March 01, 2012

இயேசு கிறிஸ்து- பகவத் கீதை -பரமபதத்தை - பதிவு-18






    இயேசு கிறிஸ்து- பகவத் கீதை -பதிவு-18
      
                        “”பதிவு பதினெட்டை விரித்துச் சொல்ல
                                                        ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :

வசனம் -1:

நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் ; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்
                                                                --------யோவான் - 14 : 6

தெரியாத மொழியைக் கற்றுக் கொள்வதற்கும் ;
தெரியாத விளையாட்டை அறிந்து கொள்வதற்கும் ;
புரியாத வியாபாரத்தை புரிந்து கொள்வதற்கும் ;
அறியாத பாடத்தை அறிந்து கொள்வதற்கும் ;
அறியாத சூட்சுமத்தை உணர்ந்து கொள்வதற்கும் ;
கற்காத கல்வியை கற்றுக் கொள்வதற்கும் ;
சுட்டிக் காட்டப்படும் முறை ,
விளக்கி சொல்லித் தரப்படும் முறை ,
வழி காட்டுதல் என்ற நிலைக்குள்
அடக்கி வைக்கப்படுகிறது .


நானே வழி என்று சொல்லும் போது
எதற்கான வழி ? என்ற கேள்வி எழுகிறது .

அதற்கான பதிலை இயேசு ,
அடுத்த வார்த்தையில் சொல்கிறார்
சத்தியத்திற்கு வழி - அதாவது
சத்தியத்திற்கு நானே வழியாக இருக்கிறேன்  என்கிறார்.

சத்தியம் உண்மை என்ற வார்த்தையால் குறிப்பிடப் படுகிறது
பொய்    ---- உண்மை இல்லாதது பொய்
உண்மை  --- பொய் இல்லாதது உண்மை
உண்மைக்கும் பொய்யுக்கும் நுhலிழை வித்தியாசமே உண்டு .

                                                  சத்தியம் பொய் இல்லாதது ;
                                                  சத்தியம் என்றும் மாறாதது ;
                                                  சத்தியம் என்றும் அழியாதது ;
                                                 ஆண்டவனே சத்தியம் ;
                                                  ஆண்டவனே நித்தியம் ;

சத்தியமாகிய ஆண்டவனை அடையக் கூடிய
வழியாக நான் இருக்கிறேன் என்கிறார்  இயேசு .

அடுத்து ஒரு கேள்வி எழுகிறது சத்தியத்தை
அடையக் கூடிய வழி என்ன?
இயேசு அடுத்து கூறுகிறார்  - “”ஜீவனுமாயிருக்கிறேன்”””
ஜீவன் மூலமாக சத்தியத்தை உணர முடியும் .
சத்தியமாகிய ஆண்டவனை அடைய முடியும் .
 
                                             என்னுடைய ஜீவன் மூலமாக
                                             சத்தியமாகிய ஆண்டவனை
                                             அடையக் கூடிய வழியாக
                                              நான் இருக்கிறேன் என்கிறார்  இயேசு .

ஏனென்றால் , பிதாவை நான் அறிந்திருக்கிறேன்
என்னை என் ஜீவனை எவன் பின்பற்றுகிறானோ
அவனுக்கு சத்தியமாகிய ஆண்டவனை
அடையக் கூடிய வழியை நான் காட்டுவேன்
அதற்கு நான் வழியாக இருக்கிறேன் .

ஆண்டவனை அடையக் கூடிய ,
ஆண்டவனை அடையக் கூடிய வழியைக் காட்டக் கூடிய ,
ஆண்டவனிடம் சேரக் கூடிய ,
ஆண்டவனிடம் அருள் பெறக்கூடிய ,
ஆண்டவனிடம் தன் பாவங்களை முறையிடக் கூடிய ,
ஆண்டவனிடம் தன் பாவங்களைத் தீர்க்கக் கூடிய ,
ஆண்டவனிடம் தன் குறைகளை முறையிடக் கூடிய ,
ஆண்டவனிடம் தன் தேவைகளை கேட்கக் கூடிய ,
ஆண்டவனிடம் தன் வாழ்வை வளமாக்கக் கூடிய ,
வுழியை காட்டக் கூடியவராய்
நான் இருக்கிறேன் என்கிறார்  இயேசு .


