January 20, 2012

மஞ்சள்- வேப்பமரம்- பதிவு-3-சுபம்




              மஞ்சள்-வேப்பமரம்-பதிவு-3-சுபம்

                                   “”பதிவு மூன்றை விரித்துச் சொல்ல
                                                                       ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

அம்மை நோய் – விளக்கம் :
அம்மை நோய் உடலில் ஆரம்பித்து , அந்நோய் குணமாகி , நோயாளி தேறி, முழுவதுமாக குணமாகி வரும் வரையிலும் ,
நோயின் தாக்கத்திலிருந்தும் , அதன் பாதிப்புகளிலிருந்தும் ,அதன் கடுமையான பக்க விளைவுகளிலிருந்தும் ,
அதன் தாக்கத்தை கட்டுப்படுத்தி ,குணமாக்கக் கூடிய அனைத்து விதமான மருந்துக் குணங்கள் அனைத்தையும் தன்னுள் கொண்டுள்ளது வேப்பிலை என்பதை நம்முடைய அறிவிற் சிறந்த முன்னோர்கள் நடைமுறை வாழ்க்கையில் அனுபவ ரீதியாக உணர்ந்ததின் அடிப்படையில் 

வேப்பிலை ஒன்றினால் தான்
அம்மை நோயைக் கட்டுப்படுத்தவும் முடியும்,
அம்மை நோயைக் குணப்படுத்துவதும் முடியும் ,
அம்மை நோயைப் பரவவிடாமல் பாதுகாக்கவும் முடியும்,
என்பதை உணர்ந்து,
சமுதாயத்தில் வாழும் மக்கள் அம்மை நோயினால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக வேப்பிலையை அம்மை நோய்க்கு சர்வரோக நிவாரணியாக அதாவது மருந்தாக வைத்திருக்கின்றனர்.

நம் முன்னோர்களின் வழிகாட்டுதலின் படி தான் நாம் இன்றும் வேப்பிலையை அம்மை நோய்க்கு எதிராக பயன்படுத்தி வருகிறோம்.


அறிந்தும் அறியாமலும்,  உணர்ந்தும் - உணராமலும் , தெரிந்தும் -தெரியாமலும் , அம்மை நோய்க்கு எதிராக வேப்பிலையை பயன்படுத்தி வரும் நாம் அதனுடைய சக்திகளை அறிந்து கொண்டால் அதனுடைய சூட்சும ரகசியங்கள் நமக்கு வெளிப்பட்டு விடும் .

அதனைப்பற்றி இப்பொழுது விரிவாகப் பார்ப்போம் .


அம்மை நோய் - தெய்வம்:
அம்மை நோய் தானே என்று அலட்சியமாக இருக்கக் கூடாது அம்மை நோய் ஓர்  பயங்கரமான கடுமையான நோய் .
அந்நோய் பலருக்கும் தொற்றி மேலும் பரவி பாதிப்புகளை ஏற்படத்தக் கூடிய சக்தியுள்ள நோய் .இந்த நோயைச் சரிவரக் களையாவிட்டால் அதன் வீரியத்தை அறிந்து தகுந்த படி குணப்படுத்தா விட்டால் நோயாளியை மரணப் படுக்கை வரை கூட கொண்டு சென்று விடும் .
அம்மை நோய் கண்டவருடைய வீடு சுத்தமாக இருக்க வேண்டும்.
வீட்டிலிருப்பவர்களும் சுத்தத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறினால் அவர்கள் சுத்தத்தைக் கடைப் பிடிக்காமல்,
அறிவாளிகள் போல் தங்களை பாவித்துக் கொண்டு வீணாண தத்துவங்களை பேசிக் கொண்டும் , தேவையற்ற வார்த்தைகளை உதிர்த்துக் கொண்டும்,
பிறரிடம் வம்புகள் இழுத்துக் கொண்டும் அலைவார்கள்.
இதனால் நோயாளிக்குத் துன்பங்களும் , கஷ்டங்களும் ,அபாயக் கட்டமும் கூட ஏற்படலாம் .
மேலும் நோயாளியினால் மற்றவர்களுக்கும்  சுற்றி உள்ளவர்களுக்கும் கஷ்டம் உண்டாக்கக் கூடிய சூழ்நிலை கூட உருவாகலாம்.


இதனால் தான் அம்மை நோய் தாக்காதிருக்க அம்மை நோயால் பாதிப்புகள் எதுவும் நேர்ந்து விடாமல் இருப்பதற்காக வேப்பிலையைத் தவிர சிறந்த மருந்து வேறொன்றும் இல்லை என்பதை நன்கறிந்த நம் முன்னோர்கள் ,
இந்த அம்மை வியாதியை ஒரு தெய்வமென்றும் ,அதற்கு வேப்பிலையே தேவையென்றும் ,அதுவே சிறந்து மருந்து என்றும் நமக்குக் கூறிச் சென்று விட்டனர்.
அம்மை நோயைத் தெய்வமென்று கூறினால் தான் மக்கள் பயந்து அந்நோய் வந்தவர்களை நல்ல முறையிலே கவனிப்பார்கள்.
நோயாளி இருக்கும் இடத்தைச் சுத்தமாக வைத்திருப்பார்கள் என்று நமது முன்னோர்கள் கருதியதில் எந்த விதமான தவறுகளும் இல்லை.


வேப்பமரத்தின் சக்தியை அறிந்த சித்தர்கள் வைத்திய முறையில் இதற்குப் பல மறைமொழிப் பெயர்களைக் கொடுத்திருக்கின்றனர் .
பல அரிய வைத்திய நுhல்களில் வேப்பமரத்திற்கு ஆதி சக்தி மூலிகை , பராசக்தி மூலிகை , வேம்பு என்றும் கூறப்பட்டிருப்பதைக் காணலாம்.



