August 08, 2022

ஜபம்-பதிவு-824 (சாவேயில்லாத சிகண்டி-158)

 ஜபம்-பதிவு-824

(சாவேயில்லாத

சிகண்டி-158)

 

இந்த உலகத்தில்

எவ்வளவோ

பெரிய சூதாடிகள்

எல்லாம்

இருந்திருக்கிறார்கள்

ஆனால்

யுதிஷ்டிரன் போல்

சூதாட்டத்தில்

மனைவியை

பந்தயமாக

வைத்து

ஆடியதில்லை

 

அறிவுள்ளவன்

செய்யும்

செயலா இது

எந்த அறிவு

கெட்டவனும்

இத்தகைய

ஒரு செயலை

செய்யவே

மாட்டான்

 

சூதாட்டத்தில்

இழந்த

சொத்துக்களை

யாருமே திரும்பக்

கேட்க மாட்டார்கள்

என்ற வழக்கம்

இந்த உலகத்தில்

இருக்கிறது

என்பதும்

சூதாட்டத்தில்

இழந்த சொத்துக்களை

திருப்பிக் கொடுக்க

வேண்டிய

அவசியமும்

இல்லை என்பதும்

உனக்குத் தெரியாதா

அல்லது

தெரியாதது போல்

நடிக்கிறாயா

 

கிருஷ்ணன் :

அதனால் தான்

பாண்டவர்கள்

12 வருடம்

வனவாசம்

ஒரு வருடம்

அஞ்ஞாத வாசம்

முடித்து

இருக்கிறார்கள்

 

துரியோதனன் :

முடிக்கவில்லை

அஞ்ஞாத வாசம்

ஒரு வருடம்

முடிவதற்கு

முன்பாகவே

அவர்கள் வீராட

நாட்டில் மாட்டிக்

கொண்டார்கள்

 

ஒரு வருடம்

அஞ்ஞாத வாசம்

முடிவடைவதற்கு

முன்பாகவே

வீராட நாட்டில்

தன்னை

வெளிப்படுத்திக்

கொண்டான்

அர்ச்சுனன்

 

கையும்

களவுமாக

மாட்டிக்

கொண்டான்

அர்ச்சுனன்

 

அந்த

அடிமைகள்

மீண்டும்

12 வருடம்

வனவாசம்

ஒரு வருடம்

அஞ்ஞாத வாசம்

மீண்டும்

மேற்கொள்ள

வேண்டும்

அதற்காக அந்த

அடிமைகளை

மீண்டும் காட்டிற்கு

அனுப்பி வையுங்கள்

 

பீஷ்மர் :

துரியோதனா

ஒரு வருடம்

அஞ்ஞாத வாசம்

முடிந்த

பிறகு தான்

வீராட நாட்டில்

அர்ச்சுனன்

வெளிப்பட்டான்

 

துரியோதனன் :

ஆனால்

காலக்கணக்கு

அவ்வாறு

சொல்லவில்லையே

 

துரோணர் :

காலக்கணக்கில்

சூரிய கணக்கு

சந்திர கணக்கு

என இரண்டு

பிரிவுகள்

இருக்கிறது

 

ஒரு கணக்கை

மட்டும் கணக்கில்

வைத்துக் கொண்டு

நாம் எந்த ஒரு

முடிவுக்கும்

வரக்கூடாது

 

இரண்டு

கணக்குகளையும்

ஒப்பிட்டு பார்த்துத்

தான் முடிவுக்கு

வர வேண்டும்

 

அப்படி

ஆராய்ந்து

பார்த்ததில்

பாண்டவர்கள்

ஒரு வருடம்

அஞ்ஞாத

வாசத்தை

சரியாக

முடித்து

விட்டார்கள்

 

ஒரு வருடம்

அஞ்ஞாத வாசம்

முடிந்து விட்டது

என்று தெரிந்த

பிறகு தான்

அர்ச்சுனன்

தன்னை வீராட

நாட்டில்

வெளிப்படுத்தினான்

 

