April 17, 2018

ஔவையார்-நான்கு கோடி பாடல்-பதிவு-4



ஔவையார்-நான்கு கோடி பாடல்-பதிவு-4   


கஷ்டப்பட்டு
உழைத்த
ஒன்பது
மாணவர்களுக்கும்
ஒரு மதிப்பெண்
வினாவுக்கு
எவ்வாறு பதில்
வழங்க வேண்டும்
மூன்று மதிப்பெண்
கொண்ட வினாவிற்கு
எவ்வாறு பதில் வழங்க
வேண்டும் என்ற
விவரம் தெரியவில்லை

ஆனால்
வித்தியாசமாக யோசித்து
திறமையாக
வேலை செய்த
ஒரு மாணவனுக்கு மட்டும்
ஒரு மதிப்பெண்
வினாவுக்கு
எவ்வாறு பதில்
வழங்க வேண்டும்
மூன்று மதிப்பெண்
கொண்ட
வினாவிற்கு எவ்வாறு
பதில் வழங்க வேண்டும்
என்ற விவரம் தெரிந்து
இருந்தது,

இது தான் கஷ்டப்பட்டு
வேலை செய்பவனுக்கும்
வித்தியாசமான
யோசனைகளை
பயன்படுத்தி
திறமையாக
வேலை செய்பவனுக்கும்
உள்ள வித்தியாசம்
ஆகும்.

பத்து நபர்கள் சிப்ஸ்
என்ற உணவுப்பொருளை
செய்து அதை
பாக்கெட்டில் அடைத்து
விற்பனை செய்தார்கள்

அந்த பத்தில்
ஒன்பது நபர்கள்
தனித்தனியாக
விற்பனை செய்த
சிப்ஸ் பாக்கெட்
ஒரே மாதிரியாக
இருந்தது

ஒரு சிப்ஸ்
பாக்கெட்டில்
50 சிப்ஸ் வீதம்
10 ரூபாய்
என்ற விலையில்
அந்த ஒன்பது நபர்களும்
தனித்தனியாக
அந்த சிப்ஸ் பாக்கெட்டை
செய்தார்கள்
தனித்தனியாக
விற்பனை செய்தார்கள்

பத்தில் ஒரு நபர்
மட்டும்
சிப்ஸ் பாக்கெட்டை
வித்தியாசமான
யோசனைகளை
பயன்படுத்தியும்,
பிறர் ஏற்றுக்
கொள்ளத்தக்க வகையில்
செயல்களைச் செய்தும்
திறமையாக
வேலை செய்து
சிப்ஸ் பாக்கெட்டை
செய்தார்.

---------- இன்னும் வரும்
//////////////////////////////////////////////////////////////////



April 16, 2018

ஔவையார்-நான்கு கோடி பாடல்-பதிவு-3


  
ஔவையார்-நான்கு கோடி பாடல்-பதிவு-3



இந்த ஒன்பது
மாணவர்களும்
மனப்பாடம் செய்தவர்கள்
திருக்குறளை இயற்றியது
திருவள்ளுவர்
என்று தொடர்ந்து
பலமுறை
மனப்பாடம் செய்தவர்கள்
விழுந்து விழுந்து
மனப்பாடம் செய்தவர்கள்

திருக்குறளை இயற்றியவர்
திருவள்ளுவர்
என்ற வரியை
தொடர்ந்து
திரும்ப திரும்ப மனப்பாடம்
பண்ணி வைத்திருந்த
காரணத்தினால்
சாப்பிட்டதை
அப்படியே
வாந்தி எடுத்த மாதிரி
திருக்குறளை இயற்றியவர்
திருவள்ளுவர்
என்று ஒன்பது
மாணவர்களும்
பதில் எழுதினர்

