May 26, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-12


              நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-12

அம்மை நோய்
வந்து விட்டால்
அதனை குணமடையச்
செய்வதற்கு
ஆங்கில மருத்துவத்தில்
அன்றும் இன்றும்
மருந்து கண்டு
பிடிக்கப்படவில்லை
உலகில் எங்குமே
அம்மை நோய்க்கு
மருந்து கண்டுபிடிக்கப்
படவில்லை

அம்மை மருந்து
கண்டுபிடிக்கப்படாத
அந்த காலத்திலும் சரி
இந்த காலத்திலும் சரி
அம்மை நோய்
வந்து விட்டால்
அதனை போக்குவதற்கு
பயன்படுத்திக் கொண்டு
இருப்பது தான் வேப்பிலை

வேப்பிலை
ஒரு மிகச் சிறந்த
கிருமி நாசினி ஆகும்

அம்மை நோய்க்கு
மருந்து கண்டுபிடிக்கப்படாத
அந்தக் காலங்களில்
அம்மை நோய்
ஏற்பட்டு விட்டால்
அம்மை நோயிலிருந்து
குணமடைவதற்கும்
அம்மை நோய்
பரவாமல்
பாதுகாப்பதற்கும்
பயன்படுத்தப்பட்டது
தான் வேப்பிலை

அம்மை நோயைக்
குணப்படுத்தும் சக்தியும்
அம்மை நோயைப்
பரவாமல் தடுக்கும்
சக்தியும்
வேப்பிலையில்
உள்ளதை கண்டுபிடித்த
நம் முன்னோர்கள்
அம்மை நோயைக்
குணப்படுத்த
வேப்பிலையைப்
பயன் படுத்தினர்

அம்மை ஆரம்பித்தது
முதல் குணமாகி
நோயாளி எழுந்திருக்கும்
நிலை உருவாகும் வரை
வேப்பிலையை
பல்வேறு விதங்களில்
பயன்படுத்தினர்
நம் முன்னோர்கள்

அம்மை வந்து விட்ட
வீட்டிலின் வாசலில்
வேப்பிலையை
சொருகி வைப்பார்கள்
அதற்கு அர்த்தம்
இந்த வீட்டில் ஒருவருக்கு
அம்மை நோய் வந்திருக்கிறது
ஆகவே சுத்தமாக
இருப்பவர்கள் மட்டுமே
வீட்டிற்குள்
வர வேண்டும்
என்று பொருள்

அதுமட்டுமல்ல
அம்மை நோயினால்
பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து
வெளிக்கிளம்பும் கிருமிகள்
வேப்பிலையில் பட்டு
கிருமிகள் இறந்து விடும்
இதனால் அம்மை நோய்
வெளியில் பரவி
மற்றவர்களுக்கு இந்த
அம்மைநோய்
பரவாமல் தடுக்கப்படும்,

வெள்ளைத்
துணியின் மேல்
வேப்பிலையைப் பரப்பி
அம்மை நோயால்
பாதிக்கப்பட்டவரை
படுக்க வைப்பார்கள்

மேலும்
நோயாளியைச் சுற்றிலும்
வேப்பிலையை
போட்டு வைப்பார்கள்
வேப்பிலையை
நோயாளியின் மேல்
காற்று படுமாறு
எடுத்து வீசுவார்கள்

கீழே உள்ள
வேப்பிலையிலிருந்து
எழும் காற்றும்
சுற்றியுள்ள வேப்பிலையிலிருந்து
எழும் காற்றும்
வேப்பிலையை பயன்படுத்தி
வீசும் போது எழும் காற்றும்
உடலின் வெளிப்புறத்தில்
உள்ள நோய்க்கிருமிகளைக்
கொல்வதோடு
உடலின் உள்புறத்தில்
உள்ள நோய்க்கிருமிகளைக்
கொல்லும் சக்தியையும்
கொண்டது வேப்பிலை

தலைக்கு தண்ணீர்
விடும் போது
தண்ணீரில்
வேப்பிலையைப் போட்டு
வெயிலில் சிறிது நேரம்
வைத்து விட்டுத் தான்
பிறகு அம்மை நோய்
பாதிக்கப்பட்டவருக்கு
தலைக்கு தண்ணீர்
விடுவார்கள்.
இதனால் உடலில்
உள்ள கிருமிகள்
கொல்லப்படுவதோடு
உடல் எரிச்சலையும்
தடுக்கும்

இவ்வாறு அம்மை
நோய் பாதித்தவருக்கு
வேப்பிலையை
பயன்படுத்தி செய்யும்
செயல்கள் யாயும்
நாம் பார்த்து இருப்போம்

