May 01, 2012

இயேசு கிறிஸ்து-திருவள்ளுவர்-தீப்பால-பதிவு-37

  

         இயேசு கிறிஸ்து-திருவள்ளுவர்-தீப்பால-பதிவு-37

           “”பதிவு முப்பத்தியேழை விரித்துச் சொல்ல
                ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :    

உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா?”
                                                           ------மத்தேயு - 7:9

மீனைக் கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா? “
                                                          ------மத்தேயு - 7:10

ஆகையால் பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும் போது , பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக் கொள்கிறவர்;களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?”
                                                          ------மத்தேயு - 7:11

ஆதலால் , மனுஷர்  உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள் ; இதுவே நியாயப் பிரமாணமும் தீர்க்க தரிசனங்களுமாம்
                                                       --------மத்தேயு - 7:12

மடமை உலகத்தில்
மதிக்கு வேலையில்லை!
மதிக்கும் திறனறியா
மானிட ஜென்மங்கள் இருக்கும் வரை
இதயத்தில் அமைதி இல்லை !
இன்புற்று வாழ
இவ்வுலகு வழி கோலவுமில்லை!
இருக்கும் நிலையறிய உதவ ஒரு உதவியுமில்லை!
முடிக்கும் முடிவு தர
முழு மனது தர
முதலுக்கு மோசமில்லை!
முடிவறியா நாட்டில்
முடிக்கு பஞ்சமில்லை!
சாவு மேட்டில்
சங்கநாதம் எழுப்பும்
சரித்திரத்தை உரசிப் பார்க்கும்
உயிரற்ற பிம்பங்களினால்
உன்னத அறிவின் எழுச்சிக்கு
அமைதி இல்லை!
எனை காட்டாத எந்தன் நாட்டில்
பிறப்பெனக்கு இழிபிறப்பு தான்!
என்று இயம்பிட உறவின் உயிரோட்டங்களின்
காந்தக் கவர்  கர்ப்புப் பிணைப்பினால்
இல்லாத ஏக்கங்கள் இனிதே தீர்ந்திட
இருக்கும் சோகங்கள் எரிந்து கரைந்திட
எதை நான் காட்ட
உதாரணத்தின் உயிர்ப்பை
உயிர்கள் அனைத்தும்
உறவாகா விட்டால்
என்ற ஏக்கங்கள்
நெஞ்சினைத் தாக்க
உளக் குமுறல்கள்
உவகையை மாய்க்க
கேட்டவை கிடைக்கவில்லை
என்ற சோகங்கள் மனதை சாய்க்க

பிழையுள்ள உலகமடா - இது
பிழைக்க விடாத நரகமடா

அறிவில்லாத உலகமடா - இது
அன் பறியாத நரகமடா

பாழான உலகமடா - இது
பரி வில்லாத நரகமடா

அன்பில்லாத உலகமடா - இது
கண் ணில்லாத நரகமடா

மதியறியாத உலகமடா - இது
மன தில்லாத நரகமடா

பாசமில்லாத உலகமடா - இது
பண் பற்ற நரகமடா

தெரியாமல் பிறந்தேனடா - இது
தெரிந்தும் பிறக்க மாட்டேனடா

என்று  கேட்டது கிடைக்கவில்லையே
ஆசைபட்டது நடக்கவில்லையே
என்று சோக கீதம் பாடும் மனித இனம்

வேண்டும் வேண்டும் என்று
தேடி ஓடுகிறது
    
     ஆசைப்பட்டு அலைகிறது ;
     விருப்பப்பட்டு சுற்றுகிறது ;
     கனவுகளில் மிதக்கிறது ;
     மதிமயங்கி ஆடுகிறது ;
     அறிவிழந்து நாடுகிறது ;
     மறைகழன்று சிரிக்கிறது ;
     உண்மைதெரியாமல் உளறுகிறது ;
     மகிழ்ச்சியை தேடுகிறது ;
     இன்பத்தை கேட்கிறது ;
     உயர்வுகளை சிந்திக்கிறது ;
     உண்மைகளை மறக்கிறது ;
     மடமைகளில் வாழ்கிறது ;
     ஏழ்மையை வெறுக்கிறது ;
     ஏற்றத்தை விரும்புகிறது ;
     உண்மையை மறுக்கிறது ;
     பொய்மையை ஏற்கிறது ;
     சிந்தனையை இழக்கிறது ;
     சுயநலம் விரும்புகிறது ;
     அன்பை வெறுக்கிறது ;
     இரக்கத்தை கொல்கிறது ;
     கருணையை எரிக்கிறது ;
     அமைதியை புதைக்கிறது ;
        கலவரத்தை வளர்க்கிறது ;
     கொடுமையை போற்றுகிறது ;
     கல்லறைகளை பிறப்பிக்கிறது ;

தான் வாழ பிறரை அழிக்கிறது ;
தான் வாழ செய்யக் கூடாதவைகளை எல்லாம் செய்கிறது ;
தன் நிலை உயர மற்றவர்  நிலையை தாழ்த்துகிறது ;
தன் வாழ்வு செழிக்க மற்றவர்  வாழ்வை நாசம் ஆக்குகிறது ;
கருணையைக் கொன்று ,
இரக்கத்தைத் தின்று ,
ஆணவத்தின் உச்சியில்
அகம்பாவத்தில் நடனமாடுகிறது

தனக்கு தேவையானவை எவை என்றும் ,
தனது விருப்பத்தை நிறைவேற்றுவது எவை என்றும் ,
தனது வாழ்க்கையை வளமாக்குவது எவை என்றும் ,
தெரியாமல் அல்லாடுகிறது மனித இனம்

பசி என்று வந்த மகனுக்கு
அப்பசியைத் தீர்க்க தந்தை
மகனுக்கு உணவைக் கொடுப்பார்
உணவைக் கொடுக்காமல் பசியை தீர்க்காத
வேறு ஏதேனும் பொருளைக் கொடுப்பாரா?
மீனைக் கேட்டால் பாம்பைக் கொடுப்பாரா?
மகனின் தேவை எது என்று அறிந்து
அத்தேவையை தீர்க்கும்
அத்தேவையை பூர்த்தி செய்யும்
அத்தேவையை நிறைவேற்றும்
வகையில் தான் தந்தை செயல்படுவாரே ஒழிய
மகனின் தேவைக்கு எதிராக
எதிரான செயல்களைச் செய்ய மாட்டார்.