மூன்று மதிப்பெண்கள்
இந்தக் கேள்வியின் பதிலுக்கு
கொடுத்து இருக்கிறார்களே
நாம் எழுதும்
இந்த பதில் போதுமா
என்று யாரும்
நினைக்கவில்லை
இது சரியான பதிலா
என்று கூட
ஒன்பது மாணவர்களும்
நினைக்கவில்லை
படித்ததை
அப்படியே
எழுதி விட்டார்கள்
மனப்பாடம் செய்ததை
அப்படியே கக்கி விட்டார்கள்
இது தான் கஷ்டப்பட்டு
வேலை செய்பவர்கள்
செய்யும் செயல்

தாங்கள் என்ன
கற்றுக் கொண்டோமோ
அதை அப்படியே
செய்வார்கள்
கஷ்டப்பட்டு வேலை
செய்பவர்கள்

பத்து மாணவர்களில்
ஒரு மாணவன்
மட்டும் வித்தியாசமான
யோசனையை பயன்படுத்தி
எழுதினான்

தமிழ் மறை,
உத்தர வேதம்,
தெய்வ நூல்,
திருவள்ளுவம்,
திருவள்ளுவப்பயன்,
முப்பால்,
பொய்யாமொழி,
வாயுரை வாழ்த்து,
பொதுமறை,
பொருளுரை,
முதுமொழி,
உலகப்பொது மறை,
என்று பல்வேறு பட்ட
சிறப்புப் பெயர்களால்
அழைக்கப்படும்
திருக்குறளை
தெய்வப் புலவர்,
செந்நாப்போதார்,
பொய்யில் புலவர்,
நாயனார்,
நான்முகனார்,
மாதானுபங்கி,
முதற்பாவலர்,
திருநாவலர்,
தேவர்,
வான்புகழ் கொண்ட
பெருந்தகையார்
என்று பல்வேறு
பெயர்களால்
சிறப்பிக்கப்படக்கூடிய
திருவள்ளுவர்
என்பவர் இயற்றினார்

இவ்வாறு பதில் எழுதிய
ஒரு மாணவனுக்கு
மூன்றுக்கு மூன்று
மதிப்பெண்கள்
கிடைத்தது

ஒன்பது மாணவர்களும்
கஷ்டப்பட்டு வேலை
செய்பவர்களுக்கு
எடுத்துக்காட்டு

மூன்றுக்கு மூன்று
மதிப்பெண் பெற்ற
மாணவன் மட்டுமே
வித்தியாசமான
யோசனைகளை பயன்படுத்தி
திறமையாக 
வேலை செய்பவர்களுக்கு
எடுத்துக்காட்டு

கஷ்டப்பட்டு வேலை
செய்தவன்
மூன்றுக்கு
ஒரு மதிப்பெண் பெற்றான்
ஆனால்
வித்தியாசமாக யோசித்து
திறமையாக வேலை
செய்பவன்
மூன்றுக்கு மூன்று மதிப்பெண்
பெற்றான்

---------- இன்னும் வரும்
//////////////////////////////////////////////////////////////////

April 15, 2018

திருநங்கையர் தின வாழ்த்து மடல்-15-04-2018


திருநங்கையர் தின வாழ்த்து மடல்-15-04-2018

உலகில் தோன்றுவதை
எல்லாம் இரண்டு
நிலைகளில் பிரித்துவிடலாம்

ஒன்று  : பிறப்பதினால் தோன்றுவது
இரண்டு : மாற்றமடைவதினால்
          தோன்றுவது

பிறப்பது என்பது புதிதாகத்
தோன்றுவது
மாறுவது என்பது
பிறந்தது வளரும் போது
இடையில் ஏற்படக்கூடிய மாற்றம்

ஆண், பெண் இரண்டு பேரும்
பிறப்பதின் மூலம்
தோன்றுகிறார்கள்
திருநங்கைகள் மட்டும்
மாற்றத்தின் மூலம்
தோன்றுகிறார்கள்.

ஒரு விதையிலிருந்து
ஒரு செடி தோன்றுகிறது
இது பிறப்பது
பிறந்த செடியில்
பூவானது காயாகிறது,
காயானது கனியாகிறது
காய், கனி ஆகியவை
மாற்றத்தின் மூலம்
தோன்றுகிறது.

