January 04, 2020

பரம்பொருள்-பதிவு-110


             பரம்பொருள்-பதிவு-110

(துரியோதனன்
அரவானின்
மாளிகைக்குள்
நுழைகிறான் - தனது
பெரிய தந்தையான
துரியோதனனைக்
கண்ட அரவான்
துரியோதனனை ஓடிச்
சென்று வரவேற்கிறான்)

அரவான் :
"வாருங்கள்
பெரிய தந்தையே  !
வாருங்கள்
தங்கள் வரவால்
என் மாளிகை
பெருமை அடைகிறது ;
தங்கள் பாதம் பட்டு
என்னுடைய இல்லம்
சிறப்பு அடைகிறது ;
தங்களை வரவேற்பதில்
என் மனம் மிக்க
மகிழ்ச்சி அடைகிறது ;
வாருங்கள் பெரிய
தந்தையே வாருங்கள் "

(என்று சொல்லிக்
கொண்டே அரவான்
துரியோதனன்
காலில் சென்று
விழுந்து வணங்குகிறான்)

அரவான் :
"என்னை
ஆசிர்வதியுங்கள்
பெரிய தந்தையே ! "

(அரவானை அள்ளி
மார்போடு அணைத்து  
பிறகு பேசத்
தொடங்குகிறான்
துரியோதனன்)

துரியோதனன் :
"மகனே ! அரவான்
உன்னுடைய வார்த்தைகள்
என்னுடைய மனதை
ஏ‘தோ செய்கிறது ;
உன்னுடைய பணிவைக்
கண்டு என்னுடைய
கண்கள் கலங்குகிறது ;
உன்னுடைய
பெருந்தன்மை என்னை
வியக்க வைக்கிறது ; "

"அனைவரையும் சமமாக
பாவிக்கும் உன்னுடைய
பாசம் என்னை
மலைக்க வைக்கிறது ;
பகைவனாக
நினைக்க வேண்டியவனையும்
வரவேற்கும் உன்னுடைய
பண்பு என்னை
திகைக்க வைக்கிறது ;"

‘"நீ வீரத்தில்
சிறந்தவன் என்று
கேள்விப்பட்டிருக்கிறேன் ;
ஆனால் பண்பிலும்
உயர்ந்தவன் என்பதை
உன்னுடைய
செய்கையின் மூலமே
நிரூபித்து விட்டாய் ;"

"உன்னுடைய உயர்ந்த
அன்பில் கரைந்து
போன நான்
என்ன பேசுவது என்று
தெரியாமல் வார்த்தை
இன்றி தவித்துக்
கொண்டிருக்கிறேன் "

"இந்த பார் உள்ளளவும்
உன்னுடைய புகழ்
என்றும் நிலைத்து நிற்கும்
என்னுடைய ஆசிகள்
உனக்கு என்றும்
உண்டு மகனே அரவான் ! "

அரவான் :
"பெரிய தந்தையே !
நீங்கள் என்னை
பார்க்க வேண்டும் என்று
ஒரு வார்த்தை
சொல்லி இருந்தால்
உங்களைக் காண
நீங்கள் இருக்கும்
இடத்தைத் தேடி
நானே நேரில்
வந்திருப்பேனே ?
இந்த எளியவனைக்
காண தாங்கள்
இவ்வளவு தூரம்
வர வேண்டுமா ?
பெரிய தந்தையே ! "

துரியோதனன் :
"உலகத்தையே
கட்டி காப்பாற்றும்
கடவுளாக
இருந்தாலும் சரி ;
நாட்டை ஆளும்
மன்னவனாக
இருந்தாலும் சரி ;
அவர்களுக்கு ஒன்று
தேவைப்படுகிறது
என்றால்
அதை கொடுப்பவர்
யாராக இருந்தாலும்
அவர் இருக்கும்
இடத்தைத் தேடித்
தான் செல்ல
வேண்டும் என்பது
தானே உலக நியதி ! "

"எனக்கு உன்னிடம்
ஒன்று தேவைப்படுகிறது
அதனால் நானே
உன்னைத் தேடி
உன்னுடைய
இருப்பிடம் தேடி
நேரில் வந்தேன்
அரவான் !"