மகனின் தேவை அத்தியாவசியமாக இருந்தால்
உபயோகமுள்ளதாக இருந்தால்
மகனின் தேவையை தந்தை நிறைவேற்றுவார்.
அதைப்போல்
பாவிகளாகிய நாம்
பாவ மூட்டையை சுமந்து கொண்டு
பாவிகளாக திரியும் நாம்
உண்மையான தேவை எவை என்று உணர்ந்து
அதை தேவைப்பட்டவர்களுக்கு
தேவையான நேரத்தில் தேவையானவைகளைப்
பூர்த்தி செய்யும் போது
பரலோகத்திலிருக்கிற பிதா
தம்மிடம் வேண்டிக் கொள்கிறவர்களுக்கு
தேவையானவைகளைப் பெற நினைப்பவர்களுக்கு
தேவையானவைகளை அடைய நினைப்பவர்களுக்கு
தேவையானவைகளை தேவையான நேரத்தில்
கொடுப்பார்  என்பது முற்றிலும் உண்மை அல்லவா?

தம்மிடம் கேட்பவர்களுக்கு
தேவையானவைகளை பிதா கொடுப்பார்
என்பது சத்தியம் அல்லவா?
நமக்கு தேவையானவைகளை பிதாவிடம் கேட்டால்
பிதா கொடுப்பது உண்மையாக இருக்கும் போது
நாம் ஏன் மற்றவரை அழித்து வாழ முற்பட வேண்டும்.

மற்றவர்களை ஏன் துன்புறுத்த வேண்டும்
மற்றவர்களை ஏன் வருத்தப் பட வைக்க வேண்டும்
மற்றவர்  வாழ்க்கையில் ஏன் விளையாட வேண்டும்
இன்பம் , துன்பம் , அமைதி , பேரின்பம்
ஆகிய நாலும் அனைவருக்கும் சமமாக இருக்கும் போது
நாம் மட்டும் ஏன் சுயநலமாக இருந்து கொண்டு
நமது வாழ்க்கையில் அமைதி , நிம்மதி
தவழ வேண்டும் என்று
எப்படி எதிர்பார்க்கிறோமோ அப்படியே
தான் மற்றவர்களும் எதிர்பார்ப்பார்கள்.

நமது கையை கத்தியால் கீறினால் ரத்தம் வரும்
கண்ணில் கண்ணீர்  உண்டாகும்
உடலில் வலி ஏற்படும் .

அதே உணர்வுகள் தான் மற்றவர்களுக்கும் ஏற்படும்
என்ற அறிவு ஒவ்வொரு
மனுஷருக்கும் ஏற்பட வேண்டும் ;
மற்றவரை அழித்து வாழ வேண்டும் ;
ஒழித்து வாழ வேண்டும் ;
துன்பப்படுத்தி சிரிக்க வேண்டும் ;
என்ற எண்ணத்தை விட வேண்டும் ;
என்ற செயலை துறக்க வேண்டும் ;

மற்றவர்கள் நமக்கு துன்பங்களைச் செய்யும் போது
வருத்தப்படும் நாம்
கவலைப்படும் நாம்
அவர்களை துhற்றும் நாம்
அவர்களை வெறுக்கும் நாம்
அதே தவறுகளை துன்பங்களை
மற்றவர்களுக்கு நாம் செய்யும் போது
நாம் அடைந்த துன்பங்களை ,
நாம் அடைந்த இழப்புகளை ,
நாம் அடைந்த வருத்தங்களை ,
அவர்களுந்தானே அடைவார்கள்
என்பதை சிந்திக்க வேண்டும் .

மற்றவர்கள் நமக்கு எதைச் செய்ய வேண்டாம்
என்று நினைக்கிறோமோ?
அதை மற்றவர்களுக்கு நாம் செய்யக் கூடாது .

மற்றவர்கள் நமக்கு எதைச் செய்ய வேண்டும்
என்று நினைக்கிறோமோ?
அதையே நாம் மற்றவர்களுக்கு செய்ய வேண்டும்.

நமக்கு தேவையானவைகளை
பிதாவிடம் கேட்டு
பெற்றுக் கொள்ள வேண்டுமே ஒழிய
மற்றவர்களை அழவைத்து
துன்புற வைத்து
தனக்கு தேவையானவைகளை
பெற்றுக் கொள்ள செயல்கள் செய்யக் கூடாது
என்கிறார்  இயேசு.



திருவள்ளுவர் :

“”தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
   தன்னை அடல்வேண்டா தான்”””
                       ------திருக்குறள்--திருவள்ளுவர்---

உலகம் இருவேறுபட்ட
மாறுபட்ட நிலைகளில்
சமுதாயம் இயங்கிக் கொண்டிருக்கிறது.
அனைவரையும் நேசி என்று கூறும் சமுதாயம்
பிறருடன் போட்டி போடு என்று கூறுகிறது.

நேசிப்பவனால் எப்படி போட்டி போட முடியும்
போட்டி போடுபவனால் எப்படி நேசிக்க முடியும்.

