February 04, 2022

பதிவு-11-செயற்கரிய- திருக்குறள்

 பதிவு-11-செயற்கரிய-

திருக்குறள்

 

நாடுகள்

மண்டியிடப் போகிறது

எதிரிகள்

அழிக்கப்படப்

போகிறார்கள்

மக்கள் ஆதரவு

தரப்போகிறார்கள்

 

நண்பர்கள்

துணையாக இருக்கப்

போகிறார்கள்

 

தோல்வி உன்னை

அணுகாது.

வெற்றி உன்னை

அணுகாமல் இருக்காது

.

இது வரை

யாரும் படைக்காத

புதிய வரலாற்றைப்

படைக்கப் போகிறாய்.

 

இன்று நீ

பெற்ற

வெற்றி தான்

உன்

வாழ்க்கையின்

தொடக்கம்

 

வெற்றியை

நோக்கி செல்

என்று

கூறிக்கொண்டே

தன் மகன்

அலெக்சாண்டரை

கட்டித் தழுவிக்

கொள்கிறான்

மன்னன் பிலிப்

 

மன்னன் பிலிப்

சொன்னது போல

பியூசிபேலஸ்

குதிரையை வாங்கி

அலெக்சாண்டரிடம்

கொடுக்கிறான்.

பியூசிபேலஸ்

குதிரை

அலெக்சாண்டருக்கு

உரிமையானது

சொந்தம் ஆனது

 

அலெக்சாண்டர்

எங்கு எல்லாம்

சென்றானோ

அங்கு எல்லாம்

பியூசிபேலஸ்

குதிரை

அலெக்சாண்டரை

சுமந்து சென்றது.

அலெக்சாண்டருடன்

பல போர்களில்

கலந்து கொண்டது

 

அலெக்சாண்டர்

பியூசிபேலஸ்

குதிரையுடன்

இணைந்து பல

போர்களை

வென்றான்.

பியூசிபேலஸ்

இறுதிக்

காலம் வரை

அலெக்சாண்டரை

சுமந்து சென்றது

 

கிமு.326 ஜுலை

மாதம்

இந்தியாவின்

ஜீலம் நதிக்கும்

சீனாப் நதிக்கும்

இடைப்பட்ட

பகுதியான

தற்போதைய

பஞ்சாப் என்று

அழைக்கப்படும்

பகுதியை ஆண்ட

அரசனான

போரஸ் என்கிற

புருஷோத்தமன்

எது வந்தாலும்

சரி அந்நியனுக்கு

அடிபணிய

மாட்டேன்.

என்று

அலெக்சாண்டரை

எதிர்த்துப் போர்

புரிந்தான்

 

அலெக்சாண்டர்

தன்னுடைய

வாழ்க்கையிலேயே

அப்போது தான்

முதன் முதலாக

ஒரு உண்மையான

வீரனைப் பார்த்தான்

 

இந்தப் போரில் தான்

பியூசிபேலஸ்

குதிரை பலத்த

காயங்களுடன்

மரணம் அடைந்தது

 

பியூசிபேலஸ்

மறைந்த

பிறகு தான்

அலெக்சாண்டரை

விட்டுப் பிரிந்தது.

 

 

------என்றும் அன்புடன்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-------04-02-2022

.//////////////////////////////////////////////////////

பதிவு-10-செயற்கரிய- திருக்குறள்

 பதிவு-10-செயற்கரிய-

திருக்குறள்

 

அலெக்சாண்டரின்

வீரத்தைப் பார்த்த

அந்த

மைதானத்தில்

கூடியிருந்த மக்கள்

அனைவரும்

ஆச்சரியப்பட்டனர்

தங்கள்

மகிழ்ச்சியை

வெளிப்படுத்தினர்.

தங்களுடைய

மகிழ்ச்சியை

வெளிப்படுத்தும்

விதமாக

அலெக்சாண்டரை

வாழ்த்தினர்

அந்த

மைதானத்தில்

கூடி இருந்த

மக்கள்

அனைவரும்

எழுந்து நின்று

கை தட்டி

ஆரவாம்

செய்தனர்

 

அலெக்சாண்டர்

வாழ்க

என்ற கோஷம்

அந்த

மைதானத்தையே

அதிரச் செய்தது.

 

யாரும்

செய்யாத செயலை,

யாராலும்

செய்ய

முடியாத செயலை

அலெக்சாண்டர்

செய்து காட்டினான்.