அரவான் :
"ஒன்றும் இல்லாத
இந்த எளியவனிடம்
அப்படி என்ன
தான் இருக்கிறது
என்று என்னைத்
தேடி வந்தீர்கள்
பெரிய தந்தையே ! "

துரியோதனன் :
"யாரிடமும் இல்லாத ஒன்று ;
அரிதாக இருக்கும் ஒன்று ;
யாருக்கும்
கிடைக்காத ஒன்று ;
கடவுளால்
அருளப்பட்டது என்று  
சொல்லப்படும் ஒன்று ;
சிலரிடம் மட்டுமே
இருக்கும் "

"அந்த ஒன்று
உன்னிடம் இருக்கிறது
என்பதைக் கேள்விப்பட்டேன் ;
அந்த ஒன்றைப் பெற
வேண்டும் என்பதற்காக ;
உன்னுடைய
சம்மதத்தைப் பெற ;
உன்னைக் காண
நானே நேரில்
வந்தேன் அரவான் ! "

அரவான் :
"என்னிடம் என்ன பெற
வேண்டும் என்பதற்காக
என்னுடைய சம்மதத்தைப்
பெற வந்திருக்கிறீர்கள்
என்பதை சொல்லுங்கள்
பெரிய தந்தையே ! "

---------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
---------- 04-01-2020
//////////////////////////////////////////

January 02, 2020

பரம்பொருள்-பதிவு-109


           பரம்பொருள்-பதிவு-109

கிருஷ்ணன் :
" 32 லட்சணங்களும்,
எதிர்ரோமம் ஆகிய
இரண்டு தகுதிகளையும்
கொண்ட நம் மூவரில்
சிறப்பு தகுதி என்று
சொல்லும் வகையில்
என்னிடம் கடவுள்
தன்மை இருக்கிறது ;
உன்னிடம் யாராலும்
வெல்ல முடியாத
வீரம் இருக்கிறது ;
என்னிடம் உள்ள கடவுள்
தன்மையையும்,
உன்னிடம் உள்ள யாராலும்
வெல்ல முடியாத
வீரத் தன்மையையும்
ஒருங்கே பெற்றவன்
அரவான் என்பதை
மறந்து விடாதே அர்ஜுனா ! "

"அரவானை அழிக்கக்
கூடியவர்கள் இந்த
உலகத்தில் இதுவரை
பிறக்கவுமில்லை ;
இனி பிறக்கப்
போவதுமில்லை ;
அரவானை அழிப்பதற்கு
புதியதாக ஒருவரை பிறக்க
வைக்கவும் முடியாது ; "

"அதுமட்டுமல்ல அரவானை
அழிக்கக்கூடிய ஆயுதம்
இந்த உலகத்தில்
யாரிடமும் இல்லை ;
இதுவரை அரவானை
அழிக்கக்கூடிய
ஆயுதம் யாராலும்
எங்குமே உற்பத்தி
செய்யப்படவுமில்லை ;
இனியும் யாராலும்
உற்பத்தி செய்யவும்
முடியாது ; "

"அர்ஜுனா !
அரவான் போர்க்களத்தில்
இறங்கி போர் செய்தால்
அவனுக்கு எதிராக
போர் செய்யும்
எதிரிகள் அனைவரையும்
ஒரு தினத்தின் ஒரு
பகற்பொழுதில்
அழித்து விடக்கூடிய
சர்வவல்லமை படைத்தவன்
அரவான் என்பதை
மறந்து விடாதே "

"அரவானை
அழிக்கக்கூடியவர்கள் இந்த
உலகத்தில் இல்லை ;
அப்படி ஒருவரை இந்த
உலகத்தில் பிறக்க
வைக்கவும் முடியாது
என்ற காரணத்திற்காகவும் ;
அரவானை அழிக்கக்கூடிய
ஆயுதம் இந்த
உலகத்தில் இல்லை  
இனியும் அப்படி
ஒரு ஆயுதம் உற்பத்தி
செய்ய முடியாது
என்ற காரணத்திற்காகவும் ;
அரவான் போர்க் களத்தில்
இறங்கி போர் செய்து
ஒரு தினத்தின் ஒரு
பகற்பொழுதில்
எதிரிகள் அனைவரையும்
அழித்து விட்டால்
கர்மவினைகளுக்கேற்ப
ஒவ்வொருவரும்
எந்த காலத்தில் ;
எந்த நேரத்தில் ;
எந்த ஆயுதம் கொண்டு ;
இறக்க வேண்டும் ;
எப்படி இறக்க வேண்டும் ;
யாரால் இறக்க வேண்டும் ;
எந்த முறையில்
இறக்க வேண்டும் ;
என்பதை நியமிக்கப்பட்டபடி
நடைமுறைப்படுத்த
முடியாமல் போய்
விடும் என்ற
காரணத்திற்காகவும் தான் ;
காலம் அரவானை
களப்பலியாக கொடுப்பதற்கு
தேர்ந்தெடுத்து இருக்கிறது.; "