என்னை , என் ஜீவனை , எவன் பற்றிக் கொள்ளுகிறானோ ,
அவனுக்கு சத்தியமாகிய ஆண்டவனை ,
அடையக் கூடிய வழியைக் காட்டும் வழியாக நான் இருக்கிறேன்
இருப்பேன் என்கிறார்  இயேசு .

நானே வழியும் , சத்தியமும் , ஜீவனுமாயிருக்கிறேன்
என்பதற்கு இது தான் பொருள்



வசனம் -2 :

என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும்  அறிந்திருப்பீர்கள்
                   --------யோவான் - 14 : 7

என்னை ஆண்டவன் என்று நம்பினால் ,
என்னை ஆண்டவன் என்று அறிந்தால் ,
என்னை ஆண்டவன் என்று உணர்ந்தால் ,
என்னை ஆண்டவன் என்று விசுவாசித்தால் ,
என்னை ஆண்டவன் என்று பின்பற்றினால் - மட்டுமே
                                       பிதாவை அறிய முடியும் ;
                                       பிதாவை உணர முடியும் ;
                                        பிதாவினிடத்தில் வர முடியும் ;
                                        பிதாவை அடைய முடியும் ;
என்கிறார்  இயேசு .



வசனம் -3 :
பிலிப்பு அவரிடம் பிதாவை எங்களுக்கு
காண்பிக்க வேண்டும் என்கிறார்.
பிதா யார்? என்பதை அறிந்து கொள்வதற்காக ,
அவர்  எத்தகைய சக்தி படைத்தவர்
என்பதை தெரிந்து கொள்வதற்காக ,
அவர்  எவ்வளவு பெரிய அற்புதங்களை செய்வார்
என்பதை உணர்ந்து கொள்வதற்காக
பிலிப்பு இயேசுவிடம் பிதாவை எங்களுக்கு காண்பியும் என்றான் .

அதற்கு இயேசு ,

பிலிப்புவே இவ்வளவு காலம் நான் உங்களுடனே கூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா?   என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான் ; அப்படியிருக்க பிதாவை எங்களுக்கு காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்?”
                                                                   --------யோவான் - 14 : 9
இவ்வளவு காலம்
என்னுடன் உறவாடிக் கொண்டு இருக்கிறாய் ;
என்னுடன் பழகிக் கொண்டு இருக்கிறாய் ;
என் வார்த்தைகளை கேட்கிறாய் ;
என் வசனங்களை கேட்கிறாய் ;
என் செயல்கனை நோக்குகிறாய் ;
என் விளக்கங்களை அறிகிறாய் ;
என் சிந்தனைகளை உணர்கிறாய் ;
என் அற்புதங்களை பார்க்கிறாய் ;
என் தீர்க்கதரிசனங்களை கேட்கிறாய் ;

                                             குருடர்  பார்வையடைவதை ;
                                             ஊமை பேசுவதை ;
                                             செவிடர்  கேட்பதை;
                                            இறந்தவர்  உயிர்  பெற்று எழுவதைப் பார்த்தும்;

இன்னும் உனது மனம் தெளிவு அடையவில்லையா ?
அறிவு விளக்கம் பெற வில்லையா?
புத்தி ஆராய்ந்து நோக்கவில்லையா?
அப்படி இருந்தும் நீ எப்படி இப்படி ஒரு கேள்வியைக் கேட்கிறாய் .

நான் வேறு அல்ல , பிதா வேறு அல்ல
என்னில் பிதாவும் , பிதாவில் நானும் இருக்கிறேன்
பிதாவில் நான் இருக்கிறேன் , என்னில் பிதா இருக்கிறார்

என்னைக் கண்டவன் , பிதாவைக் கண்டவன்
பிதாவைக் கண்டவன் , என்னைக் கண்டவன்

பிதாவைக் கண்டவன் , என்னைக் காண்பான்
என்னைக் கண்டவன் , பிதாவைக் காண்பான்

நான் இருக்கும் இடத்தில் பிதா இருப்பார்
பிதா இருக்கும் இடத்தில் நான் இருப்பேன்

என்னை அறிந்தவன் , பிதாவை அறிவான்
பிதாவை அறிந்தவன் , என்னை அறிவான்


இவற்றை எல்லாம் எவன் அறியவில்லையோ ?
இவற்றை எல்லாம் எவனுக்கு உணர்ந்து
கொள்ளும் சக்தி இல்லையோ ?
இவற்றை எல்லாம் யாருக்கு புரிந்து கொள்ளும்
மனப்பக்குவம் இல்லையோ?