இந்த செயல்கள் எல்லாம்
அம்மை நோய் பாதிக்கப்பட்டவருக்கு
அம்மை நோய் குணமாகுவதற்கும்,
அம்மை நோய் மற்ற
இடங்களுக்கு பரவாமல்
தடுப்பதற்கும்
செய்யப்படுவது ஆகும்

உலகத்திற்கே
மருத்துவம்
சொல்லிக் கொடுத்தவர்கள்
நம் முன்னோர்கள்
நம்மைச் சுற்றியுள்ள
இயற்கை வளத்தை வைத்தே
நோயைக் குணப்படுத்தக்
கூடிய முறைகளை
சொல்லிச் சென்று
அதை இன்றும்
கடைப்பிடிக்க வைத்த 
நம் முன்னோர்கள் 
புத்திசாலிகள்

--------- இன்னும் வரும்
////////////////////////////////////////////


May 25, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு- 11


             நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு- 11

நோயினால் பாதிக்கப்பட்ட
கிராமத்திலிருந்து
நோயினால் பாதிக்கப்படாத
கிராமத்தை
தனிமைப்படுத்துவதற்காக
பயன்படுத்தப்படும்
பொருள் வேப்பிலை

அனைத்து வகை
மூலிகைகளையும்
எடுத்துக் கொண்டால்
மூலிகை வகைகளிலேயே
அனைத்து வகை
நோய்களையும் தீர்க்கக்கூடிய
சக்தி வாய்ந்த
ஒரு மூலிகை
உண்டு என்றால்
அது வேப்பமரம் 
மட்டும் தான்

வேப்பமரத்தின்
உச்சி முதல்
அடி நுனிவேர் வரை
உள்ள பகுதிகள்
அனைத்தும்
மருத்துவ குணம்
கொண்டதாகும்

அதாவது
வேப்பமரத்தில் உள்ள
வேப்பிலை, பூ,
காய், பழம்,
கொட்டை, கட்டை
ஆகிய அனைத்தும்
மருத்துவத்திற்கு
பயன்படுவதால்
வேப்பமரத்தை
ஒரு சர்வரோக நிவாரணி
என்று கூறுகிறோம்

சர்வம் என்றால்
அனைத்தும் என்று பொருள்
ரோகம் என்றால்
நோய் என்று பொருள்
நிவாரணி என்றால்
தீர்க்கக் கூடியது
என்று பொருள்
சர்வரோக நிவாரணி
என்றால்
அனைத்து வகையான
நோய்களையும்
தீர்க்கக் கூடியது
என்று பொருள்

அதில் வேப்பிலை
அதிக முக்கியத்துவம்
கொண்டது

வேப்பிலைக்கு
நோயைத் தீர்க்கக்
கூடிய சக்தி உண்டு
மேலும் நோய்
பரவ விடாமல்
தடுக்கும் சக்தியும்
வேப்பிலைக்கு
உண்டு

இதனை உணர்ந்த
நம் முன்னோர்கள்
நோய் ஏற்பட்ட
கிராமத்திலிருந்து
நோய் ஏற்டாத
தங்கள்
கிராமத்தில் உள்ள
மக்களுக்கு
நோய்த் தாக்குதல்
ஏற்படாத வண்ணம்
இருக்க வேண்டும்
என்பதற்காக
வேப்பிலையை
ஊரைச் சுற்றி உள்ள
எல்லை முழுவதும்
கட்டி வைத்தனர்

மேலும்
வேப்பிலையை
வீட்டைச் சுற்றி
இருக்கும் இடத்திலும்
வீட்டு வாசலிலும்
வீட்டின் பின்புறத்தில்
உள்ள இடத்திலும்
எங்கு எங்கு
வீட்டைச் சுற்றி
இடம் இருக்கிறதோ
அங்கெல்லாம்
வேப்பிலையை
கட்டி வைத்தனர்

இதன் மூலம்
நோய் ஏற்பட்ட
கிராமத்திலிருந்து
வேப்பிலையின் மூலம்
நோய் ஏற்படாத
கிராமத்தை
நோய்க் கிருமிகள்
தாக்காதவாறு
மக்களை காப்பாற்றினர்
நம் முன்னோர்கள்

வேப்பிலையை
ஊரைச் சுற்றியும்
வீட்டைச் சுற்றியும்
கட்டுவது என்பது
நோய்க் கிருமிகள்
ஊருக்குள் வரவிடாமல்
தடுப்பதற்கும்
நோய் கிருமிகளை
அழிப்பதற்கும்
நோய் பரவாமல்
தடுப்பதற்கும்
பயன்படுத்தும்
முறை ஆகும்

