தை
நிரப்ப வேண்டும் ; “

“கும்பத்திற்குள்
மாவிலைகளைச் செருகி ;
அதன் மீது
நல்லதாக இருக்கும்
ஒரு தேங்காயை
தேர்ந்தெடுத்து அந்த
தேங்காயை
கும்பத்தின் மேலே
வைக்க வேண்டும் ; ‘

“கும்பத்தின் மேலே
இருக்கும் தேங்காயை
சற்று மேலே தூக்கி
நவரத்தினம்
தங்கம், வெள்ளி
ஆகியவற்றை
கும்பத்திற்குள்
இட்ட பிறகு ;
மீண்டும் தேங்காயை
கும்பத்திற்கு மேலே
வைக்க வேண்டும் ; “

“கும்பத்திற்கு
வஸ்திரம் அணிவித்து ;
மலர், சந்தனம் ,
விபூதி , குங்குமம் ,
முதலியவைகளை
இட வேண்டும் ; “

“தானியங்களைப்
பரப்பி அதன் மீது
கும்பத்தை வைக்க
வேண்டும்”

“கும்பத்தை இறைவனின்
வித்யா தேகமாகக்
கருத வேண்டும் ;
எந்த கடவுள் சிலைக்கு
கும்பாபிஷேகம் செய்ய
இருக்கின்றோமோ
அந்த கடவுள்
சிலையின்
வித்யா தேகமாகக்
கும்பத்தைக் கருத
வேண்டும் ; ”

“கும்பத்தின் மேல்
வைக்கப்படும்
தேங்காய் இறைவனின்
தலையாகும் ;
மாவிலை தலையில்
உள்ள சிகையாகும் ;
கும்பத்தைச்
சுற்றி கட்டப்படும்
துணி தோலாகும் ;
கும்பத்தின் மேல்
பூசப்படும் செம்மண்
இரத்தமாகும் ;
கும்பத்தின் உலோகம்
சதைப்பகுதியாகும் ;
கும்பத்தில் சுற்றப்பட்ட
நூல் நரம்பாகும் ;
கும்பத்தில் இடப்பட்ட
நவரத்தினங்கள்
சுக்கிலமாகும் ;
நியாசம் செய்யப்பட்ட
மந்திரம் உயிராகும் ;
கும்பத்திற்கு அடியில்
இடப்படும் தானியம்
இறைவன் அமர்ந்திடும்
ஆசனமாகும் ;
என்பதை உணர்ந்து
கொண்டால்
கும்பமானது
இறைவனின்
வித்யா தேகமாக
இருக்கிறது என்பதை
உணர்ந்து கொள்ளலாம் ; “

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 04-06-2019
/////////////////////////////////////////////////////


June 02, 2019

பரம்பொருள்-பதிவு-20


                      பரம்பொருள்-பதிவு-20

(6) ரசஷாபந்தனம்
(காப்பு கட்டுதல்)
“ரசஷாபந்தனம்
என்றால்
காப்பு கட்டுதல்
என்று பொருள்”

“தெய்வத் தன்மை
பொருந்திய
கும்பாபிஷேகத்தை
நடத்துபவர்களுக்கு
எந்தவிதமான
இடையூறும் ஏற்படாமல்
இருக்க வேண்டும்
என்பதற்காக ;
செய்யப்படும்
சடங்கு முறையைத்
தான் காப்புக் கட்டுதல்
என்கிறோம் “

“பொது மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்டு
கும்பாபிஷேகத்தை
முன்னால்
நின்று செய்பவர் ;
மற்றும் அனைத்து
சிவாச்சாரியார்கள்
ஆகியோருக்கு
எந்தவிதமான
பிரச்சினையும்
ஏற்படாமல் இருக்க
வேண்டும்
என்பதற்காகவும் ;
எந்தவிதமான
இடையூறும்
ஏற்டபடாமல் இருக்க
வேண்டும் என்பதற்காகவும் ;
மந்திரித்த மஞ்சள்
கயிற்றை வலக்கை
மணிக்கட்டில்
கட்டுவார்கள் ;”