"அது மட்டுமல்ல காலம்
அரவானை தன்னைத் தானே
களப்பலி கொடுக்கும்
படியான செயலைச் செய்ய
வைக்கவும் இருக்கிறது ;
அது மட்டுமல்ல
இங்கே தான் விதி
தன்னுடைய விளையாட்டை
வெற்றிகரமாக நடத்தி வைக்க
திட்டமிட்டு இருக்கிறது ;"

"அரவான் இவ்வளவு
வல்லமை பொருந்தியவன்
மட்டுமல்ல எதிரியாக
இருந்தாலும் அன்பைக்
காட்டக்கூடியவன் அரவான் "

"துரியோதனன் அரவானை
நாடிச்சென்றால்
அரவான் துரியோதனனை
அன்புடன் வரவேற்பான் ;
கருணையுடன் தன்னுடைய
உயிரை களப்பலியாக
கொடுக்க ஒப்புக் கொள்வான் ;
வீரத்துடன் களப்பலியாவான் ;
என்ற காரணத்தினால்
தான் நான் பயப்படுகிறேன் ;"

"இந்த உலகத்தில்
கர்ணன் மட்டும் தான்
கொடையாளியாக
இருக்கிறான் என்று
நினைத்து விடாதே அர்ஜுனா !
கர்ணன் மட்டுமல்ல
அரவானும் கொடையாளி தான்
என்பதை மறந்து விடாதே "

"தன்னை நாடி வந்து
யாசகம் கேட்பவர்
யாராக இருந்தாலும் ;
அவர் எதிரியாகவே
இருந்தாலும் கூட
தன்னிடம் யாசகம் என்று
கேட்டு விட்டால்
யாசகமாக எதைக்
கேட்டாலும் கொடுத்து
விடக்கூடிய பரந்த
மனப்பான்மை
உடையவன் அரவான் ; "

"யாசகமாக எதைக்
கேட்டாலும் கொடுத்த
வாக்கிற்காக உயிரையே
கொடுத்து நிறைவேற்றக்
கூடியவன் அரவான் ;
அப்படிப்பட்ட அரவானிடம்
யாகசமாக உயிரையே
கேட்டால் கொடுக்காமல்
இருப்பானா என்ற
காரணத்திற்காகத் தான்
நான் பயப்படுகிறேன்
அர்ஜுனா ! "

அர்ஜுனன் :
"இப்போது என்ன
செய்வது கிருஷ்ணா?"

கிருஷ்ணன் :
"இப்போது நம்மால்
ஒன்றும் செய்ய
முடியாது அர்ஜுனா !"

"அரவானை சந்திக்க
துரியோதனன்
சென்றிருக்கிறான் ;
அரவான் என்ன
பதில் சொல்லப்
போகிறான் என்பதை
பொறுத்திருந்து பார்ப்போம்  
அதற்குப் பிறகு
நாம் என்ன
செய்வது என்பதைப்
பற்றி யோசிப்போம் ?"

---------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
---------- 02-01-2020
//////////////////////////////////////////


January 01, 2020

பரம்பொருள்-பதிவு-108


            பரம்பொருள்-பதிவு-108

அர்ஜுனன் :
“களப்பலியாக
கொடுப்பதற்கு
தகுதியுடைய மூவரும்
பாண்டவர்கள் அணியில்
தானே உள்ளனர் ;
பின்பு நாம்
ஏன் கவலைப்பட
வேண்டும் கிருஷ்ணா ?”

“நம் இருவரை
கௌரவர்களால்
நெருங்கவே முடியாதே!”

கிருஷ்ணன் :
“ஆனால் அரவானை
கௌரவர்களால்
நெருங்க முடியுமே?”

அர்ஜுனன் :
“அரவான் என்னுடைய
மகன் என் சொல்படி
தானே கேட்பான் ?”