இதை தான்
காப்பு கட்டுதல்
என்கிறோம்

நோய்க் கிருமிகளை
ஊருக்குள் வர விடாமல்
தடுத்து விட்டோம்

அடுத்து
ஊரில் உள்ளவர்கள்
வெளியூர் சென்று விட்டு
மீண்டும்
ஊருக்குள் வந்தால்
நோய்த் தொற்று
ஏற்பட வாய்ப்பு
இருக்கிறது
என்ற காரத்தினால்
காப்பு கட்டி விட்டால்
ஊரில் உள்ளவர்கள்
ஊரை விட்டு
வெளியே செல்லக்கூடாது
என்றும்
வெளியூரை சேர்ந்த
ஊர்க்காரர்கள்
ஊருக்குள் வரக்கூடாது
என்றும் கூறினர்

இதன் மூலம்
நோய் ஏற்பட்ட
கிராமத்திலிருந்து
நோய்த் தொற்று
ஏற்படாமல்
தங்கள் ஊரில் உள்ள
மக்களை காப்பாற்றிய
நம் முன்னோர்கள்
புத்திசாலிகள்

--------- இன்னும் வரும்
///////////////////////////////////////////////


May 24, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-10


                நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-10

அந்தக் காலத்தில்
ஒரு கிராமத்தில்
நோய் ஏற்பட்டால்
நோய் தொற்று
ஏற்பட்டு
பல பேர்
இறக்கக்கூடிய
சூழ்நிலை ஏற்படும்

அதுமட்டுமல்லாமல்
அந்த நோயானது
பக்கத்தில் உள்ள
கிராமங்களுக்கும்
பரவி
பக்கத்து
கிராமங்களையும்
பாதிப்பு
அடையச் செய்வதோடு
அந்த கிராமத்தில்
வசிக்கும்
பலபேர் இறக்கக்கூடிய
சூழ்நிலையையும்
ஏற்படுத்தும்

ஒவ்வொரு வருடமும்
ஒரு குறிப்பிட்ட
காலத்தில்
இத்தகைய நிலை
ஏற்படுவதை
உணர்ந்த
நம்முடைய
முன்னோர்கள்
இத்தகைய சூழ்நிலை
இனி வருங்காலங்களில்
ஏற்படாமல்
இருக்க வேண்டுமானால்
என்ன செய்வது
என்று யோசித்தனர்,

நோயினால் பாதிப்பு
ஏற்படாமல் இருக்க
வேண்டுமானால்
நோய்தொற்றிக்
கொண்ட
கிராமத்திலிருந்து
நோய் ஏற்படாத
கிராமத்தை
தனிமைப்படுத்த
வேண்டும்
என்று முடிவெடுத்தனர்

அதாவது
நோய் உண்டான
கிராமத்திலிருந்து
நோய் உண்டாகாத
கிராமத்தை
பிரித்து விட
வேண்டும்
என்று முடிவு
எடுத்தனர்

அது மட்டுமல்லாமல்
நோய் மக்களுக்கு
ஏற்படாமல் இருக்க
வேண்டும்
என்பதற்காகவும்
அதையும் மீறி
நோய்
ஏற்பட்டு விட்டால்
நோயிலிருந்து
குணமடையும்
வழிகளையும்
உண்டாக்கி வைத்தனர்

அந்த வழிமுறைகளை
மக்கள் எப்படி
பின்பற்ற வேண்டும்
என்ற முறைகளை
வகுத்து வைத்தனர்
அதை ஆண்டுதோறும்
முறையாக
பின்பற்ற வேண்டும்
என்பதற்காக
பண்டிகையாக மாற்றி
பண்டிகையை
கொண்டாட வைத்து
விட்டனர்.

ஆண்டு தோறும்
வருடத்தில்
ஒரு குறிப்பிட்ட
மாதத்தில்
அந்த பண்டிகையை
கொண்டாட வேண்டும்
என்றும்
அதை அனைவரும்
தொடர்ந்து
பின்பற்றி
கொண்டாடி
வர வேண்டும்
என்ற விதிமுறையை
வகுத்து வைத்தனர்

நாம் வருடந்தோறும்
அந்த பண்டிகையை
கொண்டாடுகிறோம்
ஆனால்
அந்த பண்டிகையை
எதற்காக
கொண்டாடுகிறோம்
என்ன
காரணத்திற்காக
கொண்டாடுகிறோம்
அதில் உள்ள
அர்த்தம் என்ன
என்பதை
உணராமல்
நாம் அந்த
பண்டிகையை
கொண்டாடி வருகிறோம்

அந்த பண்டிகை
எந்த பண்டிகை
என்றும்
அந்த பண்டிகையை
எத்தகைய காரணத்திற்காக
கொண்டாடுகிறோம்
என்பதையும்
பார்ப்போம்

---------- இன்னும் வரும்
////////////////////////////////////////////////////////


May 23, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-9


                நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-9

சீர் கொண்டு
வந்தால் சகோதரி ;