“கும்பாபிஷேகத்தை
நடத்திக் கொண்டிருக்கும்
சிவாச்சாரியார்களுக்கு
ஏதேனும்
ஆசௌசம் (தீட்டு)
ஏற்படக்கூடிய நிலை
அவர்களுடைய
வாழ்க்கையில்
ஏற்பட்டால் கூட
கையில் கட்டிய
காப்பு அவிழ்க்கப்படும்
வரையில்- அந்த
ஆசௌசம்(தீட்டு)
அவர்களைப் பாதிக்காது “

“இது தான்
காப்பு கட்டுதலின்
சிறப்பு மற்றும்
முக்கியத்துவம் ஆகும்”

7.கும்பஸ்தாபனம்
“கும்பஸ்தாபனம்
என்றால் கும்பத்தை
நிறுவுதல் என்று
பொருள்”

“ கும்பஸ்தாபனம் ;
கலாகர்ஷணம் ;
யாகசாலை ;
ஆகிய மூன்றும்
ஒன்றுக் கொன்று
தொடர்புடையவை “

“எந்த கடவுள்
சிலையை
நிறுவப்போகிறோமோ ?
அந்த கடவுள்
சிலைக்குரிய சக்தியை;
எத்தகைய
முறைகளைச் செய்து ;
அந்த கடவுளுக்குரிய
சக்தியை பிரபஞ்சத்தில்
இருந்து கிரகிக்க
வேண்டுமோ ;
அத்தகைய
முறைகளைச் செய்து ;
கிரகிப்பதற்கு தேவையான
முறைகளைச் செய்வதற்கு ;
கும்பஸ்தாபனம்
எனப் பெயர் “

“எந்த கடவுள்
சிலையை
நிறுவப்போகிறோமோ
அந்த கடவுளுக்குரிய
சக்தியை
கும்பஸ்தாபனத்தில்
செய்து வைக்கப்பட்ட
முறைகளைப் பயன்படுத்தி
பிரபஞ்சத்தில் இருந்து
கடவுள் சக்தியைக்
கிரகித்து கும்பத்தில்
இறக்குவதற்கு
கலாகர்ஷணம்
என்று பெயர் “

“எந்த கடவுள்
சிலையை
நிறுவப்போகிறோமோ ?
அந்த கடவுளுக்குரிய
சக்தியை
கும்பஸ்தாபனத்தில்
செய்து வைக்கப்பட்ட
முறைகளைப்
பயன்படுத்தி ;
கலாகர்ஷணம் மூலம்
கும்பத்தில்
இறக்கப்பட்ட
கடவுள் சக்தியை ;
முழுமையான
ஒன்றாக மாற்றுவதற்கு
தேவையான
சடங்குளை
யாகசாலையில்
செய்வதற்கு
யாகசாலை
என்று பெயர் “

“சுருக்கமாகச்
சொல்ல வேண்டுமானால்
எந்த கடவுள்
சிலையை
நிறுவப்போகிறோமோ
அந்த கடவுள்
சிலைக்குரிய
சக்தியை கும்பத்தில்
இறக்குவதற்காக
அந்த கடவுள்
சக்தியை பிரபஞ்சத்தில்
இருந்து கிரகிப்பதற்கு
தேவையான
முறைகளைச் செய்வது :

செய்யப்பட்ட
முறைகளைப்
பயன்படுத்தி
பிரபஞ்சத்தில் உள்ள
கடவுள் சக்தியை கிரகித்து
கும்பத்தில் இறக்குவது ;

கும்பத்தில் இறக்கப்பட்ட
கடவுள் சக்தியை
முழுமை அடையச்
செய்வது;

என்ற மூன்று
முக்கியமான செயல்களை
கும்பஸ்தாபனம் ;
கலாகர்ஷணம் ;
யாகசாலை ;
ஆகிய மூன்றும்
ஒன்றுக்கொன்று
தொடர்பு கொண்டு
தொடர்ச்சியான
சங்கிலித் தொடர்
போல் தொடர்ச்சியாக
செய்கின்றன “

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 02-06-2019
/////////////////////////////////////////////////////


May 31, 2019

பரம்பொருள்-பதிவு-19


                       பரம்பொருள்-பதிவு-19

4.மிருத்ஸங்கிரஹணம்

“மிருத்ஸங்கிரஹணம்
என்ற செயலும்  ;
அங்குரார்ப்பணம்
என்ற செயலும் ;
ஒன்றொன்றுக்கொன்று
தொடர்புடையவை ;”