பிறரை நேசிக்க அன்பு கருணை வேண்டும்
போட்டியிட அன்பு கருணை தேவையில்லை.

மனதில் அன்பு கருணை வைத்துக் கொண்டு
மற்றவருடன் போட்டியிட முடியாது.

நேசிக்கும் போது நண்பராக இருக்கும் ஒருவர்
போட்டியிடும் போது பகைவராகி விடுகிறார்
விரோதியாகி விடுகிறார்
எதிரியாகி விடுகிறார்

எதிரியை அழிக்க வேண்டும் என்பதற்காக
எதிரியை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக
எதிரியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக
செய்யப்படும் செயல்கள்
     உண்மைக்கு புறம்பானதாக இருக்கும் ;
     நீதிக்கு எதிரானதாக இருக்கும் ;
     சட்டத்தை ஏமாற்றுவதாக இருக்கும் ;
    அநீதியை வளர்ப்பதாக இருக்கும் ;
    உண்மையை கொல்வதாக இருக்கும் ;
    பொய்மையை வளர்ப்பதாக இருக்கும் ;
    அன்பை அழிப்பதாக இருக்கும் ;
    கண்ணியத்தை புதைப்பதாக இருக்கும் ;
    கருணையை எரிப்பதாக இருக்கும் ;
    தீமைகள் வளர்ப்பதாக இருக்கும் ;
    துன்பங்களை கொடுப்பதாக இருக்கும் ;
    அறிவை கெடுப்பதாக இருக்கும் ;
    நயவஞ்சகம் புரிவதாக இருக்கும் ;
    கருணையை மாய்ப்பதாக இருக்கும் ;
    விரோதத்தை வளர்ப்பதாக இருக்கும் ;
    சண்டையை ஏற்படுத்துவதாக இருக்கும் ;
    பண்பை கெடுப்பதாக இருக்கும் ;
    வெறுப்பை உருவாக்குவதாக இருக்கும் ;
    பகையை உண்டாக்குவதாக இருக்கும் ;
    பொய்களை பேசுவதாக இருக்கும் ;
    தவறுகளை செய்வதாக இருக்கும் ;
    தப்பானவைகளை சிந்திப்பதாக இருக்கும் ;
    சுயநலத்துடன் வாழ்வதாக இருக்கும் ;

இத்தகைய தன்மைகள் பலவற்றை தன்னுள் கொண்டு
மற்றவருடன் நாம் போட்டியிடும் போது
எவ்வாறு மற்றவரை நாம் நேசிக்க முடியும் .
போட்டியிட்டே பழக்கப்பட்ட நாம்
மற்றவருடன் போட்டியிட்டே
வாழ்க்கையை கழிக்கும் நாம்
வாழ்க்கையை வாழ்க்கையாக வாழாமல்
போட்டியாகவே கருதி
வாழ்க்கையோடே போட்டி போடும் நாம்
போட்டி போடுவதற்குரிய தன்மைகள்,  குணங்கள்
ஆகியவற்றைத் தான் நாம் பெற்றிருப்போமே ஒழிய
எப்படி நாம் மற்றவரை நேசிக்கும் தன்மையைப் பெற முடியும் .

படிப்பில் போட்டு போடும் போது தான் மட்டும்
அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பதற்காக
தெரியாத ஒன்றைப் பற்றி
தெரியாக ஒருவருக்கு
ஏற்படும் சந்தேகத்தை கூட சொல்லிக்
கொடுக்காமல் மற்றவரை விரோதியாக
நினைத்து போட்டி போடுகிறோம் .

நல்ல வேலையில் தான் அமர வேண்டும் ;
உயர்  பதவி கிடைக்க வேண்டும் ;
செல்வாக்கு பெருக வேண்டும் ;                               
புகழ் ஓங்க வேண்டும் ;
தன் நிலை உயர வேண்டும் ;
ஊரார்  வாழ்த்த வேண்டும் ;          
உறவினர்கள் போற்ற வேண்டும் ;
என்ற நினைப்பில் ,
நல்ல வேளை கிடைக்காமல்
வாழ்க்கையை நடத்த வழி இல்லாமல்
அன்றாட தேவைகளை
பூர்த்தி செய்து கொள்ள முடியாமல்
தவிக்கும் ஒரு அறியாதவனுக்கு
வேலையைப் பற்றிய விழிப்புணர்வை கூட
அவன் மனதில் விதைக்காமல்
வாழ்க்கைக் கொரு வழியை காட்ட மனமில்லாமல்
தன்னை விட உயர்ந்த வேலையை வாங்கி விடக் கூடாது
என்ற குறுகிய நினைப்பில் வேலைக்காக
போட்டி போடுகிறோம்.

இந்த சமுதாயத்தில் போட்டி என்பது
இல்லாத இடமே இல்லை
போட்டி எங்கே இருக்கிறதோ?
அங்கே இரக்கம் இருக்காது
நயவஞ்சகமும் , குள்ள நரித்தனமும்
விரிந்து பரந்து கிடக்கும் .

நாம் ஒரு போட்டியாளர்  என்ற நிலைக்கு ஆளாகி விட்டால்
உலகமே நமக்கு பகையாகி விடுகிறது .
உறவினர்கள் , சுற்றத்தார் ,  குடும்பத்தார் ,  நண்பர்கள்,

அனைவரும் பகையாளி ஆகி விடுகின்றனர்
அனைவருமே விரோதியாகி விடுகின்றனர்
நாம் போட்டியாளராக மாறி நம்மைச் சுற்றியுள்ள
அனைவரும் பகைவராக மாறி விட்ட பிறகு
நாம் எப்படி பிறரை நேசிக்க முடியும்
அன்பு எப்படி மனதில் பிறக்கும்
கருணை எப்படி சுரக்கும் .