 

குதிரையை

அடக்கிய

அலெக்சாண்டர்

தனது தந்தையை

நோக்கி வந்தான்.

மன்னன் பிலிப்

அலெக்சாண்டரை

கட்டித் தழுவினான்.

 

என்ன சொல்வது

என்று தெரியாமல்

வார்த்தைகளின்றி

தவித்துக் கொண்டு

இருந்த மன்னன்

பிலிப் தன்னுடைய

மகனைப் பார்த்து

பேசத் தொடங்கினான்.

 

என் மகனே

அலெக்சாண்டர்

அடங்காத

குதிரையை

அடக்கியதன் மூலம்

நீ ஒரு திறமையான

வீரன் என்பதை

நிரூபித்து

இருக்கிறாய்.

வெற்றி பெறுவதற்கு

வீரம் மட்டும்

போதாது

அறிவும் வேண்டும்

என்று

நிரூபித்து

இருக்கிறாய்

 

எத்தகைய

பிரச்சினையையும்

உன்னால் சமாளித்து

வெற்றி பெற

முடியும் என்பதை

நிரூபித்து

இருக்கிறாய்

யாரும் செய்யாததை

யாராலும்

செய்ய முடியாததை

உன்னால் செய்ய

முடியும் என்பதை

நிரூபித்து

இருக்கிறாய்

 

இவைகளை நீ

மக்கள்

முன்னிலையில்

நிரூபித்து

இருக்கிறாய்

மக்கள் அனைவரும்

ஏற்றுக் கொள்ளும்

வகையில்

நிரூபித்து

இருக்கிறாய்

 

உனக்குக் கிடைத்த

இந்த வெற்றி

இந்தக் குதிரையுடன்

முடிந்து

விடப்போவதில்லை

உன்னுடைய

வெற்றிப் பயணம்

இன்று தான்

தொடங்கி இருக்கிறது

 

பல

போர்க்களங்களைக்

காணப் போகிறாய்.

பல வெற்றிகளைக்

குவிக்கப் போகிறாய்.

 

------என்றும் அன்புடன்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-------04-02-2022

.//////////////////////////////////////////////////////

பதிவு-9-செயற்கரிய- திருக்குறள்

 பதிவு-9-செயற்கரிய-

திருக்குறள்

 

இப்போது

நான் உன் மேல்

ஏறப்போகிறேன்

ஏறி உட்காரப்

போகிறேன்

உன் மேல்

உட்கார்ந்து

சவாரி செய்யப்

போகிறேன்

என்று

அலெக்சாண்டர்

அதன் காதுகளில்

பேசியதை

குதிரை

புரிந்தது போல்

தலை ஆட்டியது

மூச்சை

இழுத்து விட்டது

குதிரை விட்ட

மூச்சு அந்த

மைதானத்தில்

எதிரொலித்தது

 

குதிரையின் மேல்

ஏறுவதற்கு

குதிரை சம்மதம்

தெரிவித்து விட்டது

சவாரி செய்வதற்கு

சம்மதம்

தெரிவித்து விட்டது

என்பதை

உணர்ந்து கொண்ட

12 வயது

சிறுவனான

அலெக்சாண்டர்

அந்தக்

குதிரையின்

மேல் ஏறி

அமர்கிறான்.

 

அலெக்சாண்டாரை

தோளில் சுமந்தபடி

அந்தக் குதிரை

தன்னுடைய

இரண்டு

முன்னங்கால்களை

வானத்தை நோக்கியும்

இரண்டு

பின்னங்கால்களை

தரையில் வைத்தும்

நின்றபடி

கனைத்தது

தான்

அனைத்திற்கும்

தயார் என்று

தன்னுடைய

செய்கையின் மூலம்

உணர்த்தியதை

புரிந்து கொண்ட

அலெக்சாண்டர்

குதிரையின்

மேல் அமர்ந்து

கொண்டு சவாரி

செய்ய ஆரம்பித்தான்

 

குதிரையின் மேல்

அமர்ந்து கொண்டு

அந்த

மைதானத்தை

சுற்றி

சுற்றி வந்தான்

 

குதிரையானது

தன்னைப்

புரிந்து

கொள்ளும் வரை

குதிரையின்

மேல் ஏறி

சவாரி செய்து

கொண்டே

இருக்கிறான்

அலெக்சாண்டர்

 

குதிரையானது

தன்னை

ஏற்றுக் கொண்டது

தன்னைப்

புரிந்து கொண்டது.