காலக்

கணக்கின்படி

ஒரு வருடம்

அஞ்ஞாத வாசம்

முடிவடைந்த

பின்னரே

வீராட

நாட்டிலிருந்து

அர்ச்சுனன்

வெளிப்பட்டான்

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----05-08-2022

-----வெள்ளிக் கிழமை

 

//////////////////////////////////////////////

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஜபம்-பதிவு-823 (சாவேயில்லாத சிகண்டி-157)

 ஜபம்-பதிவு-823

(சாவேயில்லாத

சிகண்டி-157)

 

கிருஷ்ணன் :

துரியோதனா

விதுரரை

குறை

சொல்லாதே

 

அவர்

அழைத்து

நான்

செல்லவில்லை

 

நானே

தான் அவர்

வீட்டிற்கு

சென்றேன்

 

அவர் மீது

எந்தத்

தவறும்

இல்லை

 

தவறு

செய்யாத

விதுரர் மீது

ஏன்

கோபப்படுகிறாய்

 

நான் வந்ததின்

நோக்கத்தினை

அறிந்ததால்

தான் அவர்

என்னை

உபசரித்தார்

 

துரியோதனன் :

நீ வந்ததின்

நோக்கம்

என்னுடைய

சித்தப்பாவிற்கு

தெரிந்திருக்கிறது

 

எங்களுக்குத்

தெரியவில்லை

 

கிருஷ்ணன் :

நான்

சமாதானத்தை

நிலைநாட்ட

தூதுவனாக

வந்திருக்கிறேன்

 

கர்ணன் :

சமாதானத்தை

நிலைநாட்ட

வேண்டிய

அவசியம்

இப்போது

ஏன் ஏற்பட்டது

 

கிருஷ்ணன் :

போர் நடக்காமல்

இருக்க வேண்டும்

என்பதற்காக

 

கர்ணன் :

போர் நடக்கப்

போகிறதா என்ன

 

கிருஷ்ணன் :

போரை நீங்கள்

உருவாக்கி

விடக்கூடாது

அல்லவா

அதற்காகத் தான்

 

கர்ணன் :

போரை

நாங்கள் தான்

உருவாக்குவோம்

என்கிறீர்களா

 

கிருஷ்ணன் :

பாண்டவர்களுக்குரிய

பங்கை

திருப்பித்

தராவிட்டால்

போர் நடந்து

தானே ஆக

வேண்டும்

 

அப்படி என்றால்

போரை

நீங்கள் தானே

உருவாக்கியதாக

அர்த்தம்

 

துரியோதனன் :

பாண்டவர்களுக்குரிய

பங்கு எது

 

கிருஷ்ணன் :

இந்திரப்பிரஸ்தம்

 

துரியோதனன் :

அது அஸ்தினாபுரம்

போட்ட பிச்சை

 

கிருஷ்ணன் :

இல்லை

சமாமாகப்

பிரிக்கப்பட்டது

 

துரியோதனன் :

பிச்சைப் பொருளை

அஸ்தினாபுரத்தை

பத்திரமாக வைத்து

பாதுகாக்கத் தெரியாத

சூதாடி யுதிஷ்டிரன்

அதை சூதாடி

தோற்றான்

 

கிருஷ்ணன் :

இல்லை

சூது செய்து

தோற்கடித்தார்கள்

 

துரியோதனன் :

யாரும் சூது

செய்யவில்லை

 

இதைத் தான்

பணயமாக

வைத்து சூதாட

வேண்டும் என்று

யாரும்

சொல்லவும்

இல்லை

வற்புறுத்தவும்

இல்லை

 

சூதாடியான

யுதிஷ்டிரனே

சூதாட்டத்தில்

நாட்டை

வைத்தான்

தம்பிகளை

வைத்தான்

மனைவியை

வைத்தான்

தோற்றான்

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----05-08-2022

-----வெள்ளிக் கிழமை

 

//////////////////////////////////////////////

 

 

 

 

ஜபம்-பதிவு-822 (சாவேயில்லாத சிகண்டி-156)

 ஜபம்-பதிவு-822

(சாவேயில்லாத

சிகண்டி-156)

 

 (அஸ்தினாபுரத்தின்

அவையில்

திருதராஷ்டிரன்

பீஷ்மர் துரோணர்

விதுரர் கிருபர்

அஸ்வத்தாமன்

கர்ணன் உட்ப்ட

பலர் அமர்ந்து

இருக்கின்றனர்.