போட்டி என்று வந்து விட்ட பிறகு
வெற்றி பெறுவது முக்கியமாகி விடுகிறது
வெற்றி பெறுவதற்கு எதை
வேண்டுமானாலும் செய்யலாம்
எதை வேண்டுமானாலும் அழிக்கலாம்           
என்ற நிலைக்கு போட்டியாளன் தள்ளப்படுவான்.

உலகமே போட்டிக்குள் இயங்கும் போது
ஒவ்வொரு மனிதனும் போட்டிக்குள் தள்ளப்படும் போது
போட்டி போடாமல் வாழ முடியாது
என்ற நிலை இருக்கும் போது
போட்டி போடாமல் இந்த
உலகில் ஜீவத்திருக்க முடியாது
என்ற சூழ்நிலை இருக்கும் போது
ஒவ்வொரு மனிதனும் எப்படி
தன்னுள் அன்பையும் கருணையை வைத்திருப்பான்
அனைவரையும் நேசிப்பான்.

ஒவ்வொரு உள்ளத்திலும்
பொறாமை இருக்கிறது ;
வெறுப்பு இருக்கிறது ;
சினம் இருக்கிறது ;
பேராசை இருக்கிறது ;
சூழ்ச்சி இருக்கிறது ;
இத்தகைய தன்மைகளை
ஒவ்வொருவரும் பெற்று இருக்கும் போது
ஒருவரை ஒருவர்  எப்படி நேசிக்க முடியும்
அன்பு செலுத்த முடியும் .
உண்மையாக இருக்க முடியும்
பாசம் வைக்க முடியும்

மற்றவரிடம் பிறரை நேசி
என்று உபதேசம் செய்து விட்டு
தன்னுள் பல்வேறு வகையான
களங்கங்களை போட்டு
பூட்டி வைத்திருக்கிறோம்.

மற்றவர்கள் நமக்கு கெடுதல்களை செய்தால்
மனதை வாட்டும் துன்பங்களைச் செய்தால்

கண்ணீரை வரவழைக்கும் செயல்களைச் செய்தால்
கவலைகளை உண்டு பண்ணும்
காரியங்களைச் செயல்படுத்தினால்

     தன்னை வருந்த வைக்கிறான்
     வருத்தம் கொள்ள வைக்கிறான்
     கண்ணீர்  வரவழைக்க வைக்கிறான்
     வாழ்க்கையை வெறுக்க வைக்கிறான்

என்று கூச்சல் போடும் நாம்
அதே தவறுகளை
அதே தவறான செயல்களை
அதே தவறான வார்த்தைகளை
மற்றவர்  மீது பிரயோகிக்கும் போது
நாம் அடைந்த துன்பங்களை ,
நாம் அடைந்த கவலைகளை ,
நாம் அடைந்த இழப்புகளை ,
தான் அவரும் அடைவார்
என்ற எண்ணம் நமக்கு வந்தால்
என்ற அறிவு நமக்கு பிறந்தால்
என்ற சிந்தனை நமக்கு இருந்தால்

துன்பத்தால் தனக்கு ஏற்படும் வலிதானே
மற்றவருக்கும் ஏற்படும் என்பதை உணர்ந்து
மற்றவருக்கு துன்பம் செய்ய மாட்டான்
மற்றவரை போட்டியாளனாக நினைக்க மாட்டான் .

தானும் போட்டியாளனாக மாறி
அன்பையும் , கருணையையும் கொல்ல மாட்டான் .
தன் வாழ்க்கையை நேசிப்பது போலவே
மற்றவரையும் நேசிப்பான் .

துன்பத்தால் விளைந்த தீவினைகளின்
பலன்களை உணர்ந்தவர்
அனுபவித்து வேதனைப்பட்டவர்
துன்பப்படுத்தும் கொடுமைகளை விரும்பாதவர்
அத்தகைய துன்பம் தரும்
செயல்களை மற்றவர்களுக்கு
செய்யாமல் இருக்க வேண்டும்

மற்றவர்கள் நமக்கு எத்தகைய துன்பங்களை
செய்ய வேண்டாம் என்று நினைக்கிறோமோ?
அத்தகைய துன்பங்களை நாம் மற்றவர்களுக்கு
செய்யாமல் இருக்க வேண்டும் என்கிறார்  திருவள்ளுவர்.



இயேசு கிறிஸ்து - திருவள்ளுவர்:
இயேசு ,
மற்றவர்கள் உங்களுக்கு எதைச் செய்ய வேண்டும் என்று
நினைக்கிறீர்களோ அதை மற்றவர்களுக்கு செய்யுங்கள்.

மற்றவர்கள் உங்களுக்கு எதைச் செய்யக் கூடாது என்று
நினைக்கிறீர்களோ அதை மற்றவருக்கு செய்யாதீர்கள் என்கிறார்.


அவ்வாறே,
திருவள்ளுவரும் ,
மற்றவர்கள் உங்களுக்கு எதைச் செய்ய வேண்டாம் என்று
நினைக்கிறீர்களோ அதை மற்றவர்களுக்கு செய்ய வேண்டாம்
என்கிறார்.