ஒரு ஆண் குழந்தை
அல்லது பெண் குழந்தை
தாயின் கருவறையிலிருந்து
வெளியே வந்து பிறக்கிறது
இது பிறப்பதன் மூலம்
தோன்றுவது
பிறந்த பிறகு குழந்தை
குழந்தை பருவம்,
இளமை பருவம்,
வாலிப பருவம்,
முதுமை பருவம் என
பல்வேறு பருவ
நிலைகளைக் கடக்கிறது
இந்த பருவங்கள்
அனைத்தும் பிறந்தபின்
மாற்றத்தின் மூலம்
தோன்றுபவைகள்

அதைப்போல
ஒரு குழந்தை பிறந்தபின்
அது வளர்ந்த நிலையில்
ஏற்படக்கூடிய
மாற்றத்தின் விளைவாக
தோன்றுபவர்கள் திருநங்கைகள்

பிறந்த ஆண் குழந்தைக்கு
நான் ஆண் குழந்தை
பிறந்திருக்கிறேன்
என்று தெரியாது
அதைப்போல பிறந்த பெண்
குழந்தைக்கு நான்
பெண் குழந்தை
பிறந்திருக்கிறேன் என்று
தெரியாது
இவர்களைச் சுற்றி இருக்கும்
சொந்தங்கள் உணர்ந்து
அவர்களுடைய
பிறப்பை கொண்டாடுகிறது

ஆனால் பிறந்து வளர்ந்ததில்
மாற்றம் உண்டாகி
தங்களுக்குள்
திருநங்கை தோன்றுவதை
உணர்ந்த போது
அவர்கள் சொல்கிறார்கள்
ஆனால் இந்த சமுதாயம்
ஏற்றுக் கொள்வதில்லை
அதை கொண்டாடுவதில்லை

பிறந்த போது
ஆண் குழந்தை அல்லது
பெண் குழந்தையால்
சொல்ல முடிவதில்லை
இச்சமுதாயம் பிறப்பினால்
ஏற்படும் தோற்றத்தை
கொண்டாடுகிறது
ஆனால்
பிறந்த பின் உடல் மற்றும்
மனதில் ஏற்படக்கூடிய
மாற்றத்தை திருநங்கைகள்
சொல்லும் போது
இச்சமுதாயம் ஏற்றுக்
கொண்டு மாற்றத்தினால்
ஏற்படக்கூடிய தோற்றத்தை
கொண்டாடுவதில்லை.

பிறப்பினால்  ஏற்படும்
தோற்றத்தையும்,
இடையில் மாற்றத்தினால்
ஏற்படும் தோற்றத்தையும்
எப்பொழுது இச் சமுதாயம்
சமமாக மதிக்க ஆரம்பிக்கிறதோ
அப்பொழுது தான்
சமதர்ம சமுதாயம் மலரும்
திருநங்கைகள் வாழ்வில்
ஒளிவீசும்

திருநங்கையர் தின வாழ்த்துக்கள்-15-04-2018

என்றும் அன்புடன்
K.பாலகங்காதரன்

April 14, 2018

தமிழ் புத்தாண்டு வாழ்த்து மடல்-14-04-2018


தமிழ் புத்தாண்டு வாழ்த்து மடல்-14-04-2018

ஒவ்வொரு புத்தாண்டு
பிறக்கும் போது
உலகில் உள்ள
மக்கள் அனைவரும்
இறைவனிடம் கேட்பதை
இரண்டு விஷயங்களில் பிரித்து
விடலாம்

ஒன்று : சென்ற வருடம் தான்
         கஷ்டமான வருடமாக
         இருந்தது
         இந்த வருடமாவது
         சந்தோஷமான வருடமாக
         இருக்க வேண்டும்

இரண்டு : சென்ற வருடம்
          எப்படி சந்தோஷமான
          வருடமாக இருந்ததோ
          அப்படியே இந்த வருடமும்
          சந்தோஷமாக இருக்க
          வேண்டும்

இந்த இரண்டு விஷயங்களில்
ஏதாவது ஒன்றைத் தான்
உலகில் உள்ள மக்கள்
அனைவரும்
விரும்புகின்றனர்
இறைவனிடம் கேட்கின்றனர்.

