March 28, 2020

பரம்பொருள்-பதிவு-164


             ஜபம்-பதிவு-412
           (பரம்பொருள்-164)

(அரவானுடைய
தனி அறையில்
உள்ள கட்டிலில்
அரவானும்
திருநங்கையும்
ஒன்றாக
அமர்ந்து கொண்டு
இருக்கும் போது
அரவான் பேசத்
தொடங்கினார் )

அரவான்  :
“நடந்து முடிந்த
நம்முடைய
காந்தர்வ திருமணம்
என்னுடைய
விருப்பத்தின்
பேரில் இருளை
சாட்சியாக
வைத்து நடந்து
முடிந்து விட்டது “

“இனி இந்த
அறையில்
நடக்கப்போகும்
நம்முடைய
இன்பம் நிறைந்த
இந்த இரவிற்கு
இருள் இருக்க
வேண்டுமா ?
அல்லது
ஒளி இருக்க
வேண்டுமா?
என்பதை
முடிவு செய்யும்
பொறுப்பை
உன்னுடைய
விருப்பத்திற்கே
விட்டு விடுகிறேன் “  

திருநங்கை  :
(அரவானின்
வார்த்தைகளைக்
கேட்ட திருநங்கை
நாணத்தால்
தன்னுடைய
முகத்தை மூடிக்
கொண்டாள்)

அரவான்  :
“நிலவை மேகம்
மூடும்போது
இந்த உலகம்
எப்படி இருளால்
சூழ்ந்து
விடுகிறதோ
அதைப்போல
நிலவு போன்று
இருக்கும்
உன்னுடைய
முகத்தை
கைகள் என்ற
மேகத்தால் மூடிக்
கொண்டதால்
இந்த அறை
இருளால் சூழ்ந்து
விட்டதைப் பார் “

திருநங்கை  :
“நீங்கள் பெரிய
கவிஞராக
இருப்பீர்கள் போல
இருக்கிறது ;
நீங்கள் பேசும்
வார்த்தையே
கவிதையாக
இருக்கிறது ;”

அரவான் :
“நம்முடைய
மனதைக் கவர்ந்த
பெண் நமக்கு
அருகில்
இருக்கும் போது
எந்த ஒரு
ஆணும்
கவிஞனாகத்தான்
மாறுவான் “

“கவிஞனாக
இல்லாதவனும்
கவிஞனாகத்
தான் மாறுவான்”

“கவிஞனாக
பிறக்காதவனும்
கவிஞனாகத்
தான் மாறுவான்”

“நானும்
அப்படித்தான்
உன்னைப்
பார்த்தது முதல்
கவிஞனாக
மாறி விட்டேன்”

“கவிஞனாவதற்கு
முன் கண்களால்
உன்னுடைய
அழகை ரசித்தேன்  ;
கவிஞனனான பின்
வார்த்தைகளால்
உன்னுடைய
அழகை
ரசிக்கிறேன் ;”

திருநங்கை  :
“நீங்கள் ரசித்த
என்னுடைய
அழகை
கவிதையாக்கி
சொல்வீர்களா ?
உங்களுடைய
வாயிலிருந்து
வரும் அழகான
வார்த்தைகளின்
மூலம் அதை
நான் கேட்க
விரும்புகிறேன் “

“என்னுடைய
ஆசையை
நிறைவேற்றுவீர்களா?”

அரவான்  :
“உங்களை
வர்ணித்து ஒரு
கவிதை என்ன
ஓராயிரம்
கவிதை
சொல்லலாமே ?
ஆயிரம் கவிதை
போதுமா-அல்லது
அதற்கு மேலும்
வேண்டுமா ? “

திருநங்கை  :
“ஓர் ஆயிரம்
கவிதை எல்லாம்
தேவையில்லை
என்னுடைய
மனதை கவரும்
வகையில்
ஒரே ஒரு
கவிதை
சொல்லுங்கள்
அது போதும் “

அரவான்  :
“சரி சொல்கிறேன் ! “

(என்று
அரவான்
கவிதை சொல்லத்
தொடங்கினார்)

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 28-03-2020
//////////////////////////////////////////