அம்மை நோய் - வேப்பிலை சொருகுவது:
அம்மை நோய் என்று தெரிந்தவுடனேயே ஒரு கொத்து வேப்பிலையைக் கொண்டு வந்து அம்மை நோய் கண்டவர் வீட்டில் வீட்டு வாசல் படிக்கு மேலே செருகி வைத்து விடுவார்கள் .
இந்தப் பழக்கம் இன்றளவும் தொடர்ந்து பின்பற்றப் பட்டு வருகிறது அதாவது இந்தக் காலத்தில் கூட கிராமங்களிலும் சில நகர வீடுகளிலும் கடை பிடிக்கப் பட்டு வருகிறது .

அம்மை நோய் கண்ட வீட்டில் வேப்பிலையைச் செருகி வைப்பது அநாகரீகம் என சிலர்  கருதுகின்றனர் .
உண்மையைத் தெரியாதவர்கள் ,உண்மை என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள ஆசைப் படாதவர்கள், தான் இதைப் போன்ற மூளையற்ற வார்த்தைகளை பேசுவார்கள்.
இதனால் ஏற்படும் நன்மைகளை அவர்கள் அறியாதவர்கள் .
வேப்பிலைக்கு விஷக் கிருமிகளைக் கொல்லும் சக்தி உண்டு என்று அறிவுடையோர்  ஏற்றுக் கொள்வர்.

எனவே வேப்ப இலையை வீட்டின் வாசல் படியின் மேல் செருகி வைத்தால் வீட்டிலுள்ள நோயாளியிடமிருந்து கிளம்பும் விஷக் கிருமிகள் வெளியே செல்லும் பொழுது , இந்த வேப்பிலை அந்தக் கிருமிகளை அழித்து விடும். அந்த நோய் மற்றவர்களைத் தொற்றாது .
இந்த நோய் ஊரிலும் பரவாது .

இந்தக் கருத்தைக் கொண்டு தான் இந்தப் பழக்கத்தை நம் முன்னோர்கள் வைத்திருந்தனர். அதே பழக்கத்தையே இக்காலத்திலும் நாமும் பின்பற்றுகின்றோம் .

வேப்பிலையை வாசல் படியில் செருகி இருந்தால் வேப்பிலை செருகப்பட்ட வீட்டினுள் அசுத்தமானவர்கள் செல்லமாட்டார்கள் .வேப்பிலை செருகப்பட்ட வீட்டில் அம்மை நோய் கண்டிருக்கிறது என்பதே இந்த வேப்பிலையின்  அடையாளமாகும் .
இச்செயல் மற்றவர்களுக்கு எச்சரிக்கையாக ஒரு அபாய அறிவிப்புக் கொடி போல அமைகின்றது .
இதனால் அந்த வீட்டில் எவரும் அனாவசியமாக நுழைய மாட்டார்கள் தொற்று நோய்க் கிருமிகள் வேறு இடத்திற்குப் பரவவும் முடியாது.



அம்மை – படுக்கை :
அடுத்து அம்மை நோய் கண்டவர்களை வௌளைத் துணியின் மேல் வேப்பிலையைப் பரப்பி அதில் தான் படுக்க வைக்க வேண்டும் .இதனால் நோய்க் கிருமிகள் சீக்கிரமே அழியக் கூடிய வாய்ப்புகள் உள்ளது.
நோயாளியைச் சுற்றிலும் ,நோயாளியின் அடியிலும் ,வேப்பிலைப் பரப்பப் பட்டிருப்பதால் அதிலிருந்து வெளி வந்து கொண்டு இருக்கும் மருத்துவக் காற்று நோயாளியின் சுவாசத்துடன் உள்ளே சென்று உள்ளே இருக்கும் நோய்க் கிருமிகளையும் அழிக்கும் .
அம்மைக் கொப்புளம் அல்லது துடிப்பு மறையும் பொழுது நோயாளியின் உடலில் அரிப்பு ஏற்படும் .

இந்தச் சமயம் நோயாளியைச் சொரிய விடக்கூடாது இந்த அரிப்பைத் தடுக்க வேப்பிலைக் கொத்தையே உபயோகிக்க வேண்டும் .
அம்மை நோய் இறங்கியபின் தலைக்குத் தண்ணீரில் நிறைய வேப்பிலையைப் போட்டு வெயிலில் வைத்த பிறகே அந்த நீரையே தலைக்கு விட வேண்டும்.

அம்மை நோய் கடுமையாக இருந்த சில சமயம் தேகத்தில் அம்மைப்புண் ஏற்பட்டு விடுவதுமுண்டு.
இந்தச் சமயம் வேப்பிலையையும் ,மஞ்சளையும் சேர்த்து அறைத்து அதைப் புண்ணின் மேல் போட்டு வந்தால் புண் சீக்கிரமே ஆறிவிடும்.



அம்மை நோய்-வராமல் இருக்க:
அருகில் உள்ள வீட்டில் அம்மை வந்துள்ளது என அறிந்ததும்,
ஒரு கைப்பிடி வேப்பிலையையும் அதில் நான்கில் ஒரு பங்கு மஞ்சளையும் இளநீர்  விட்டு நன்கு அறைத்து மூன்று நாட்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் .
இப்படிச் செய்தால் கண்டிப்பாக நமக்கு அம்மை வராது. அப்படியே வந்தாலும் ஒரிரு நாட்களில் அதிகம் பார்க்காமல் சென்று விடும்
என்று சித்த வைத்திய நுhல்கள் கூறுகின்றன இருந்தாலும் இதை யோசித்து சிறந்த சித்த வைத்திய மருத்துவரிடம் கலந்து ஆலோசித்து அறிவுரை பெற்ற பிறகே செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் .



சாம்பிராணி புகை:
இரவு படுக்கப் போவதற்கு முன்பு வேப்பங் கொட்டைத் தோலையும் வசம்பையும் துhள் செய்து சாம்பிராணி போல நியைப் புகை போட்டு விட்டால் கொசுக்கள் எல்லாம் ஓடிவிடும் மறுபடி அங்கே கொசுக்கள் வராது.