        “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                         போற்றினேன் பதிவுமுப்பத்துஏழு  ந்தான்முற்றே “”

April 27, 2012

இயேசு கிறிஸ்து-பாம்பாட்டிசித்தர்-பூசை-பதிவு-36




  இயேசு கிறிஸ்து-பாம்பாட்டிசித்தர் -பூசைசெய்த-பதிவு-36

           “”பதிவு முப்பத்திஆறை விரித்துச் சொல்ல
                ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :    

பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல் , என்னை நோக்கி கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
                                                                           -----மத்தேயு - 7:21

அந்நாளில் அநேகர்  என்னை நோக்கி கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்க தரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.
                                                                        -------மத்தேயு - 7:22

அப்பொழுது , நான் ஒருகாலும் உங்களை அறியவில்லை ; அக்கிரமச் செய்கைக்காரரே என்னை விட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
                                                                 ------------மத்தேயு - 7:23

பிதா என்பவர்  யார்  என்றும்
பிதாவின் இயல்புகள் எவை என்றும்
பிதாவிடம் அருள் பெறுவது எவ்வாறு என்றும்
பிதாவிடம் ஆசி பெறுவது எந்த முறையில் என்றும்
பிதாவிடம் இணைவது எப்படி என்றும்
தெரியாத நிலையில்
பிதாவின் சித்தத்தின் படி எவ்வாறு நடக்க முடியும்
பிதாவின் சித்தம் எது என்றும்
அவர்  நம்மிடையே எதை எதிர்பார்க்கிறார் என்றும்
நாம் எந்த வகையில் நடந்து கொள்ள வேண்டும்  என்று
அவர்  எதிர்பார்க்கிறார்  என்றும்

நம்முடைய நடவடிக்கை முறைகள் ;
செயல்படுத்தும் நடவடிக்கை செயல்கள் ;
எண்ணப்படும் மனதின் ஆழங்கள் ;
உதிரப்படும் வார்த்தையின் அர்த்தங்கள் ;
சிந்தப்படும் சொற்களின் தெளிவுகள் ;
பகிரப்படும் உண்மையின் உருவங்கள் ;
காட்டப்படும் கருத்துக்களின் விளக்கங்கள் ;
செய்யப்படும் செயல்களின் முழுமைகள் ;

எதன் அடிப்படையில் இருக்க வேண்டும் என்றும்
எதை பின்பற்றி இருக்க வேண்டும் என்றும்
எந்த குறிக்கோளை உடையதாக இருக்க வேண்டும் என்றும்
எந்த இலக்கை அடைவதாக இருக்க வேண்டும் என்றும்
நமக்குத் தெரியாது .

ஆனால் பிதாவை அறிந்து
பிதாவை உணர்ந்து
பிதாவின் ஆசி பெற்று
பிதாவுடன் இரண்டறக் கலந்து
பிதாவின் குமாரனாக இந்த அவனியில் அவதரித்த
பிதாவின் குமாரனான இயேசுவுக்கு
பிதாவையும் தெரியும்
பிதாவின் சித்தம் எது என்றும் தெரியும் .

பிதாவின் குமாரரான இயேசுவை அடைந்து
அவரை உணர்ந்தால் மட்டுமே
பிதாவையும் , பிதாவின் சித்தத்தையும்
நம்மால் உணர முடியும் - ஏனென்றால்
பிதா வேறு அல்ல ; இயேசு வேறு அல்ல ;

பிதாவுக்குள் இயேசு இருக்கிறார் ;
இயேசுவுக்குள் பிதா இருக்கிறார் ;

பிதாவை உணர்ந்தால் இயேசுவை உணர முடியும் ;
இயேசுவை உணர்ந்தால் பிதாவை உணர முடியும் ;

        உலகத்தை ரட்சிக்க வந்தவர் ;
        பாவத்தை தீர்க்க வந்தவர் ;
        மடமைகளை கொளுத்த வந்தவர் ;
        மனதை மாற்ற வந்தவர் ;
       இரக்கத்தை அளிக்க வந்தவர் ;
       கருணையை கொடுக்க வந்தவர் ;
       உண்மையை உணர்த்த வந்தவர் ;
        சமுதாயத்தை சீர்படுத்த வந்தவர் ;
        சமதர்மத்தை விதைக்க வந்தவர் ;
       ஏழ்மையை நீக்க வந்தவர் ;
       ஏற்றத்தை உருவாக்க வந்தவர் ;
       துன்பங்களை கொளுத்த வந்தவர் ;
       துயரங்களை அழிக்க வந்தவர் ;
       கவலைகளை தீர்க்க வந்தவர் ;
       மாற்றத்தை உருவாக்க வந்தவர் ;
      பொய்மையை புதைக்க வந்தவர் ;
     முன்னேற்றத்தை எழுப்ப வந்தவர் ;
     மூடதனத்தை சாய்க்க வந்தவர் ;

எல்லாம் வல்ல கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை
உண்மையாக உணராமல்
நம்பிக்கை வைக்காமல்
நம்மை காக்க வந்தவர்  என்ற நம்பிக்கை இல்லாமல்
இயேசுவின் பின்னால் செல்வதாலும்

கர்த்தாவே! கர்த்தாவே! என்று இயேசுவை
அழைப்பதாலும் ஒரு பயனும் இல்லை .

அதனால் தான் இயேசு என்னை உள் மனதில் நம்பாமல்
ஆழ்மனதில் நம்பிக்கை கொள்ளாமல்
உண்மையாக விசுவாசம் இல்லாமல்
வெளியே போலித்தனமாக பக்தி
இருப்பது போல் காட்டிக் கொண்டு
நயவஞ்சக நடிப்பு நடிக்கும் போலித்தனம் கொண்ட
குற்றங்களை தன்னுள் கொண்ட
ஆணவ உள்ளங்கள் என்னை நோக்கி கர்த்தாவே! கர்த்தாவே!
என்று சொல்வதும்
என்னை பின்பற்றுவது போல் நடிப்பதும்
என்னை வழிபடுவது போல் நாடகம் ஆடுவதும்
சமுதாயம் பார்க்கும் படி போலி வேடம் போடுவதும்
போன்ற செயல்களைச் செய்வதன் மூலம்
ஒருவன் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியாது .
               