“மிருத்ஸங்கிரஹணம்
என்றால்
மண் எடுத்தல்
என்று பொருள் “

“அங்குரார்ப்பணம்
என்றால்
முளையிடுதல்
என்று பொருள்”

“மிருத்ஸங்கிரஹணம்
அங்குரார்ப்பணம்
என்றால்
மண்ணை எடுத்து
எடுத்த மண்ணில்
முளையிடுவது
என்று பொருள்”

“அங்குரார்ப்பணத்துக்குத்
தேவையான
மண்ணை எடுப்பதற்குப்
பெயர் தான்
மிருத்ஸங்கிரஹணம்”

“அங்குரார்ப்பணத்துக்குத்
தேவையான மண்ணை
எடுப்பதற்கு என்று
நிர்ணயிக்கப்பட்ட
குறிப்பிட்ட திக்கு
சரியான இலட்சணம்
பொருந்திய
இடத்திலிருந்து
அதாவது எந்தவிதமான
குறைபாடும்
இல்லாத இடத்திலிருந்து
மண்ணை
வெட்டியெடுக்க
வேண்டும்”

“மண்ணை வெட்டி
எடுப்பதற்கு முன்னர்
பூமாதேவியையும்
பூமா தேவிக்கு
அதிபர்களான பிரமன்,
அஷ்டதிக்குப்
பாலகர்கள்
ஆகியோரை வழிபட்டுப்
பூமியை வெட்ட
வேண்டிய
அவசியத்துக்காக
மன்னிப்பு
கேட்டுக் கொண்டு
அவர்களிடம்
பூமியை வெட்டி
மண்ணை
எடுப்பதற்கான
உத்திரவினைப் பெற்ற
பின்னரே
பூமியை வெட்டி
மண்ணை தோண்டி
எடுக்க வேண்டும்”

“பூமியை வெட்டிய
தோஷம் நீங்குவதற்காக
வெட்டி எடுக்கப்பட்ட
பள்ளத்தில்
ஏழு கடலால்
அபிஷேகம்
செய்ய வேண்டும்”

“ஏழு கடல்
அபிஷேகமாவது
பால், தயிர்,
நெய், கருப்பஞ்சாறு,
தேன், உவர்நீர், நன்னீர்
ஆகியவை ஆகும்”

“உவர் நீருக்குப்
பதிலாக இளநீரை
உபயோகிப்பார்கள்
இவைகளை
வெட்டிய பள்ளத்தில்
மந்திரக்கிரியா
பூர்வமாக விட
வேண்டும்”

“மண் வெட்டியினுடைய
அளவு அதனுடைய
பிடி அது
எந்த மரத்தால்
செய்யப்பட்டிருக்க
வேண்டும் ;
மண்ணை ஏந்தும்
பாத்திரம் - இவற்றின்
இலட்சணம் ;
இவை யாவும்
சாத்திரங்களில்
சொல்லப்பட்டிருக்கின்றன ;

5.அங்குரார்ப்பணம்:
“அங்குரார்ப்பணம்
என்பதற்கு முளையிடுதல்
என்பது பொருளாகும்”

“எடுத்த மண்ணை
உரிய மந்திரத்தோடு
பாலிகைகளில் இட்டு
நவதானியங்களைத்
தெளித்து
முளைப்பாலிகை
அமைக்க வேண்டும்”

“இது செய்ய இருக்கும்
செயல்கள் எத்தகைய
தன்மைகளைக்
கொண்டிருக்கிறது
என்பதை அறிவதற்காக
ஏற்படுத்தப்பட்டது”

“மண்ணில் முளையானது
பசுமையாக ஓங்கி
வளர்ந்தால்
செய்யப்பட்ட செயல்கள்
அனைத்தும் சீராக
நடந்தன என்று
பொருள் கொள்ள
வேண்டும்”

“அப்படி
நடக்கவில்லையாயின்
மந்திரதோஷம்
ஏற்பட்டுள்ளது என்றும் ;
செயல்களில் குறைபாடு
ஏற்பட்டுள்ளது என்றும் ;
ஆசௌசம் (தீட்டு)
ஏற்பட்டுள்ளது என்றும் ;
உணர்ந்து
அதற்குத் தகுந்தவாறு
பிராயச் சித்தங்களைச்
செய்ய வேண்டும் ;
என்பது
ஆகம விதியாகும் “

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 31-05-2019
/////////////////////////////////////////////////////