இத்தகைய செயல்முறையைத் தான் நமது முன்னோர்கள் செயல்படுத்தி பார்த்து அதன் மூலம் கிடைத்த பலன்களை அனுபவித்தனர்.

இந்த சூட்சும ரகசியத்தை அடிப்படையாக வைத்தே தற்பொழுது இந்தக் காலத்தில் கொசு விரட்டி வர்த்தி தயாரிக்கப்பட்டு பலப்பல பெயர்களில் கடைகளில் விற்பவைகளைத் தான் நாம் பயன்படுத்தி வருகிறோம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள் .

மஞ்சள் மற்றும் வேப்பிலையின் சிறப்புகளை உணர்ந்து கொண்டோம்.

                 முன்னோர்களின் சிந்தனைகளை மதிப்போம்,
                  அவர்களின் சேவைகளை உணர்வோம்,
                  அறிவு விளக்கம் பெறுவோம்,

                 பழையவற்றை ஆராய்ந்து பார்ப்போம்,
                  நன்மைகளை பின் பற்றுவோம்,
                  துன்பங்களை புதைத்து விடுவோம்,

                  தேவையற்ற வார்த்தைகளை விலக்குவோம்,
                   வீணர்களின் மமதையை அடக்குவோம்,
                  பொல்லாங்கு பேசுவோரை மிதிப்போம்,

புதிது புதிதாக தன்னை அறிவாளிகளாக நினைத்துக் கொண்டு கிறுக்கும் கிறுக்குத் தனமான குப்பைகளை விட்டு விட்டு ,
பழைய எழுத்துக்களில் உள்ள பல்வேறு ரகசியங்களை தன்னுள் கொண்ட புத்தகங்களை பாதுகாத்தாலே ,
அன்றாடம் நாம் கடை பிடித்து வரும் நடை முறைகளில் உள்ள சூட்சும ரகசியங்களை உணர்ந்து கொள்ள முடியும்.
அறிவு தெளிவு பெற முடியும்.
முன்னோர்களின் அனுபவ அறிவை நினைத்து நாம் பெருமைப்பட முடியும்.


                    “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                                       போற்றினேன் மஞ்சள்வேப்பமரந்  தான்முற்றதாமே “”

January 18, 2012

மஞ்சள்-வேப்பமரம்- பதிவு-2



                         மஞ்சள்- வேப்பமரம்- பதிவு -2

                                          “”பதிவு இரண்டை விரித்துச் சொல்ல
                                                                    ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

வேப்பமரம் – சிறப்புகள் :
வேப்பமரத்தின் பல்வேறு பயன்களை , அதன் சக்திகளை , மகிமைகளை, அறிந்து பயன்படுத்தி , அனுபவங்களை உணர்ந்து , வைத்திருந்த  நம்முடைய முன்னோர்கள்,  
வேப்ப மரத்தின் பலன்கள் மனிதர்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் ,
ஒவ்வொரு வீட்டிலும் வேப்ப மரத்தை வளர்த்து அதன் பயனை அனைவரும் பெறும் படி பல்வேறு முறைகளை வகுத்து வைத்து வந்திருக்கின்றனர் .

அதன் பலனை உணர்ந்தும் உணராமலும் நேரடியாகவும் , மறைமுகமாகவும் மனிதர்கள் தங்கள் வீடுகளில் வேப்பமரத்தை வளர்த்து வந்து இருக்கின்றனர்.

தற்காலத்தில் கிராமப் பகுதிகளில் வாழும் மக்கள் கூட வேப்ப மரத்தின் பயனை
உணர்ந்தும் , உணராமலும் - அறிந்தும் , அறியாமலும்
கிராமப் பகுதிகளில் வீட்டின் முன் பக்கத்திலோ அல்லது பின் பக்கத்திலோ வேப்ப மரத்தை வளர்த்து வருகின்றனர் .
வேப்ப மரம் வளர்க்கப் பட்டு வருவதைக்  காணலாம் .

பல ஊர்களில் விநாயகர்,   அம்மன் , காளி கோயில்களில் வேப்ப மரம் கண்டிப்பாக இருக்கும் .

வேப்பமரம்  நமது தேசத்தில் தான் எங்கும் காணப்படுகிறது. இமயம் முதல் குமரிவரை இந்த வேப்பமரத்தைக் காணலாம் .

ஆனால் மேல் நாடுகளிலும் , கீழ்நாடுகளிலும் வேப்பமரம் அவ்வளவாகச் செழித்து வளர்வதில்லை .
செழித்து வளர்வதற்கு உரிய காலநிலை அங்கே காணப்படுவதில்லை .



பாகங்கள்:
ஆலமரம் , அரசமரம் போன்ற வியக்கத்தக்க மரவகைகள் உள்ள நிலையில்  வேப்ப மரம் மட்டும் முக்கிய இடம் வகிப்பதற்குக் காரணம் அதனிடமுள்ள மருந்துக் குணமேயாகும் .

உச்சி முதல் அடி வரை அதாவது நுனிவேர்  வரை முழுவதும் மருந்துக் குணங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது வேப்ப மரம் .
பேய் பிசாசுகளை ஓட்டும் மந்திரவாதிகளுக்கும் ,
விஷக்கடிகளின் விஷத்தைப் போக்கும் மருத்துவர்களுக்கும் ,
வேப்ப இலை பயன்படுகிறது .

வேப்ப மரத்தின் இலை , பூ , காய் , பழம்,  கொட்டை , பருப்பு , எண்ணெய் பட்டை , கட்டை என்ற எல்லா விதமான பாகங்களுமே வைத்திய முறைக்கு நன்கு பயன் பட்டு வருகிறது .