அவர்கள் தான் என்னையும் ,
பிதாவையும் வேறு படுத்தி பார்ப்பார்கள்
பிதா வேறு , நான் வேறு என்று பார்ப்பார்கள் .

நீ இன்னும் மனது தெளிவு பெறாத காரணத்தால் தான்
பிதாவை எனக்கு காண்பியும் என்கிறாய்
என்று பிலிப்புவை நோக்கி இயேசு கூறுகிறார்.



பகவத்கீதை - கிருஷ்ணர் :

 “””ஸர்வகர்மாண்யபி ஸதா குர்வாணோ மத்வ்யபாச்ரய :
  மத்ப்ரஸாதாதவாப்நோதி சாச்வதம் பதமவ்யயம்   “”””

        அத்தியாயாம் - 18 : மோசஷ ஸந்யாஸ யோகம் : சுலோகம் - 56

“””என்னையே புகலாகக் கொண்ட கர்மயோகி எலலாக் கர்மங்களையும் எப்பொழுதும் செய்து கொண்டிருப்பினும் எனது அருளால் நிலையான என்றுமுள்ள அழியாத பரமபதத்தை அடைகிறான்”””
    ----பகவத்கீதை--(பதவுரை-பொழிப்புரை)--ஜயதயால் கோயந்தகா--

அறியாமையை விலக்கித் தான் ;
ஆசையை அறுத்துத் தான் ;
இன்பத்தை எரித்துத் தான் ;
ஈவதில் உயர்ந்து தான் ;
ஊழ்வினையை கழித்துத் தான் ;
வந்த கடமையை முடிக்கத் தான் ;
மனிதனாக பிறவி எடுப்பதற்கு காரணம் தான் ;
மனிதன் பிறவி எடுப்பதே கர்ம வினைகளை கழிப்பதற்குத் தான் ;
பிறப்பு - இறப்பு சுழற்சியை அறுப்பதற்குத் தான் ;
பிறப்பு - இறப்பற்ற நிலையை அடைவதற்குத் தான் ;
எங்கிருந்து வந்தோமோ அந்த இடத்திலேயே இணைவதற்குத் தான் ;

எதிலிருந்து எல்லாம் தோன்றியதோ ,
எது எல்லாவற்றையும் காத்து வருகின்றதோ ,
எதில் எல்லாம் போய் ஒடுங்கப் போகிறதோ - அதைத் தான்

அந்த நிரந்தரமானதைத் தான் ;
அந்த அழிவில்லாததைத் தான் ;
ஆதி - அந்தம் இல்லாததைத் தான் ;
பிறப்பு - இறப்பு அற்றத்தைத் தான் ;
குணத்தைக் கடந்ததைத் தான் ;
உருவத்தில் அடக்க முடியாததைத் தான் ;
எழுதுக்களில் எழுத முடியாததைத் தான் ;
வார்த்தைகளில்  சொல்ல முடியாததைத் தான் ;
உவமித்து காட்ட முடியாததைத் தான்
எல்லாம் வல்ல பரம்பொருளைத் தான் ;
அப்பாலுக்கும் அப்பால் உள்ளதைத் தான் ;
எங்கும் நீக்கமற நிறைந்து இருப்பதைத் தான் ;
வேறுபடுத்தி காட்ட முடியாததைத் தான் ;
விஞ்ஞானத்தால் உணர முடியாததைத் தான் ;
ஐம்புலன்களுக்குள் அடக்க முடியாததைத் தான் ;

துhணிலும் உள்ளான் துரும்பிலும் உள்ளான் என்று
சொல்லப்படுவதைத் தான் ;
அன்றும் என்றும் இன்றும் உள்ளத்தைத் தான் ;
நித்தியமாக உள்ளதைத் தான் ;

எதை இதுகளால் அதை உணரமுடியவில்லையோ
                                  அதைத் தான் ;
                                  அந்த உண்மையைத் தான் ;
                                  அந்த சத்தியத்தைத் தான் ;

அடைய வேண்டுமானால்
இணைய வேண்டுமானால் - என்னை சரணடை
அதாவது கிருஷ்ணனை சரணடை ,
அதாவது இறைவனை சரணடை ,
இறைவனுடன் இணைந்தவன் அவனும் இறைவனாகிறான்
அது அது ஆக மாறுகிறது .