March 27, 2020

பரம்பொருள்-பதிவு-163


               ஜபம்-பதிவு-411
             (பரம்பொருள்-163)

அரவான்  :
“இந்த இருளை
சாட்சியாக வைத்து
காந்தர்வ முறைப்படி
திருமணம் செய்து
கொள்வோம் “

திருநங்கை  :
“என்னது இருளை
சாட்சியாக
வைத்து திருமணமா
விசித்திரமாக
இருக்கிறது “

“எந்த சுபகாரியத்தை
செய்தாலும்
பஞ்ச பூதங்களான
நிலம், நீர், நெருப்பு,
காற்று, விண்,
ஆகியவற்றை
சாட்சியாக
வைத்துத் தானே
செய்வார்கள் - அதிலும்
பெரும்பான்மையானவர்கள்
ஒளியை சாட்சியாக
வைத்துத் தானே
செய்வார்கள் “

“அப்படி இருக்கும்
போது சுபகாரியமான
திருணத்தை - நாம்
செய்து கொள்ளும் போது
எதற்காக இருளை
சாட்சியாக வைத்து
திருமணம் செய்ய
வேண்டும் என்கிறீர்கள் “

 அரவான் :
“பஞ்சபூதங்களுக்கும்
மூலமாக இருப்பதும்
இருள் தான் ;
இந்த பிரபஞ்சத்திற்கு
மூலமாக இருப்பதும்
இருள் தான் ;
இந்த உலகத்தில்
உள்ள தோற்றங்கள்
அனைத்திற்கும்
மூலமாக இருப்பதும்
இருள் தான் ;”

“ஆதியும் இருள் தான் ;
அந்தமும் இருள் தான் ;
ஆரம்பமும் இருள் தான் ;
முடிவும் இருள் தான் ;”

“அன்று இருந்ததும்
இருள் தான் ;
இன்று இருப்பதும்
இருள் தான் ;
நாளை இருக்கப்
போவதும்
இருள் தான் ;”

“இந்த உலகம்
முழுவதும் நிரம்பி
இருப்பதும்
இருள் தான் ;
அனைத்துப்
பொருட்களிலும்
ஊடுருவி நிரம்பி
இருப்பதும்
இருள் தான் ;”

“இருள் இன்றி
இந்த உலகத்தில்
எதுவும் இல்லை “

“ஒளியானது தனது
ஆயுட்காலம்
இருக்கும் வரை
இருளுக்குள் இருந்து
விட்டு செல்லும் ;
ஒளியானது
நிலையானது
கிடையாது ;
நிலையற்றது ;
என்றும் இருக்கப்
போவது இருள்
ஒன்று தான் ; “

“அதனால் தான்
நிலையற்ற ஒளியை
சாட்சியாக வைக்காமல்
நிலையான இருளை
சாட்சியாக வைத்து
நாம் காந்தர்வ
முறைப்படி
திருமணம் செய்து
கொள்ளலாம் என்றேன் “

திருநங்கை  :
“நீங்கள் வித்தியாசமாக
யோசிப்பவர் என்று
கேள்விப்பட்டேன் ;
ஆனால் இவ்வளவு
வித்தியாசமாக
யோசிப்பவர் என்பதை
இப்போது தான்
தெரிந்து கொண்டேன் ; “

“உங்கள் கருத்தை
நான் ஏற்றுக்
கொள்கிறேன் ;
நாம் இருளை
சாட்சியாக வைத்தே
திருமணம்
செய்து கொள்வோம் “

(ஏற்கனவே அழகாக
கோர்த்து வைக்கப்பட்ட
மாலையை அரவான்
தன்னுடைய கையில்
எடுத்து திருநங்கையின்
கழுத்தில் போட்டான் ;
திருநங்கை தன்னுடைய
கையில் இருந்த
மாலையை அரவான்
கழுத்தில் போட்டாள் ;
அரவானின்
திருமணம் காந்தர்வ
முறைப்படி நடக்க
இருள் அதற்கு
சாட்சியாக இருந்தது ;)

அரவான் :
“வாருங்கள் என்னுடைய
மாளிகைக்குள் இருக்கும்
என்னுடைய தனிமையான
அறைக்குள் செல்வோம் “