பார்வை -சுவாசம்:
பச்சைப் பசேல் என்று இருக்கும்  வேப்பமரத்தைத் தினசரி எழுந்தவுடன் கண் குளிரப் பார்த்து அதன் காற்றைச் சுவாசித்து வருபவர்களுக்கு ,
கண் சம்பந்தமான நோய்களும் ,சுவாச உறுப்புகள் சம்பந்தமான நோய்களும் வருவதில்லை .

சுவாச உறுப்புகள் சுத்தமடையும் .
கண் பார்வை தெளிவடையும் .

கண் பார்வை குறைந்தவர்கள் பசுமையான வேப்ப மரத்தைத் தினசரி  40 நாட்கள் வரை காலையிலும் ,மாலையிலும் அரை மணி நேரம் பார்த்து வருவார்களானால் அவர்கள் பார்வை தெளிவடையும் .



சர்வரோக நிவாரணி :
இத்தகைய சிறப்பு வாய்ந்த வேப்பமரத்தைப் புகழ்ந்து ஒரே வார்த்தைகளில் கூற வேண்டுமானால் ,
இதை ஓர்  சர்வரோக நிவாரணி எனலாம் .

சர்வம் என்றால் அனைத்தும் என்று பொருள் .
ரோகம் என்றால் நோய் என்று பொருள் .
நிவாரணி என்றால் தீர்க்கக் கூடியது என்று பொருள் .
சர்வரோக நிவாரணி என்றால் அனைத்து விதமான நோய்களையும் தீர்க்கக் கூடியது என்று பொருள் .



தொற்று நோய்:
மூலிகை வர்க்கங்களிலேயே அனைத்து வகை நோய்களையும் தீர்க்கக் கூடிய சக்திவாய்ந்த ஒரு மூலிகை உண்டென்றால் அது வேப்ப மரமாகத்தான் இருக்கும் .


வேப்ப மரத்தைத் தெய்வமாக எண்ணி அதை வழிபட்டு வரும் பழக்க வழக்கங்கள் நம் நாட்டில் இன்றளவும் இருந்து வருகிறது .
அதற்கு முக்கிய காரணம் அம்மரத்தினிடமுள்ள நோய் தீர்க்கும் சக்தியே ஆகும் .



பொதுவாக வேப்பமரம் இருக்கும் இடத்தில் எந்தவிதமான தொற்று நோயும் வருவதில்லை .


கிராமங்களில் அமைந்த வீடுகளின் முன்பக்கம் வேப்பமரமும் , பின்பக்கம் முருங்கை மரமும் இருப்பதைக் காணலாம் .
வேப்பிலையை வீட்டைச் சுற்றிலும் வீட்டு வாசலின் முன் பக்கமும் ,வீட்டின் பின்புறத்திலும் வைத்து இருந்தால் ,
வீட்டைச் சுற்றிலும் வைத்து இருந்தால் ,
அந்த வீட்டினுள் எந்தவிதமான தொத்துநோயும் வருவதற்கான வாய்ப்புகளே இல்லை .
தொத்து நோய் வருவதற்கான எந்தவிதமான காரணங்களும் அறிகுறிகளும் இருக்காது.



மந்திரவாதி:
சிலர்  தங்களுக்கோ , தங்கள் குழந்தைகளுக்கோ உடல் நலக்குறைவு ஏற்பட்டால் மருத்துவரைத் தேடமாட்டார்கள் .மந்திரவாதியைத் தான் தேடுவார்கள் .
மந்திரவாதியிடம் சக்தி இருக்கிறதோ , இல்லையோ ஆனால் அவர் கையிலிருக்கும் வேப்பிலைக் கொத்துக்கு மட்டும் நோய் தீர்க்கும் சக்தி உண்டு .


வேப்பிலையிலிருக்கும் ஒருவித மருத்துவ குணம் கொண்ட சக்தி அந்த இலையை வீசும் பொழுது வெளிப்படும் .
இந்தச் சக்தி எந்த வியாதியையும் குணப்படுத்தக் கூடியதாக இருக்கிறது. இதன் காரணமாகத் தான் மந்திரவாதி மந்திரித்த பின் வியாதி குணமாகிறது .



மனது:
மனதிற்கும் வேப்பமரத்தில் உள்ள ஒவ்வொரு பாகத்திற்கும் நெருங்கிய  அதிகமான பல்வேறு வகையான தொடர்புகள் உண்டு .
வேப்பமரத்தின் அடியில் காலை , மாலை ஆகிய இரண்டு வேளைகளிலும் உட்கார்ந்து கொண்டே வந்தால் மனம் சாந்த நிலையை அடையும்.
மனதில் ஒரு புத்துணர்ச்சி உண்டாகும் .
மனதில் ஒரு மகிழ்ச்சி உண்டாகும் .
மனதில் ஒரு தெம்பு உண்டாகும் .

வேப்ப மரத்திற்கும் அம்மை நோய்க்கும் என்ன தொடர்புகள் உள்ளது என்பதைப் பற்றி அடுத்து பார்ப்போம் .


                                “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                                                  போற்றினேன் பதிவுஇரண் டுந்தான்முற்றே “”

January 16, 2012

மஞ்சள்- வேப்பமரம்- பதிவு-1




             மஞ்சள்- வேப்பமரம்- பதிவு -1

                                     “”பதிவு ஒன்றை விரித்துச் சொல்ல
                                                                  ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

நம்முடைய முன்னோர்கள் மஞ்சளின் மகிமையையும் , வேப்பமரத்தின் சிறப்புகளையும் உணர்ந்து இருந்தனர்.

அதனால் இரண்டையும் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒரு பயன்பாட்டு பொருளாக அமையும் விதத்தில்,
அதன் மகிமையை , அதன் சக்திகளை , அதன் பலன்களை , மக்கள் பெற வேண்டும் என்ற சிறந்த நோக்கத்தில்,
வாழ்க்கைத் தேவையை நிறைவு செய்யும் பொருளாக இருக்கும் வகையில் ,
பண்டிகைகளில் , விழாக்களில் அதனைப் பயன்படுத்தி அதனுடைய பயன்களை மக்கள் பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் இணைத்து வைத்து இருந்தனர்.