மனிதன் இறைவனை அடைய வேண்டுமானால் ,
கர்ம வினையைக் கழிக்க வேண்டும் .
இறைவனை அடைந்து விட்டால் ,
கர்ம வினை தன்னுள் எரிந்து விடும் .

நாம் நம் கர்ம வினையை
கழிக்க பல்வேறு பிரச்சனைகள் கஷ்டங்கள் தாங்கி
கண்ணீர்  விட வேண்டி இருக்கும்

கண்ணீரை இரத்தமாக சிந்த வேண்டி இருக்கும் ;
குடும்பத்தை வெறுக்க வேண்டி இருக்கும் ;
வாழ்க்கையை வெறுக்க வேண்டி இருக்கும் ;
பந்தத்தை அறுக்க வேண்டி இருக்கும் ;
செல்வத்தை இழக்க வேண்டி இருக்கும் ;
ஆசையை துறக்க வேண்டி இருக்கும் ;

என்ற காரணத்தாலேயே
என்னை சரண் அடை என்கிறார்.
அது தான் பரிபூரண சரணாகதி

எல்லாமே நீ தான் என் வாழ்க்கையில் நடக்கும்
இன்பம் - துன்பம்  ; உயர்வு – தாழ்வு ;
ஏற்றம் - இறக்கம் ; மகிழ்ச்சி - கவலை ; சோகம் – துக்கம் ;
போன்ற அனைத்திற்கும் நீ தான் காரணம் என்று ,

இறைவனை சரண் அடைந்து விட்டால்
இறைவன் அனைத்தையும் பார்த்துக் கொள்வான் .

நிம்மதியான வாழ்வை அளித்து
நிலைத்த பேரின்பத்தை
மரணமில்லா பெருவாழ்வு
முக்தி என்னும் நிலையை
ஞானத்தை அளித்து காப்பான் என்கிறார்
பகவத் கீதையில் கிருஷ்ணர்.

என் வழியால் வந்தால் உனக்கு துன்பமில்லை
நான் வழி காட்டுவேன் என்கிறார்  கிருஷ்ணர்.



இயேசு கிறிஸ்து-பகவத்கீதையில் கிருஷ்ணர்:
இயேசு ,
பிதாவை அடைவதற்கான வழியாக
நான் இருக்கிறேன் என்கிறார்.

அவ்வாறே ,
பகவத் கீதையில் - கிருஷ்ணரும் ,
கடவுளை அடைவதற்கான வழியாக நான் இருக்கிறேன் என்கிறார்.


                       “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                                           போற்றினேன் பதிவுபதினெட்டு  ந்தான்முற்றே “”

February 28, 2012

இயேசு கிறிஸ்து- பகவத்கீதை-கடமையைச் செய்- பதிவு-17


இயேசு கிறிஸ்து- பகவத் கீதை -பதிவு-17
      
                                “”பதிவு பதினேழை விரித்துச் சொல்ல
                                                                      ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :
இயேசு தர்மம் என்றால் என்ன என்பதைப் பற்றியும் ,
தர்மம் எப்படி செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் ,
தர்மத்தை எந்த முறையைப் பின்பற்றி செய்தால்
பலன் கிடைக்கும் என்பதைப் பற்றியும் ,
எத்தகைய முறையைப் பின்பற்றி  செய்யப்படும்
தர்மத்தை ஆண்டவர்  ஏற்றுக் கொள்வார்  என்பதைப் பற்றியும் ,

தர்மத்தை எந்த வழியைப் பின்பற்றி செய்தால்
பலன் இல்லை என்பதைப் பற்றியும் ,
எத்தகைய தர்மத்தை ஆண்டவர்  
ஏற்றுக் கொள்ள மாட்டார் என்பதைப் பற்றியும் ,
இயேசு கீழ்க்கண்ட வசனங்கள் மூலம் விளக்குகிறார் :

வசனம் - 1:

மனுஷர்  காண வேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள் ; செய்தால் , பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை.
                                                                            -------- மத்தேயு - 6:1 ------   
இந்த சமுதாயத்தில் உள்ள மக்கள் தன்னைப்
           போற்ற வேண்டும் ;
           புகழ வேண்டும் ;
           பாராட்ட வேண்டும் ;
வியந்து பார்க்க வேண்டும் ;
ஆச்சரியத்தில் மூழ்க வேண்டும் ;
என்ற எண்ணத்தை மனதில் கொண்டு
தவறான கண்ணோட்டத்தை மனதில் நிறுத்தி

தர்மம் செய்ய வேண்டும் என்ற உண்மையான எண்ணம் இல்லாமல் ;
உதவி செய்ய வேண்டும் உண்மையான உள்ளம் இல்லாமல் ;
ஆதரவு காட்டி அரவணைக்க வேண்டும் என்ற அன்பு இல்லாமல் ;
கண்ணீர்த் துளிகளை கைகளால் துடைக்க வேண்டும்
என்ற கருணை இல்லாமல் ;
வறுமையை நீக்கி ஏற்றத்தைக் கொடுக்க வேண்டும்
என்ற சிந்தனை இல்லாமல் ;
அறியாமை இருளை நீக்கி , அறிவு விளக்கை ஏற்ற வேண்டும்
என்ற பொது நலம் இல்லாமல் ;
உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற வேறுபாட்டை நீக்கி
தாழ்ந்தவனை துhக்கி விட வேண்டும் என்ற மனப்பான்மை இல்லாமல் ;
எந்த வித உயர்ந்த குறிக்கோளும் இல்லாமல் ;
நல்ல மனம் இல்லாமல் ;
எந்த வித பிரதி பலனும் இல்லாமல் செய்ய வேண்டும்
என்ற உயர்ந்த நோக்கம் இல்லாமல் ;

குறுகிய மனப்பான்மைக் கொண்டு ,
புகழ் பெற வேண்டும் ,
பெயர்  பெற வேண்டும் ,
அதன் மூலம் தன் வாழ்வாதார நிலையை
உயர்த்திக் கொள்ள வேண்டும் ,
தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும் - என்ற
நிலையில் இருந்து தர்மம் செய்யக் கூடாது .

அவ்வாறு தர்மம் செய்வதால் ஒரு பலனும் இல்லை
இது புண்ணிய கணக்கிலும் சேராது
பரலோகத்தில் இருக்கிற பிதாவும் இதை
ஏற்றுக் கொள்ள மாட்டார்  என்கிறார்  இயேசு .



வசனம் - 2:

ஆகையால் நீ தர்மஞ் செய்யும் போது மனுஷரால் புகழப்படுவதற்கு, மாயக்காரர்  ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வது போல , உனக்கு முன்பாக தாரை ஊதுவியாதே ; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
                                                         ------மத்தேயு - 6 : 2--------

எப்படி தர்மம் செய்யப் போகிறேன் ;
என்ன தர்மம் செய்யப் போகிறேன் ;
எப்படிப்பட்ட தர்மம் செய்யப் போகிறேன் ;
எந்த விதத்தில் தர்மம் செய்யப் போகிறேன் ;
என்பதை அனைவரும் அறிய வேண்டும் என்பதற்காக ,

பத்திரிக்கைகளில் பெரிய அளவில் விளம்பரங்கள் கொடுப்பதும் ;
பெரிய அளவுகளில் கட் - அவுட்கள் வைப்பதும் ;
கவிதைகள் பல இயற்றி புகழ்ந்து கொள்வதும் ;
தொலைக் காட்சிகளில் புகழ் மாலைச் சூட்டிக் கொள்வதும் ;

வீதிகள் தாரை தம்பட்டம் முழங்க ,
மேளதாளங்கள் வாசிக்க ,
ஆடிப் பாடியும் ,
பூ மாலையால் தரையில் கோலம் போட்டும் ,
பாமாலையால் மேடையில் வாய் வீச்சு வீசியும் ,
தன்னைத் தானே தம்பட்டம் அடித்துக் கொண்டு
செய்யப் படும் தர்மம் ஒரு பலனையும் அளிக்காது
அதன் பலனை அவர்கள் அடைய மாட்டார்கள் .