இதிலிருந்து நாம்
ஒன்றே ஒன்றைத்
தெரிந்து கொள்ளலாம்
மக்கள் அனைவரும்
விரும்புவது
கஷ்டம்,  கவலை, கண்ணீர்
இல்லாத வாழ்க்கை
வாழ வேண்டும்
என்பதைத் தான்

அதாவது சுருக்கமாக சொல்ல
வேண்டும் என்றால்
அனைவர் மனங்களிலும்
உள்ளது
ஒன்றே ஒன்று தான்
அதாவது சந்தோஷமாக இருக்க
வேண்டும் என்பது தான்

கஷ்டம், கவலை, கண்ணீர்
இல்லாத வாழ்க்கையில்
எதையும் கற்றுக் கொள்ள
முடியாது

நம் வாழ்க்கையில் கஷ்டம்
வரும் போது தான்
உண்மையான நண்பர்கள்
யார் என்று தெரிந்து
கொள்ள முடியும்

நம் வாழ்க்கையில் கவலை
வரும் போது தான்
கணவனின் அன்பும்
மனைவியின் பாசமும
தெரிந்து கொள்ள முடியும்

கண்ணீலிருந்து கண்ணீர்
சிந்தும் போது தான்
அதை துடைக்கும்
சொந்தக் காரர்களுடைய
கரம் யாருடைய கரம்
என்று தெரிந்து
கொள்ள முடியும்

கஷ்டம், கவலை, கண்ணீர்
என்பது வாழ்க்கையில்
இல்லாவிட்டால்
வாழ்க்கையில் நாம் எதையும்
கற்றுக் கொள்ளவும் முடியாது
அனுபவம் என்ற
ஒன்றையும் பெற முடியாது

கஷ்டம், கவலை, கண்ணீர்
இல்லாத வாழ்க்கை
வேண்டும்  என்று
ஒவ்வொருவரும் அவரவர்
தங்கள் இறைவனிடம்
கேட்டு அதை
இறைவன் கொடுத்து
இருந்தால்
அனைவரும் சந்தோஷமாக
அல்லவா இருந்திருக்க
வேண்டும்

அனைவரும் வேண்டும்
வேண்டுதல்களிலிருந்து
அனைவரும்
சந்தோஷமாக இல்லை
அதனால் இறைவனிடம்
தொடர்ந்து சந்தோஷமாக
இருக்க தங்களுக்கு
அருள் வழங்க வேண்டும்
என்று கேட்கிறார்கள்
என்பதைத் தெரிந்து
கொள்ளலாம்

இறைவனிடம்
கேட்கும் போது
கஷ்டம், கவலை, கண்ணீர்
இல்லாத வாழ்க்கை வேண்டும்
என்று கேட்கக் கூடாது
வாழ்க்கையில்
கஷ்டம் வந்தால்
அதைத் தாங்கும்
சக்தியைக் கொடு என்று
தான் கேட்க வேண்டும்

அவ்வாறு கஷ்டத்தை
தாங்கக்கூடிய சக்தியை
எனக்குக் கொடு
இறைவா என
கேட்டுப் பாருங்கள்
சக்தியைத் தாங்கக்கூடிய
சக்தியைத் தருவது
மட்டுமல்ல
அந்த சக்தியைத் தாங்கும்
துணையாக இறைவன்
நம்முடனே இருப்பதை
உணர்ந்து கொள்ளலாம்

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்-14-04-2018

என்றும் அன்புடன்
K.பாலகங்காதரன்










April 12, 2018

ஔவையார்- நான்கு கோடி பாடல்-பதிவு-2


               
       ஔவையார்- நான்கு கோடி பாடல்-பதிவு-2

உலகில் வேலை
செய்பவர்களை
இரண்டு நிலைகளில்
பிரித்து விடலாம்

ஒன்று : கஷ்டப்பட்டு
         வேலை செய்பவர்கள்
இரண்டு:  திறமையாக
         வேலை செய்பவர்கள்