மஞ்சள்- வேப்பமரம் ஆகிய இரண்டின் பயன்களை உணர்ந்த காரணத்தினால்,
இந்து மதத்தில் உள்ளவர்கள் அதை தங்கள் வாழ்க்கையில் பயன்படுத்துகிறார்கள்  என்ற காரணத்தினாலேயே ,
மற்ற மதத்தைச் சார்ந்தவர்கள் அதை பயன்படுத்துவதில்லை ,அதன் சக்தியை அதன் மகிமையை உணராமல் புறக்கணிக்கின்றனர் .


மதத்திற்குள் இருந்து , ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் இருந்து , சிந்தனையை செயல்பட விடாமல் தடுத்து , அறிவாற்றலின் தன்மையை உணராமல், இயற்கை தந்த வெகுமதியை ஏற்றுக் கொள்ள மனமில்லாமல் ,
இரண்டையும் தங்கள் வாழ்வில் பயன்படுத்தி அதன் நன்மைகளைப் பெறுவதை தவிர்த்து வருகின்றனர் .


மதத்திற்குள் இருந்து பார்க்காமல் ,இயற்கை நமக்கு அளித்த மாபெரும் பொக்கிஷங்களில் உள்ள சக்திகளை நாம் உணர்ந்து கொண்டு ,
இயற்கை அளித்த மாபெரும் நன்கொடை அனைவருக்கும் சொந்தமானது ,
குறிப்பிட்ட ஒரு மதத்திற்கு மட்டுமே சொந்தமானது என்பதை நினையாமல் ,
இயற்கை அளித்த நன்கொடைகளை அவற்றிற்கு உள்ள சக்திகளை உணர்ந்து கொள்வோம் .
அதை இந்த உலக வாழ்வில் பயன்படுத்தி இன்பங்களை பெறுவோம் நன்மைகளை உணர்வோம்.



மஞ்சள் மகிமை :
இறந்த ஆவிகள் தீயவற்றை விளைவிக்கக் கூடிய ஆன்மாக்கள் சுத்தமில்லாத பெண்களைப் பற்றிக் கொண்டு கெடுதல்களை விளைவிப்பதும் ,
பெண்களுக்கு துன்பங்களை விளைவிக்கக் கூடிய செயல்களை உண்டு பண்ணுவதும் ,
வயதுக்கு வந்த பெண்களின் மனதில் குழப்பங்களை ஏற்படுத்தக் கூடியதும்,
கணவர்களோடு சண்டைபோட வைத்துச் சூட்சுமத்தில் அந்தப் பெண்களுடைய மனங்களில் அமைதியின்மையை ஏற்படுத்துவதும் ,
காலங் காலமாக நடந்து வருகின்றது .
இது அனைத்து ஜாதி , மத, இனங்களிலும் உள்ளது என்பதை நம்முடைய முன்னோர்கள் உணர்ந்து கொண்டனர்.

இதைத் தவிர்க்க மன அமைதியையும் , குடும்ப சுக வாழ்க்கையையும், வழங்குவது மஞ்சள் தான் என்பதை நம்முடைய முன்னோர்கள் அறிந்து உணர்ந்து தெளிவு பெற்றதால் ,
மஞ்சளைப் பல வழிகளில் தங்கள் வாழ்க்கையில் பயன்படுத்தத் தொடங்கியதுடன் மக்களும் அதனைப் பெறும் வகையில் முறைகளை வகுத்து வைத்தனர்  நமது முன்னோர்கள் .

மஞ்சள் எவ்வாறு மனிதனுடைய வாழ்வில் பயன்படுத்தப் பட்டு வருகிறது என்பதைப் பற்றி பார்ப்போம் :


பெண்கள் :
மஞ்சளில் குட மஞ்சள் என்ற ஓர் வகை உள்ளது .
இந்த குடமஞ்சளைப் பெண்கள் முகத்தில் தொடர்ந்து பூசிவர வேண்டும். அவ்வாறு முகத்தில் தொடர்ந்து பூசி வந்தால் முகத்தில் ஒருவித மினுமினுப்பு உண்டாகும் .
உடலில் உண்டாகி இருக்கும் சிலந்தி நோய் போகும் வாய்ப்பும் உள்ளது.
பெண்கள் குட மஞ்சளை உடலில் தொடர்ந்து பூசிவருதல் வேண்டும், அவ்வாறு பூசி வந்தால் ஆடவர்கள் பெண்களின் அழகில் வசீகரப்படுவார்கள்.
பெண்களின் உடலில் தோன்றும் உடலில் எழுந்து வீசும் துர்வாடை நீங்கும், கெட்ட வாசனைகள் விலகும் .
உடலைப் பொன்னிறமாக பொன் போன்ற நிறமாக மாற்றும்.


தினமும் இந்த மஞ்சளை உடலில் பூசி நீராடி வந்தால்  இனிய சுகத்துடன் கூடிய உறக்கம் வருவதை உணர்ந்து கொள்ளலாம் .
பெண்கள் முந்தைய நாட்களில் தினமும் மஞ்சளைக் கல்லில் அரைத்து உடலெங்கும் பூசி நீராடுவர்.
இதனால் உடலில் காணும் காந்தல் துhக்கமின்மை இவைகள் போகும் .
மேலும் உடல் சுத்தியும் முகத்தில் களையும் தோன்றும் .
அளவுக்கு மிஞ்சிய வியர்வை தடைப்படும் , வியர்வையால் வரும் துhநாற்றம் மறையும் .
பொதுவாக மஞ்சளை அரைத்துப் பூசி நீராடி வருபவர்களைத் தொத்து வியாதிகள் எதுவும் தாக்காது .
உடலில் தோல் கிருமிகள்,  சொறி சிரங்குகள் ஆகியவை வராது .
உடலில் ஓடும் இரத்தம் சுத்தியாகும் .