என்னை உண்மையாக உணராமல் ;
நான் வகுத்த நெறிப்படி நடக்காமல்     ;
என்னுடைய வசனங்களைக் கைக்கொள்ளாமல் ;
என்னுடைய பாதை வழியே போகாமல் ;
என்னுடைய எண்ணப்படி செயல்படாமல் ;
என்னுடைய வசனங்களை வெளிப்படுத்தாமல் ;
நான் சொன்ன கடமைகளை நிறைவேற்றாமல் ;
உண்மையை உலகுக்கு உணர்த்தாமல் ;

கால மாற்றத்தால் கருத்திழந்து
கடமையைத் தவறவிட்டு
தன்னை வளர்த்துக் கொள்ள ;
தன் உயர்வை நிலை நிறுத்திக் கொள்ள ;
தன் புகழை பெருக்கிக் கொள்ள ;
தன் தேவைகளை அடைந்து கொள்ள ;
தன் வாழ்வை வளமாக்கிக் கொள்ள ;
தன் தலைமுறையை பாதுகாத்துக் கொள்ள ;
தன் ஆசைகளை தீர்த்துக் கொள்ள ;
தன் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள ;
தன் கற்கனைகளை செயல்படுத்திக் கொள்ள ;
தன் பெருமையை வலுபடுத்திக் கொள்ள ;
தன் பெயரை வளர்த்துக் கொள்ள ;

பொய்மையை இதயத்தில் வைத்து
போலித்தனத்தை முகத்தில் வைத்து
கபடநாடகத்தை வார்த்தையில் வைத்து
உண்மை இல்லாதவர்கள்
நெறி தவறியவர்கள்
தவறான வழி செல்பவர்கள்
பாவத்திற்கு அஞ்சாதவர்கள்
தவறுக்கு கலங்காதவர்கள்

என்னை நோக்கி
உம்முடைய பெயரைச் சொல்லித் தான்
தீர்க்க தரிசனம் உரைத்தோம்
பிசாசுகளைத் துரத்தினோம்
அநேக அற்புதங்களைச் செய்தோம் என்பார்கள்
அவர்கள் தவறானவர்கள்
தவறான வழி நோக்கி செல்பவர்கள்
என்கிறார்  இயேசு .

இத்தகைய தவறான வழி நின்று
பொய் வேடம் போட்டு
தன்னை உயர்வாக காட்டிக் கொள்பவர்கள் ;
தன்னை உயர்த்திக் கொள்பவர்கள் ;
தன்னை வெளிப்படுத்திக் கொள்பவர்கள் ;
இவர்களை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் ;
இவர்கள் செயல்களை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் ;
இவர்கள் செயல்களை நான் அங்கீகரிக்க மாட்டேன் ;
இவர்களை நான் ஆசிர்வதிக்க மாட்டேன் ;
அன்பு செலுத்த மாட்டேன் ;
அவரவணைத்து காக்க மாட்டேன் ;

அக்கிரமங்களை  செய்துவாழும்
பாழ் நெஞ்சம் கொண்ட கொடுமைக்காரரே தள்ளிப் போங்கள்
என் அருகே வராதீர்கள் விலகிச் செல்லுங்கள்
அப்பால் போ சாத்தானே தள்ளி நில்
என்னை விட்டு போங்கள் என்று
அவர்களுக்குச் சொல்லுவேன் என்கிறார்  இயேசு .

அன்பை இதயத்தில் விதைத்து ,
கருணையை செயலில் விதைத்து ,
பண்பை வார்த்தையில் விதைத்து ,
மரியாதையை உள்ளத்தில் விதைத்து ,
உண்மையை உலகத்தில் விதைத்து ,

தான் என்ற ஆணவம் நீக்கி
தன்னால் தான் நடக்கிறது 
நான் தான் செய்கிறேன்
என்ற எண்ணத்தை விடுத்து செயல் செய்பவர் .

நல்லவைகள் இறைவனால் செய்யப்படுகிறது
என் மூலமாக செய்யப்படுகிறது
நான் கருவியாக இருக்கிறேன் .

கடவுள் என்னை நல்லது செய்ய பயன்படுத்துகிறார்
நல்லது செய்ய வழி நடத்துகிறார்
நல்லவைகளை பரப்ப வழி நடத்துகிறார்
நல்லவைகளை செயல்படுத்த வழி நடத்துகிறார்
என்ற எண்ணம் கொண்டு

ஆண்டவரே உண்மை
ஆண்டவரைத் தவிர மற்றதெல்லாம் பொய்

ஆண்டவர்  இயக்குகிறார் ;  நான் இயங்குகிறேன் ;
ஆண்டவர்  பேசச் சொல்கிறார் ; நான் பேசுகிறேன் ;
ஆண்டவர்  செய்ய சொல்கிறார் ; நான் செய்கிறேன் ;
ஆண்டவர்  எழுதச் சொல்கிறார்  ;நான் எழுதுகிறேன் ;
ஆண்டவர்  விளக்கச் சொல்கிறார் ; நான் விளக்குகிறேன் ;
என்று எல்லாம் வல்ல ஆண்டவரை விசுவாசித்து

அவர்  வழி நடப்பவன்
தன்னால் ஒன்றும் நடக்கவில்லை
நடப்பவைகளுக்கு நான் ஒன்றும் காரணம் இல்லை ,
காரணத்தை அறியும் தெளிவு எனக்கு இல்லை ,
தெளிவை உணரும் சக்தி எனக்கு இல்லை ,
சக்தியின் இருப்பிடம் நான் அறியவில்லை ,
நானே யார்  என்று தெரியவில்லை ,
என்னை எனக்கே புரியவில்லை ,
என்னை புரிந்து கொள்ள என்னால் முடியவில்லை ,
புரியும் வழி நான் அறியவில்லை ,

என்று தன்னுள் உள்ள ஆணவத்தை விலக்கி
தன் முனைப்பை எரித்து
அகம்பாவத்தை ஒழித்து
எல்லாமே ஆண்டவர்
என்பதை மனதில் நிறுத்தி ,

அவரை விசுவாசித்து அவர்  வழி நடந்தால்
ஆண்டவர்  அவரை ஏற்றுக் கொள்வார்.