தன்னுடைய

சொல் கேட்டு

நடக்கிறது

என்று

தெரிந்தவுடன்

குதிரையை

விட்டு கீழே

இறங்கி நின்றான்.

அலெக்சாண்டர்

 

பியூசிபேலஸ்

குதிரையை

இது வரை யாரும்

அடக்கியதில்லை.

முதன் முறையாக

அலெக்சாண்டர்

அந்தக் குதிரையை

அடக்கினான்

 

பியூசிபேலஸ்

குதிரையின் மேல்

இது வரை யாரும்

ஏறியதில்லை.

முதன் முறையாக

அலெக்சாண்டர்

அதன் மேல்

ஏறினான்.

 

பியூசிபேலஸ்

குதிரையின்

மேல் ஏறி

இது வரை

யாரும் சவாரி

செய்ததில்லை

 

முதன் முறையாக

அலெக்சாண்டர்

அதன் மேல்

ஏறி. சவாரி

செய்தான்

 

------என்றும் அன்புடன்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-------04-02-2022

.//////////////////////////////////////////////////////

 

பதிவு-8-செயற்கரிய- திருக்குறள்

 பதிவு-8-செயற்கரிய-

திருக்குறள்

 

குதிரையை

சூரியன் இருக்கும்

திசையில் நிற்க

வைத்து விட்டால்

அதன் நிழல்

தரையில் விழாது

அப்போது

குதிரை பயப்படாது

அதனால்

குதிரையை

சூரியன் இருக்கும்

திசைக்கு மாற்ற

வேண்டும்

என்று

குதிரையை

மெதுவாக

தடவிக் கொண்டே

அதன் காதுகளில்

கவலைப்படாதே

நான் உன்னை

ஒன்றும்

செய்ய மாட்டேன்

நான் உன்

நண்பன்

உன்னுடைய

நண்பனே உன்னை

பயமுறுத்துவானா

என்னைப்

பார்த்து

பயப்படாதே

நான் செய்வது

உன்னுடைய

நல்லதுக்குத் தான்

என்று

பேசிக் கொண்டே

குதிரையின்

கவனத்தைத்

திருப்பிக் கொண்டே

குதிரையை

சூரியன் இருக்கும்

திசையை

நோக்கி திருப்பினான்

அலெக்சாண்டர்

 

குதிரையின்

நிழல் மறைந்தது.

குதிரை

சாதாரண நிலைக்கு

வந்து விட்டது.

கொஞ்சம்

கொஞ்சமாக

அதன் அச்சம்

விலகுவதை

குதிரையின்

கண்களைப் பார்த்து

அலெக்சாண்டர்

தெரிந்து கொண்டான்

 

நீயும் வீரன்

நானும் வீரன்

இரண்டு பேருமே

இணையில்லாத

வீரர்கள்

யாருடனும்

ஒப்பிட முடியாத

வீரர்கள்

சாதனை

படைப்பதற்காகவே

பிறந்திருப்பவர்கள்

வரலாற்றை

உருவாக்குவதற்காகவே

வாழ்ந்து கொண்டு

இருப்பவர்கள்

 

இரண்டு பேரும்

ஒன்றாக இணைந்தால்

வரலாற்றைப்

படைத்து

காலத்தை

வென்று நிற்கலாம்

 

நாம் இருவரும்

ஒன்று சேர்ந்து

சாதனைகள்

பல படைக்கலாம்.

 

நான் சொல்வதைக்

கேட்டு நடந்தால்

நீ என்னுடனே

இருக்கலாம்.

நாம் இருவரும்

இணைபிரியாமல்

இருக்கலாம்.

எப்போதும்

ஒன்றாகவே

இருக்கலாம்.

நண்பர்களாக

இருக்கலாம்

 

நீயும் நானும்

ஒன்றாக சேர்ந்தால்

இந்த உலகத்தையே

வெல்லலாம்..

 

நான் உன்னை

என்னுடைய

நண்பனாக

ஏற்றுக் கொண்டேன்

நீ என்னை

நண்பனாக

ஏற்றுக் கொண்டால்

நான்

சொல்வதைக் கேள்

 

------என்றும் அன்புடன்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-------04-02-2022

.//////////////////////////////////////////////////////