பெண்கள் கர்ப்ப காலத்திலும் . பிரசவத்திற்கு முன்பும் , பின்பும் மஞ்சள் உபயோகித்து வந்தனர்.
அதனால் அவர்களுக்கு வசீகர சக்தியும் , பொன்நிறக் குழந்தைகளும் பிறந்தன.


எவ்வளவு உயர்ந்த படிப்புப் படித்திருந்தாலும் , வளமான செல்வங்கள் இருந்தபோதும் , கணவன் மனைவிக்கிடையே உண்டாகக் கூடிய கருத்து வேறுபாட்டிற்குக் காரணம் ,
பெண்கள் மஞ்சள் தேய்த்துக் குளிக்காதது தான் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


தற்காலத்தில் பெண்கள் மஞ்சளின் பெருமைகளை , மகிமைகளை , சக்திகளை உணராமல் மஞ்சளை தங்கள் உடலில் பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர் .



திருமணம்:
மஞ்சளில் பிள்ளையார்  பிடித்து வைத்து வழிபாடு செய்கின்றனர்.
மணமேடைகளில் இருக்கும் பொழுது மஞ்சள் தோய்த்த ஆடைகளை உடுத்துகின்றனர்.
திருமாங்கல்யக் கயிறும் மஞ்சளில் தான் செய்யப் படுகிறது .
மணமக்களுக்குத் திருஷ்டி படாமலிருக்க புரோகிதரும் மற்றும் இதர உறவினர்களும் மஞ்சள் கலந்த அட்சதையைத் துhவுகின்றனர்.


தீய ஆவிகள் சாந்தி முகூர்த்தத்தின் போது படுக்கை அறைக்குள் வராமலிருக்க மணமகனுக்கும் , மணப்பெண்ணுக்கும் மஞ்சள் காப்புக் கட்டுகின்றனர்.
மஞ்சள் பொட்டு அணிகின்றனர்.



சக்தி :
கந்தகம் தான் ஆதிபராசக்தி .
அருள்வாக்கு சொல்ல , நிலத்தடி நீர்  கண்டுபிடிக்க, தேவி உபாசனை செய்ய, ஆண்களை வசீகரம் செய்யக் கந்தகம் அவசியம் வேண்டும். 
இக்கந்தகம் மஞ்சளில்தான் அதிகம் உண்டு,
பெண்கள் மட்டும் மஞ்சள் அதிகம் உபயோகிக்கலாம் .


ஆண்களுக்கு ஏற்படும் சாமியாட்டத்தைப் போக்க மஞ்சள் பால் கொடுத்து சாமியை மலை ஏறவைப்பார்கள் .
மாரியம்மன் கோவிலில் பிரதான பிரசாதம் மஞ்சளும் , எலுமிச்சம் பழமும் தான்.
மஞ்சள் பொடி போட்ட எலுமிச்சைச் சாதம் மாரியம்மனுக்கு மிகவும் பிடித்தமானது என்று படையல் வைக்கின்றனர்.


மஞ்சள் குங்குமம் என்பது மஞ்சள்பொடி எலுமிச்சைச் சாறு , குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம் , பசுநெய் போட்டுத் தயார்  செய்வது ஆகும்.
இது நெற்றியில் வடுக்களை , காயங்களை ஏற்படுத்தாத குணங்களை உடையது .


எல்லோர்  வீடுகளிலும் துளசிச் செடிபக்கம் மஞ்சள் செடி வைத்து வளர்த்தார்கள் .
பச்சரிசி , மாக்கோலம் , மஞ்சள் பொடி கோலம் போட்டு வீட்டை அலங்கரித்தனர்.



மஞ்சள் பட்டு :
மஞ்சள் பட்டிற்கும் இதே குணங்கள் உண்டு .
மஞ்சள் சேலை அணிந்தாலும் ,
கனக புஷ்பராகம் அணிந்தாலும் ,
மஞ்சள் பட்டுத்துண்டு அணிந்தாலும் ,
எதிரிகளின் அபிசார பிரயோகங்களான ஹோமங்கள் பயனற்றுப் போய்விடும்.
எதுவும் செயல்படாது .
இதனைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக செயல்படுத்தப் படும் பிரயோகங்கள் அனைத்தும் செயலற்றுப் போய் விடும் .


மஞ்சளின் இயல்புகளை , சிறப்புகளை , மகிமைகளை , சக்திகளை சொல்லிக் கொண்டே போகலாம் . மஞ்சளின் சக்திகளில் முக்கியமானவைகளை மட்டும் பார்த்தோம் .

அடுத்து வேப்பமரத்தின் இயல்புகளை , சக்திகளை  பார்ப்போம் .


                          “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                                              போற்றினேன் பதிவுஒன் றுந்தான்முற்றே “”

January 14, 2012

பொங்கல் திருநாள்- சூட்சும ரகசியங்கள்




     பொங்கல் திருநாள்- சூட்சும ரகசியங்கள்

உலகில் உள்ள மதங்கள் அனைத்தும் உணர்த்துவது எதை ,
மனிதர்களின் அறிவுத் திறனுக்கு ஏற்றவாறு விளக்குவது எதை ,
பாரம்பரியமான முறைகளின் மூலம் சொலல வருவது எதை,
சமுதாய நோக்குடன் குறிப்பிடுவது எதை ,
கால ஓட்டத்தில் கரைந்து போகாமல் காப்பாற்றி வருவது எதை ,
சிந்தனை சிதைந்து போகாமல் செதுக்கி வருவது எதை ,
உணர்வுகளில் பிரிந்து போகாமல் காப்பாற்றி வருவது எதை ,
இரத்த நாளங்கள் மரத்து போகாமல் சூடேற்றி வருவது எதை ,
மானிட சமுதாயம் மாண்டு போகாமல் உயிர் ஊட்டி வருவது எதை ,
மாக்களை மக்களாக்க முயற்சி செய்வது எதை ,
அநித்தியத்தை நித்தியமாக்க கனவு காண்பது எதை ,
பிரேதத்தை உயிருடன் உலா விட முயற்சிப்பது எதை ,
கானல் நீரில் கரைந்து போகாமல் காப்பாற்றி வருவதை எதை ,
சுயமரியாதை உள்ளவனையும் சிந்திக்க வைப்பது எதை ,
நாத்திகவாதியின் அறிவுத் திறனையும் சோதிக்க வைப்பது எதை ,
சமதர்ம சமுதாயத்தைப் பற்றி யோசிக்க வைப்பது எதை ,