ஒருவருக்கு நாம்
அன்பளிப்பு
கொடுக்கும் போது
அதை பெறுபவருடைய
மனநிலையை
இரண்டு நிலைகளில்
பிரித்து விடலாம்

ஒன்று: அன்பளிப்பில்
       உள்ள அன்பின்
       மதிப்பைப் பார்ப்பவர்கள்

இரண்டு: அன்பளிப்பில்
         உள்ள பணத்தின்
         மதிப்பைப் பார்ப்பவர்கள்

நாம் ஒருவருக்கு
அன்பளிப்பு கொடுக்கும்போது
அதனைப் பெறுபவர்
அந்த அன்பளிப்பில்
உள்ள நம்முடைய
அன்பைப் பார்த்தால்
அவருக்கு
நம்முடைய அன்பு
தெரியுமே ஒழிய
அன்பளிப்பில்
உள்ள பணத்தின்
மதிப்பு தெரியாது

நாம் ஒருவருக்கு
அன்பளிப்பு கொடுக்கும்போது
அவர் அந்த
அன்பளிப்பில் உள்ள
பணத்தின்
மதிப்பைப் பார்த்தால்
அவருக்கு
பணத்தின் மதிப்பு தான்
தெரியுமே ஒழிய
அன்பளிப்பில்
உள்ள நம்முடைய
அன்பு தெரியாது

அன்பளிப்பில் உள்ள
அன்பைப் பார்த்தால்
பணத்தின்
மதிப்பு தெரியாது
பணத்தின்
மதிப்பைப் பார்த்தால்
அன்பின் மதிப்பு
தெரியாது

அன்பளிப்பு என்பது
நாம் விருப்பப்பட்டு
தருவது
அதில் கொடுப்பவருடைய
அன்பைத் தான்
பார்க்க வேண்டுமேயொழிய
பணத்தின் மதிப்பைப்
பார்க்கக் கூடாது

ஏழ்மை நிலையில்
இருக்கும் அண்ணன்,
தன்னுடைய தங்கைக்கு
கஷ்டப்பட்டு
திருமணம் செய்து
அந்த திருமணத்திற்க்கு
செய்த செலவீனங்களுக்காக
வாங்கிய கடனை
அடைத்துக் கொண்டிருக்கிறார்
அத்தகைய சூழ்நிலையில்
தன்னுடைய தங்கையை
பார்க்க செல்கிறார்

அண்ணன் தன்னுடைய
வசதிக்கு ஏற்றபடி
தன் வருமானத்திற்கு
ஏற்ற அளவில்
தன்னுடைய
தங்கை வீட்டிற்கு
சில பொருட்கள்
வாங்கிச் செல்கிறார்

அண்ணனுடைய அன்பை
புரிந்து கொள்ள முடியாத
அண்ணனுடைய
குடும்ப நிலையை
உணர்ந்து கொள்ள
முடியாத நிலையில்
இருந்த தங்கை
அண்ணன் தனக்காக
கஷ்டப்பட்டதை மறந்து
அண்ணன் தன்னை
திருமணம் செய்விக்க
எவ்வளவு கஷ்டப்பட்டார்
என்பதை மறந்து
அன்பளிப்பைப் பார்த்து
அண்ணனை
அவமானப்படுத்தி
அனுப்பி விடுகிறாள்

அண்ணன் அளித்த
அன்பளிப்பில்
தங்கை பணத்தின்
மதிப்பை பார்த்த
காரணத்தினால்
அண்ணனுடைய
அன்பு தெரியவில்லை
அண்ணனுடைய
அன்பைப் பார்த்து
இருப்பாரேயானால்
அன்பளிப்பில்
பணத்தின் மதிப்பு
தெரிந்து இருக்காது

அன்பு யாருடைய
மனதில் இல்லையோ
அவர்களால் தான்
பிறர் செலுத்தும்
அன்பைப் புரிந்து
கொள்ள முடியாது

தங்கையின் மனதில்
அன்பு இல்லாத
காரணத்தினால்
அண்ணன் அளித்த
அன்பளிப்பில்
பணத்தின் மதிப்பைப்
பார்த்தாரே ஒழிய
அண்ணனின்
அன்பைப் பார்க்கவில்லை


அண்ணனுடைய
உண்மையான அன்பைப்
புரிந்து கொள்ள
முடியாத
அன்பு இல்லாத
தங்கைகளுக்கு
அதிக பண மதிப்பு
கொண்ட அன்பளிப்புகளை
அண்ணன்
கொடுத்தால் தான்
அண்ணனை மதிப்பார்கள்
இல்லையென்றால்
அண்ணனை மதிக்க
மாட்டார்கள்

என்பது தான்
சீர் கொண்டு
வந்தால் சகோதரி
என்பதற்குப் பொருள்

--------- இன்னும் வரும்
////////////////////////////////////////////////////////