பொய் வேஷம் போட்டுக் கொண்டு ,
கபட வார்த்தை பேசிக் கொண்டு ,
நயவஞ்சக வேலை செய்து கொண்டு ,
மனதில் காழ்ப்புணர்ச்சியை வைத்துக் கொண்டு ,
அருவெறுக்கத் தக்க குணங்களை மனதில் இருத்திக் கொண்டு ,
பலனை கணக்கில் வைத்துக் கொண்டு ,
செய்யப் படும் தர்மத்திற்கு உரிய தண்டனையை
ஆண்டவன் நிச்சயம் கொடுப்பார் - என்று
உங்களுக்கு சத்தியமாக , நிச்சயமாக , உண்மையாக ,மெய்யாக
உங்களுக்குச் சொல்கிறேன் என்கிறார் இயேசு .



வசனம் - 3:

தர்மம் எப்படி செய்யக் கூடாது என்று சொன்ன இயேசு
தர்மம் எப்படி செய்ய வேண்டும் என்று கூறுகிறார்:

நீயோ தர்மஞ் செய்யும் போது , உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு உன் வலது கை செய்கிறதை உன் இடது கை அறியாதிருக்கக் கடவது.”
                                                                          -------மத்தேயு - 6 : 3-------
புகழை எதிர்பார்க்காமல்
அமைதியான நிலையில்
             தர்ம சிந்தனையுடன் ;
             கருணை மனப்பான்மையுடன் ;
             தீதில்லா எண்ணத்துடன் ;
             கள்ளமில்லா உள்ளத்துடன் ;
             கரையில்லா கருணையுடன் ;
             வாழ்த்தில்லா செய்கையுடன் ;
             ஆடம்பரமில்லா நடத்தையுடன் ;

தர்மமானது அந்தரங்கமாகவும்
ஒருவரும் அறியாமலும்
பிறருக்கு தெரியாத விதத்திலும்
தர்மமானது ரகசியமாக
அந்தரங்கமாக இருக்க வேண்டும்

இதனை ஒரு உவமை மூலம் இயேசு விளக்குகிறார் .


ஒரு மனிதன் உடலில் இரண்டு கைகள் இருக்கின்றன ;
சில சமயம் இரண்டு கைகளும் இணைந்து செயலாற்றுகின்றன ;
சில சமயங்களில் இரண்டும் தனித்தனியாக செயல்படுகின்றன ;
உடலில் தான் இரண்டு கைகளும் உள்ளன
அவ்வாறு இருக்கும் பொழுது ஒரு கை அறியாமல்
மற்றொரு கையால் எவ்வாறு உதவுவது தர்மஞ் செய்வது
உதவ வேண்டும் என்று முடிவு எடுத்து விட்டால்
உடனே ஒரு கையால் பொருளோ ,பணமோ
அள்ளிக் கொடுத்து விட வேண்டும்
உதவி செய்யலாமா வேண்டாமா என்று யோசிக்கக் கூடாது .

அதாவது அனிச்சைச் செயலாக நடந்து விட வேண்டும் ,
அனிச்சைச் செயலாக செய்து விட வேண்டும் ,
தீயை தொட்டவுடன் எப்படி கை உடனே எடுத்துக் கொள்கிறதோ
அவ்வாறே உதவி செய்ய வேண்டும் என்று நினைத்து விட்டால்
உடனே ஒரு கையால் செய்து விட வேண்டும் .

யோசித்தால் மனது மாறி விடும்
செய்யலாமா வேண்டாமா ?
செய்தால் நன்மையா ?
செய்யா விட்டால் துன்பமா ?
இதனால் தனக்கு ஏதாவது இழப்பு ஏற்படுமா?
போன்ற சிந்தனைகள் எழுந்து விட்டால் ,
எண்ணங்கள் ஓட ஆரம்பித்து விட்டால் ,
அறிவு வேலைச் செய்ய ஆரம்பித்து விட்டால் ,
நாம் உதவி செய்வது கடினமே !

அதனால் தான் ,
ஒரு கை அறியாமல் மற்ற கையால் செய்ய வேண்டும்.
அதாவது அனிச்சைச் செயலாக செய்து விட வேண்டும் .
மேலும் வலது கையா? இடது கையா?
நல்ல கையா ? கெட்ட கையா? என்பதை எல்லாம் பார்க்கக் கூடாது
தர்மம் செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்து விட்டால்
அனிச்சைச் செயலாக உடனே செய்து விட வேண்டும் என்கிறார்  இயேசு .