என்று யோசித்து ,

உலகிலுள்ள மதங்களை எல்லாம் எடுத்துப் பார்த்தோமேயானால் ,
உணவு , உடை , வணக்க முறை வித்தியாசப்படும் , மற்ற படி மனிதன், மனிதனாக இருந்து , மனிதனை , மனிதன் நேசிக்க வேண்டும்,  என்று தான் அனைத்து மதங்களும் வலியுறுத்துகின்றன .


ஒவ்வொரு மதத்திலும் பல்வேறு பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன .
அந்த பண்டிகைகளை நன்கு ஆராய்ந்தோமானால் ,அதில் பல்வேறு கருத்துக்களும் , சமுதாயத்திற்கு தேவையான பல்வேறு நடைமுறை செயல்பாடுகளும் மறைந்து இருப்பதை உணர்ந்து கொள்ளலாம் .

அத்தகைய பண்டிகைகள் பலவற்றில் தமிழர்கள் கொண்டாடும் பண்டிகைகளில் மிக முக்கியமான பண்டிகையான  பொங்கல் பண்டிகையை நாம் எடுத்துக் கொள்வோம் .
பொங்கல் பண்டிகை கீழ்க்கண்ட நான்கு நாட்களில் நான்கு வெவ்வேறு நிலைகளில் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. அவையாவன ,

                       1.   போகி பண்டிகை
                      2.  பொங்கல் பண்டிகை
                      3.   மாட்டுப் பொங்கல்
                      4.   காணும் பொங்கல்

என நான்கு நாட்கள் தொடர்ந்து கொணடாடப்படுகிறது .

அந்த பண்டிகைகளின் உள் அர்த்தத்தை ஆராய்ந்து பார்த்தோமானால், அதில் உள்ள சூட்சும ரகசியங்கள் ,
இந்த சமுதாயம் நலம் பெற வேண்டி நமது முன்னோர்கள் செய்து வைத்து விட்டு போன ,
சமுதாய நோக்குடன் கொண்ட பொது நலன்கள்,
அதில் பிரதிபலிப்பதை நாம் நன்றாக உணரலாம் .


வருடா வருடம் நாம் பண்டிகைகளைக் கொண்டாடுகிறோம் ,
அந்த பண்டிகைகள் எதை சொல்ல வருகின்றன ,
எத்தகைய காரணங்களை விளக்குவதற்காக கொண்டாடப் படுகின்றன ,
எத்தகைய செயல்களை உணர்த்துவதற்காக கொண்டாடப்படுகின்றன ,
என்பதை இவ்வளவு காலம் நாம் சிந்திக்கா விட்டாலும் , உணரா விட்டாலும், அறியா விட்டாலும் இப்பொழுது நாம் அதை உணர்ந்து கொள்வோம் .


இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழர்களின் பாரம்பரியமிக்க  பொங்கல் பண்டிகை எதன் அடிப்படையில் கொண்டாடப்படுகிறது என்று இப்பொழுது பார்ப்போம்.



போகி பண்டிகை :
விவசாயிகள் உழுது பயிரிட்டு ,அறுவடை செய்து, களத்து மேட்டில் குவித்து, நெல்லை காற்றில் துhற்றுவார்கள் .
அவ்வாறு துhற்றுவதால் காற்றானது மாசுபடும் .
காற்றில் பல்வேறு கிருமிகள் கலந்துவிடும் . பல்வேறு அசுத்தங்கள் காற்றில் கலந்து விட வாய்ப்புக்கள் உண்டு
அதை சுவாசிப்பது உடல் நலத்திற்கு கேட்டை உருவாக்கும் . மிகப் பெரிய தீங்கினை கொண்டு வர வாய்ப்புகள் உண்டு .
எனவே துhற்றிய பதர்களை ஒன்றாக குவித்து எரித்து விடுவார்கள் .
மேலும் , சில மூலிகைகளையும் சேர்த்து எரித்து விடுவதால் காற்றில் கலந்த கிருமிகள் இறந்து விடும் . அவைகள் நம்மை பாதிக்காது.
இதனால் மனிதர்களுக்கு எந்தவிதமான தீங்கான செயல்களோ , உடல்நலக் குறைபாடுகளோ ஏற்பட வாய்ப்பு இல்லாமல் தடுக்கப்படுகிறது .
இத்தகைய ரகசியத்தைத் தன்னுள் கொண்டது தான் போகிப் பண்டிகை .
இதைத் தான் போகி பண்டிகை என்ற பெயரில் கொண்டாடுகிறோம் .



பொங்கல் பண்டிகை:
மறுநாள் எல்லா இடங்களையும் , அனைத்து இடங்களையும்,  துhய்மை செய்கின்றனர்.
தான் வாழ்வதற்கு தேவையான , வாழ்வாதாரத்தைக் கொடுக்க காரணமான, சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொங்கல் வைத்து சூரியனுக்கு நன்றி தெரிவிக்கின்றனர்.