தான் என்னும் அதிகாரப் பற்று
தனது என்னும் பொருட்பற்று
ஆகியவற்றை நீக்கி
ஆண்டவரை ஏற்றுக் கொண்டவன் மட்டுமே
உண்மையானவன் மட்டுமே
பிதாவின் சித்தத்தின் படி நடக்கிறவன் மட்டுமே
பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்கத் தகுதியுடையவன் .

என்னை உண்மையாக உணர்ந்து
பின்பற்றுபவனால் மட்டுமே
பிதாவையும் , பிதாவின் சித்தத்தையும் அறிந்து
பரலோக ராஜ்யத்தில்  பிரவேசிக்க முடியும்
என்னை உண்மையாக உணர்ந்து பின்பற்றாமல்
போலியாக இருப்பவர்களால்
பொய்யர்களாக சுற்றுபவர்களால்
தவறான எண்ணம் கொண்டவர்களால்
பிதாவையும் அறிய முடியாது ,
பிதாவின் சித்தத்தையும் உணர முடியாது ,
பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்கவும் முடியாது ,
என்கிறார்  இயேசு .



பாம்பாட்டி சித்தர் :

“”பூசைசெய்த தாலேசுத்த போதம் வருமோ
         பூமிவலஞ் செய்ததனாற் புண்ணிய முண்டோ
        ஆசையற்ற காலத்திலே ஆதி வத்துவை
        அடையலா மென்றுதுணிந் தாடாய் பாம்பே””
                              ----பாம்பாட்டிச் சித்தர்---பெரியஞானக் கோவை---

ஆசைக்கும் , பேராசைக்கும் வித்தியாசம் உண்டு
பசியால் வாடிக்கொண்டிருப்பவன் உணவு வேண்டும் என்று
நினைத்தால் அதற்கு பெயர்  ஆசை .
அறுசுவை உணவு வேண்டும்
என்று நினைத்தால் பேராசை

மானத்தை மறைக்க ஆடை வேண்டும் என்று
நினைத்தால் அதற்குப் பெயர்  ஆசை .
நவரத்தினங்களால் நெய்யப்பட்ட ஆடை வேண்டும்
என்று நினைத்தால் அதற்கு பெயர்  பேராசை .

வாழ்க்கைத் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும்
என்று நினைத்தால் அதற்குப் பெயர்  ஆசை .
வாழ்க்கைத் தேவைக்கு மேல்
சேர்த்து வைக்க வேண்டும்
பதுக்கி வைக்க வேண்டும்
பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு வைக்க வேண்டும்
என்று நினைத்தால் அதற்குப் பெயர்  பேராசை .

ஆசைக்கும் , பேராசைக்கும் வேறுபாடு தெரியாமல்
நம்மில் பலர்  வாழ்க்கையை , வாழ்க்கையாக நினைக்காமல்
வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் .

எண்ணம் உயர்வாக இருக்க வேண்டும்
உயர்வானதையே எண்ண வேண்டும்
உயர்வானதையே சிந்திக்க வேண்டும்
அப்பொழுது தான் உயர்வுகள் கிடைக்கும் என்பர்  சிலர்.

எண்ணம் வலிவு பெற ,
எண்ணம் திணிவு பெற ,
எண்ணம் சக்தி பெற ,
எண்ணம் உயர்வு பெற ,
ஆழ்ந்து சிந்திக்கும் போது ,
மனம் வலிமை பெறுகிறது
அதன் விளைவு நாம் நினைத்தது
நடக்கும் என்கின்றனர்  சிலர் .

அப்படி நடந்தால் மனதை வலிமைப் படுத்தி
நமக்கு தேவையானதைப் பெற்றுக் கொள்ளலாமே !
உலகில் உள்ள அனைவரும்
தங்களுக்குத் தேவையானவைகளைப் பெற்று
இன்பமுடன் வாழலாமே ஏன் முடியவில்லை?

இதற்குப் பெயர்  தான் ஆணவம்
தான் என்ற தன்முனைப்பு
தன் வாழ்க்கையை தானே
மாற்றிக் கொள்ள முடியும் என்ற அறியாமை .

ஊழ்வினையின் உண்மை தெரியாமல்
பிதற்றுபவர்கள் இவர்கள் ;
கர்மவினையின் கனல் இதுதான் என்று அடையாளம்
காண முடியாதவர்கள் இவர்கள் ;
விதைக்கும் விதை தான் முளைக்கும்
என்று தெரியாதவர்கள் இவர்கள் ;
அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில்
சொல்ல வேண்டும் என்றால்,
சாப்பிட்ட உணவைத் தான் வாந்தி எடுக்க முடியும்
புதிதாக எந்த ஒரு உணவையும் வாந்தி எடுக்க முடியாது .

அப்படி இருக்கையில்
கர்மவினையின் தாக்குதலுக்கேற்ப
பாவ-புண்ணிய நிகழ்வுகளுக்கேற்ப தான்
ஒருவருடைய வாழ்க்கை நடக்குமே தவிர
உயர்வான எண்ணத்தை நினைப்பதாலோ
மனனை வலிமைப் படுத்த
முயற்சிகள் மேற்கொள்வதாலோ

ஒருவன் தன் வாழ்க்கையில் புதியதாக ஒரு
ஊசியைக் கூட பெற முடியாது .