திறமையாக வேலை
செய்பவர்களை
இரண்டு நிலைகளில்
பிரித்து விடலாம்

ஒன்று : வித்தியாசமான
         யோசனைகளை பயன்படுத்தி
         திறமையாக 
         வேலை செய்பவர்கள்

இரண்டு : வித்தியாசமான
          யோசனைகளை பயன்படுத்தியும்,
          பிறர் ஏற்றுக் கொள்ளத்தக்க
          வகையில்
          செயல்களைச் செய்தும்
          திறமையாக
          வேலை செய்பவர்கள்

உலகில் உள்ள
பெரும் தொழில் அதிபர்கள்
பெரும் பணக்காரர்கள்
அனைவரையும்
எடுத்துக் கொண்டால்
இவர்கள் அனைவரும்
கஷ்டப்பட்டு
உயர்ந்த நிலையை
அடைந்து இருக்க மாட்டார்கள்
திறமையாக வேலை
செய்தே உயர்ந்து
இருப்பார்கள்

கஷ்டப்பட்டு வேலை
செய்தவன்
உயர்ந்து இருக்க
வேண்டுமானால்
காலை முதல் மாலை வரை
கஷ்டப்பட்டு
வண்டி ஓட்டுபவன்
உயர்ந்த நிலை
அடைந்து இருக்க வேண்டும்

காலை முதல் மாலை வரை
விவசாயம் செய்து
கொண்டு இருப்பவன்
உயர்ந்த நிலை அடைந்து
இருக்க வேண்டும்

ஆனால்
காலை முதல் மாலை வரை
வண்டி ஓட்டுபவன்
வண்டி ஓட்டிக் கொண்டே
தான் இருக்கிறான்
காலை முதல் மாலை வரை
விவசாயம் செய்பவன்
விவசாயம்
செய்து கொண்டே தான்
இருக்கிறான்.

கஷ்டப்பட்டு வேலை
செய்பவன் வேலை செய்து
கொண்டு தான்
இருக்கிறான்

கஷ்டப்பட்டு வேலை
செய்பவர்கள்
உயர்ந்த நிலை அடைவது
என்பது கஷ்டம்
அவர்கள் க‌ஷ்டப்பட்டு
உழைத்துக் கொண்டே
இருக்க வேண்டியது தான்

சமுதாயத்தில் உள்ள
பலரும்
கஷ்டப்பட்டு உழைத்தால்
உயர்ந்த நிலை அடையலாம்
என்ற தவறான கருத்தை
சொல்லிக் கொண்டே
இருப்பார்கள்.
வாழ்க்கையில் உயர்ந்த
நிலை அடைய
வேண்டுமானால்
திறமையாக வேலை
செய்ய வேண்டும்

ஒரு பள்ளியில்
ஒரு வகுப்பில்
தேர்வு ஒன்று நடத்தப்பட்டது.
அந்தத் தேர்வை
பத்து மாணவர்கள் எழுதினர்
அந்தத் தேர்வில்
ஒரு வினா கேட்கப்பட்டது
அந்த வினாவிற்கு
மூன்று மதிப்பெண்கள்
கொடுக்கப்பட்டது

திருக்குறளை இயற்றியது யார்
இந்த கேள்வியின் பதிலுக்குத்
தான் மூன்று மதிப்பெண்கள்
கொடுக்கப்பட்டிருந்தது

இந்தக் கேள்வியை
படித்துப் பார்த்த
ஒன்பது  மாணவர்கள்
இது எவ்வளவு
எளிதான கேள்வி
மூன்று மதிப்பெண்களை
அப்படியே
எடுத்து விடலாம்
என்று மகிழ்ச்சி அடைந்தார்கள்

அதுவும் பத்து மாணவர்களில்
ஒன்பது மாணவர்கள்
மட்டுமே
இவ்வாறு யோசித்தனர்

---------இன்னும் வரும்
////////////////////////////////////////////////