தாங்கள் கஷ்டப்பட்டு பல்வேறு இடையூறுகளுக்கிடையில்,  பல்வேறு துன்பங்களுக்கிடையில் , பல்வேறு விதமான மன உளைச்சல்களுக்கு இடையில் ,
உழுது பயிரிட்டு விளைவித்த நெல்லை , பொங்கல் செய்து சாப்பிடும் பொழுது , தாங்கள் பட்ட கஷ்டங்கள் , துன்ப ரேகைகள் , கவலைகள், மன உளைச்சல்கள் அனைத்தும் அவர்களை விட்டு விலகுகிறது .

இன்பத்திற்கு உகந்த அந்த நாளை புத்தாடை உடுத்தி மனமகிழ்வுடன் பொங்கள் பண்டிகையாக கொண்டாடுகின்றனர்.
அதைத் தான் நாம் பொங்கள் பண்டிகை என்று கொண்டாடுகிறோம் .



மாட்டுப் பொங்கல் :
தனது விவசாயத்திற்கு உதவி புரிந்த மாட்டிற்கு நன்றி தெரிவிக்கும் நாள் மாட்டுப் பொங்கல் என்ற பண்டிகையாகக் கொண்டாடப் படுகிறது .
மாட்டை அலங்கரித்து , அதற்கு பூஜை செய்து , கடவுளாக கும்பிட்டு ,அது விருப்பப்படும் உணவை சாப்பிடக் கொடுத்து , அதை சுதந்திரமாக ஊரைச் சுற்றி வலம் வரும் படி விட்டு விடுவார்கள் .
மாடும் சுதந்திரமாக சுற்றித் திரியும் .
மாட்டை சிறப்பிக்கும் இந்த நாளைத் தான் நாம் மாட்டுப் பொங்கல் தினமாக கொண்டாடுகிறோம் .



காணும் பொங்கல்:
இரத்தத்தை நிலமாக்கி ,
சிந்தனையை விதையாக்கி ,
உழைப்பை உரமாக்கி ,
கவலைகளை தண்ணீராக்கி ,
உழுது பயிரிட்டு விவசாயம் செய்து ,
களைத்து போன உழவர்கள் தாங்கள் உழுது பயிரிட்ட நெல்லை எடுத்து கொண்டு , வேறு ஊரில் வசிக்கும் தங்கள் உறவினர்கள் வீட்டிற்கு கொண்டு சென்று தங்கள் நெல்லை அவர்களுக்கு கொடுப்பார்கள் .
வேறு ஊரில் வாழும் உறவினர்களுடைய வேறு வகையான நெல்லை வாங்கி வருவார்கள் .

உறவினர்கள் ஒருவருக்கொருவர்  கூடி மகிழ்ந்து சந்தோஷமாக இருப்பார்கள் .
அந்த நாளைத் தான்,
ஒருவரை ஒருவர்  காணும் நாளாக அதாவது காணும் பொங்கலாக கொண்டாடுகிறோம் .


வேறுபட்ட பெயர்களில் உள்ள மாறுபட்ட பண்டிகைகளில் உள்ள அர்த்தத்தை புரிந்து கொள்வோம் .

                                மனது சிறப்புற கொண்டாடுவோம் ,
                                சூத்திரங்களைப் பயன் படுத்துவோம் ,
                                சூட்சும ரகசியங்களை உணர்வோம் .

       கால தேவனின் நற்கருணையால்,
       கற்பனைக்கு எட்டாத சக்திகளை ,
       காலத்தே பெற்று மகிழ்வோம்.

                             நல்ல மனம் படைப்போம்,
                            நல்ல செயல்களைச் செய்வோம்,
                            நல்லோர்  களுக்கு உதவுவோம் ,
                           மனிதத் தன்மையை உணர்த்துவோம்,

     கால மாற்றத்தை அறிவோம் ,
     கருத்துக்களை மனதில் நிறுத்துவோம் ,
    அனுபவங்களை சிந்தனையில் செதுக்குவோம் ,

                         பகைநெஞ்சம் கொண்ட மாற்றாரின்
                                       குறுக்கு புத்தியை அறிவோம்,
                       தள்ளி நின்று அவருடன்
                                   பகை   மையைத் தவிர்ப்போம் .
                        உறவாடிக் கெடுப்போரை உதறுவோம் ,

      நயமாகப் பேசி நயவஞ்சகம்
                  செய்து வாழ்வோரை நசுக்குவோம் .
      எதிரிகளை வீழ்த்தும் உபாயம்அறிந்து
                    வீழ்த்தி வெற்றி பெறுவோம் .

                    
அண்டிப் பிழைத்து வருவோரை
                                     அரியணை ஏற மாட்டோம்.
                     அடிமையாக இருந்து காலத்தை
                                    வீணாய் கழிக்க  மாட்டோம்.


உறவுகளை மதித்து நடப்போம்,
உரிமையை விட மாட்டோம்,
தலைதாழல் செய்ய மாட்டோம்,


                              சுடர்  விழி காட்டுவோம் ,
                             சூழ் பகையை உடைப்போம் ,
                             ஆறாவதுஅறிவை விழிப்படையச் செய்வோம் ,
                              மனிதனாக இருக்க முயற்சிப்போம்,
                               மனித நேயம் வளர்ப்போம்,   


மானிடரை வழி நடத்துவோம்
சிந்திப்போம் சீர்துhக்குவோம் செயல்படுவோம்,
புத்துணர்ச்சி பெற்று உயர்வோம்,
புது உலகைப் படைப்போம்,

                         உழைப்பை உயிராக்கி விதைப்போம் ,
                         விடாமுயற்சி உரத்தை துhவுவோம் ,
                          தன்னம்பிக்கை நீரைப் பாய்ச்சுவோம்,
                          கர்மவினைக் களைகளைக் களைவோம்,
                           வெற்றியை அறுவடை செய்வோம்,
                           இன்பத் திரு நாளாம்,

                         தைப் பொங்கலை கொண்டாடுவோம்,
                         பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

                                         ---------கவிதைகள்--
                                ----பாலகங்காதரன்----