கர்மவினையிலிருந்து எப்படி தப்பிப்பது ;
பாவ-புண்ணியங்களை எப்படி கழிப்பது ;
காலத்தை எப்படி மாற்றி அமைப்பது ;
இயற்கை நியதியை எவ்வாறு உணர்வது ;
பிரபஞ்ச ரகசியங்களை எவ்வாறு அறிவது ;
மறைபொருள் விளக்கங்களை எவ்வாறு பெறுவது ;
வாழ்க்கையில் மாற்றத்தை எவ்வாறு கொண்டு வருவது ;
முன்னேற்றத்தின் வாயிலுக்குள் எவ்வாறு புகுவது ;
இன்பத்தின் சாளரங்களை எவ்வாறு திறப்பது ;
வெற்றியின் விலாசத்தை எவ்வாறு கண்டறிவது ;
மடமை நெஞ்சை எவ்வாறு மாற்றுவது ;
ஞானத் திறவுகோலை எவ்வாறு பெறுவது ;
முக்திக்கு தேவையான வித்தை எங்கே விதைப்பது ;
முழுமுதற் பொருளை எங்கே காண்பது ;

போன்றவற்றில் தெளிவு பெற வேண்டும்
புத்தி உயர்வு பெற வேண்டும்

காலத்திற்குள் தான் நாம் இருக்கிறோம்
காலத்தை நாம் மாற்றி அமைக்க முடியாது
என்று உணர வேண்டும்
அதற்கு நாம் ஆசைக்கும் , பேராசைக்கும்
உள்ள வேறுபாடடை உணர வேண்டும் .

பேராசை விடுத்து ஆசைப்பட வேண்டும்
பேராசையுடன் இருக்கும் சிலர்  தன் நிலை
தாழாமல் இருக்க செயல் பல செய்வர் .

மனிதன் தன் தேவையை நிறைவேற்றிக் கொள்ள
பயன்படுத்தும் ஓர்  ஆயுதம் தான் மந்திரம் .
மந்திரங்கள் பஞ்ச பூதங்களுடன் இணைக்கப்பட்டு
இயங்கும் போது தான் நாம் நினைத்தது நடக்கும் .
அதற்கான வழிமுறைகளே பூசைகள் .

பூசைகள் பல செய்வதால்
நாம் வேண்டியவைகள் ,
நமக்கு தேவைப்படுபவைகள் ,
நாம் விருப்பப்படுபவைகள் ,
கிடைத்து விடுமா? கிடைக்காது?

பாவத்தை தீர்க்க ,
பாவத்தை போக்க ,
பாவத்தை கழிக்க ,
புண்ணியத்தை சேர்க்க ,
கடவுளை வணங்கி கோயில் பல சென்றாலும்
யாத்திரை பல மேற் கொண்டாலும்

இந்த புவி முழுவதும் அலைந்து
கோயில் பல சென்றாலும்
செய்த பாவம் போய் விடுமா
புண்ணியம் சேர்ந்து விடுமா
சேராது? எதுவும் மாறாது?
நாம் கொண்டு வந்ததை
நாம் தான் அனுபவிக்க வேண்டும் .

அப்படி இருக்கும் போது
உயர்வான எண்ணம் கொண்டால்
மட்டும் எவ்வாறு வாழ்க்கை மாறும் .

துன்பங்கள் நீக்கி
இன்பமாக வாழவும் வழி உண்டு
முதலில் பேராசையை நீக்கி
ஆசைக்கு வர வேண்டும்
பிறகு ஆசையையும் விட வேண்டும்
அதாவது அன்றாட தேவையையும் மறக்க வேண்டும் .

அதாவது அன்றாடத் தேவைகளைப் பற்றி
கவலைப்படாமல் நிகழ்காலத்தில் வாழ வேண்டும் .
இங்கே ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள்                
யார்  ஒருவர்  நிகழ்காலத்தில் வாழ்கிறாரோ
இறந்த காலத்தையும் , எதிர்  காலத்தையும் பற்றி நினைக்காமல் ,
நிகழ்காலத்தில் கணத்திற்கு கணம் வாழ்பவரை
கர்ம வினைகள் அண்டாது .

நிகழ்காலத்தில் வாழ்பவரால் மட்டுமே
ஆதி அந்தத்தை உணர முடியும் ;
பிறப்பு - இறப்பை அறுக்க முடியும்
கடவுளை  அறிய முடியும் ;
கடவுளை உணர முடியும் ;
கடவுளுடன் இணைய முடியும் ;
கடவுளாய் மாற முடியும் ;
தான் அவனாக மாறும் பேற்றினை அடைய முடியும் .

உலகில் நிலவி வரும்
தவறான கருத்துக்கள் ;
தவறான நடைமுறைகள் ;
தவறான வழி காட்டுதல்கள் ;
ஆகியவை பின் செல்லாமல்
உண்மை எது என்று உணர்ந்து
அறிவு தெளிவு பெற்று அதன் வழி செல்லும் போது தான்
எல்லாவற்றுக்கும் மூலமான
ஆதியாக விளங்கும் கடவுளை அடையலாம் என்கிறார்
பாம்பாட்டி சித்தர் .



இயேசு கிறிஸ்து - பாம்பாட்டி சித்தர்:
இயேசு , உண்மையாக இருப்பவரால் மட்டுமே
பிதாவை உணர முடியும் .
பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியும் என்கிறார் .

அவ்வாறே,
பாம்பாட்டி சித்தரும் ,
உண்மையை அறிந்து கொண்டு
உண்மையாக இருப்பவரால் மட்டுமே
ஆதி நிலையான கடவுளை அடைய முடியும்
என்கிறார்.
                                             
     
              “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                               போற்றினேன் பதிவுமுப்பத்துஆறு  ந்தான்முற்றே “”