கிருஷ்ணன் :
“தவறு அர்ஜுனா தவறு
அரவான்
உன்னுடைய மகன்
மட்டுமல்ல
உலூபியின்
மகனும் கூட,
விதைத்து விட்டு
வந்தவன் மட்டும்
தான் நீ - ஆனால்
அன்பும் கருணையும்
உணவில் கொடுத்து
அரவானை ஊட்டி
வளர்த்தவள் உலூபி”

“இரக்கம் அரவானின்
இரத்தத்தோடு
கலந்து இருக்கிறது ;
வீரம் அரவானின்
உயிரோடு
பிணைந்து இருக்கிறது ;”

“உலகத்திலேயே
சிறந்த வீரர்களாக
கருதப்படும்
பீஷ்மர்
துரோணாச்சாரியார்
ஆகியோருக்கு
எதிராக நின்று
சண்டையிடுவதற்கும் ;
அவர்களுடைய
ஆயுதங்களுக்கு எதிராக
எதிர் ஆயுதம் எடுத்து
தடுக்கக்கூடிய
வல்லமை - உனக்கு
மட்டும் தான்
இருக்கிறது என்று
நினைத்து விட்டாயா ?”

“பீஷ்மர்
துரோணாச்சாரியார்
ஆகியோருக்கு எதிராக
சண்டையிடுவதற்கும் ;
அவர்களுடைய
ஆயுதங்களுக்கு எதிராக
எதிர் ஆயுதம்
எடுத்து தடுக்கக்கூடிய
வல்லமை மட்டுமல்ல
அவர்களை
புறமுதுகிட்டு
ஓடச்செய்யும்
சர்வ வல்லமை
படைத்தவன்
அரவான் என்பதை
மறந்து விடாதே ! “

“பீஷ்மர்
துரோணாச்சாரியாருடைய
ஆயுதங்களை
தடுக்கும் சக்தி
மட்டும் தான்
உனக்கு உண்டு ;
ஆனால் அவர்களை
புறமுதுகிட்டு
ஓடச்செய்யும் சக்தி
அரவானுக்கு மட்டுமே
உண்டு என்பதை
மறந்து விடாதே !”

“உன்னுடைய
அம்புக்கு எதிர் அம்பு
விடக்கூடியவர்கள்
இந்த உலகத்தில்
ஒரு சிலர் மட்டுமே
இருக்கிறார்கள் - என்று
நினைத்து விடாதே
உனக்கு எதிராக
அரவான் நின்றால்
அவன் விடும் எந்த
ஒரு அம்புக்கும்
எதிர் அம்பு உன்னிடம்
இல்லை என்பதை
மறந்து விடாதே !”

“அரவான்
பாண்டவர்கள்
சார்பாக நின்று
போரிட்டு
கௌரவர்களை
எதிர்த்தான் என்றால்
கௌரவர்களில்
ஒருவரையும்
மிச்சம் வைக்க
மாட்டான் ;
கெளரவர்களுடைய
சந்ததியையே
அழித்து விடுவான் ;”

“அதைப்போல
அரவான்
கெளரவர்கள்
சார்பாக நின்று
போரிட்டு
பாண்டவர்களை
எதிர்த்தான் என்றால்
பாண்டவர்கள் என்ற
ஒரு இனம்
இருந்ததா என்று
அனைவரும்
எதிர்காலத்தில்
கேள்வி கேட்கும்
வகையில்
பாண்டவர் என்ற
இனத்தையே
அழித்து
விடக்கூடிய
வல்லமை
படைத்தவன்
அரவான் ;”

“32 லட்சணங்களும்,
எதிர்ரோமம்
ஆகிய இரண்டு
தகுதிகளையும்
கொண்டவர்கள்
களப்பலி
கொடுப்பதற்கு
மட்டும் தான் தகுதி
உடையவர்கள் என்று
நினைத்துவிட்டாயா ?
அவர்களுக்கென்று
தனிப்பட்ட
சிறப்பு தகுதிகள்
இருக்கிறது என்பது
உனக்கு தெரியுமா
அர்ஜுனா
அதைப்பற்றி
யோசித்து
இருக்கிறாயா ?”

“கேள் அர்ஜுனா கேள்”

---------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
---------- 01-01-2020
//////////////////////////////////////////