ஓவியம் வரைபவன் தன் ஓவியத்தின் கீழே
தன் பெயரை போட்டுக் கொள்கிறான்.
கவிதை எழுதுபவன் ,
கட்டுரை எழுதுபவன் ,
கதை எழுதுபவன் ,
அதன் கீழே தன் பெயரை போட்டுக் கொள்கிறான் .
தன்னை வெளிப்படுத்திக் கொள்வதற்காக ,
தனக்கு புகழ் உண்டாக்க ,
தனக்கு பெயர்  கிடைக்க ,
பெயர்  போட்டுக் கொள்கிறான் .

இந்த உலகத்தை அழகாக ,
பிரமிப்பாக படைத்த இறைவன் ,
எந்த இடத்திலும் தன் பெயர்  போட்டுக் கொள்ளவில்லை .
அதைப்போல , தர்மம் செய்பவர்
ஆடம்பரமின்றி அடக்கமாகச் செய்ய வேண்டும் என்கிறார்  இயேசு .



பவத் கீதை – கிருஷ்ணர்:   
இரண்டாவது அத்யாயம்  ( ஸாங்க்ய யோகம் ) - சுலோகம்-47
கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசந!         
மா கர்மபலஹேதுர்பூர்மா தே ஸங்கோஸ்த்வகர்மணி !!

உனக்கு கர்மங்களை ஆற்றுவதில் தான் பொறுப்பு உண்டு
அவற்றின் பயன்களில் ஒரு காலும் உரிமையில்லை .
ஆகவே , நீ கர்மங்களின் பயன்களைக் கோருவதற்குக் காரணமாக ஆகாதே! 
என்பது இதற்கு பொருள் .

இந்த சுலோகம் தான்  ,
“”கடமையைச் செய்;பலனை எதிர்பார்க்காதே””
என்று பொருள் கொள்ளப்படுகிறது

கடமையைச் செய்
பலனை எதிர்பார்க்காதே -என்பது
வாழ்க்கையில் ஒவ்வொரும் பின்பற்ற வேண்டியது ;
கடைப் பிடிக்கப் பட வேண்டியது ;
அறிந்து உணர்ந்து சிந்திக்கப்பட வேண்டியது ;

பொதுவாக கேட்கப் படும் கேள்வி
நாம் ஒரு நாள் வேலை செய்கிறோம்
அதற்குரிய கூலியை பலனை எவ்வாறு பெறாமல் செய்வது?
ஒரு மாதம் அலுவலகத்தில் நாயாக திரிந்து ,
பேயாக அலைந்து ,
வியர்வையை இரத்தமாக்கி உழைக்கிறோம் .
அந்த மாத இறுதியில் ,
உழைப்பிற்கான கூலியை சம்பளத்தை எவ்வாறு பெறாமல் செல்வது ?

கடமையை செய்து விட்டு பலனை எதிர்பார்க்காதே
என்றால் எப்படி பொருந்தும்
நடை முறை வாழ்க்கைக்கு எவ்வாறு ஒத்து வரும்

சொல்லில் குறை உள்ளதா ,
வாக்கியத்தில் பிழை உள்ளதா ,
என்று கேட்கத் தோன்றும்
இப்படிப் பட்ட கருத்துக்கள்
சமுதாயத்தில் மக்கள் மனங்களில் நிலவுகின்றது
இதற்கான விளக்கத்தை கீழ்க்கண்டவாறு சொல்லலாம் .

கருத்து – 1:
நாம் தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கிறோம்
நம் முன் செல்பவர்  கால் இடறி கீழே விழுந்து விடுகிறார் .
நாம் ஓடிச் சென்று அவரைத் துhக்கி விட்டு ,
அவருக்கு வேண்டிய முதலுதவி
அவர்  குணம் பெற சரியாக
என்ன செய்ய வேண்டுமோ ?
அதை செய்ய வேண்டும் .
பிறகு நீங்கள் தனியாக செல்ல முடியுமா ?
நடக்க முடியுமா ? என்று கேட்டு விட்டு அவரை
வழி அனுப்பி வைத்து விட்டு சென்று விட வேண்டும் .

நாம் நம் வழியைப் பார்த்து அந்த இடத்தை
விட்டு அகன்று விட வேண்டும் .
நாம் அவருக்கு உதவி செய்ததின் பயனாக
அவர்  நன்றி சொல்வார்  என்றும் ,
நன்றி என்ற வார்த்தையை எதிர்பார்த்தும்
நன்றி என்ற வார்த்தையை சொல்லவில்லையெனில்
நன்றி சொல்லவில்லையே என்று
நினைத்துக் கொண்டும் இருக்கக் கூடாது .