திருநங்கை :
“என்னை நீங்கள்
உள்ளே வா என்று
அழைத்தால் தான்
நான் மாளிகைக்குள்
வருவேன் “

அரவான்  :
“அப்படியா !
என்னுடைய
இதயசிம்மாசனத்தில்
வீற்றிருக்கும்
என்னுடைய
இதய ராணியே  !
என்னுடைய
மாளிகைக்கு வர
வேண்டும்  

(என்று
திருநங்கையைப்
பார்த்துக் கொண்டே
தன்னுடைய ஒரு
கையை நீட்டினான்
அரவான் “

“வெட்கத்தால்
தலைகுனிந்த
திருநங்கை
அரவானின் கையைப்
பற்றிக் கொண்டு
அரவானின்
மாளிக்கைக்குள்
இருக்கும் அரவானின்
தனி அறைக்குள்
நுழைந்தாள் “)

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 27-03-2020
//////////////////////////////////////////

March 26, 2020

பரம்பொருள்-பதிவு-162


              ஜபம்-பதிவு-410
            (பரம்பொருள்-162)

(மாளிகைக்கு வெளியே
நின்று இயற்கைக்
காற்றை சுவாசித்துக்
கொண்டிருந்த அரவான்-அந்த
கும்மிருட்டில் தன்னுடைய
மாளிகை நோக்கி யாரோ
ஒருவர் நடந்து வந்து
கொண்டிருக்கிறார்
என்பதை பார்த்த அரவான்
அவர் யார் என்று
தெரியாததால் அவர் யார்
என்று தெரிந்து கொள்ளும்
பொருட்டு தன்னை நோக்கி
வந்து கொண்டிருப்பவரை
அணுகி அவரிடம்
பேசத் தொடங்கினார்)

அரவான் :
“பரந்தாமன் கிருஷ்ணன் தானே
உங்களை அனுப்பி வைத்தார்”

திருநங்கை  :
“யாரும் என்னை அனுப்பி
வைக்கவும் இல்லை ;
யாரும் என்னை அனுப்பி
வைக்கவும் முடியாது ;
நானே வந்தால் தான்
உண்டு - அதனால் தான்
நானே இங்கு வந்தேன்”

அரவான் :
“அப்படி என்றால் நீங்கள்”

திருநங்கை :
“நான் தான் கிருஷ்ணன்”

அரவான் :
“என்னது நீங்கள் கிருஷ்ணனா”

திருநங்கை :
“ஆமாம் நான் தான்
கிருஷ்ணன் “

அரவான் :
“என்ன சொல்கிறீர்கள்?”

திருநங்கை :
“நான் தான்
கிருஷ்ணன் என்றேன்”

அரவான்  :
“ஏன் அவ்வாறு சொல்கிறீர்கள்”

திருநங்கை :
“இந்த உலகத்தில் உள்ள
அனைத்து பொருட்களிலும்
அனைத்து உயிர்களிலும்
ஊடுருவி நீக்கமற
நிறைந்திருக்கக்கூடிய
கிருஷ்ணன் என் உள்ளேயும்
நிரம்பி இருக்கிறார்”

“அப்படி என்றால்
அவர் தானே நான் ;
நான் தானே அவர் ; ”

“அதனால் நான் தான்
கிருஷ்ணன் என்றேன்”

அரவான் :
“நீங்கள் அழகாக
இருக்கிறீர்கள் என்று தான்
நினைத்தேன் - ஆனால்
உங்களுக்கு அழகாகவும்
பேசத் தெரியும் என்பதை
நீங்கள் பேசுவதிலிருந்து
தெரிந்து கொண்டேன் “

“உங்களை அனுப்பி
வைத்ததற்கான காரணத்தை
உங்களுக்கு சொன்னார்களா ?“

“உங்களை இங்கு அனுப்பி
வைத்ததற்கான காரணம்
உங்களுக்கு தெரியுமா?”