அப்போது

கிருஷ்ணன்

பேசத்

தொடங்குகிறார்.)

 

கிருஷ்ணன் :

சிகண்டியும்

இங்கே தான்

அமர்ந்திருக்கிறார்

போலிருக்கிறதே

 

துரியோதனன் :

துரியோதனன்

இருக்கும்

இடத்தில்

ஆண் பெண்

மாற்றுப்

பாலினத்தவர்

என்ற வேறுபாடு

எல்லாம்

கிடையாது

அனைவரும்

சமம்

 

பீஷ்மர்

சிலர் எதற்காக

அமர்ந்திருக்கிறோம்

என்ற காரணம்

கூட தெரியாமல்

அமர்ந்திருக்கின்றனர்

 

சிகண்டி :

இங்கே அமர்ந்திருக்கும்

அனைவருமே

காரணம் தெரிந்து தான்

அமர்ந்திருக்கிறார்களா

பீஷ்மர் அவர்களே

 

திருதராஷ்டிரன் :

இந்த அவை எதற்காகக்

கூட்டப்பட்டிருக்கிறதோ

அதைப்பற்றி மட்டும்

பேசுங்கள்

 

விதுரர் :

கிருஷ்ணனுக்கு

உரிய அரசு

மரியாதை

வழங்க

வேண்டும்

 

துரியோதனன் :

கிருஷ்ணனுக்கு

உரியஅரசு

மரியாதை அவர்

அஸ்தினாபுரத்துக்குள்

நுழைந்த போதே

அஸ்தினாபுரத்தால்

அவருக்கு

வழங்கப்பட்டது

 

அஸ்தினாபுரத்தால்

வழங்கப்பட்ட

அரசு மரியாதையின்

மதிப்பு தெரியாமல்

அஸ்தினாபுரத்தால்

வழங்கப்பட்ட

அரசு மரியாதையை 

ஏற்க அவர்

மறுத்து விட்டார்

 

என்னை

இழிவுபடுத்துவதாக

நினைத்துக் கொண்டு

அஸ்தினாபுரத்தை

இழிவு படுத்தினார்

 

அஸ்தினாபுரத்தின்

பெருமையை

இழிவு படுத்தினார்

 

அஸ்தினாபுரத்தின்

பாராம்பரியத்தை

இழிவு படுத்தினார்

 

அஸ்தினாபுரத்தின்

வீரமிக்க

வரலாற்றை

இழிவு படுத்தினார்

 

அஸ்தினாபுரத்தை

இழிவு

படுத்தியவருக்கு

 

அஸ்தினாபுரத்தின்

அரசு மரியாதையை

ஏற்க

மறுத்து விட்டவருக்கு

 

அஸ்தினாபுரத்தின்

அரசு மரியாதையை

உதாசீனப் படுத்தியவருக்கு

 

அஸ்தினாபுரத்தை

அவமதிக்கும் வகையில்

நடந்து கொண்டவருக்கு

 

அஸ்தினாபுரத்தால்

வழங்கப்பட்ட

அரசு மரியாதையை

புறக்கணித்தவருக்கு

 

மீண்டும் எப்படி

அரசு மரியாதை

வழங்க முடியும்

 

வேண்டும்

என்றால்

நீங்கள்

மரியாதை

கொடுங்கள்

 

நீங்கள் தான்

ஏற்கனவே

கிருஷ்ணனுக்கு

மரியாதை

கொடுத்தவர்

தானே

 

 

அவரை

உங்கள் வீட்டிற்கு

அழைத்து வந்து

தங்க வைத்து

உபசரித்தவர்

தானே

 

சாப்பாடு போட்டு

பசியாற்றியவர்

தானே

 

உறவு கொண்டாடி

மகிழ்ந்தவர் தானே

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----05-08-2022

-----வெள்ளிக் கிழமை

 

//////////////////////////////////////////////

 

July 26, 2022

ஜபம்-பதிவு-821 (சாவேயில்லாத சிகண்டி-155)