நாம் நம் கடமையாகிய உதவியை செய்து விட்டோம் .
அதற்கு பிரதிபலனாகிய பலனை நன்றியை எதிர்பார்க்கக் கூடாது .
அப்பொழுது நாம் செய்த உதவிக்கு உரிய பலன்
அதாவது புண்ணியம் நிச்சயம் உண்டு .

இது தான் கடமையைச் செய்
பலனை எதிர்பார்க்காதே என்று பொருள் .



கருத்து - 2 :
நாம் ஏழை மாணவர்  சிலரை படிக்க
வைக்க வேண்டும் என்று நினைக்கிறோம் ;

மாற்றுத் திறனாளிகளுக்கு வாழ்க்கைத் தேவைகளை
நிறைவேற்றிக் கொடுக்க ஆசைப்படுகிறோம் ;

ஏழைப் பெண்களுக்கு ,
திருமணம் ஆகாத பெண்களுக்கு ,
திருமணம் செய்ய முயலுகிறோம் ;

சமுதாயத்தால் புறக்கணிக்கப் பட்டவர்கள் ,
வறுமையால் தள்ளாடுபவர்கள் ,
வாழ்வை வெறுத்தவர்கள் ஆகியவர்களுக்கு
உதவி செய்ய ஆசைப்பட்டால்
தனித்து தனிமையாக
யாரும் அறியாமல் செய்து விட வேண்டும் .

                               மயில்கள் ஆட ,
                               குயில்கள் பாட ,
                               அன்னங்கள் நடை பயில ,
                              தோரணங்கள் கட்டி ,
                              விளம்பரங்கள் செய்து ,

                                                         அன்பில் உயர்ந்தவனே ;
                                                         ஆண்மையில் சிறந்தவனே ;
                                                         இதயத்தில் இருப்பவனே ;
                                                         ஈவதில் கர்ணனே ;
                                                        உலகம் தொழுபவனே ;
                                                        ஊரெல்லாம் வாழ்த்துபவனே ;
                                                         எளியவர்க்கு இரங்குபவனே ;
                                                         ஏழைக்கு உதவுபவனே ;
                                                                           ஐசுவரியத்தை அளிப்பவனே ;
                                                         ஓற்றுமையின் இலக்கணமே ;
                                                         ஓய்வுஒழிச்சலின்றி உழைப்பவனே ;
                                                         ஓளஷதகுணம் உடையவனே ;
            
                    என்று புகழ் வார்த்தை பாடாமல்
                   ஆடம்பரம் இல்லாமல்
                   அமைதியாக செய்ய வேண்டும் .

இத்தகைய வாழ்த்துக்கள் ,
பாராட்டுகள் ,
போற்றுதல்கள் ,
புகழ் மாலைகள் ,
கிடைக்கும் என்று நினைத்தும் ,

இத்தகைய செயலைச் செய்யச் சொல்லியும் ,
இத்தகைய செயல்களைச் செய்தும் ,
உதவி செய்து புகழையும் ,
புகழுக்காக உதவியும் ,
செய்யக் கூடாது .

உதவி செய்ய வேண்டும்
அதற்குரிய போற்றுதலையும் ,புகழையும்
எதிர்பார்க்கக் கூடாது என்கிறார்
பகவத் கீதையில் கிருஷ்ணர்.



இயேசு கிறிஸ்து-பகவத்கீதையில் கிருஷ்ணர்:
இயேசு தர்மம் செய்யும் பொழுது
இடது கை செய்வது வலது கைக்கு தெரியாமல்
எவ்வித புகழையும் , போற்றுதலையும்
எதிர்பார்க்காமல் செய்ய வேண்டும் என்கிறார்.

அவ்வாறே ,
பகவத் கீதையில் கிருஷ்ணரும்
நாம் நம் கடமையை , உதவியை,  தர்மத்தைச் செய்யும் பொழுது
அதற்குரிய பலனை
புகழை போற்றுதலை எண்ணி செய்யக் கூடாது
என்கிறார்.


                        “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                                           போற்றினேன் பதிவுபதினேழு  ந்தான்முற்றே “”