திருநங்கை :
“யாரும் என்னை
அனுப்பி வைக்கவில்லை
நானே தான் வந்தேன் ;
யார் பேசும் பேச்சைக்
கேட்டும் நான் முடிவு
எடுப்பதில்லை - எனக்கு
சரி என்று பட்டால்
மட்டுமே நான் அந்த
செயலை செய்வேன் ;
எனக்கு சரி என்று
பட்டது அதனால் தான்
நானே நேரில் வந்தேன் “

அரவான் :
“அப்படி என்றால்
யாரும் உங்களை
கட்டாயப்படுத்தவில்லையே”

திருநங்கை :
“யாரும் என்னை
கட்டாயப்படுத்த முடியாது ;
நல்லவர்கள்
எங்கிருந்தாலும்
அவர்கள் செய்யக்கூடிய
நல்லதுக்கு நான்
எப்போதும் துணையாக
இருந்திருக்கிறேன் ;”

“உங்களையே
அர்ப்பணித்து இந்த
உலகத்திற்காக - நீங்கள்
செய்யப்போகும் நல்ல
செயலுக்காக - நான்
என்னுடைய வாழ்க்கையையே
உங்களுக்காக அர்ப்பணிக்க
வந்திருக்கிறேன் - உங்களுக்கு
துணையாக இருக்க
வந்திருக்கிறேன்”

அரவான்  :
“அப்படி என்றால்
அனைத்து உண்மைகளும்
தெரிந்து தான் இங்கு
வந்திருக்கிறீர்கள்”

திருநங்கை :
“உண்மை தெரியவில்லை
என்றால் நான் வந்தே
இருக்க மாட்டேன் உண்மை
எனக்கு தெரிந்த காரணத்தினால்
தான் நானே வந்தேன் “

அரவான் :
“அழகாக இருக்கிறீர்கள்
அறிவுபூர்வமாக பேசுகிறீர்கள்
உண்மையை உணர்ந்து
இருக்கிறீர்கள் - உங்களை
என்னுடைய இல்லறத்
துணைவியாக ஏற்றுக்
கொள்ள விரும்புகிறேன் ;
உங்களுக்கு விருப்பமா ?
உங்களுடைய
சம்மதத்திற்காகத் தான்
காத்துக் கொண்டிருக்கிறேன்
என்ன சொல்கிறீர்கள் ?“

திருநங்கை :
“எனக்கு சம்மதம் இல்லை”

அரவான் :
“என்ன சம்மதம் இல்லையா”

திருநங்கை :
“ஆமாம் எனக்கு சம்மதம்
இல்லை - நீங்கள் என்னை
மரியாதையுடன் அழைப்பதில்
எனக்கு சம்மதம் இல்லை “

அரவான் :
“வேறு எப்படி உங்களை
நான் அழைப்பது “

திருநங்கை :
“நீ! வா! போ! என்று
என்னை ஒருமையில்
அழையுங்கள்  

அரவான் :
“அப்புறம்”

திருநங்கை :
“கண்ணே! முத்தே! மணியே!
என்று அழையுங்கள் “

அரவான் :
“அவ்வளவு தானா அல்லது
இன்னும் ஏதாவது இருக்கிறதா “

திருநங்கை :
“உங்களுக்கு எப்படி
பிடித்திருக்கிறதோ ?
அப்படியே அழையுங்கள்”

அரவான் :
“அப்படி நான் உங்களை
அழைக்க வேண்டும்
என்றால் நீங்கள் எனக்கு
சொந்தமாக வேண்டாமா?”

திருநங்கை :
“நான் உங்களுக்கு மட்டுமே
சொந்தமாக இருப்பதற்காகத்
தான் வந்திருக்கிறேன் “

அரவான் :
“நான் உங்களுக்கு
சொந்தமாகவும் நீங்கள்
எனக்கு சொந்தமாகவும்
இருக்க வேண்டும் என்றால்
நாம் இருவரும் திருமணம்
செய்து கொள்ள வேண்டும் “

திருநங்கை  :
“நான் அதற்காகத்
தான் வந்திருக்கிறேன்  ;
நான் அதற்காகத்
தான் காத்திருக்கிறேன் ;”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 26-03-2020
//////////////////////////////////////////
/////////////////////////////////////////////
அரவானை திருமணம்
செய்வதற்காக சென்ற
திருநங்கையின் படம்
தங்கள் பார்வைக்காக
/////////////////////////////////////////////////