 ஜபம்-பதிவு-821

(சாவேயில்லாத

சிகண்டி-155)

 

கர்ணனைக்

கொல்வேன்

என்று அர்ச்சுனன்

சபதம் செய்து

இருக்கிறான்

 

சகுனியைக்

கொல்வேன்

என்று சகாதேவன்

சபம் செய்து

இருக்கிறான்

 

நீயும் பீஷ்மனைக்

கொல்வேன் என்று

சபதம் எடுத்து

அதற்காகவே

பிறந்திருக்கிறாய்

 

இவைகளை

அனைத்தும்

நடக்க வேண்டும்

என்றால்

போர் கண்டிப்பாக

நடந்து தானே

ஆக வேண்டும்

 

சிகண்டி :

ஏன் போர்

நடக்காமல்

இவைகள்

அனைத்தும்

நடக்காதா

 

துருபதன் :

நடக்காது

நடக்கவே நடக்காது

போர் நடக்காமல்

இவைகள் அனைத்தும்

நடப்பதற்கு

வாய்ப்பே இல்லை

 

நான் சொன்னவைகள்

அனைத்தையும்

ஒன்றுடன் ஒன்று

இணைத்துப்

பார்த்தாயானால்

ஒன்றுடன் ஒன்று

தொடர்பு கொண்டு

இருப்பது

தெரிய வரும்

 

ஒன்றுடன் ஒன்று

தொடர்பு கொண்டு

இருப்பது நடக்க

வேண்டும் என்றால்

அனைத்தையும்

கொண்டு ஒரு

நிகழ்ச்சி

நடந்து தானே

ஆக வேண்டும்

 

அந்த நிகழ்ச்சி தான்

பாண்டவர்களுக்கும்

கௌரவர்களுக்கும்

இடையே நடக்கப்

போகும் போர்

 

கிருஷ்ணனின்

தூது தோல்வியில்

தான் முடியப்

போகிறது

பாண்டவர்களுக்கும்

கௌரவர்களுக்கும்

போர் நடக்கத்

தான் போகிறது

 

சிகண்டி :

அப்படி நடந்தால்

எனக்கும் மகிழ்ச்சியே

அப்போது தான்

நான் போரில்

பீஷ்மனை

சந்திக்க முடியும்

பீஷ்மனை போரில்

எதிர்க்க முடியும்

பீஷ்மனுடன்

போரிட முடியும்

பீஷ்மனைக்

கொல்ல முடியும்

 

நான்

செல்கிறேன்

 

துருபதன் :

இப்போது

தானே வந்தாய்

இரண்டு நாட்கள்

ஓய்வு எடுத்து

விட்டு பிறகு

செல்லலாமே

 

நான் காலத்தோடு

போட்டி போட்டுக்

கொண்டு சென்று

கொண்டிருக்கிறேன்

நான் ஓய்வு

எடுத்தால் காலம்

என்னை

விட்டு விட்டு

நெடுந்தொலைவு

சென்று விடும்

 

ஓய்வு எடுப்பேன்

கண்டிப்பாக

ஓய்வு எடுப்பேன்

பீஷ்மனைக் கொன்ற

பிறகு கண்டிப்பாக

ஓய்வு எடுப்பேன்

 

என்று சொல்லி

விட்டு

அரண்மனையை

விட்டு

வெளியே வந்து

தன்னுடைய

குதிரையின்

மேல் ஏறி

அஸ்தினாபுரம்

நோக்கி சென்று

கொண்டிருந்தான்

சிகண்டி

 

மரணமற்றவனுக்கு

மரணத்தைப்

பரிசாக

தருவதற்காகச்

சென்று

கொண்டிருந்தான்

சிகண்டி

 

மரணமற்றவனுக்கு

மரணத்தை எப்படி

சிகண்டி

பரிசாகத் தருகிறான்

என்பதை அறிவதற்கு

ஆவலாக இருப்பவர்கள்

சிகண்டியைப்

பின் தொடருங்கள்

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----26-07-2022

-----செவ்வாய்க் கிழமை

 

//////////////////////////////////////////////